tag:blogger.com,1999:blog-23454881855761431782024-02-19T12:19:24.958+09:00கனாக்காலம்Unknownnoreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-6543297604889344992017-03-11T13:21:00.002+09:002017-03-11T13:21:20.308+09:00பனி விழா குளிர் நகரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புழுதி கிளம்பாத பளபளக்கும் சிங்கபுரி நகரின் நடைபாதைகளில் உலாப்போகும் போதெல்லாம் எதிரே தகதகக்கும் தங்க நிற தொடைகளை காட்டியபடி குதிரை நடைபோட்டு வரும் மங்கோலிய வாலைக்குமரிகள் வனப்பினை சூரியக்கண்ணாடிகள் அணிந்து திருட்டுத்தனமாக ரசிப்பது ஷெர்லக்ஹோம்ஸ் என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிங்கபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட சேரலாதனுக்கு எப்போதுமே உவப்பானது. இருக்கிறதா? அல்லது இல்லையா? என சந்தேகம் எதிர்ப்படும் சில சீனத்து அழகிகளின் இடை குறித்து அடிக்கடி ஏற்படுகின்ற போதிலும் அதை இடை நடுவே நின்று நிதானித்து முன் பின்னாக பார்த்து ஆராய்வது நாகரிக குறைவாக இருக்குமென்று எண்ணி தவிர்ப்பதுண்டு. ஆனால் லிடியா வந்த போது ஷெர்லக் ஹோம்சால் தவிர்க்க முடியவில்லை. குட்டைப்பெண்கள் அணிவகுத்து வந்த நடைபாதையில் குதிஉயர் காலணி இல்லாமலே தனியாக தெரிந்தாள். இலங்கையில் இருக்கும் ஆபத்தான வீதி வளைவுகளை விட மோசமாக அவள் மேனி வளைவுகள் இருந்தன. நெருங்கி வரும் போது தரித்து நின்றும் பக்கவாட்டில் கடந்த போது மெலிதாக புன்னகைத்தபடியும் தாண்டி நடந்த போது திரும்பியும் பார்த்தார். சந்தேகமேயில்லாமல் ஆயிரத்தில் ஒருத்தி தான் அவள். சிங்கை நகரில் ஷெர்லக் ஹோம்சுக்கு இரண்டாவதாக பிடித்தது பனி விழாவிட்டாலும் குளிராக இருக்கும் கட்டடங்களை. எனினும் முதலாவதாக பிடித்தது குறைவாக ஆடை அணிந்தாலும் நிறைவாக இருக்கும் சிங்கபுரி குமரிகளைத்தான்.<br />
<br />
ஆளாளுக்கு அதிகம் பேசிக்கொள்ளாத சிங்கபுரி சீனப்பெண்களை மேலோட்டமாய் பார்ப்பவர்கள் "துவேசம் பிடித்தவர்கள்" என்பார்கள். பழகிப்பார்த்தவர்கள் பாசக்காரிகள் என்று சொல்லுவார்கள். கண்டவனோடு கடலை போடும் மேற்குலக பெண்களையும் வெட்கப்பட்டு, முறைத்து உணர்வுகள் காட்டும் தமிழ்ப்பெண்களோடும் ஒப்பிட்டால் பேச்சு மூச்சில்லாமல் பிளாஸ்டிக் முகத்தோடு சிமார்ட் போனை முறைத்துப்பார்த்தபடி தொடரூந்திலும் பேரூந்துகளிலும் பயணம் செய்யும் சீனத்து அழகிகள் அந்நியமாய் தெரிவார்கள்.<br />
<br />
யாழ்ப்பாணத்தில் பேக்கரி லேன் மதகில் குந்தி இருந்து வெட்டிப்பொழுது கழித்துக்கொண்டிருந்த ஷெர்லக் கோம்ஸ் எனப்படும் சேரலாதன் தனியார் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து சிங்கபுரிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. வந்தவுடன் வேலை கிடைத்ததுமில்லாமல் ஒரு வருடத்திலேயே முகாமையாளராகவும் பதவி உயர்வு கிடைத்திருந்தது. ஷெர்லக் ஹோம்சை பொறுத்தவரை இதெல்லாம் சாதாரண விடயங்கள். கேட்டால், சிங்கபுரியில் குடியுரிமை வாங்க வேண்டும், கொம்பனி தொடங்க வேண்டும் அதன் பிறகு வெளியே சொல்லிக்கொள்ளலாம். முகநூலிலும் போட்டு படம் காட்டலாம் என்பார்.<br />
<br />
ஷெர்லக் ஹோம்ஸ் சரியாக குளிக்க மாட்டார். ஒரு தடவை போட்ட யட்டியை திருப்பி தோய்த்து போடுவது போண்ற கெட்ட பழக்கம் எல்லாம் அவருக்கு இருந்ததில்லை. ஆடைகள் துவைப்பதும் முகச்சவரம் செய்வதுவும் நேரவிரயம் செய்யும் வேலைகள் என்பதுவும் அவரது மிகச்சிறந்த கருத்துக்களிலொன்று. அதற்காக அடிப்படை சுகாதரத்தை புறக்கணிக்கும் நபர் என்றும் சொல்ல முடியாது. காலையும் மாலையும் இரவும் சாப்பிட்டு விட்டு 3 தரம் கைகழுவதை விட இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ஒரு தடவை மட்டும் கைகழுவி நீர்வளத்தையும் பெறுமதியில்லாத நேரத்தையும் சேமிக்கலாமே எனும் அவரது வாதம் தர்க்க ரீதியாக புறக்கணிக்க முடியாதது. இப்படியான அந்நியத்தனமான பழக்க வழக்கங்களை கொண்டதாலோ என்னவோ சிறிய ஓரறை பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தனிமனிதனாக தங்கியிருந்தார். வருமானத்தின் கணிசமான பகுதி வாடகைக்கு செலவானாலும் இன்னொருவரோடு இருப்பிடத்தை பகிர்து கொள்வது பற்றி சிந்தித்ததேயில்லை வாட்சன் சிங்கபுரிக்கு வரும் வரைக்கும்.<br />
<br />
லண்டனில் ஸ்ரூடன் விசாவில் படிக்க சென்ற வாகீசன் எனும் வாட்சன் படிப்பு முடிந்தும் நாடு திரும்ப மனமில்லாமல் முதுகில் சூடு போட்டுவிட்டு அசைலம் அடித்திருந்தான். விசாரித்த யூகே போடர் எஜென்சி ஆபீசர் புத்திசாலி. எடக்கு மடக்கா கேள்வி கேட்டு மடக்கி தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட்டார். ஊரில் லண்டன் ரிரேன் என்று சொல்லி சிலகாலம் பருப்பை அவித்தபடி திரிந்த வாட்சன் தகப்பனாரின் திட்டு தாங்க முடியாமல் சிங்கபுரிக்கு மூட்டையை கட்டுவம் என்று முடிவெடுத்த போது தான் ஷெர்லக் ஹோம்சிடம் வந்தான். வாட்சன் அழைப்பு எடுத்தவுடனேயே ஷெர்லக் தன்னோடு தங்கி கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்து விட்டார். ஆறு வருடங்கள் முன்பு பேக்கரி லேன் மதகடியில் தனக்கு சீடனாக இருந்த வாட்சன் இங்கும் பணிவாக பேச்சுத்துணையாக இருப்பான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.<br />
<br />
சாங்கி விமான நிலையத்தில் வாட்சனை வரவேற்க போயிருந்த ஷெர்லக் ஹோம்சிற்க்கு ஆச்சரியம். பற்றிக்சரத்தோடும் பாட்டா செருப்போடும் யாழ்ப்பாணத்தில் திரிந்த வாட்சன் நீளமான இத்தாலியன் கோட்டு, வெள்ளை நிற நைக்கி சப்பாத்து என மாறிப்போயிருந்தான். காதில் போட்டிருந்த கெட் போனை ஒரு கையால் லாவகமாக கழற்றியபடி மறுகையை நீட்டியபடி நைஸ் ரு மீற் யூ பிளட் என்றான். சரி நைஸ் ரு யூ என்று ஷெர்லக் ஹோம்ஸ் தடுமாறினார். எதாவது குடிப்பம் வாடா என்று ஷெர்லக் அழைக்க வாட்சன் குடித்தால் ஸ்டார் பக் தான் குடிப்பேன் என்றான். இதென்னடா சாக்கடைக்க கிடந்த கபறக்கொய்யாவ வீட்டுக்குள் வரவழைத்து விட்டேனா என்று ஆரம்பித்து ஷெர்லக் பலவாறு சிந்தனையில் ஆழ்ந்திருக்க விமான நிலையத்திலிருந்து டாக்சி வீட்டைநோக்கி விரையலாயிற்று. வாட்சன் கெட் போனை மாட்டிக்கொண்டான். காதில் லேடி காக்கா "<span style="background-color: #ccccdd; font-family: Verdana, Arial; font-size: 13.4px; text-align: center;">Tryin' to keep control</span><br />
<span style="background-color: #ccccdd; font-family: Verdana, Arial; font-size: 13.4px; text-align: center;">Pressure's takin' its toll" </span><span style="font-family: Verdana, Arial;"><span style="font-size: 13.4px;">என்று </span></span>கத்திக் கரையத்தொடங்கினார்.<br />
<br />
<br />
<br />
<br />
(வளரும்)</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-4609598613143826552014-12-14T20:05:00.003+09:002014-12-14T20:07:31.569+09:00தற்போதைய நிலவரம் -10<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்பத்தையும் துன்பத்தையும் பலவித அனுபவங்களையும் தந்த 2014 ஆம் ஆண்டு இன்னும் இரண்டே வாரங்களில் விடை பெறுகிறது. உலகமெல்லாம் பரந்து வாழும் எமது மட்டத்து நண்பர்களில் பிரித்தானியாவில் இருப்பவர்களே கூட்டிக்கழித்து பார்க்கும் போது இந்த வருடம் முழுவது கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார்கள். சிங்கபுரி வாழ் பேர்வழிகளில் பலரும் திருமணவாழ்வில் இணைந்த போதிலும் அதிக பரபரப்பில்லாத முகநூலில் புகைப்படங்கள் தென்பட்ட நிகழ்வுகளாகவே அவை கடந்து சென்றன. இலங்கா புரியிலும் குறிப்பிடத்தக்க சில பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்திய ஆசிரியர் பீடம் முக்கியத்துவ அடிப்படையில் அவற்றை கீழே வரிசைப்படுத்தியுள்ளது.<br />
<div>
<br /></div>
<div>
1) ஆறுபை சேகர்</div>
<div>
<br /></div>
<div>
நாய் சேகர் என்று பிரபலமான அதிரடி நாயகன் இவர். கலியாணம் கட்டாதவன் கட்டுறதுக்கு அலைய, கட்டினவன் பிள்ளைக்கு அலைய இவர் மட்டும் மனத்தை சிதறவிடாமல் இரும்புகளை தூக்குவதும் டயட்டுமாக அலைந்து ஆறு பையை செதுக்கியிருக்கிறார். வேலை வேலை என்று பறக்கிற பிரித்தானியாவில் இருந்து கொண்டு உடம்பை இறுக்கமா பேணுவதற்க்கு ஒரு தனித்திறமை வேணும் பாருங்கோ!. ஆறு பை ஏழு பையாகி ஏழு எட்டாக வாழ்த்துகிறோம்.</div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7IHbecNtt3tR4Vfjq0JxbxReRsoAnevZHcnIkVtUAUXwiVpeQSSK5Cc5Jol_9-o1kxfbOZqh-tj5T6VgyD8EkglrkXpvoifimJccHDo8TLYuAsdugasdqaa8QF44Ny33TltCCqwnUUacQ/s1600/image-7d142e2f3bc670fc5db1fccdd79f931b7841829970eac0e4c817ff3f665a08fd-V.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7IHbecNtt3tR4Vfjq0JxbxReRsoAnevZHcnIkVtUAUXwiVpeQSSK5Cc5Jol_9-o1kxfbOZqh-tj5T6VgyD8EkglrkXpvoifimJccHDo8TLYuAsdugasdqaa8QF44Ny33TltCCqwnUUacQ/s1600/image-7d142e2f3bc670fc5db1fccdd79f931b7841829970eac0e4c817ff3f665a08fd-V.jpg" height="400" width="225" /></a></div>
</div>
<div>
<br /></div>
<div>
2) சிங்கம் "ராகுல்"</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div>
முதன் முதலாக மட்டத்தில் கலியாணம் கட்டியவர். முதன் முதலாக அப்பா ஆகியவர். இரண்டாவது குழந்தைக்கும் அப்பா ஆகி இருக்கிறார். மூத்த பிள்ளை விளையாட பொம்மை கேட்டதெண்டு இரண்டாவது குழந்தையை பெற்றேனாக்கும் என்று முகநூலில் நிலைக்குறிப்பு போட்டுவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார் இந்த ஆண் சிங்கன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpZDfBtxX6aMK8RYOGdDJOJlXKUl49Ppu3mdsChRw5KehlHpm1Ft-p4zu2p4Al22sY1C0B98zZO45gu2E74bAM4jjEZIxeo27wy6ZnK-ueJuGNv79FrmdE_NH4HjyLVvBKa-QSrZ3-dAi/s1600/10405530_10152210405419423_267188503675999635_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpZDfBtxX6aMK8RYOGdDJOJlXKUl49Ppu3mdsChRw5KehlHpm1Ft-p4zu2p4Al22sY1C0B98zZO45gu2E74bAM4jjEZIxeo27wy6ZnK-ueJuGNv79FrmdE_NH4HjyLVvBKa-QSrZ3-dAi/s1600/10405530_10152210405419423_267188503675999635_n.jpg" height="300" width="400" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
3) அப்பா ஆனார் அலிபாய்.</div>
<div>
<br /></div>
<div>
பலர் முதல் குழந்தைக்கு அப்பா/அம்மா ஆகியுள்ள போதிலும் இங்கே அப்பா ஆகியிருப்பவர் ஒரு விஞ்ஞானி. முத்தையன் கட்டு நியூட்டன். வன்னியிலேயே ரின்மீன் செய்த அப்துல் கலாம். பெண் குழந்தை பரிசாக கிடைத்தது என்று முகநூலில் நிலைக்குறிப்பிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுள்ளார். பிரித்தானியாவில் அறிவு மிக்க தமிழ் சந்ததி உருவாக சசியின் சேவை மேலும் தமிழினத்துக்கு தேவை.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNIIlBTNIwYQZaV7jDpl9NNwpzeey9GCIAZ4r9hz1hBZo6dvnCFt2Q2FgMOu5tNbwC_mWlJQVXayi8NKlzW875R9ILP1-YK_EIYc1_vdnY8RBB__-ikhK1uGAe5l7hPX4w4m5jo9PDyWLV/s1600/10378257_10152455991061639_7660103483982733356_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNIIlBTNIwYQZaV7jDpl9NNwpzeey9GCIAZ4r9hz1hBZo6dvnCFt2Q2FgMOu5tNbwC_mWlJQVXayi8NKlzW875R9ILP1-YK_EIYc1_vdnY8RBB__-ikhK1uGAe5l7hPX4w4m5jo9PDyWLV/s1600/10378257_10152455991061639_7660103483982733356_n.jpg" height="300" width="400" /></a></div>
<div>
<br /></div>
<div>
4) காரோட்டும் செழியம்.</div>
<div>
<br /></div>
<div>
யாழ்குடாநாட்டில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனம் செலுத்தும் படி கேட்க்கப்படுகிறார்கள். கண்ணாடி அணிந்த பொறியியலாளர் ஒருவர் கண் மண் தெரியாத வேகத்தில் கண்மூடித்தனமாக காரோட்டுவதால் இவ்வெச்சரிக்கை விடப்படுகிறது . வதையின் அலகான செழியம் முன்னர் வெறுங்காலில் வந்தது பின்னர் உந்துருளியின் வலம் வந்தது. இப்போது காரில் தேரோட்டம் போகிறது. சமீபத்தில் மன்னார் சென்ற செழியம் அடுத்தது எந்த மாவட்டத்தை குறி வைக்கப்போகிறதோ?.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivMORguQF6w_ga_Du0qF5eoRq-2E8ags_ihIuYx05RTTOyn9E_Rd9OLtXvfadCGPRxwspQqPkNM3jrwS1upddtSr-Q78HAlPiRdl8EW3iF63Udf8qSzt7ALOxS_QEebrF03n8PEk3TnEbp/s1600/10615475_10152326666207924_3420131248650111525_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivMORguQF6w_ga_Du0qF5eoRq-2E8ags_ihIuYx05RTTOyn9E_Rd9OLtXvfadCGPRxwspQqPkNM3jrwS1upddtSr-Q78HAlPiRdl8EW3iF63Udf8qSzt7ALOxS_QEebrF03n8PEk3TnEbp/s1600/10615475_10152326666207924_3420131248650111525_n.jpg" height="225" width="400" /></a></div>
<div>
<br /></div>
<div>
5) முதலாளி அலியப்பா</div>
<div>
<br /></div>
<div>
கடந்த 8 மாதங்களாக பலவிதமாக முதலாளி ஆகுவதற்கு முயன்று வந்த அலியப்பா சில வாரங்கள் முன்னர் அதில் வெற்றியும் கண்டிருந்தார். ஆனால் கன்னி முயற்சியிலேயே நிலக்கீழ் உயர் அழுத்த வயரை அறுத்து மாட்டிக்கொண்டுள்ளார். எரிந்த குழிக்கு அருகே இருந்த படி சுப்பவைசரை காலணி வாங்கி வரும் படி அனுப்பியிருக்கிறார். அந்த அறிவாளியும் இரண்டு வலது கால் அணிகளை வாங்கி வந்திருக்கிறான். இப்படியான புத்திசாலிகளை வைத்திருந்து எப்படி வேலை செய்வது என்று கடுப்பான முதலாளி பழையபடி தொழிலாளி ஆகிவிட்டார். முதலாளி வாட்சப்பில் அனுப்பிய படங்கள் கீழே!</div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYo4Mlb6bkBdALFcc4j8WICc-DoCKJuEWi65p9FDra4IJtCY9YiNG1OtVFd2j7pAfAWwCyEzs3PcwlDdJBVzunZ0LQ0upmyIxKxD8zYLaLGnyy6fVLfY95KLgwLUyqRWELO7kXq-T9wPgs/s1600/IMG-20141113-WA0001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYo4Mlb6bkBdALFcc4j8WICc-DoCKJuEWi65p9FDra4IJtCY9YiNG1OtVFd2j7pAfAWwCyEzs3PcwlDdJBVzunZ0LQ0upmyIxKxD8zYLaLGnyy6fVLfY95KLgwLUyqRWELO7kXq-T9wPgs/s1600/IMG-20141113-WA0001.jpg" height="300" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSbDCWW2jFnbGRUXlBS_FDCQEmDYJZh4lLMWGPoSBIVSUy29XN0ECyvLsdv9n9sIBcFLM2bmhcBxON5i7j_RG_jbGxPrgrwIeyr8XAxk6bO3WhFVNpZnFEqQmNQ_PANQJSX3E6bHisqxwG/s1600/IMG-20141113-WA0000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSbDCWW2jFnbGRUXlBS_FDCQEmDYJZh4lLMWGPoSBIVSUy29XN0ECyvLsdv9n9sIBcFLM2bmhcBxON5i7j_RG_jbGxPrgrwIeyr8XAxk6bO3WhFVNpZnFEqQmNQ_PANQJSX3E6bHisqxwG/s1600/IMG-20141113-WA0000.jpg" height="400" width="300" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-14888960778408333212014-10-19T19:39:00.000+09:002014-10-19T22:59:03.018+09:00T.அசுவத்தாமன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgleOiw-1tilqiMro3p24l3um5DOkslgYvOn4Fn9FCFF_8ykvcG7CG5yD07vWuH7psf1zHKoHzz4zFMKTusJiB7QAYCxfKyYjC_2XotONXq-rrwBZJ3xqdYSaTH9iMIk9PqKz6F-EKTwp1v/s1600/hrithik_roshan_by_nitishneo-d5vtl1h.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgleOiw-1tilqiMro3p24l3um5DOkslgYvOn4Fn9FCFF_8ykvcG7CG5yD07vWuH7psf1zHKoHzz4zFMKTusJiB7QAYCxfKyYjC_2XotONXq-rrwBZJ3xqdYSaTH9iMIk9PqKz6F-EKTwp1v/s1600/hrithik_roshan_by_nitishneo-d5vtl1h.jpg" height="400" width="261" /></a></div>
<br />
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் அந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்தை விட அவனின் சம்பளம் பல மடங்கு அதிகம். இது குறித்து நான் சில சமயங்களில் வருத்தப்பட்ட போதிலும் அவனது திறமைக்கு சரியான சன்மானத்தை பெறுவதாக கருதி மனதை ஆறுதல்ப்படுத்தியிருக்கிறேன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnNn9qWAIxB9uLKLPk78l_oUZWegRUWbiSKC5MyQ8eJWJQJ6Uzfzb-I0fcQLq1Oh41azV9meXFvcj6xU1MLz-5DzFjj5A5urNThKzBo_-q6PXmkNnHySPNCXXnAeovZaGi-6dte80A5_i5/s1600/Jetsun+Pema.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnNn9qWAIxB9uLKLPk78l_oUZWegRUWbiSKC5MyQ8eJWJQJ6Uzfzb-I0fcQLq1Oh41azV9meXFvcj6xU1MLz-5DzFjj5A5urNThKzBo_-q6PXmkNnHySPNCXXnAeovZaGi-6dte80A5_i5/s1600/Jetsun+Pema.jpg" height="265" width="400" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அசுவத்தாமன் ஆறரை அடி உயரம் இருப்பான். அவன் நடக்கும் போது அரபுபுரவி போலிருக்கும். பரந்து விரிந்த மார்பும் ஒடுங்கிய வயிறுமாக அவன் தோற்றம் இதிகாசநாயகர்களை நினைவு படுத்தும். அவனது திமிறிய தசைகளையும் கூரிய நாசியையும் நேரிய புருவங்களையும் பார்க்கும் எந்தப்பெண்ணுமே தடுமாறித்தான் போவாள். அப்படித்தான் கருப்பு சரும தென்னாசியர்கள் என்றாலே இளக்காரத்தோடு பார்க்கும் ஒப்பிரேசன் மனேச்சர் "லிடியா இங்" க்கும் அசுவத்தாமனிடம் நிலைகுலைந்து போனாள். லிடியா திருமணமானவள். ஐந்து வயதில் பிள்ளை வேறு உண்டு. ஆனாலும் கட்டுக்குலையாத காரிகை அவள். சூழல் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், போக்குவரத்து துறை போண்ற அரசாங்க நிர்வாக பிரிவுகள் பாயும் போதெல்லாம் சமாளிப்பது அவள் தான். எங்களைக்கண்டால் பொங்கியெழும் அரச அலுவலர்கள் லிடியாவை கண்டதும் வாயெல்லாம் பல்லாகி அடங்கி விடுகிறார்கள். </div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPTvnofO1CT-alXclE4vFBrMmw_nX-JElr9SEH3-BH5LO6kTx4_BmUdy_TzKeD9xU4ZllnAmVY3gmkytDhyLcabqhq0tnKQHnv21YJuzzjEpefMNBSB-sWW_Um5lzr0caVOCXfRn4DwKNm/s1600/jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPTvnofO1CT-alXclE4vFBrMmw_nX-JElr9SEH3-BH5LO6kTx4_BmUdy_TzKeD9xU4ZllnAmVY3gmkytDhyLcabqhq0tnKQHnv21YJuzzjEpefMNBSB-sWW_Um5lzr0caVOCXfRn4DwKNm/s1600/jpg.jpg" height="250" width="400" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
நடப்பாண்டில் எமது நிறுவனம் 5 வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அவற்றில் பெரியது இந்த புறஜெக்ட் தான். 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள திட்டம் இது. 3 km நீளமான நிலத்தடி புவியீர்ப்பு கழிவுநீர்கற்றல் தொகுதியை 18 மாதங்களில் நிர்மாணித்தாக வேண்டும். அதிகமான பாறைகளை கொண்ட தரைப்பகுதியில் அதிகமான ஆழத்தில் மைக்ரோ டனல் இயந்திரத்தை இயக்குவது சிக்கலாக இருக்கும் என்று அநேக நிறுவனங்கள் பின்வாங்க எங்கள் முதலாளி மட்டும் விடாப்படியா நின்று டென்டர் போட்டு இந்த வேலையை கைப்பற்றினார். அவரது ஒரே நம்பிக்கை அசுவத்தாமன். அவன் கடந்த 20 வருடமாக செய்த வேலைத்திட்டம் எதிலும் துளையிடும் இயந்திரம் இடைநடுவே சிக்கியதாக வரலாறில்லை. இது வழமைக்கு மாறானது. சிங்கப்பூரில் இயந்திரம் சிக்காமல் முடிந்த புரஜெக்ட்களை விரல் விட்டு எண்ணலாம்.முதலாளி அனுமாசிய சக்திகளில் நம்பிக்கை கொண்டவர். பேய்க்கு படையல் வைத்து அடிக்கடி பீதியை கிளப்புவார். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் அவர் அசுவத்தாமனோடு உரையாடும் வேளையில் மட்டும் தனி மரியாதை தொனிப்பதை கண்டிருக்கிறேன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDoG6BGcFHZtizYkvCGLUHg29GvFLWnx0JOIO7kscG1kDfeltUDSvvGemDd9BN24-A5YYUw5aoeU4thRmrglkz32Lv1C9aPFzhm6_qrGrJrUGkSwUF8uWCLgEwg4t1YxJ_iZGKnj2oMAeA/s1600/ASWATAMA+yogya+D+01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDoG6BGcFHZtizYkvCGLUHg29GvFLWnx0JOIO7kscG1kDfeltUDSvvGemDd9BN24-A5YYUw5aoeU4thRmrglkz32Lv1C9aPFzhm6_qrGrJrUGkSwUF8uWCLgEwg4t1YxJ_iZGKnj2oMAeA/s1600/ASWATAMA+yogya+D+01.jpg" height="320" width="263" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அசுவத்தாமனின் அல்லக்கை என்று கருதக்கூடிய ஒரு வேலையாள் இருக்கிறான். அவன் ஓரு தடவை போதையில் சொன்ன தகவல்கள் முதுகெலும்பை சில்லிட வைத்தன. Tuasல் வேலை செய்த போது துளையிட்டபடி சென்ற இயந்திரம் இடைநடுவே பழுதாகிவிட்டதாம். அசுவத்தாமன் நள்ளிரவில் தன்னை Manhole வாசலில் நிற்கச்செல்லிவிட்டு பிராணவாயுவே இல்லாத குழாய் வழியாக தவன்று சென்று இயந்திரத்தை சரி செய்து விட்டு திரும்பினானாம். இன்னொரு நாள் பாரம் தூக்கி பழுதாகிய போது வேலையாட்களை மதிய உணவுக்கு அனுப்பி விட்டு வெறும் கைகளால் பல தொன் நிறையுள்ள I-Beamகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தானாம். விடிகாலையில் மழைநீர் தேங்கிய வெட்டப்பட்ட குழிகளில் இறங்கி அரையளவு நீரில் நின்று சூரிய வணக்கம் செய்வதுமுண்டாம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு அசுவத்தாமனோடு மிகுந்த எச்சரிக்கையோடு பழக ஆரம்பித்தேன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkSR_t251bIDPM6gxsdjQNHlnJy5pFJLaGW2Gn9375vzqoGNLHqvt0fTUorYxQ39NwNb9sb1zrXX8U0fkK-H2M5e91aXDxX-0Li97L6z5bMNF8cPgxGU9DkO2uonTUY9-hnGcdIFmLHssq/s1600/Ashwatthama_uses_Narayanastra.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkSR_t251bIDPM6gxsdjQNHlnJy5pFJLaGW2Gn9375vzqoGNLHqvt0fTUorYxQ39NwNb9sb1zrXX8U0fkK-H2M5e91aXDxX-0Li97L6z5bMNF8cPgxGU9DkO2uonTUY9-hnGcdIFmLHssq/s1600/Ashwatthama_uses_Narayanastra.jpg" height="400" width="296" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
சிங்கப்பூர் சீனர்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை கொண்ட லிடியா அசுவத்தாமனிடம் விழுந்ததன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. லிடியா சைட்டில் உலாப்போய்க்கொண்டிருந்த போது தற்காலிக மண்வீதி மழை ஈரத்தில் பொறிய வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது. வேகமாக ஓடிப்போன அசுவத்தாமன் வெறும் கரங்களால் பிரண்டு போயிருந்த லாண்ட் ரோவரை நிமிர்த்தி லிடியாவை தூக்கிக்கொண்டு வந்தான். அன்று தான் லிடியா அவனை வெகு அண்மையில் பார்த்திருக்க வேண்டும். அடுத்து கழிந்த நாழிகை முழுவதும் அடிக்கடி அசுவத்தாமனை பார்த்து புன்னகைப்பதும் நன்றி கூறுவதுமாக இருந்தாள். வெகு நேரத்திற்கு இது நீடிக்காது என்று நான் எண்ணியதற்கு மாறாக மறுநாள் இருவரும் ஒன்றாய் மதிய உணவுக்கு புறப்பட்டு போனார்கள். லிடியா அவனை "அஸ்வன்" என்று செல்லப்பேர் வேறு வைத்து அழைக்கத்தொடங்கியிருந்தாள். எனது மற்றும் நிறுவனத்திலிருக்கும் அநேகரின் வயிற்றெரிச்சலையும் மீறி வளர்ந்த இந்த காதல் லிடியா கர்ப்பமாவதில் போய் முடிந்தது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"சுகன்! நான் இப்போ மூன்று மாசம். அஸ்வன் கருவை கலைக்கச்சொல்லி வற்புறுத்துகிறார். உங்களால் அவரோடு பேசி சமாதானப்படுத்த முடியுமா?"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
பூட்டிய மீட்டிங் அறையில் லிடியா வெடிகுண்டை வீசினாள்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"உங்களுக்கு திருமணமாகி விட்டதே லிடியா?"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"அதனாலென்ன விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் அஸ்வனை மறுமணம் செய்வதாக இருக்கிறேன்."</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"சரி உங்களுக்காக அவனோடு பேசுகிறேன்"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuuaR1fmlPyjePNy_jodZDi4oqVqzpaiXiNyhhUGwM12cZ6cnNre9D38hmcK1KClnBYzcJy0fE0MN8Ijc1Z3rUpr_uw0sUMC12wB1nmzpDnEz_XVgWLP5aey_n6gRiv8IyKneXKKxnVwbJ/s1600/aswatthama.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuuaR1fmlPyjePNy_jodZDi4oqVqzpaiXiNyhhUGwM12cZ6cnNre9D38hmcK1KClnBYzcJy0fE0MN8Ijc1Z3rUpr_uw0sUMC12wB1nmzpDnEz_XVgWLP5aey_n6gRiv8IyKneXKKxnVwbJ/s1600/aswatthama.jpg" height="400" width="250" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அழைத்து சில நிமிடங்களில் உடலை வில்லாக வளைத்து குனிந்தபடி தலை மேலே இடிக்காதவாறு உள்ளே வந்தான் அசுவத்தாமன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
""வரச்சொன்னீர்களாமே! என்ன விடயம்?" </div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"நடிக்காதே! நீ செய்த ஈனச்செயல் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"எது ஈனச்செயல்? நான் செய்தது ஒரு இரவு நேர வலிந்த தாக்குதல். Night raid என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நீதியை மீறி யுத்தம் செய்தவர்களை இரவில் தாக்குவது தவறாகாது. அப்படிப்பார்த்தால் உங்களது ஊரில் நடைபெற்ற ஒப்பறேசன் எல்லாளனும் போர்தர்மங்களை மீறிய தாக்குதல் தான்."</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"நாம் கர்ப்பத்தைப்பற்றி பேசுகிறேன் நீ ஏன் தொடர்பே இல்லாமல் எல்லாளனை இழுக்கிறாய்?"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"ஓ கர்ப்பமா? அது அபிமன்யுவின் மனைவி உத்தாராவினுடையது. அப்பா இல்லாத அந்த குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்?. நான் அதன் வேதனையை போக்கியிருக்கிறேன். அதைப்பற்றி நீ யோசித்ததுண்டா?"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"குழப்புகிறாயே? . முதல்ல ஹெல்மெட்டை கழட்டு. ஒபிசுக்குள்ள எதுக்கு சேப்டி ஹெல்மெட்?"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அசுவத்தாமன் ஹெல்மெட்டை கழற்ற மேல்நெற்றியில் நீண்ட ஆழமான வடு தென்பட்டது. தலைமயிரை முன்னே இழுத்து வடுவை மறைக்க முயற்சித்தான்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"இது கிருஸ்ணன் செய்த சதியால் உருவான வடு இது. 22ம் திகதி மார்கழி மாதம் கிறிஸ்துவுக்கு முன் 3067ம் ஆண்டு தொடங்கின சண்டை 18 நாளா நடந்து தை மாசம் 10 திகதி முடிந்தது.11 திகதி நான் பிரமாஸ்திரம் அடிச்சனான். அண்டைக்குத்தான் இந்த காயமும் வந்தது"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
காயத்தை மறைத்த படி அசுவத்தாமன் சொல்லிக்கொண்டு போக எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுக்க தொடங்கியது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"இரவு நேர தாக்குதல், பிரம்மாஸ்திரம் , நெற்றியில் வடு இதெல்லாத்தையும் வச்சுப்பார்த்தால் நீ துரோணர் மாஸ்டர்ட மகன் அசுவத்தாமன் தானே? அடப்பாவி கிருஸ்ணர் உன்னை காட்டுக்கை அலையோணும் எண்டெல்லோ சாபம் போட்டவர். எப்படி நாட்டுக்கை வந்தனி?"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
""காடு என்று சாபம் போட்ட பார்த்தன் எந்தக்காடு என்பதை வரையறுக்காம விட்டுட்டான். சிங்கப்பூரும் ஒரு கொங்கிறீட்டு காடு தானே?. அவன்ட சாபத்திலை இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இங்கு வந்து விட்டேன்"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"வந்ததும் பத்தாமல் ஒரு வேற்றின குடும்ப பெண்ணை கர்ப்பமாக்கி விட்டாயே படுபாவி!"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
நான் கோபத்தோடு கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க என்னை சற்றும் பொருட்படுத்தாத அசுவத்தாமன் மேசையில் இருந்த பேனை மூடியை எடுத்து விரலிடுக்கில் வைத்தபடி கண்களை மூடி மந்திரம் உச்சரிக்கலானான். சில நொடிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளியோடு கிளம்பிய அந்த பேனா அஸ்திரம் கூரையை பிளந்து கொண்டு லிடியா வயிற்றில் வளரும் கருவை நோக்கி பறக்கலானது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidhXj4tEPDI0H17BLw-ymg_iv0kNgMK-apMOEIRbHx8XJ6fOUbiJ_nJQAiVg8sU2UJfS-OU98trZQjx1CE3M3dnu-RKKHNzlkkdswM2EIWA4fnXQ1tzbtM7fWC1zyFCIIPzxrpaIjpedAA/s1600/images2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidhXj4tEPDI0H17BLw-ymg_iv0kNgMK-apMOEIRbHx8XJ6fOUbiJ_nJQAiVg8sU2UJfS-OU98trZQjx1CE3M3dnu-RKKHNzlkkdswM2EIWA4fnXQ1tzbtM7fWC1zyFCIIPzxrpaIjpedAA/s1600/images2.jpg" height="640" width="435" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
பிற்குறிப்பு : பாரதப்போரின் முடிவில் கருவில் இருந்த குழந்தையை பிரம்மகணை தொடுத்து கொண்ற பாவத்துக்காக கண்ணனின் சாபத்துக்கு ஆளான அசுவத்தாமன் இன்று வரை காடுகளில் அலைந்து திரிகிறான். இதுவரை அவனை கண்டதாகவும் உரையாடியதாகவும் பல கதைகள் உண்டு. மரணத்தை தழுவ முடியாமல் யாருடைய அன்பையும் பெற முடியாமல் சிரஞ்சீவியாக வாழும் அவன் கலியுக முடிவிலே மூப்படைவான் என்கிறது பாரதம்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-20826711184740668452014-10-05T18:35:00.001+09:002014-10-05T20:14:14.545+09:00ஆப்புக்கு அடித்தவன்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5qIQnc37mw7s0moGionHfR3diVHlCST92UirWTzRWVecbyvjcXgN4EozfMQhI7-Z1lfCVwujBJdGtfQFCtpfQXNi9l0s3LNlHNo6xfq8i1D4c_Pb65mE1666oZgg5tbNxhe9-5I-FcRU5/s1600/kurangu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5qIQnc37mw7s0moGionHfR3diVHlCST92UirWTzRWVecbyvjcXgN4EozfMQhI7-Z1lfCVwujBJdGtfQFCtpfQXNi9l0s3LNlHNo6xfq8i1D4c_Pb65mE1666oZgg5tbNxhe9-5I-FcRU5/s1600/kurangu.jpg" height="480" width="640" /></a></div>
<br />
கோச்சடையானில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது". நண்பன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு கூட வந்த வஞ்சகன் தருணம் பார்த்து முதுகில் குத்தும் போது எந்த தீரனும் நிலை தடுமாறித்தான் போவான். எதிரி அடித்தால் உடனடியாக திருப்பியடிக்க முடியும். ஆனால் கூட இருந்தவன் குழி பறிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியில் திருப்பித்தாக்க முடியாது. அநேகமானவர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் குழி பறித்த போது ஒதுங்கிச்செல்வதையே தேர்ந்தெடுப்பார்கள். விடயம் தெரிந்தவர்களின் பரிதாப விசாரிப்புகள், உறவுகளின் ஏளனங்கள் என கொடூரமான தருணங்கள் நிரம்பிய வலி அது.<br />
<br />
உலகின் மூலைகளெல்லாம் அலைந்து திரியும் எங்களில் அநேகருக்கு ஒரு கனவுண்டு. தாய்நாட்டிற்கு போக வேண்டும், வெற்றிகரமாக ஒரு தொழில் முயற்சியை தொடங்கி வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், தேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நியாயமான கனவு அது. அந்நிய நாட்டில் அரிதாக கிடைக்கும் ஒய்வு நேரங்களில் நண்பர்கள் கூடும் போது இது குறித்து அலசுவோம். வெற்றி வாய்ப்பு, தடைகள், தோல்வி ஏற்படின் எதிர்காலம் என பலவாறான உப தலைப்புகளில் எங்கள் விவாதம் நீளும். எங்கள் சோர்வையும் தயக்கத்தையும் போக்க வெற்றிகரமான உதாரணம் ஒன்று தேவைப்படும் போதெல்லாம் அவனது பெயர் வந்து போகும். வன்னி பெருநலப்பரப்பிலிருந்து மொறட்டுவைக்கு வந்த சுள்ளான் அவன். 2008 ஆம் ஆண்டு கம்பஸ் முடிந்து ஆளாளுக்கு ஒரு திக்காக பறந்த போது ஊரில் உறுதியாக நின்றவன். நாங்களெல்லாம் கலியாணம் பற்றி யோசிக்க முதலே அப்பா ஆகி சாதித்து காட்டியவன்.<br />
<br />
தீபரூபன் ஊரில் கட்டிட ஒப்பந்தக்காரனாக ஆகிய போது நாங்களெல்லாம் வெள்ளைக்கார முதலாளிக்கும் ,சீன முதலாளிக்கும் கீழே வேலை செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் உரையாடும் போது "மச்சான்! வந்தா வெல்லலாம். நான் தேவையான உதவி எல்லாம் செய்து தாறன்" என்று நம்பிக்கையூட்டுவான். வார்த்தைகளால் மட்டும் நில்லாது சிலருக்கு உதவி செய்தும் காட்டியவன். ஆரம்பித்து ஒரு வருடத்திலேயே மோசடிக்காரனிடம் இரண்டு மில்லியன்களை இழந்தும் விடாப்பிடியாக நின்றான். சில நாட்களின் பின்னர் பெராதெனிய கம்பஸ் பெடியனோடு சேர்ந்து சில ஒப்பந்தங்களை பெற்று செய்து வருவதாக கேள்வியுற்றோம்."சுள்ளான் சுழியன் பெரிய அளவிய கலக்குவான் பார்" என்று நாங்கள் நம்பிக்கையோடு இருக்க அந்த கூட்டுச்சேர்ந்த பரதேசியும் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவனுக்கு ஆப்பு அடித்திருக்கிறது.<br />
<br />
தீபரூபன் கடும் உழைப்பை கொட்டி கட்டுமானங்களை செய்து கொண்டிருக்க, வந்த கொடுப்பனவு பணத்தில் கார் வாங்கி ஓடியிருக்கிறான் அந்த ஆப்பு மன்னன். தீபரூபனின் பொறுமையை பலவீனமாக கருதி போலிக்கணக்குகள் காட்டி பெருமளவு லாபத்தை விழுங்கியிருக்கிறான். ஆட்டையை போட்டு பழகினவனுக்கு கையும் காலும் சும்மா இருக்காது. ஒரு கட்டத்தில் கொழுப்பெடுத்து மாகாண சபை ஒப்பந்தங்களில் லஞ்சம் வாங்கி பருத்திருக்கிறான். இதோடு நிறுத்தியிருக்கலாம் அவன். ஆசை யாரை விட்டது?. இறுதியாக வந்த 5 மில்லியன் ஒப்பந்த பணம் முழுவதையும் ஏப்பம் விட்டு கேட்கப்போன தீபரூபனிடம் "நீ செய்த வேலைக்கு சம்பளம் வேணுமெண்டா தாறன்" என்ற அருவருப்பாக பதிலளித்திருக்கிறான்.<br />
<br />
சில கால அவகாசங்களை கொடுத்தும் அவன் திருந்தாத நிலையில் நிலையில் சுள்ளான் திருப்பி அடித்திருக்கிறார். இன்றைய திகதியில் அரச பணத்தை ஊழல் செய்தது, தொழில் பங்குதாரனை ஏமாற்றியது, வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து சேர்த்தது என பலமுனை ஆதாரங்களை மாகாண சபை அரசின் முன் வைத்தது ஆப்பு மன்னனின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது. நாய் நடுக்கடல்ல நின்றாலும் நக்கி குடிப்பதைப்பற்றியே சிந்திக்குமாம். அதே போல் அந்தப்பரதேசி கேவலமாய் இறங்கி தீபரூபனினதும் ,மனைவியினது முகநூல் கணக்குகளை கைப்பற்றி பின்வாங்கும்படி சிறுபிள்ளைத்தனமாக மிரட்டியிருக்கிறான். முகநூல் இல்லாவிட்டால் முகவரியே இல்லையென்று ஆகிவிடுமா?. புதிய கணக்கை திறந்து நண்பர்களோடு இணைந்து கொண்டிருக்கிறான் தீபரூபன்.<br />
<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj74dUF5coBOQZrXSmFCjhAPd-D64kshhTZo0rcLJnhlrmPs2j606A7QNva1INdb4t9sQo8nMiwUCpJL3Ww7nXQdzjG5OzDYdSkmcXFjhPVtbyN8NfLUQ1nfL4eE5YWIE1dQIyhImCXj_aC/s1600/Wedge-1.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj74dUF5coBOQZrXSmFCjhAPd-D64kshhTZo0rcLJnhlrmPs2j606A7QNva1INdb4t9sQo8nMiwUCpJL3Ww7nXQdzjG5OzDYdSkmcXFjhPVtbyN8NfLUQ1nfL4eE5YWIE1dQIyhImCXj_aC/s1600/Wedge-1.jpg" height="198" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">A conventional "Aapu"<br />
<br />
<br /></td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ஆப்படிக்க வந்தவன் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல சிக்கியிருக்கிறான். பிய்த்தெடுத்துக்கொண்டு ஓடுவது, அல்லது நின்று மாட்டுப்படுவது என்று இரண்டு தெரிவுகள் தான் அவனுக்கு இருக்கின்றன. <br />
மோசடி செய்யப்பட்ட பணம் திருப்பி வரப்போவதில்லை என்ற போதிலும் இப்படியான புல்லுருவிகள் நாட்டை விட்டு அகற்றப்படுவது அல்லது முடக்கப்படுவது அவசியம். துடிப்புள்ள இளைஞர்களின் தொழில் முயற்சிகளில் கொள்ளையடிக்க நினைக்கும் பணப்பேய்களுக்க்கும், திருடர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாய் அமைய வேண்டும். வெளிநாட்டுக்கு தப்பி ஓடாது தாய்நாட்டில் நின்று ஒரு பொறியியளாளன் நின்று சாதிக்க போராடுகிறான் என்றால் அது மிகப்பெரும் ஈகம். அதை கெடுக்க நினைக்கும் கொழுத்த எலிகள் தயவுதாட்சணியமின்றி விரட்டப்பட வேண்டும். இக்கட்டான தருணத்தில் மட்டம் 2003 நண்பர்களாகிய நாம் தீபரூபனுக்கு பக்கபலமாக நிற்போம்.</div>
Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-3276647953035319212014-10-05T00:43:00.001+09:002014-10-05T01:00:20.596+09:00நோக்கம் இருக்குது.ஆனா ஊக்கம் இல்லை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr5NYno1Xzvsf1AvmvfRgKA_yS2Lbgy3JKuXZfAKEgzT_kyDx__njedgdImlBrWGuzPmb1KrLfSkgnKZyqGWhGDrb2XWmtdRQ-dvbAmyNW0fGNZCYFBQxrFgJqVY16jY_9Wi_qP4v_ywwn/s1600/XoDh5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr5NYno1Xzvsf1AvmvfRgKA_yS2Lbgy3JKuXZfAKEgzT_kyDx__njedgdImlBrWGuzPmb1KrLfSkgnKZyqGWhGDrb2XWmtdRQ-dvbAmyNW0fGNZCYFBQxrFgJqVY16jY_9Wi_qP4v_ywwn/s1600/XoDh5.jpg" height="404" width="640" /></a></div>
<br />
<div>
<br /></div>
<div>
பலவருடங்களுக்கு முன்னர் வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்து வந்த ஒரு விவசாயிடம் நல்லின பசுமாடு ஒன்று இருந்தது. இனச்சேர்க்கைக்குரிய காலம் வந்ததும் அவர் அதை பொருண்மிய நிறுவனத்தின் இனச்சேர்க்கையிடத்துக்கு அழைத்துச்சென்றார். பசு மாட்டையும் காளை மாட்டையும் அருகருகே கட்டியாகிவிட்டது. காளைமாடு பார்ப்பதற்கு அவ்வழவு அழகாக திமிறிக்கொண்டு நின்றது. விவசாயிக்கோ அளவில்லாத சந்தோசம். "சினைப்பட்டு இதே மாதிரி நாம்பன் கன்று போட்டால் பத்து ஏக்கர் உழலாம், பசுக்கன்று போட்டாலும் பத்து லீற்றர் கறக்கும்" என்று அவரது மனது கணக்கு போட்டபடியிருந்தது. நேரம் ஓட ஓட எதுவுமே நடக்கவில்லை. அந்த வாட்டசாட்டமான காளை அருகே போவதும் முகர்வதும் பின்வாங்குவதுமாய் இருந்தது. இதைப்பார்த்த விவசாயிக்கு காளையின் ஆண்மைத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அங்கே வேலை செய்த இளைஞனிடம் கேட்டே விட்டார். </div>
<div>
<br /></div>
<div>
"தம்பி! உந்த நாம்பன் சேர்க்கைக்கு புதுசோ?"<br />
<br /></div>
<div>
</div>
<div>
<b>"அண்ணே! மாட்டுக்கு நோக்கம் இருக்கு! ஆனா ஊக்கம் இல்லை!"</b></div>
<div>
<br /></div>
<div>
இக்கதை ஒரு செவிவழியாக கம்பசில் பரவி "ஊக்கமில்லாதவர்களை" எள்ளிநகையாட பயன்பட்டது. </div>
<div>
<br /></div>
<div>
எமது மட்டத்தில் ஒரு நோக்கம் மிகுந்த "X-Man" ஒருவர் இருந்தார். ஆள் நடந்தால் தூரத்திலிருந்து பார்க்கும் போது கால்கள் எக்ஸ்வடிவில் இருக்கும். உடம்பில் அந்துசந்து இருக்காது. தொப்புள் தெப்ப குளம் போல இருக்கும். நண்பர்கள் அவருக்கு அன்பாக வைத்த பெயர்களின் ஒன்று "கருப்பு நமீதா". எக்ஸ்மான் கிழமைக்கு ஒரு தடவை தான் குளிப்பார். செமஸ்டர் பரீட்சை வந்துவிட்டால் மாதக்கணக்கில் குளிக்க மாட்டார். கிட்ட போகும் போது கெட்ட வாடை வீசும். அனுபவப்பட்டவர்கள் அவ்வாடையை அழுகிய மீன் நாற்றத்திற்கும், இன்னும் சிலர் அதை குட்டை நாயின் மணத்திற்கும் வேறு பலர் பன்னித்தொழுவ வாடைக்கும் ஒப்பிடுவார்கள். முதல் வருடத்தின் இரண்டாம் செமஸ்டர் எக்ஸாம் நாட்களின் போது எங்கள் மட்டத்தின் "ஆடம்பர அழகி" நூலகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தார். எக்ஸ்மானுக்கு அழகியில் பல நாட்களாகவே ஒரு "நோக்கம்".ஆனால் போதிய "ஊக்கம்" இல்லாததால் அருகில் நின்று பேசுவதற்கே தயங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் "நோக்கமிருக்கு ஆனா ஊக்கமில்லை" என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தோம்.<br />
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX5c8r3wdGisAGGVMWQUG1k9EDqsj3Ls87MsbpU1-XzfY0EkBdsFDhSir58c56198j0926f9FX9fJM_fJfGw9lFpVSnR4OF_Ikxz8EjABAgd4jTRHaAPkyHYZPaW87uBB7cWsLDKMBxg4t/s1600/pretty-girl-with-hand-over-her-mouth.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX5c8r3wdGisAGGVMWQUG1k9EDqsj3Ls87MsbpU1-XzfY0EkBdsFDhSir58c56198j0926f9FX9fJM_fJfGw9lFpVSnR4OF_Ikxz8EjABAgd4jTRHaAPkyHYZPaW87uBB7cWsLDKMBxg4t/s1600/pretty-girl-with-hand-over-her-mouth.jpg" height="400" width="281" /></a></div>
<div>
<br /></div>
<div>
மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் "ஆடம்பர அழகி" அருகே சென்று உட்கார்ந்து விட்டார். சந்தேகம் கேட்கிறேன் என்று சொல்லி ஓரிரண்டு மொக்கை கேள்விகளை தொடுத்தார். ஆடம்பர அழகிக்கோ எக்ஸ்மானில் இருந்து வீசிய நாற்றம் தாங்க முடியவில்லை. எவ்வளவு நேரத்துக்குத்தான் தாங்குவது?. ஒரு கட்டத்தில் கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடியபடி பதிலளிக்க ஆரம்பித்தார். ஊக்கத்தின் உச்சியில் இருந்த எக்ஸ்மானோ அழகி வெட்கத்தின் மிகுதியில் மூடிக்கொள்வதாக கணக்கு போட்டார். தான் பேசியதால் மகிழ்ச்சியடைந்து தானாக புன்னகைக்கும் உதடுகளை மறைக்கவும் கைக்குட்டையை அழகி பாவிக்கிறார் என எண்ணி புளகாங்கிதமடைந்தார். அத்தோடு நிறுத்தாமல் அன்று இரவுதங்கிமிடத்துக்கு வந்தவர் நண்பர்களிடம் அவளை மடக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்.</div>
<div>
<br /></div>
<div>
<div>
நண்பர்கள் எக்ஸ்மேனின் ஊக்கத்தை வெளியே பாராட்டினாலும் உள்ளே கடுப்பில் இருந்தார்கள். நமக்கு மைனா சிக்காவிட்டாலும் அடுத்தவனுக்கு காக்கா கூட சிக்கக்கூடாது என்ற தெளிவான கொள்கையுடையவர்கள் அவர்கள். அவ்வழகிக்கு நெருக்கமான வாளிகள் மூலமாக விசாரித்தார்கள். அழகி அளித்த பதில் எக்ஸ்மேனை ஒரே நாளில் இசற்மான் ஆக்குமளவுக்கு இருந்தது.அப்படி என்ன தான் அவர் சொல்லியிருப்பார்?</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVZyIQHgsLSMStHN2sY-RSnFSWEzMaGnV6gVgUg5ukuBGEpHju5c9gVe6NaVPfpLwer7R0zTybksHHWdRi6HZAGSRdSngNpCK7UDPBFkQd1Q9A2Ir1Nun5X70MdRGVbrGRjfz_n3K0WQ-H/s1600/shy-girl2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVZyIQHgsLSMStHN2sY-RSnFSWEzMaGnV6gVgUg5ukuBGEpHju5c9gVe6NaVPfpLwer7R0zTybksHHWdRi6HZAGSRdSngNpCK7UDPBFkQd1Q9A2Ir1Nun5X70MdRGVbrGRjfz_n3K0WQ-H/s1600/shy-girl2.jpg" height="400" width="266" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<b>" நான் ஒண்டும் அவரைக்கண்டு வெட்கப்படேலை. சரியான நாத்தமா இருந்தது. அதுதான் லேஞ்சியால பொத்தினான்"</b></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-39097251487250582122014-09-24T23:15:00.000+09:002014-09-25T23:40:28.564+09:00Mars Orbiter Mission<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0tZnKWVCqLkOTLXtZMa5v45dewBaIWne1iB1FPY9ffbLO90PAYaAysS0pZL-W6KQtXNyCRws1LLWEzbtDMM8LeR54CDKpRsaz11-f0RXvl8jcR075xSnqfrl2Uu2M21tpvAsdApTKxGh/s1600/_70786038_indian_mars_mission_624.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0tZnKWVCqLkOTLXtZMa5v45dewBaIWne1iB1FPY9ffbLO90PAYaAysS0pZL-W6KQtXNyCRws1LLWEzbtDMM8LeR54CDKpRsaz11-f0RXvl8jcR075xSnqfrl2Uu2M21tpvAsdApTKxGh/s1600/_70786038_indian_mars_mission_624.jpg" height="216" width="320" /></a></div>
<br />
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
உலகத்துக்கே பிடிக்காத அடோல்ப் ஹிட்லரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். எவ்வளவுக்கு என்றால் அவர் படத்தை கணனி மேசைத்தளத்தில் போட்டு வைக்குமளவுக்கு பிடிக்கும். நூறு கோடி மனிதர்களுக்குள்ள தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்குள் இருந்தால் எப்படி இருக்கும்?. அது தான் ஹிட்லர். எதிரிகள் காலடி தொலைவுக்குள் வரும் வரை திருப்பி தாக்குவதை பற்றியே சிந்தித்த விடாக்கண்ட மனுசன் அவர். தோற்றாலும் வென்ற பெருமிதத்தை எதிரிக்கு தரக்கூடாது என்பதற்காக தன் உடலை எரித்தழிக்க உத்தரவிட்டு மாண்ட இரும்பு நெஞ்சன். ஹிட்லர் இல்லாவிட்டால் ஸ்டாலினும், வின்ஸ்டன் சேர்ச்சிலும் ,ரூஸ்வெல்ட்டும் யாரென்றே நமக்கு தெரிந்திருக்காது. அவ்வாறே ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர் வந்திராவிட்டால் தாங்கள் யாரென்றே தெரிந்திராது. அது தெரிந்த பின் அவர்கள் போட்ட தாண்டவத்தில் உலகமே மிரண்டு போனது. போரில் தோற்றாலும் ஹிட்லர் தட்டியெழுப்பிய பெருமித உணர்வு ஜெர்மானியருக்கு போகவில்லை. இன்றைய திகதியில் ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்களின் பொறியியல் தரம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. இத்தனைக்கும் ஜெர்மானியர்கள் ஐரோப்பாவின் ஆதியினம் அவ்வளவு தான்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
உலகத்திலேயே ஆதியினம் ஒன்று இருக்கிறது. உழுது பயிரிட்டு உழைத்து வாழும் முறையை முதன் முதல் பின்பற்றிய இனம். இவர்கள் ஜெர்மானியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த நாட்களில் வானளாவ கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோள்களின் இயக்கம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார்கள். கணிதத்தை உருவாகினார்கள். தொழில் முறை இராணுவங்களை உருவாக்கி போரிட்டார்கள். அரேபியர்களுக்கு கல்வி தந்தார்கள். சீனர்களுக்கு மதமும் தற்பாதுகாப்பு கலைகளும் கற்று தந்தார்கள். பல்லாயிரம் மைல்கள் கடலில் சென்று வியாபாரம் செய்தார்கள். ஐரோப்பாவின் மூத்த இனமே இவ்வளவு உயர்வாக இருக்கும் போது உலகின் மூத்த இனம் எங்கேயோ உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் காலம் நாம் விரும்பாததையும் எழுதி விடுகிறது. தகுதியில்லாதவர்களுக்கு பெருவாழ்வும் கொடுத்து தகுதியுள்ளவர்களை கேவலப்படுத்தி வீழ்த்திவிட்டு சென்று விடுகிறது. கைபர் கணவாயூடாக வந்த நாடோடிக்கூட்டத்தோடு எப்படி இந்த புராதன மக்கள் கூட்டம் கலந்தது?. காட்டுமிராண்டி மொகாலையர்களை எதிர்கொள்ள முடியாமல் ஏன் இப்படி பின்வாங்கியது?. எல்லாவற்றிற்கும் மேலாக கேவலமான கடற்கொள்ளை கூட்டமான பிரித்தானியர்களிடம் எப்படி நூறாண்டுக்கு மேலாக அடிமையாக இருந்தது?. காலம் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு எவராலும் தெளிவான பதிலை அளிக்க முடிவதில்லை.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
எது எவ்வாறாயினும் வேறுபட்ட இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்களின் கலவையாகவுள்ள தற்போதைய பாரத நாட்டினுள்தான் உலகின் ஆதியினம் இருக்கிறது. வேறுவிதமாக சொல்வதானால் அவ்வினத்தின் சிறப்புக்களை ஏனையவர்கள் ஏதோ ஒரு வீதத்தில் தமக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அச்சிறப்புத்தன்மை ஒப்பிடமுடியாதது. அதை நுண்ணறிவு என்றோ, விசேடதகமை என்றோ குறிப்பிட முடியும். அத்தகமைதான் மங்கள்யான் கலத்தை செவ்வாய் வரை முதலாவது முயற்சியிலேயே எடுத்துச்சென்று பிசகின்றி ஈர்ப்பு பாதையில் சுற்ற விட்டிருக்கிறது என்றும் பெருமிதமாக கூறியே ஆகவேண்டும்.மொகாலய காட்டுமிராண்டிகளாலும் ஐரோப்பிய கொள்ளையர்களாலும் சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்ட புராதன தேசம் தடுமாறி எழுந்து ஆறு தசாப்தங்களுள் தெளிவாக விண்வெளியில் சிக்ஸர் அடித்திருக்கிறது. ஹிட்லர் உருவாக்கிய தொழில் நுட்பத்தை பிடுங்கி அமெரிக்கர்களும் ரஸ்யர்களும் விண்வெளியில் காட்டிய "சாதனைகளை" போலல்லாது சுயமாக ஒரு காட்டு காட்டியிருக்கிறது இந்தியா.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
பிரமாண்ட விண்வெளியில் 300 நாட்களாக 670 மில்லியன் கிலோமீற்றர்கள் தாண்டி பயணித்து பிசகின்றி இன்று செவ்வாயின் ஈர்ப்பு வலையத்தின் சிக்கியது மங்கள்யான். பொன் கொழித்த இந்தியா வறுமையில் உழழ மூல காரணமாக இருந்த பிரித்தானியர்கள் "பிச்சைக்கார தேசத்துக்கு இது தேவையா?" என்று இணையவெளியெங்கும் ஒப்பாரி வைக்க வெள்ளைக்காரர்கள் முகநூலில் "செவ்வாயில் மாடு மேய்க்க போகிறார்களா?" என்று கலாய்த்திருக்க தன் முயற்சியின் சற்றும் தளராத மங்கள்யான் விடாப்பிடியாய் பயணித்து போய்ச்சேர்ந்தான். மனித குலத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்போகும் விண்வெளி பயணங்களை ஒரு குடியேற்ற வல்லரசு விலை கொடுத்து வாங்கப்பட்ட பலதரப்பட்ட இனங்களின் மனித மூளையை வைத்து முன்னெடுப்பதைவிட பாரதம் போண்ற புராதன தேசம் முன்னெடுப்பது தான் அதிக பலனை தரவல்லதாக இருக்கும். 74 மில்லியன் அமெரிக்க டொலர்களில் செவ்வாயை எட்டிப்பிடித்த இஸ்ரோவுக்கு பெரு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் பட்சத்தில் மேலும் பல மகத்தான சாதனைகளை படைக்கும் என்பதில் ஐயமில்லை.</div>
