ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


தலைப்பைப் பார்த்த்தும் ஏதோ ஆட்டோகிராப் மாதிரி ஏதோ காதல் கதை எண்டு நினைச்சா தப்பு.(சீச்சீ......இந்தப் பழம் புளிக்கும்.)இது கட்டுப்பெத்தைக்கம்பஸ் பற்றி

எல்லோரும் போல் பல கனவுகளோடு வந்த எனக்கும் பிறகு தான் தெரிஞ்சது கம்பஸ் வாழ்க்கை எப்படி எண்டு.படிப்புப்பளு மட்டுமின்றி தங்குமிடம்,சாப்பாடு,மொழிப்பிரச்சனை என வெறுத்துப்போனவர்களுக்கு ஒரே ஆறுதல் நண்பர்களும் அவர்களின் பகிடிகளும் தான்.வேறு ஆறுதல் தேட முயன்றவர்களும் உண்டு.

ஒவ்வொரு தங்குமிட நண்பர் கூட்டத்திற்கும் ஒவ்வோர் புனை பெயர். பேய்வீடு,அறிவகம்,ஆச்சிரமம்,7ஜி எனப்பல பெயர்கள்.முதல் வருடம் தனித்துப்போன நான் அடிக்கடி அறிவகத்திற்கு விசிட் செய்வதுண்டு. இதற்கு அறிவக நண்பர்களின் பகிடிகளால் கவரப்பட்டது மட்டுமல்ல நோட்ஸ்,கோர்ஸ்வேக் எடுக்கலாம் என்ற சுயநலமான காரணமும் இருந்தது.இரண்டாம் வருடம் தான் அறிவகத்தில் இணைந்தேன்.அறிவகநண்பர்கள்செல்வரஞ்சன்,பிரகலாதன்,
சசிவர்ணன்,தீபரூபன்,ரஜித்,சிறீஸ்காந்,ஜெசி,கோகிலன்,ஜனா,குலோத்துங்கசாகரன் ஆகியோர். இதில் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே எழுதலாம்.இதில் மெயின் முத்தையன்கட்டுக்கு கரண்ட் கொடுத்த,சுனாமி நேரம் மீன்ரின் தொழிற்சாலை போட்ட சசிவர்ணன்.என்ன தான் நக்கலடித்தாலும் சசிக்கு கோபமே வராது.(ரொம்ப நல்லவன்). சிரித்து சிரித்து சமாளிக்கும் சசியை நாங்களும் விடுவதில்லை.(சசிக்கும் தன்னைப்பற்றி மற்றவர்கள் கதைப்பதில் பெருமை).அந்த நேரம் அறிவகத்திற்கு முதல் கணனி கப்பலில்கொண்டுவந்து சேர்த்த பெருமை சசியையே சேரும்.ஆனால் அதில்எக்ஸாம் நேரம் படித்து முடித்த பிரகலாதனும் சசியும் படம் போட்டுப்பார்ப்பதும் செல்வரஞ்சன் திட்டித் திட்டி நோட்சுடன் கொட கன்ரீனுக்குப் போறதும் வேற கதை.ஆனால் செல்வரஞ்சன் நூலகத்திற்கு மட்டும் போறதில்லை,பிளாஸ்பேக்..............

ஒருநாள் நூலகத்தில் படித்துமுடிந்து கொட கன்ரீனில் இருக்கும்பொழுது பூட்டிய நூலகத்திற்கு முன்னால் ஒரே சத்தம். நூலகத்தில் கள்ளன் என்று.போய் பார்த்தால் எங்கட செல்வா தான்.கொஞ்சம் அயர்ந்து நித்திரை கொண்ட செல்வா எழும்பியபோது நூலகம் பூட்டு. லைட்டைப்போட்டு விடிய விடிய படிக்க யோசித்திருப்பான். அதற்குப்பிறகு கன்ரீன் தான். நண்பர்கள்செற்றாக சேர்ந்து கன்ரீன் மேசையில் கால் போட்டுப் படிக்கின்ற சுகமே தனி.இரவு ரவிகடை பிளேன்ரீ குடிச்சிட்டு கொயின்ஸ்பூத்தில ரண்டு பேரைக் கோல் பண்ணிக்குழப்பியிட்டு திரும்ப படிக்கிறதும் ஊருறங்கும்போது கையில் கல்லுடன் (நாய்ப்பயம்) இரவை ரசித்தவாறு ரூமுக்கு திரும்புவதையும் மறக்க முடியுமா.
இதற்குள் தோளில் பெரிய பையுடன் வரும் சுமைதாங்கி ஒருவரையும் இங்கு குறிப்பிட வேண்டும்,பின்னர் சொய்சாபுரவில் என் ரூம்மேட்டான மதுவதனன் தான் அது.அந்தப்பையில் சோப்பிலிருந்து துவாய் வரை எல்லாம் இருக்கும்.கன்ரீன் மேசையிலேயே நித்திரையும் கொள்வான்.ஒருவேளை ரூம் வாடகையை மிச்சப்படுத்துகிறானோ என்று யோசித்தேன்.பின்னர் ரூம்மேட்டான பிறகு தான் தெரிந்தது மது எவ்வளவு செலவாளி என்று.

பரீட்சைக்காலங்களிலும் கூட வெள்ளிதோறும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோயிலுக்குப் போகத்தவறுவதில்லை.பலர் போவது பக்தியால்மட்டுமில்லை கலர் பார்க்கவும் பக்கத்திலிருக்கும் அமிர்தாவில் சில்லிப்பரோட்டா சாப்பிடவும் தான். நண்பர்கள் எல்லாரும் அங்கே ஒன்றுகூடுவது தனி அழகு.
3ம் வருடம் எனக்கு ஏழரைச்சனி போல.எனக்கு ஏழரைச்சனி வந்தது சொய்சாபுர வீட்டு ஓணர்க்கிழவி வடிவில.அதோட முடிவெடுத்தது தான் ஓணரோட இல்லாத வீடு பார்க்க எண்டு.அங்கையிருந்து மீட்டெடுத்தது மதுவும் ராபியும் தான். பிறகு ஒருமாதிரி செமிசைவக்கடைச்சாப்பாடும் 255 பஸ்ஸுமாய் போனது.செமிசைவக்கடைக்கு பவான் வைத்த பெயர் புட்டுக்கடை.ஆனால் அங்க புட்டைத்தவிர மற்றவை தான் பரவாயில்லை.அந்தக்கல்லு மாதிரியான புட்டை பவான் விரும்பிச்சாப்பிட்டது உடம்பு மெலிய.இது தெரியாமல் மருத்துவப்பயிற்சிக்காக வந்திருந்த ராபியின் அண்ணா பவானின் சிபார்சால் கவரப்பட்டு 2 புட்டு மேலதிகமாய் எடுத்து சாப்பிட முடியாமல் எறிந்தது சோகக்கதை.புதுவருடத்தன்று 12 மணியளவில் சொய்சாபுரவில் மைதானத்தில் ஒன்றுகூடி வெடி கொளுத்தியதும் மறக்க முடியாது.

உண்மையில் பிரிந்துபசார விழாவின் போது தான் நண்பர்களின் பிரிவின் வேதனையை உணர்ந்தேன்.காதலில் மட்டுமல்ல நட்பின் பிரிவிலும் கூட ஒரு வித வலி உண்டு. இருந்தும் அந்த நினைவுகளை மீட்பதில் ஒரு சுகமும் இருக்கிறது.

1 comments:

Vasa said...

சசி வர்ணன் காமெடியள நினைச்சா மரணப்படுக்கையிலும் சிரிப்பு வரும்.நல்லா எழுதுறாய் செழியன்.