2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம்.இலங்கை பதிவுலகில் எமது மட்டட்தை சேர்ந்த மூன்று பதிவர்கள் கலக்கிக்கொண்டிருந்தார்கள்."புளொக்" எழுவதற்கு மிகப்பெரிய திறமை வேண்டும் என்ற எண்ணவோட்டத்தோடு இருந்த நான் அவர்களின் பதிவுகளை இங்கிலாந்தில் இருந்து ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.எமது மட்டத்துக்கு "புளொக்" தொடங்க வேண்டும் என்ற சலசலப்பு அந்நேரம் தான் கிளர்ந்தது."மச்சான் தயவு செய்து தொடங்குங்கடா" என்று ஆளாளுக்கு மாறி மாறி மூன்று பேரையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருத்தனும் ஒழுங்கான பதிலை சொல்லுறான்கள் இல்லை. காத்திருந்து ஒருநாள் முகநூல் சட்டில் சிக்கனை தின்று வளர்ந்த பதிவரை பிடித்து "மச்சான் நீயாவது கெதியா தொடங்கடா" என்று கேட்டு வைத்தேன்.நெல்சன் மண்டேலா,காந்தி பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருந்த அந்த பெரும் பதிவர் "தனிமனித தாக்குதலை நான் விரும்புவதில்லையாதலால் தொடங்க முடியாது" என்று பதில் போட்டு என் கடுப்பை கிளறி கனாக்காலத்தை தொடங்க வழிசமைத்தார்.

கடந்து போன நினைவுகளை மீட்ட தொடங்கப்படும் தளத்தில் காந்தீயமும்,சிவப்பு சித்தாந்தமும் பேச முடியுமா?.ஜூன் மாதன் 2009 ஆண்டு கனாக்காலம் தொடங்கியது.அன்று தொடங்க மறுத்த பதிவர்கள் எவரும் பதிவுலகில் உயிர்ப்புடன் இல்லை.தனிமனித பிரபலத்தை நோக்கமாக கொண்ட எந்த பதிவரும் நீடிக்க முடியாது.சுய திருப்திக்காகவும்,உள வெளிப்பாடாகவும் எழுதுபவர்களே பதிவுலகில் நிலைக்கிறார்கள்."மச்சான்! அடிக்கடி எழுதாட்டியும் மாதமொண்டு எண்டாலும் விடாமல் எழுதுறாய். அப்படியே தொடர்ந்து எழுது! நண்பனொருவன் சொன்ன வார்த்தைகள் இவை.தொடர்ந்து பத்து வருடம் எழுதுவதற்கு நண்பன் சொன்ன வார்த்தைகளே போதும்.

எச்சரிக்கை கடிதம்,மிரட்டல் கடிதம்,அனானி கடிதம் என்று பலதை கனாக்காலம் கண்டிருக்கிறது.விருப்பத்தோடு வாசிப்பவர்கள் அளவுக்கு கடுப்போடு வாசிப்பவர்களையும் கொண்ட தளம் இது.தளத்தில் பதிவுகளை இட்டு பங்களிப்பு நல்கிய பவானந்,இளம்செழியன்,சசிக்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.இத்தளம் தொடர்ந்து காத்திரமான படைப்புக்களை வழங்கி நீடிக்க உதவுமாறு "மட்டம் 2003" மாணவர்களிடம் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments: