கலாச்சார தூண்!



யாழ்ப்பாண கலாச்சாரம் என்கிற தூணை விழவிடாது காக்கிற அத்திவாரம் போண்றவர் தான்  கமலரூபன் என்கிற அப்பாசென்று சொன்னால் அது மிகையாகாது.ஏனென்றால் நாமெல்லாம் வயதுக்கோளாறில் கண்டதையும் கிறுக்கிகொண்டிருந்த போது அவர் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெருமைக்குரியவர்.நாம் "காதலா? காமமா? " என்று விவாதம் நடத்தும் பொழுதுகளில் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்று அறச்சீற்றம் காட்டியவர்.அப்படிப்பட்ட மதிப்புக்குரியவர் யாழ்ப்பாண கலாச்சாரம் தொடர்பில் விட்ட சமீபத்திய கருத்து புரட்சிகரமானது.

"உண்மையா யாழ்ப்பாண கலாச்சாரம் அழிகிறது என்று கவலைப்பட வேண்டியவர்கள் 1980- 1990 இடைப்பட்ட தசாப்தத்தில் பிறந்த நாங்களே ஒழிய மற்றவர்கள் அல்லர்"

மேலோட்டமா பார்க்கும் போது புரியாவிட்டாலும் ஆழமாக நோக்கும் போது நிலாவரை கிணறு போல ஆழமில்லாத அரிய கருத்து இது.இந்த தசாப்தத்தில் யாழ்ப்பாணத்தில் நாம் பிறந்திருந்த போது போர் தொடங்கியது.நாமெல்லாம் வளர்ந்து இளமைப்பிராயம் கழித்து முதிர்வடைந்த போது போர் முடிந்துவிட்டது.இடையில் இடம்பெயர்வுகளையும் அழிவுகளையும் கண்டபடி வளர்ந்த எம் வாழ்கை வித்தியாசமானது.எமக்கு முந்திய தலைமுறையோ சிறுவயதில் இந்திய சினிமாவில் திழைத்திருந்தது.வாலிபம் வரமுதலே திருமணம் என்ற பெயரில் தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்ததோடு திருப்தி அடையாமல் சின்னவீடுகளையும் பேணிவந்தது.பெல் பொட்டம் ஜீன்ஸ்,கண்வரை வழியும் தலை முடி அலங்காரம் என உலாவிய அந்த காலகட்டத்தவர்கள் போர்க்காலத்தில் குடும்பஸ்தர்களாகிவிட்டவர்.எமக்கு பின்னைய சதாப்தத்தில் பிறந்தவர்கள் சிறுவயதில் போரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வளர்ந்து வாலிபர்களாக முதல் போர் ஓய்ந்துவிட்டது.அவர்களும் பிறகு நன்றாக வாழ்ந்துவிட்டார்கள்.கட்டுப்பாடு,கலாச்சாரம்,ஒழுக்கம்,கண்ணியம் என்றிருந்த போர்க்கால ஒழுங்குகளால் புடம் போடப்பட்டது நாம்தான்.லௌகீக வாழ்வை அனுபவிக்காது கட்டுப்பெட்டியாக வளர்ந்ததும் நாம் தான்.

ஆகையால் ஒரு கிழடோ முதிர் குடும்பஸ்தரோ,முளைச்சு மூன்று இலை விடாத கலாச்சாரம் பேணும் பெடிசுகளோ நமக்கு முன்னால் நின்று "யாழ்ப்பாண கலாச்சாரம் கெட்டுப்போச்சு" என்றூ புலம்பினாலோ சத்தம் போட்டாலோ இந்த நியாயத்தை கூறி புரிய வையுங்கள்.அடங்காவிட்டால் தட்டி பிழிந்து அடக்குங்கள்.அதேவேளை அப்பாசின் இந்த அரிய கருத்தை பாராட்டி அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் கலாச்சார தூண் என்ற பட்டத்தை வழங்குவதில் கனாக்காலம் பெருமை கொள்கிறது.

கம்ல்ஸ் தூண் என்றால் கலாச்சாரத்தின் கூரை யார்? "கலாச்சாரத்தின் அத்திவாரம்" யார்? .நீண்ட அலசலுக்கு பின் கலாச்சாரத்தின் கூரையாக கெமிக்கல் அலியாகிய சசிவர்ணன் தெரிவுக்குழுவால் அறிவிக்கப்பட்டார்.அந்நாளில் வன்னி வள நாட்டின் கலாச்சாரத்தை பாவாடை ஜீன்ஸ் அணிந்தும் சைவ கலாச்சாரத்தை நெற்றியில் திருநீற்று குறி அணிந்தும் பேணிய அலிபாய் இன்று பிரித்தானிய கலாச்சாரத்தை  நைக்கி காலணியும் கெல்வின் கெவின் உள்ளாடையும் அணிந்து கட்டிக்காத்துவருகிறார்.குடும்பஸ்தர் ஆனபோதும் பல்வகை கலாச்சாரங்களை யும் கட்டி காப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிற்குறிப்பு- "கலாச்சார அத்திவாரம்" ஆக தெரிவானது ஒரு பெண்.அவரது பெயரை இங்கே போட்டாலே கொந்தளித்து வழக்கு போடுமளவுக்கு கட்டுக்கோப்பானவர்.எங்கே உங்கள் உய்த்தறியும் ஆற்றலுக்கு தீனி போட்டு கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?

0 comments: