.
கையில் வந்த பாடமும்,ஐட்டப்பட கலெக்சனும்...

2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி.நேரம் மாலை 5.30.பொல்கொடை ஆற்றைக்கடந்து வரும் குளிர்காற்று இதமாக எங்களை தழுவிப் போய்க்கொண்டிருக்கிறது.மொறாட்டுவை நியூ ஹொஸ்டல்.2ம் மாடியில் இருந்த ஹயானியும் 3ம் மாடியில் இருந்த பவினந்தனும் பறக்கும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.கிறவுண்ட் புளோர் கியாஸ் நேற்றுவரை அறை நண்பனாக இருந்த கிப்லியை அடித்து விரட்டி விட்டு EM 1st year படிக்கிற காப்பிலி பெட்டையை ஒருத்தியை றூம் மேட்டாக கூட்டிக்கொண்டந்திருந்தான்.மொறட்டுவ கம்பஸ் உலக அளவில நல்ல Rank க்கு வந்ததால வெளிநாட்டில இருந்து கனக்க மாணவர்கள் லட்சக்கணக்கில காசு கட்டி படிக்க வருகினமாம்.அப்படி எத்தியோப்பியாவில இருந்து வந்து படிக்கிற பெட்டைதானாம் அவள்.இவன் அவளுக்கு குப்பி எடுத்து கவிழ்த்திட்டானாம்.அருகே ஒரு தமிழ்ப்பெடியள் குழு தகவல் சொல்லியபடி "அறைக்க ஏதாவது கசா முசா நடக்கும் பார்க்கலாம்" எண்டு பதுங்கி நிலை எடுத்தபடி இருந்தார்கள்."இலங்கையை அமெரிக்கா மாதிரி வளரவைக்கவேணுமெண்டா கலாச்சாரத்தையும் அமெரிக்கா போல மாத்தோணும்.பெண்களும். ஆண்களும் கலந்து பல்கலைக்கழக கொஸ்டல்ல இருப்பது அதற்கு வழி வகுக்கும்" என மகிந்த சிந்தன அத்தியாயம் 2 இன் 3 ஆம் பந்தியில் எழுதப்பட்டிருப்பதால் வோர்டன் மாத்தையா இப்படியான கேசுகளுக்கு மகிழ்வோடு அனுமதி தருகிறாராம் என்ற பதில் பலதடவை இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபின் கிடைத்தது.திடீரென்று 3 ஆம் மாடி பல்கனியில் ஒரு பெடியன் பெண்கள் அணியும் ஆடைகளை கொடியில் காய்வதற்காக போடுவதை (உள்ளாடைகள் உள்பட) சேகர் கூப்பிட்டுக்காட்டினான்."மச்சான் இவன் கட்டாயம் தமிழ்ப்பெடியனாத்தான் இருப்பான்டா" என பின்னால் சொல்லிக்கேட்டது.திரும்பிப்பார்த்தேன்.எங்கட விஞ்ஞானி கெமிக்கல் சசி.நோட்சை மார்க்கர் பேனைகளால் கலர்ப்படுத்திக்கொண்டிருந்தார்.அருகே அப்பாஸ் வீட்டிலிருந்து மனைவி தயாரித்துத்தந்துவிட்ட பனங்காப்பணியாரத்தை வாய்க்குள் ஒவ்வொன்றாகப்போட்டபடி வெறித்தனமாக நாளைய பரீட்சைக்காக "பிட்" தயாரித்துக்கொண்டிருந்தார். "7 வருசமா எக்சாம் றிப்பீட்ட் எடுத்தும் பாஸ் போடாத நிலாந்தியட்ட இந்த பிட் பிடிபட்டா நீ அவள் சாகும் வரை இந்த கரப்பு தைக்கிற பாடத்தை பாஸ் பன்ண மாட்டாய்" என எச்சரித்து விட்டு நோட்சில் மூழ்க முயலுகிறேன்.முடியவில்லை.நினைவுகள் ஒவ்வொன்றாக சுழலுகின்றன.

நாங்கள் பாணும் பருப்பும் சாப்பிட்ட அந்த மேசைகள்.கூடி இருந்து அரட்டை அடித்த வாயில் பென்சுகள்.உரக்கக்கத்தி தொடர்பாடல் செய்த பல்கனிகள்,கிறிக்கெட் மட்ச் பார்த்த தொலைக்காட்சிப்பெட்டிகள் எல்லாம் ஒராயிரம் நினைவுகளை மீட்டின.இங்க வந்தா "பிளாஸ் பேக்" தான் ஓடும் எண்டு எனக்கு முதலே தெரியும்.உவன் அப்பாஸ்தான் விடாப்பிடியா "வீட்ட மனிசி படிக்க விடாள் கம்பசுக்க போய் நியூ கொஸ்டல் கன்ரீனுக்கு பக்கத்த இருக்கிற ஸ்ரடி ஹோல்ல இருந்து படிப்பம்" எண்டு அடம் பிடிச்சு இங்க வர வசிச்சிட்டான்.சேகர் 6 வது தம்மை எரிக்கத்தொடங்கிவிட்டான்.படிக்க கஸ்டப்படுவது முகத்தில் தெரிந்தது.அவனுக்கு இப்ப 30 வயது.இந்த வயதில் றிப்பீட்டு எக்சாம் எழுதிறதெண்டா யாராலதான் முடியும்.உந்த நாசமாப்போன டொக்டர் நிலாந்தியும் எங்களை பாஸ் பண்ண வைச்சு டிகிறிய தந்து வெளியால விடுறதா இல்லை.2006 ஆம் ஆண்டு 4 பேருக்கும் கையில் தந்தவள்,தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறாள்.இனி நாங்கள் எழுதப்போவது 7வது தடவை.அதுக்கிடையில ஒருத்தரும் படிக்க விருபுறேலை எண்டதாலை டெக்ரைல் டிப்பார்ட்மெண்டை ,மூடி அதை பல்கலைப்பொது மலசல கூடம் ஆக்கிட்டாங்கள்.நாங்கள் 4 பேரும் பாஸ் பன்ணும் வரைக்கும் நிலாந்தியை பெயரளவில டிப்பார்ட்மெண்ட் head டா போட்டிருக்கிறாங்கள்.நாங்கள் போனா பதவியும் போயிடும் எண்டதால அவள் நம்மை 7 வருசமா தட்டிப்பிழியுறாள்.இந்த முறையெண்டாலும் இரக்கப்பட்டு விட்டுடுவாள் என்ற நம்பிக்கையில் குத்திக்கொண்டிருக்கிறோம்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.அருகில் உள்ள மேசையில் ஒரு வெள்ளைக்காரி வந்து நோட்சுகளை பரப்பி விட்டு படிக்கத்தொடங்குகிறாள்.கடைக்கண் பார்வை வீசுகிறேன்.ம்ம்ம்ம்...அழகி.கூடப்படிக்கிற பெடியள் கொடுத்து வைத்தவங்கள் என நினைத்துக்கொண்டேன்.முந்தி நம்மட பட்ஜ் பெடியள் சப்பைப்பிகருகளுக்கு வாளி வைத்து கிழி வாங்கி பம்முவது நினைவுக்கு வந்தது.திடீரென "படார்" என்ற சத்தமும் கூடவே காறித்துப்புகிற ஓசையும் கேட்க திரும்பினேன்.அவள் தான்.கையில் ஹை ஹீல்சை பிடித்தபடி ஆங்கில தூசணத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.எதிரே ஒரு பெடியன் கன்னத்தைதடவியபடி....

"டேய் ரயந்தன் உனக்கு எத்தினை தரம் சொல்லுறது என்னோட டேட்டிங் போக விருப்பமெண்டா நேர வந்து கேள்,நோட்சுக்க துண்டில எழுதிவச்சு,சுவர்ல எழுதி அசிங்கப்படுத்தாத எண்டு" அவள் குரலில் கோபமும் ஏளனமும் மிகுந்திருந்தது.தலையைக்குனிந்தபடி நின்ற அந்த ரயந்தன் என்றவன் தோற்றத்திலும் தயந்தனை ஒத்திருந்தமை வியப்பளித்தது.அவனை விரட்டியபின் திரும்பி "சாரி போர் த டிஸ்ரேபன்ஸ்" என்றவள்..."இந்த தமிழ்ப்பெடியளே இப்படித்தான்,எல்லாத்தையும் பொத்திப்பொத்தி வச்சு பழுக்கவும் இல்லை,பழக்கவும் இல்லை" என அலுத்துக்கொண்டாள்.காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் நம்ம தமிழ்ப்பெடியள் மட்டும் மாறவே இல்லை என்பது மனதை வருத்தியது.ஒருத்தன் பெண்களுக்கு ஆடைகள் துவைத்து சேவகம் செய்கிறான்(பின்னர் அவன் பெயர் கிண்டர்சன் என யாரோ சொன்னார்கள்),இன்னொருத்தன் வாளி வைத்து வெள்ளைக்காரியிடமே அடிவாங்குகிறான் என எம்மின இளையவர் நிலை நினைக்க துயரம் மிகுந்தது.நோட்சுகளை பார்த்துக்கொள்ளும் படி அவளிடம் சொல்லி விட்டு ஒரு றவுண்டு போய் வருவோம் என புறப்பட்டோம்.நேரடியாக ஸ்டோன் பெஞ்சுக்கு வந்து கீழே விழுந்திருந்த தேக்கங்காய்களை குத்திச்சாப்பிட்டோம்.எல்லாரும் வினோதமாக பார்த்தபடி போய்க்கொண்டிருந்தார்கள்.அப்படியே கஜு காட்டு வழி காலாற நடந்தோம்.ஒரு காதல் ஜோடியையும் காணாவில்லை."றூம் போட்டு குடுத்தா யார் இங்க வருவாங்கள்" என சசி சொன்னதுதான் காரணமெனப்பட்டது.பவிலியன் வந்து அமர்ந்து கொண்டோம்.கூட்டம் அதிகமிருந்தது.நம்ம காலத்தில நூலகத்தில தான் சனம் இருக்கும்.இங்கே இலையான் மெய்க்கும்.இப்ப எல்லாம் மாறிட்டுது.பல முகங்கள்.அதில் சில தமிழ் முகங்கள்.ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை.5 வருட இடைவெளியில் எம்மை தெரிந்திருக்க நியாயமில்லைத்தானே என ஆறுதல்படுத்திக்கொண்டோம்.அப்போது சடுதியாக ஒரு பெடியன் எம்மை நோக்கி கையை நீட்டிக்கொண்டு வருகிறான்.வந்து என்னிடம் கையைத்தந்து விட்டு நீங்கள் "டைரக்டர் தானே" என்கிறான்.எனக்கு வானத்தில் பறக்கிறமாதிரி இருந்தது." "கிட்டத்தட்ட...ஆனா நான் டைரக்டர் மட்டும் இல்லை ..எடிட்டர்,சினிமோட்டோகிறாபர்,சண்டைப்பயிற்சியாளார் இன்னபிற"எனச்சொல்லி நிறுத்தினேன்.கூட்டம் கூடி விட்டது.தமிழ்ப் பெண்களுடைய முகங்களும் சில தென்பட்டன.முதலில் வந்தவன் கையைத்தந்து விட்டு "நான் தூபரூபன்,நீங்கள் இயக்கிய ஐட்டப்படங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்,அதிலும் சௌந்தர்,கரையேறி,கெமி ஆகியோர் நடித்த படங்கள் மிக அருமை" என்க ஒருக்கா கிரிவக்சனட்ட சிக்கின பீலிங் வந்து அடிவயிறு கலக்க தொடங்குகிறது..கெமிக்கல் சசியைப் பார்க்கிறேன்..அசிட்டைக்குடித்தவ்ன் போல என்னைப்பார்துக்கொண்டிருந்தான்.
"டேய் திருட்டுத்தனமா என்ர பெஸ்ட் நைட்ட வீடியோ எடுத்து காசுக்கு வித்துகித்துப்போட்டியோ?,உண்மையைச்சொல்லு நீ தானே என்ர கலியாணாத்துக்கும் கமெராவோட வந்து திரிஞ்சனி?"
சசி வழமையா வைத்திருக்கிற சாவிக்கொத்தில இருக்கிற கத்தியை எடுத்து நீட்டியபடி உறுக்குகிறான்.



"டேய் உன்ர கலியாணக்கசெட் என்ன எந்திரன் படமாடா?,பலகோடி காசில விலைப்படுறதுக்கு?,அதோட அதப்பார்த்தவங்கள் யாராவது வாழ்க்கையில கலியாணம் கட்ட முன் வருவாங்களா எண்டத யோசிச்சுப்பார்த்தியா?"
ஒரே போடா போட அலிபாய் அடங்கி விட்டார்.நாங்கள் நால்வரும் எங்களுக்குள் குசுகுசுத்து இறுதியாக அந்த ஐட்டவீடியோக்களைப்பார்த்து உண்மையை அறிவோம் என முடிவெடுத்த பின் நீண்ட மௌனத்தை நான் கலைக்கிறேன்.
"தம்பி தூபரூபன்! நான் எடுத்ததா நீர் சொன்ன அந்த ஐட்டப்படங்களை ஒருக்கா காட்டுவீரோ?"
கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது.புளூரே வடிவில் சேமிக்கப்பட்ட அந்த ஐட்டசலனங்களை கையடக்க புறஜெக்டர் உதவியோடு நியூகொஸ்டல் 232ம் இலக்க அறைஉட்சுவரில் விரித்து தூபரூபன் ஓட்ட ஒரு செலெக்சன் மெனு "றியல் ரமில் 1st நைட் கலெக்சன்" என்ற தலையங்கத்தோடு மின்னுகிறது.சின்ன சின்ன பெட்டி பெட்டியா கனக்கபேர்ட பேருகள் கிடக்கு.ஒவ்வொண்டா பார்க்கிறேன்.Achuthan,Ainkaran,Bavananthan,Dinesh,Elancheliayn என ஆங்கில அகராதிவரிசையில் ஓடி S க்கு வந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.Sounder,Senthil,Segaran,Selvaranjan....எல்லோர் விருப்பப்படி சௌந்தரின் சாகசத்தை ஓட்டும் படி நான் கேட்க திரையில் விரிகிறது காட்சி.

(பாகம் 2 இல் அதிர்ச்சி தொடரும்.)

கல்யாணரூபன்

.

முதல்வருடத்தில் ஒரு வெடியனாகவும் காமெடியனாகவும் போட்டுத்தாக்கும் கலை அறிந்தவனாகவும் அறிமுகமான தீபரூபன் ஒரு காதலனாக தன்னை நிலை நிறுத்தி கணவனாக வாழ்வத்ற்கான அடித்தளத்தை இந்த மாத இறுதிப்ப்பகுதியில் போடவிருக்கிறார்.இது தொடர்பாக முகப்புத்தகத்தில் குறுந்தகவல் அனுப்பிய தீபரூபன் எங்கே,எப்போது என்ற விடயங்களை குறிப்பிட மறந்துவிட்டதால் பலரும் இந்த வரலாற்று சாதனை தொடர்பில் தகவல்கள் வேண்டி அவாவி நிற்க்கின்றனர்.அதாவது பல்கலை வளாகத்தில் குழுமமாக வாழ்ந்து பின்னாளில் ஹொஸ்டலில் குடும்பமாக இருந்த நம்ம மட்ட பெடியளில் முதலாவது வெற்றிகரமான காதலுக்கு சொந்தக்காரனான தீபரூபன் கல்யாணம் உரிய பிரச்சாரம் இன்றி முதன்மை குறைந்து போவதை நாம் அனுமதிக்க முடியாது.இந்த விடயம் தொடர்பில் தீபரூபனால் தாக்கப்பட்டோரும்,தீபரூபனை தாக்கியோரும் ஒத்த நிலைப்பாட்டைக்கொண்டுள்ளனர்.எங்கள் மட்டத்து ரெப்பான தினேஸ் வழிப்படுத்த அப்பாஸ் இல்லை என்பதாலும்,அருகே பலமான ஆளணி இல்லாமையாலும் இது தொடர்பில் வலிந்த நடவடிக்கைகளை செய்யவியலாது இருக்கிறார் என்பதை நாம் அறிந்ததே.அத்தோடு அவரை சுற்றி இருக்கும் சிலரும் பதிவெழுதி,பதிவர் சந்திப்பு போடக்கூடியவர்களே தவிர வேறொண்றும் இயலாதவர்கள்.இன்னபிறகாரணிகளால் நாமே களமிறங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.மேலும் வெட்டிப்பேச்சு பேசி செல்வரஞ்சன் போல காலத்தை கழிக்காமல் ராக்தீபன் கலியாணத்துக்கு நம்மால் செய்யக்கூடியவை சிலவற்றை ஐடியாக்களாய் கீழே தந்திருக்கிறேன்.படிச்சு பிடிச்சுப்போனா கருத்தைக்கவ்விக்கொள்ளுங்கள்.


1)மட்டம் 2003 காசு சேர்த்து பரிசுப்பொதி ஒன்றை வாங்கித்தீபரூபனுக்கு கொடுக்கலாம்.
இந்தப்பரிசு தீபரூபனின் வெடிகளில் இருந்து அந்த வாழ்க்கைத்துணையாக வரப்போகிற கொடுத்து வைத்த பெண் தன் காதுகளை பாதுகாக்க தரப்படுகிற பஞ்சாகவோ இல்லை விலையுடர்ந்த மோட்டார் வாகனமாகவோ இருக்கலாம்.(பிகு-தீபரூபனுக்கு சாளி மட்டுமே ஒடத்தெரியும் என்பதால் செலவு 60,000 ஐத்தாண்டாது.)

2)கலியாண நாளன்று மரம் நடலாம்.ஆளுக்கு 10 மரப்படி 100 மரம் நட்டாலே இது பத்திரிகை செய்தியாகி பப்ளிசிட்டி கிடைக்க வாய்ப்புண்டு.இந்த விடயத்தை எல்லாரும் பின்பற்றினால் வவுனியா சோலைவனமாகிவிடும்.

3)மட்டம் 2003,மற்றும் இளைய மாணவர்களான புளொக்கர்களுக்கு அன்புக்கட்டளை இட்டு எல்லோரையும் இந்த கலியாணம் பற்றியும் தீபரூபன் நற்க்குணங்கள் பற்றியும் எழுதக்கேட்கலாம்.இதன் போது அந்தக்கடலேறி குறுக்கால் இழுக்க வாய்ப்புண்டு.(அவரது புளொக்கை அவரே வாசிப்பதில்லை என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை.)

4)தீபரூபனின் குப்பியால் மற்ஸ் பாஸ் பண்ணினவங்கள் எல்லாம் கலியாண நாளன்று பெரிய பலகையில் "கணக்குக்கிறுக்கன்" என எழுதி பரிசாகத்தரலாம்.இது தீபரூபன் தொடர்பில் புகுந்த வீட்டாருக்கு ஒரு இமேஜை உருவாக்குவதோடு,மனைவிக்கு கொளுத்திப்போட கிடைத்த நல்ல
ஒரு சரவெடியாக தீபரூபனுக்கு இது அமையக்கூடும்.

5)தீபரூபனின் ஆருயிர் போட்டுத்தாக்கல் நண்பனான சசி தீபரூபன் கலியாணத்துக்கு நேரில் வரமுடியாது என்பதால் தீபரூபன் மிகுந்த கவலை அடையக்கூடும்.அதைப்போக்க சசியின் பெரிய போட்டோ/பொம்மையை தீபரூபன் கண்ணில் படுமாறு மண்டப மூலையில் வைக்கலாம்.கல்யாணம் முடிந்தபின் நண்பர்கள் அந்த பொம்மையை செருப்பால் அடித்து கொடும்பாவி கொழுத்தி மழையை வரவைத்து தம்பதியினரை வித்தியாசமாக வாழ்த்தலாம்.

6)குறூப் போட்டோ எடுக்கும் போது நண்பர்கள் எல்லோரும் அபூர்வசகோதரர் கமல் போல நின்று தீபரூபனை உயரமாக காட்டலாம்.இது பின்னாளில் கலியாண ஆல்பத்திக்காட்டி பிள்ளையளுக்கு தீ பரூபன் சோறு ஊட்டும் போது " எங்கட பட்ஜ்சில நான் தான் சரியான உயரம்" எனச்சொல்ல உதவக்கூடும்.

7)காலை தொடக்கம் மாலை நீளும் நீண்ட சடங்கு சம்பிரதாயங்களால் தீபரூபன் களைப்படையும் தருணங்களில் நண்பர்கள் கூட்டம் பின்னால் இருந்து "சசி,சசி" எனக்கத்தி
தீபரூபனை உற்ச்சாகமூட்டலாம்.

8)தீபரூபன் ஸ்டண்ட் செய்த கபோதி திரைப்படத்தை அகலத்திரையில் கலியாண மண்டப மூலையில் அடிக்கடி போட்டுக்காட்டலாம்.இது "மாப்பிளை பெரிய சண்டைக்காரன் போல" என்று கலியாணத்துக்கு வந்தோரை முணுமுணுக்க வைப்பதோடு பெண்ணுக்கு "இவர வெருட்டி அடக்கேலாது" என்ற எண்ணத்தை விதைக்கும்.

இவை காலை கழிவறையில் இருந்தபோது என்மனதில் உதித்த ஐடியாக்கள்.ஆளாளுக்கு ஆயிரம் ஐடியாக்கள் வந்திருக்கும்.எதாவது செய்து ராக்தீபனின் திருமணநாளில் அவனுக்கு திட்திப்பூடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.