Mars Orbiter Mission



உலகத்துக்கே பிடிக்காத அடோல்ப் ஹிட்லரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். எவ்வளவுக்கு என்றால் அவர் படத்தை கணனி மேசைத்தளத்தில் போட்டு வைக்குமளவுக்கு பிடிக்கும். நூறு கோடி மனிதர்களுக்குள்ள தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்குள் இருந்தால் எப்படி இருக்கும்?. அது தான் ஹிட்லர். எதிரிகள் காலடி தொலைவுக்குள் வரும் வரை திருப்பி தாக்குவதை பற்றியே சிந்தித்த விடாக்கண்ட மனுசன் அவர். தோற்றாலும் வென்ற பெருமிதத்தை எதிரிக்கு தரக்கூடாது என்பதற்காக தன் உடலை எரித்தழிக்க உத்தரவிட்டு மாண்ட இரும்பு நெஞ்சன். ஹிட்லர் இல்லாவிட்டால் ஸ்டாலினும், வின்ஸ்டன் சேர்ச்சிலும் ,ரூஸ்வெல்ட்டும் யாரென்றே நமக்கு தெரிந்திருக்காது. அவ்வாறே ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர் வந்திராவிட்டால் தாங்கள் யாரென்றே தெரிந்திராது. அது தெரிந்த பின் அவர்கள் போட்ட தாண்டவத்தில் உலகமே மிரண்டு போனது. போரில் தோற்றாலும் ஹிட்லர் தட்டியெழுப்பிய பெருமித உணர்வு ஜெர்மானியருக்கு போகவில்லை. இன்றைய திகதியில் ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்களின் பொறியியல் தரம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. இத்தனைக்கும் ஜெர்மானியர்கள் ஐரோப்பாவின் ஆதியினம் அவ்வளவு தான்.

உலகத்திலேயே ஆதியினம் ஒன்று இருக்கிறது. உழுது பயிரிட்டு உழைத்து வாழும் முறையை முதன் முதல் பின்பற்றிய இனம். இவர்கள் ஜெர்மானியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த நாட்களில் வானளாவ கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோள்களின் இயக்கம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார்கள். கணிதத்தை உருவாகினார்கள். தொழில் முறை இராணுவங்களை உருவாக்கி போரிட்டார்கள். அரேபியர்களுக்கு கல்வி தந்தார்கள். சீனர்களுக்கு மதமும் தற்பாதுகாப்பு கலைகளும் கற்று தந்தார்கள். பல்லாயிரம் மைல்கள் கடலில் சென்று வியாபாரம் செய்தார்கள்.  ஐரோப்பாவின் மூத்த இனமே இவ்வளவு உயர்வாக இருக்கும் போது உலகின் மூத்த இனம் எங்கேயோ உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் காலம் நாம் விரும்பாததையும் எழுதி விடுகிறது. தகுதியில்லாதவர்களுக்கு பெருவாழ்வும் கொடுத்து தகுதியுள்ளவர்களை கேவலப்படுத்தி வீழ்த்திவிட்டு சென்று விடுகிறது. கைபர் கணவாயூடாக வந்த நாடோடிக்கூட்டத்தோடு எப்படி இந்த புராதன மக்கள் கூட்டம் கலந்தது?. காட்டுமிராண்டி மொகாலையர்களை எதிர்கொள்ள முடியாமல் ஏன் இப்படி பின்வாங்கியது?. எல்லாவற்றிற்கும் மேலாக கேவலமான கடற்கொள்ளை கூட்டமான பிரித்தானியர்களிடம் எப்படி நூறாண்டுக்கு மேலாக அடிமையாக இருந்தது?. காலம் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு எவராலும் தெளிவான பதிலை அளிக்க முடிவதில்லை.

எது எவ்வாறாயினும் வேறுபட்ட இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்களின் கலவையாகவுள்ள தற்போதைய பாரத நாட்டினுள்தான் உலகின் ஆதியினம் இருக்கிறது. வேறுவிதமாக சொல்வதானால் அவ்வினத்தின் சிறப்புக்களை ஏனையவர்கள் ஏதோ ஒரு வீதத்தில் தமக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அச்சிறப்புத்தன்மை ஒப்பிடமுடியாதது. அதை நுண்ணறிவு என்றோ, விசேடதகமை என்றோ குறிப்பிட முடியும்.  அத்தகமைதான் மங்கள்யான் கலத்தை செவ்வாய் வரை முதலாவது முயற்சியிலேயே எடுத்துச்சென்று பிசகின்றி ஈர்ப்பு பாதையில் சுற்ற விட்டிருக்கிறது என்றும் பெருமிதமாக கூறியே ஆகவேண்டும்.மொகாலய காட்டுமிராண்டிகளாலும் ஐரோப்பிய கொள்ளையர்களாலும் சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்ட புராதன தேசம் தடுமாறி எழுந்து ஆறு தசாப்தங்களுள் தெளிவாக விண்வெளியில் சிக்ஸர் அடித்திருக்கிறது. ஹிட்லர் உருவாக்கிய தொழில் நுட்பத்தை பிடுங்கி அமெரிக்கர்களும் ரஸ்யர்களும் விண்வெளியில் காட்டிய "சாதனைகளை" போலல்லாது சுயமாக ஒரு காட்டு காட்டியிருக்கிறது இந்தியா.

பிரமாண்ட விண்வெளியில் 300 நாட்களாக 670 மில்லியன் கிலோமீற்றர்கள் தாண்டி பயணித்து பிசகின்றி இன்று செவ்வாயின் ஈர்ப்பு வலையத்தின் சிக்கியது மங்கள்யான். பொன் கொழித்த இந்தியா வறுமையில் உழழ மூல காரணமாக இருந்த பிரித்தானியர்கள் "பிச்சைக்கார தேசத்துக்கு இது தேவையா?" என்று இணையவெளியெங்கும் ஒப்பாரி வைக்க வெள்ளைக்காரர்கள் முகநூலில் "செவ்வாயில் மாடு மேய்க்க போகிறார்களா?" என்று கலாய்த்திருக்க தன் முயற்சியின் சற்றும் தளராத மங்கள்யான் விடாப்பிடியாய் பயணித்து போய்ச்சேர்ந்தான். மனித குலத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்போகும் விண்வெளி பயணங்களை ஒரு குடியேற்ற வல்லரசு விலை கொடுத்து வாங்கப்பட்ட பலதரப்பட்ட இனங்களின் மனித மூளையை வைத்து முன்னெடுப்பதைவிட பாரதம் போண்ற புராதன தேசம் முன்னெடுப்பது தான் அதிக பலனை தரவல்லதாக இருக்கும். 74 மில்லியன் அமெரிக்க டொலர்களில் செவ்வாயை எட்டிப்பிடித்த இஸ்ரோவுக்கு பெரு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் பட்சத்தில் மேலும் பல மகத்தான சாதனைகளை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

0 comments: