"இஸ்ஸறா You all came தானே? Sir"



நள்ளிரவை தாண்டிய வேளைகளில் சொய்சாபுரம் உறங்கிக்கொண்டிருந்தது.கட்டாக்காலி தெருநாய்களோடு இரவின் மைந்தர்களான குடுக்காரர்கள் மட்டுமே விழிப்போடு இருந்தனர்.அந்த மயான அமைதியை குலைப்பது போல் வாகனங்களில் வந்து குதித்த காவல்த்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஒரு வீட்டை சுற்றிவளைத்து கதவை தட்ட உள்ளே இருந்தவர்களின் தலைவன் பின்வழியால் இருந்த மதிலை தாண்டி ஓடும்படி கட்டளையை பிறப்பித்துவிட்டு மான் காரத்தேயை பாவித்து பறக்கிறான்.சிதறி ஓடிய அடிப்பொடிகளில் ஒரு அதீத புத்திசாலி செருப்பை கழற்றி வைத்து விட்டு குழாய் வழியாக கட்டிட கூரையில் ஏறி பதுங்கி கொள்ள ஆட்டம் சூடு பிடிக்கிறது.துப்பறிவில் ஸ்கொட்லண்யார்ட்டுக்கே சவால்விடும் நுண்மதியுள்ள இலங்கை போலீசார் காரிருளிலும் அந்த கரிய "பாட்டா செருப்பை" கண்டு பிடித்து மேலே ஒருத்தன் பதுங்கியிருக்க வேண்டும் என உய்த்தறிந்து பிடித்துவிட்டார்கள்.பிறகென்ன பிடிபட்டவனை கைத்தொலைபேசியில் இருந்து ஏனையவர்களுக்கு அழைப்பு எடுக்கும் படி சொன்னார்கள்.ஒரு குறோட்டன் செடிக்கு பின்னாலிருந்து நோக்கியா 3310 கதற தொடங்கியது.ஆனால் பத்து அழைப்பு போயும் உள்ளே ஒளித்திருந்தவன் அசரவில்லை.கடுப்பான காவல் ஒன்று அவனை வெளியே இழுத்துப்போட்டுவிட்டு ரேடியோவில் "சேர்! ஒருத்தன காட்டுக்க இருந்து பிடிச்சிருக்கிறம்.ஓவர்" என்று விறைப்பாக சொல்லி சல்யூட் அடிக்க முதலாவதாக பிடிபட்டவனுக்கு வயிற்றை கலக்கியது.மேலதிக போலீஸ் அணிகள் களத்தில் இறங்க தாக்குப்பிடிக்க முடியாமல் ஒவ்வொருத்தராய் சரணடைந்துவிட்டார்கள்.போலீஸ் தலைமை அதிகாரி முரட்டு குரலில் கேட்டார் "கம்பஸ் பெடியள் என்று சொல்லுறியள்.அப்ப ஏன்ரா ஓடினீங்கள்?".குழுவின் தலைவனுக்கு இப்படியான கேள்விகள் புதிதல்ல.கடந்தகாலங்களில் இதை விட சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்திருக்கிறான்.ஆனால் அன்று அவன் சொன்ன பதில் விசேடமானது & காலத்தால் அழியா புகழ் பெற்றது.

"இஸ்ஸறா You all came தானே? Sir"



விஞ்ஞானி கெமிக்கல் அலி குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து தெஹிவளைக்கு நகர்ந்த நேரம் அது.சிக்கலான கால கட்டம்.யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் தரைவழி துண்டிக்கப்பட்டிருந்ததால் மாதங்களுக்கு ஒருமுறையாவது கிடைக்கிற வீட்டுச்சாப்பாடும் இல்லாமல் தவித்திருந்தோம்.எங்கள் நிலையுணர்ந்த விஞ்ஞானி "30 பெடியள வீட்டுக்கு கூப்பிட்டா சிக்கல் வருமோ?" என்று கொஞ்சம் கூட யாழ்ப்பாணத்தனமா யோசிக்காமல் அழைத்துவிட்டார்.பெரிய அணியா கிளம்பிப்போனோம்.வீடு அடையாளம் பிடிபடாததால் அழைப்பை சசிக்கு போடும் படியாயிற்று.

"டேய்! வாற வழியிலை River ஒண்டு Run பண்ணிக்கொண்டிருக்கும்.அத கடந்தா First ஆ வாற Two story building  ல Up story தான் என்ர வீடு".


எங்கள் மட்டத்தின் வௌவால் மனிதன் வசந்தன் பகல் முழுக்க தூங்கி இரவு வேளைகளில் தான் விடுதியை விட்டு வெளிக்கிடுவார்.இருளை போர்வையாக்கி சுற்று வட்டாரத்திலிருக்கும் தென்னை,வாழை மரங்களை மொட்டை அடித்து விடியமுன் மீண்டுவிடுவார்.சாகச வீரருக்கு நெடிந்து ஒரு வளர்ந்த தென்னை நிறைந்த இளநீர்க்குலைகளோடு சவால் விடுத்துக்கொண்டிருந்தது.பலமுறை தோல்வியை சந்தித்திருந்த போதிலும் இறுதியாக உச்சியை அடைந்து குலைகளை பறித்து வெற்றிக்களிப்பில் கீழிறங்கிய போது துன்பியல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.கால் சறுக்கி மரத்தோடு வழுக்கி விழுந்த அலியப்பாவின் நெஞ்சு  முழுக்க உராய்வுக்காயங்கள்.வைத்தியர் தந்த கருநீல நிற மருந்தை நெஞ்சுமுழுக்க பூசி திரிந்தவனை விசித்திரமாக பார்த்த சிங்களவர்களிடம் அலியப்பா சொன்னான்.

"I hugged தென்னமராக் tree மச்சான்"

சீனியர்களே இப்படி என்றால் அவர்களுக்கு வாய்த்த ஜூனியர்கள் லேசுப்பட்டவர்களாக இருப்பார்களா?.அவ்வகையில் பிரபலமானவர் "பண்ணாகம் தாசன்". றூமுக்குள் சோதனையிட வந்த போலீஸ்காறன் தாசனின் கட்டுப்பல் இருந்த நீர்க்குவளையை பார்த்து "குண்டா இருக்குமோ?" என ஐயப்பட செப்பியது தான் "சேர்! மகே Body parts எக்கக் தியன்னவா".கம்பியூட்டரை போடும்படி போலீஸ் பணித்தபோது பாழாய்ப்போன "பிளக்" அடம்பிடித்தது.வயரை ஆட்டியபடி பண்ணாகம் தாசன் "சேர்! கறண்ட் இன்னவத" என்று கேட்டு வைக்க அதிர்ச்சியடைந்த காவல்த்துறையினர் சற்றும் தாமதிக்காது "மகே அம்மே! அபி யெனவா" என்றபடி ஓடிப்போனார்கள்.

உட்கார்ந்து இருந்து சிந்திக்கும் போது சசியின் "நான் படிக்க வரேலை,வேலைத்திட்டத்துக்கு வந்ததனான்" சிரிப்பு ரவுடியின் "நாங்கள் இயக்கத்துக்கு அடிச்ச ஆட்கள்" கமல்சின் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" மற்றும் "எதெண்டாலும் சரிதான்" ஜேன்கொன்சாலின் "நான் சொல்ல மாட்டனே" சௌந்தரின் "எனக்கு ஒன்னுமே வெளங்கலடா" போண்ற பல பிரபலமான வாக்கியங்கள் நினைவிற்குள் வருகின்றன.ஆயினும் "இஸ்ஸறா You all came தானே? Sir" க்குள்ள புகழும் பிரபல்யமும் ஏனையவற்றுக்கு இல்லை.மும்மொழியையும் ஒரு வாக்கியத்தில் உள்ளடக்கி நிற்கும் "இஸ்ஸறா You all came தானே? Sir" ஆனது காலத்தால் அழியாததாகும்.அந்த மகுட வாக்கியத்தை உதிர்த்த பன்மொழிவித்தகர் "கமல்ஸ் aka கமலரூபன்" இன் புகழ் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் வாழும் நாள் வரை வாழும்.





5 comments:

செழியன் said...

நல்லா எழுதியிருக்கிறாய் சுகந்த மாறா.... அலியப்பான்ர தென்ன மரத்தில ஏறின கதைக்கு ஒரு சூப்பர் பிகரிண்ட கவர்ச்சிப்போட்டோவா கிடைச்சுது.?உதைத்தான் “ரணகளத்திலும் கிளுகிளுப்பு “ எண்டு சொல்லுறது போல...!

Kaipillai said...

பிகர் அரையும் குறையுமா நின்றாத்தானே பெடியள் இங்கால்ப்பக்கம் எட்டிப்பார்ப்பாங்கள்.

Anonymous said...

சிங்களத்தியட்ட you looks like Prethi Zintha என்று சொல்லி அவள் காறி துப்பினதயும் எழுதடா

Unknown said...

இஸ்ஸறா You all came தானே? Sir... ha ha ha con't forgot

IMRAN said...

Wonderful post! We are linking to this particularly great post on our website. Keep up the great writing.