கோச்சடையானில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது". நண்பன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு கூட வந்த வஞ்சகன் தருணம் பார்த்து முதுகில் குத்தும் போது எந்த தீரனும் நிலை தடுமாறித்தான் போவான்.  எதிரி அடித்தால் உடனடியாக திருப்பியடிக்க முடியும். ஆனால் கூட இருந்தவன் குழி பறிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியில் திருப்பித்தாக்க முடியாது. அநேகமானவர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் குழி பறித்த போது ஒதுங்கிச்செல்வதையே தேர்ந்தெடுப்பார்கள். விடயம் தெரிந்தவர்களின் பரிதாப விசாரிப்புகள், உறவுகளின் ஏளனங்கள் என கொடூரமான தருணங்கள் நிரம்பிய வலி அது.

உலகின் மூலைகளெல்லாம் அலைந்து திரியும் எங்களில் அநேகருக்கு ஒரு கனவுண்டு. தாய்நாட்டிற்கு போக வேண்டும், வெற்றிகரமாக ஒரு தொழில் முயற்சியை தொடங்கி வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், தேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நியாயமான கனவு அது. அந்நிய நாட்டில் அரிதாக கிடைக்கும் ஒய்வு நேரங்களில் நண்பர்கள் கூடும் போது இது குறித்து அலசுவோம். வெற்றி வாய்ப்பு, தடைகள், தோல்வி ஏற்படின் எதிர்காலம் என பலவாறான உப தலைப்புகளில் எங்கள் விவாதம் நீளும். எங்கள் சோர்வையும் தயக்கத்தையும் போக்க வெற்றிகரமான உதாரணம் ஒன்று தேவைப்படும் போதெல்லாம் அவனது பெயர் வந்து போகும். வன்னி பெருநலப்பரப்பிலிருந்து மொறட்டுவைக்கு வந்த சுள்ளான் அவன். 2008 ஆம் ஆண்டு கம்பஸ் முடிந்து ஆளாளுக்கு ஒரு திக்காக பறந்த போது ஊரில் உறுதியாக நின்றவன். நாங்களெல்லாம் கலியாணம் பற்றி யோசிக்க முதலே அப்பா ஆகி சாதித்து காட்டியவன்.

தீபரூபன் ஊரில் கட்டிட ஒப்பந்தக்காரனாக ஆகிய போது நாங்களெல்லாம் வெள்ளைக்கார முதலாளிக்கும் ,சீன முதலாளிக்கும் கீழே வேலை செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் உரையாடும் போது "மச்சான்! வந்தா வெல்லலாம். நான் தேவையான உதவி எல்லாம் செய்து தாறன்" என்று நம்பிக்கையூட்டுவான். வார்த்தைகளால் மட்டும் நில்லாது சிலருக்கு உதவி செய்தும் காட்டியவன். ஆரம்பித்து ஒரு வருடத்திலேயே மோசடிக்காரனிடம் இரண்டு மில்லியன்களை இழந்தும் விடாப்பிடியாக நின்றான். சில நாட்களின் பின்னர் பெராதெனிய கம்பஸ் பெடியனோடு சேர்ந்து சில ஒப்பந்தங்களை பெற்று செய்து வருவதாக கேள்வியுற்றோம்."சுள்ளான் சுழியன் பெரிய அளவிய கலக்குவான் பார்" என்று நாங்கள் நம்பிக்கையோடு இருக்க அந்த கூட்டுச்சேர்ந்த பரதேசியும் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவனுக்கு ஆப்பு அடித்திருக்கிறது.

தீபரூபன் கடும் உழைப்பை கொட்டி கட்டுமானங்களை செய்து கொண்டிருக்க, வந்த கொடுப்பனவு பணத்தில் கார் வாங்கி ஓடியிருக்கிறான் அந்த ஆப்பு மன்னன். தீபரூபனின் பொறுமையை பலவீனமாக கருதி போலிக்கணக்குகள் காட்டி பெருமளவு லாபத்தை விழுங்கியிருக்கிறான். ஆட்டையை போட்டு பழகினவனுக்கு கையும் காலும் சும்மா இருக்காது. ஒரு கட்டத்தில் கொழுப்பெடுத்து மாகாண சபை ஒப்பந்தங்களில் லஞ்சம் வாங்கி பருத்திருக்கிறான். இதோடு நிறுத்தியிருக்கலாம் அவன். ஆசை யாரை விட்டது?. இறுதியாக வந்த 5 மில்லியன் ஒப்பந்த பணம் முழுவதையும் ஏப்பம் விட்டு கேட்கப்போன தீபரூபனிடம் "நீ செய்த வேலைக்கு சம்பளம் வேணுமெண்டா தாறன்" என்ற அருவருப்பாக பதிலளித்திருக்கிறான்.

சில கால அவகாசங்களை கொடுத்தும் அவன் திருந்தாத நிலையில் நிலையில் சுள்ளான் திருப்பி அடித்திருக்கிறார். இன்றைய திகதியில் அரச பணத்தை ஊழல் செய்தது, தொழில் பங்குதாரனை ஏமாற்றியது, வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து சேர்த்தது என பலமுனை ஆதாரங்களை மாகாண சபை அரசின் முன் வைத்தது ஆப்பு மன்னனின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது. நாய் நடுக்கடல்ல நின்றாலும் நக்கி குடிப்பதைப்பற்றியே சிந்திக்குமாம். அதே போல் அந்தப்பரதேசி கேவலமாய் இறங்கி தீபரூபனினதும் ,மனைவியினது முகநூல் கணக்குகளை கைப்பற்றி பின்வாங்கும்படி சிறுபிள்ளைத்தனமாக மிரட்டியிருக்கிறான். முகநூல் இல்லாவிட்டால் முகவரியே இல்லையென்று ஆகிவிடுமா?. புதிய கணக்கை திறந்து நண்பர்களோடு இணைந்து கொண்டிருக்கிறான் தீபரூபன்.


A conventional "Aapu"












ஆப்படிக்க வந்தவன் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல சிக்கியிருக்கிறான். பிய்த்தெடுத்துக்கொண்டு ஓடுவது, அல்லது நின்று மாட்டுப்படுவது என்று இரண்டு தெரிவுகள் தான் அவனுக்கு இருக்கின்றன.
மோசடி செய்யப்பட்ட பணம் திருப்பி வரப்போவதில்லை என்ற போதிலும் இப்படியான புல்லுருவிகள் நாட்டை விட்டு அகற்றப்படுவது அல்லது முடக்கப்படுவது அவசியம். துடிப்புள்ள இளைஞர்களின் தொழில் முயற்சிகளில் கொள்ளையடிக்க நினைக்கும் பணப்பேய்களுக்க்கும், திருடர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாய் அமைய வேண்டும். வெளிநாட்டுக்கு தப்பி ஓடாது தாய்நாட்டில் நின்று ஒரு பொறியியளாளன் நின்று சாதிக்க போராடுகிறான் என்றால் அது மிகப்பெரும் ஈகம். அதை கெடுக்க நினைக்கும் கொழுத்த எலிகள் தயவுதாட்சணியமின்றி விரட்டப்பட வேண்டும். இக்கட்டான தருணத்தில் மட்டம் 2003 நண்பர்களாகிய நாம் தீபரூபனுக்கு பக்கபலமாக நிற்போம்.

4 comments:

Anonymous said...

Super da

Anonymous said...

Super da

Anonymous said...

Suga, I appreciate you writing this article. But, can't you really see what is happening in reality?

http://goo.gl/W7ZA37
http://goo.gl/aRIQen

This is the main reason why no one wants to come back home. As long as corruption is lead by educated people, Jaffna will never see light.

Keep writing anyways, good job.

Kaipillai said...

இந்த பிரச்சினையிப்பற்றி முழுதும் அறிந்தவன் என்றவகையில் மேலுள்ள பதிவை எழுதியிருக்கிறேன். விசாரணைகள் முடிவு பெறும் போது உங்களுக்கு தெளிவு ஏற்படலாம்.