தற்போதைய நிலவரம்-06

வாழ்க்கை சக்கரம் உருண்டோடும் வேகத்தில் என்னவெல்லாமோ நடக்கிறது.தலை நிறைய முடியோடு வலம் வந்த நண்பர்களில் பாதிப்பேருக்கு அரை மொட்டை விழுந்து விட்டது.பயிற்றங்காய் பாடியோடு வலம் வந்த பலர் பானையளவு வயிறு வளர்த்து திண்டாடுகிறார்கள்.இருப்பினும் சில மாற்றங்கள் வாழ்க்கைக்கு புதுப்பொலிவு ஊட்டுபவையாகவும் மனமகிழ்ச்சியை ஊட்டுபவையாகவும் இருக்கின்றன.அந்த வரிசையில் இடம் வலமாக இரண்டு இரண்டுப்படி நாலு மடிப்பு வைத்த "காதலன்" ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மொறட்டுவைக்கு 2004 ஆம் ஆண்டில் வந்த கெமிக்கல் சசி டெனிமுக்கு மாறி லண்டனுக்கு வந்து லோகிப்புக்கு இறங்கி கடைசியாக இல்லற வாழ்க்கைக்குள்ளும் குதிக்க தயாராகி விட்டார்.மட்டத்தின் சில பேர்வழிகளைப்போலல்லாது எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இன்முகத்தோடு தகவல் கூறி கல்யாணத்துக்கு தயாராகும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.பம்பலப்பிட்டி கோயிலில் உம்சாண்டியின் தம்பி செட் பண்ணிய ஆட்கள் மட்ட கைப்பொம்மை தலைவனை அடிக்க வர எல்லோரும் ஓடி ஒழிய தனிய நிண்டு அடிபட்ட போது வெளிப்பட்ட அந்த ஆண்சிங்கம் மீளவும் வேறு விதமாக தென்பட்டிருக்கிறது.விஞ்ஞான வாழ்க்கை போலவே இல்லற வாழ்விலும் சிறப்படைய வாழ்த்துவதில் கனாக்காலம் பெருமையடைகிறது.



குதிரையில் ஏறி பிஸ்டலை இடுப்பில் செருகாமலே கௌபாயாக வலம் வந்தவர் மதுவர்ணன்.டென்மார்க் நாட்டு நங்கையோடு இல்லறத்தில் இணையவென விரைவில் கடல் கடக்க போகிறார்.மட்டத்தின் அனைத்து நண்பர்களுக்கும் அழைப்பெடுத்து உரையாடி தகவல் சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.ஆனி மாதம் இந்தியாவில் மூன்று முடிச்சை போடவிருக்கும் நண்பரை வாயார வாழ்த்துகிறோம்.பி-கு: இந்திய திருமணத்துக்கு தொப்புள் அழகன் புதுமண தம்பதியராய் போய் சிறப்பிக்க இருக்கிறாராம்."ஹனி மூன் போறதுமாச்சு,கௌபாய் கலியாணத்தில் கலக்கிறதுமாச்சு" என கல்லு ரண்டு மாங்காய் திட்டத்தோடு காத்திருக்கிறாராம்.எப்படியோ போற இடத்தில வண்டி மேல தேங்காய் விழாட்டி சரி.


இப்படி சிலர் பகிரங்கமாக திருமணம் செய்ய்தாலும் ஒளித்து மறைத்து செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.திருமணம்/பதிவு திருமணம் எனபது வாழ்க்கையில் ஒரு படி நிலை.அதை நண்பர்களுக்கு சொல்லாமல் மறைப்பது ஒரு வகையில் கோழைத்தனம்/தாழ்வு மனப்பான்மையில் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

0 comments: