தற்போதைய நிலவரம்-05




ஏற்ற இறக்கம்,வளைவு நெழிவுகள் கொண்டது தான் வாழ்க்கை.வாழ்க்கை வட்டம் உருளும் போது வாளிகள் சண்டை பிடிப்பதுவும் சண்டை பிடித்தவர்கள் வாளிகளாவதும் சகஜமே என்பதை சிங்கையில் சில நாள் முன் நடைபெற்ற சம்பவம் கோடிட்டு காட்டி நிற்கிறது.பிரித்தானியாவில் இருந்து சிங்கைக்கு போன கௌதம் வாசுதேவ மேனன் நண்பர்களை சந்திக்க அழைப்பு விட்டிருக்கிறார்.நீண்ட நாள் சந்திக்காத நண்பனை மீள காணப்போகிறோம் என பலரும் குதூகலிக்க ஒருவர் மட்டும் கடுப்பாகிவிட்டாராம்.அந்த நபரை மேனன் முகநூலில் தடை செய்து வைத்திருந்தாராம்."போர் என்றால் போர் சமாதனம் என்றால் சமாதானம்,தடை போட்டு விட்டு பேச அழைப்பு விடுப்பது அவமானப்படுத்துவது போலத்தானே?" என்று சம்பந்தப்பட்டவர் குமுற கன்ராபிய தவிர மிச்ச எல்லாரும் மேனன் பக்கம் நின்று தாக்கி விட்டார்களாம்.எது எப்படியோ இந்த குமுறலிலும் நியாயம் இருக்கிறது என்று நடுநிலை வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.



மொறா 2003 மட்ட தமிழ் மாணவர்களில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல் புரபசனல் கமெரா வைத்திருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இந்த கமெராவில் உள்ள விசேடம் என்னவென்றால் ஜூம் போட்டு தவளைய படம் எடுத்தால் கூட அழகாக காட்டும்.இதனால் வண்டியுள்ளோர்,பேஸ் கட், பர்சனாலிட்டி குறைவானோர் காட்டில் அடை மழை பொழிகிறது.வண்டியழகன் ரஜீந்திரதாஸ் கூட ஒரு புகைப்படத்தில் பிராட் பிட் போல தெரிவதாக முகநூல் அப்ளிகேசன் ஒன்று தெரிவித்திருப்பது ஒன்றே இந்த கமெராக்களில் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு.இது ஒரு புறமிருக்க கங்காரு நாட்டில் தனியா இருக்கும் பெண்மணி ஏரிக்கரைய படம் எடுத்து போட அவுஸ்திரேலிய உள்ளூர் கவுன்சில் சிறந்த படம் என்று பரிசு கொடுத்து விட்டதால் உற்சாகமாகி எந்நேரமும் கமெராவும் கையுமாக கொலைவெறியோடு அலைவதாக கேள்வி.



இங்கிலாந்தில் மீள ஒன்று சேர தொடங்கியுள்ள ஏழு ஜி நண்பர்கள் கோடைக்கால வேளையில் எந்நேரமும் தண்ணீரில் மிதக்க திட்டமிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.அடுத்த வருடங்களில் காளை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அநேகருக்கு விழவுள்ளதால் இக்கோடையை இறுதிக்கோடையாக அறிவித்துள்ளனராம்.நாயகனும் வெறிகாரனும் "ராபட் பற்றிசன்" போல தலை மயிரை வளர்த்து மத்திய லண்டன் நகரில் உள்ள பப்புகளுக்கு வரும் வேற்றின பெண்களை மடக்க திட்டமிடுவதாகவும் புலனாய்வு நிலையம் தெரிவிக்கிறது."வெறிக்குட்டிக்கு வளர்த்தா வளரும் ஆனா நாயகன் ஆயிரம் வருசம் வளார்த்தாலும் தலைமயிர் வட்டமா திரும்பி தலைக்குள்ள போகுமே தவிர நீளமா வராது" என சிங்கையில் அதிஉயர் சம்பளம் வாங்கும் சிரிப்பு ரவுடி கருத்து வெளியிட்டுள்ளார்."தானா வளராட்டி தட்டி வளர வைப்பேன்" என அறிவித்துள்ள நாயகன் சீன பாம்பு எண்ணெய் வாங்கி தலையில் தடவியபடி திரிந்த காட்சியை பலரும் கண்டுள்ளார்கள்.



புல்லட்டு பிளாக்கர் கடைசியாக் சொந்த நாட்டு பாசத்தை விடுத்து கங்காரு நாட்டுக்கு பாய்ந்துவிட்டாராம்.எவரையும் இன்முகத்தோடு வரவேற்கும் வீணை தம்பதிகள் புல்லட்டுக்கும் வயிரார கொட்டியிருக்கிறார்கள்.பழையபடி அவர்தனது எழுத்துப்பணியை தொடர வேண்டும் என கனாக்காலம் இப்பதிவு மூலமாக கேட்டுக்கொள்கிறது.இதே நேரம் ஐந்து கரத்தான் அப்பே லங்காவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு படித்த மனிதர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.சிங்கப்பூரின் லீக்குவான்யூ,இஸ்ரேலின் மோசேதயான் போல இலங்காபுரிக்கு ஐங்கரத்தான் ஆகவேண்டும் என்று ப்லரும் அவரை கேட்டுக்கொண்டதாகவும் அறிகிறோம்.



ஹொஸ்டலில் சிறிஸ் என்ற பெயரிலை ஒரு றெமோ இருந்தான்.காலுக்க தண்ணி வச்சுக்கொண்டு கதிரை எரிய எரிய படிக்கிற ஆள்.பாட்டு எண்டா என்னெண்டு கேட்டால் " அர்த்தமுள்ள சொற்களால் கோர்க்கப்பட்ட சந்தத்தோடு வாத்தியங்களால் ஆன பிண்ணனி இசையோடு இணைக்கப்பட்ட வரிகள்" என்று வரைவிலக்கணம் சொன்ன அவர் இன்று லேடி காக்காவூக்கு காக்கா பிடிக்கிறாராம்,பியான்சு, ஸ்பிரிட்டனி பியர் போண்ற அழகிகள் உதடுகளில் இருந்து வரும் கிளர்சியூட்டும் பாட்டுக்களுக்கு அடிமையாகி முழு றெமோவாக ஆகிவிட்டதாக ஜெர்மனிய வானொலி தெரிவித்துள்ளது.

3 comments:

Thinesh said...

remo enru irupathu Sriskanth thane?
valakidda kaarikai thodar enna aachu?
Payanthidiya?

புல்லட் said...

வயசாகிட்டு மச்சான்...பழைய தெம்பெல்லாம் இல்லை.. நீ எழுது.. வாசிக்க நல்லாயிருக்கு.. :) அது சரி என்ன கடுப்பில அந்த சாப்பிடுற தலைய விளக்கப்படமா போட்டிருக்கிறாய்? :P

Kaipillai said...

கொமெண்ட் அடிக்கவாவது வந்தியே! அது சாப்பிடுற தலை இல்லையடா.தலைப்பாரம் கூடின தலை.பாரம் தாங்காம உடம்பையும் தூக்கிக்கொண்டு கவிழ்ந்திட்டுது.விளங்காத மாதிரி கேட்டு என்னை மாட்டிவிடுற திட்டம் தானே உனக்கு?