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-84435826036030191202014-08-30T13:40:00.000+09:002014-08-30T13:58:34.792+09:00தற்போதைய நிலவரம் -10<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZaNg5KE1O1pNQ3qMn6B8vqDSm332Hi7Gj0Evi_kwzwECxDi4BYU-0zJfcs4kPDs4jhVW8kQ-FUlCgBXb9P_DLOdYxSnB3QCMnd5gzbGLCUHR7DFoGFmrR3iZhTAO_UqtCn4PU6TiT1EcQ/s1600/house_of_cards.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZaNg5KE1O1pNQ3qMn6B8vqDSm332Hi7Gj0Evi_kwzwECxDi4BYU-0zJfcs4kPDs4jhVW8kQ-FUlCgBXb9P_DLOdYxSnB3QCMnd5gzbGLCUHR7DFoGFmrR3iZhTAO_UqtCn4PU6TiT1EcQ/s1600/house_of_cards.jpg" height="489" width="640" /></a></div>
<br />
உடையாது என்று எல்லோருமே நினைத்த 7ஜி கும்பல் உடைந்துவிட்டது. கவிழாது என்று அடித்து கூறப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்த சம்பவத்தோடு ஒப்பிடும் போது இது ஒரு வெறும் விடயம் என்ற போதிலும் மட்டம் 2003 இனை பொறுத்தவரை இது குறிப்பிடத்தக்க கனமானது. பல்கலை நாட்களில் 7ஜி கும்பல் போட்ட அட்டகாசங்களும் அடிபாடுகளும் மட்டத்திலிருந்த சிலரை விலகிப்போக வைத்ததோடு பலரை பொறாமைப்படவும் வைத்திருந்தன. ஒவ்வொருத்தனும் எதோ ஒரு வகையில் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்க இவர்களால் மட்டும் எப்படி இப்படி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று கடுப்பான ஜூனியர் சீனியர் ஏராளம். 7ஜி கும்பலின் பலமும் அதுதான்.பலவீனமும் அது தான். பிரச்சினைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு யாராவது மூன்றாவது தரப்போடு வம்பிழுப்பது, மூன்றாவது நபர் கிடைக்காத பட்சத்தில் தண்ணியை போட்டோ போடாமாலோ தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது ,அரட்டையடிப்பது என இவர்களின் வண்டி நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.<br />
<br />
ஒரு கட்டத்தில் வம்பிழுக்க எவருமே சிக்காத நிலமை 7ஜி கும்பலுக்கு உருவானது. வேலைத்தள பிரச்சினைகளை நிர்வகிப்பதும் அனுபவத்தின் மூலம் இலகுவாகிவிட்டது. இந்த நிலையில்த்தான் கடிக்க எலும்பு கிடைக்காத நாய்க்குட்டி தன் காலையே பல்லுழைவு போக்க கடிப்பது போல தமக்குள்ளேயே கடிபட ஆரம்பித்தார்கள். புரஜெக்ட் மனேச்சர் பதவி தந்த குருட்டு தன்னம்பிக்கையில் ஆளாளுக்கு தம்மை தலைவராகவும் தத்துவஞானியாகவும் ஆலோசகராகவும் பிம்பத்தை தமக்குள் வளர்த்துக்கொண்டு வலம் வர ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பகைமை வளர்ந்த போதிலும் தண்ணியை போட்டுவிட்டு நட்பு பாராட்டினார்கள். அப்பகை தெரியாமல் இருக்க மூன்றாவது பிரச்சினையை அலசினார்கள். வேடிக்கையாக வம்பிழுப்பது போல பாசாங்கு செய்து கொண்டு வன்மம் நிறைந்த கண்களோடு போதை எனும் போர்வையுள் மறைந்திருந்து தாக்குவது வழமையானது. இந்த தாக்குதல் என்மீது அதிகமாக இருப்பதை புரிந்துகொள்ள பெரிதாக நுண்ணறிவு ஒன்றும் தேவைப்படவில்லை. பொறுமையிழந்த ஒருநாளில் தண்ணியை போட்டுவிட்டு வேடிக்கையாக வம்பிழுத்தல் என்ற போர்வையை நீக்க முயன்றபோது உள்ளுக்குள் பிராங்கென்ஸ்டைன் பூதமாக மறைந்திருந்த மிருகம் வெளிப்பட்டுவிட்டது.<br />
<br />
இன்றையமாதம் 17ம்திகதி நடந்த நீண்ட நேர வாக்குவாதம், கைகலப்பின் பின்னர் நான் அந்த கும்பலை விட்டு வெளியேறி வந்தேன். எனக்கு இருப்பிடம் தர முன்வந்த சகமட்டத்து நண்பனிடம் "அவனை வீட்டுக்குள் விடாதே" என்று கேட்டுகொண்டார்கள். "உனக்கு எவன் இடம் தறானோ அவனுக்கு அடிப்போம்" என்று வேறு சிரிப்புபஞ்ச் டயலாக்குகளை எடுத்து விட்டார்கள். நான் வெளியே போகிறேன் என்பதைவிட நான் வெளியேறினால் பிறர் கேவலமாக நினைப்பார்களே என்ற நினைப்புத்தான் அதிகமாக அவர்களுக்கு இருந்தது.பிறருக்கு ஒரு காட்டு காட்ட வேண்டும் என்ற சிந்தனையையே அடிநாதமாக கொண்டவர்களிடம் வேறெப்படியான சிந்தனையை எதிர்பார்க்க முடியும்?.<br />
<br />
இற்றைய திகதிக்கு இக்கும்பலில் எஞ்சியுள்ளவர்கள் பியர்கான்களோடு கூடியிருந்து நான் போனதற்கான காரணங்களை உருவகித்து அவைகுறித்து விவாதித்துக்கொண்டிருக்கக்கூடும். (இந்த வசனத்தை படித்த பின்னர் "எங்களுக்கு வேற வேலையில்லை உன்னைப்பற்றி கதைக்க?" என்று கடுப்பாகவும் கூடும்) உளவியலின் அடிப்படையே தெரியாத போதிலும் என் உளவியல் குறித்து அக்கு வேறி ஆணிவேறாக பிரித்து மேயவும் கூடும். அவை யாவும் தங்களுக்குள் இருக்கும் பூதத்தை மறைத்து அது என்னிடம் இருப்பதாக நிறுவி சுய மகிழ்ச்சி கொள்வதையே அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதையும் அவர்களோடே பத்து வருடமாக இருந்தவன் என்ற முறையில் மிகச்சரியாக ஊகிக்க முடியும்.<br />
<br />
கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்த கும்பலோடு 10 வருடமாக இருந்து மிஞ்சியது இரண்டு பேரோடான நட்பு மட்டும் தான்.எனது அனுமானம் மட்டும் சரியாக இருக்குமேயானால் இன்னும் இரண்டு வருடத்துக்கு மட்டுமே இந்த கும்பல் நீடிக்கும். அதற்க்குள் கலியாணம் கட்டி போறவன் போக எஞ்சியோர் மனநோய் முற்றி வெறி பிடித்தலைய இந்த கும்பல் அடுக்கி வைத்த சீட்டு கோபுரம் குலைவது போல் ஆகிவிடும். நாமெல்லாம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அரைப்பங்கை தாண்டி விட்டோம். வாழ்ந்து முடிக்கும் தருணத்தில் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் பெறுமதி என்பது சொந்த ஊரிலிருந்து எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் சீனனுக்கு கீழ் செய்த வேலையை கொண்டு மதிப்பிடப்படப் போவதில்லை. மாறாக அது நமது சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கும்.</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-51857452285465398092014-07-31T16:40:00.001+09:002014-07-31T16:42:04.750+09:00எதிர் கால கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
2028 ஆம் ஆண்டில் ஒரு நாள் சௌந்தரின் மகன் முற்றத்திலிருந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது அச்சுதனின் மகன் படு வேகமாக உள்ளே நுழைந்து அவனை வெளு வெளு என்று வெளுக்கத்தொடங்கினான். சௌந்தர் தனது பாரமான வண்டியை தூக்கியபடி ஓடி வந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற போதிலும் அவன் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.<br />
<br />
சௌந்தரின் மகனே அடி வலியையும் மீறி " ஏன்டா இப்ப என்னை அடிக்கிறாய்? ,காரணத்தை சொல்லிட்டு அடியடா" என்று கத்திக்கொண்டிருந்தான்.<br />
<br />
பத்து நிமிடங்கள் கும்மிக்குதறிய பின் அமைதியான அச்சுவின் மகன்<br />
"போன மாசம் என்னை பார்த்து தேவாங்கு என்று சொன்னதுக்குத்தான் இந்த அடி" என்றான்.<br />
<br />
"போன மாசம் சொன்னதுக்கு இப்ப அடிக்கிறாய்? உனக்கென்ன விசரா?"<br />
<br />
"நாயே! இன்றைக்குத்தான்டா தேவாங்க சூவில நேர பார்த்தனான்"<br />
<br />
மேற்சொன்ன நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. சில நாட்களுக்கு முன் முகநூலில் அச்சுதன் என்மீது எதிர்பாராத காரசாரமான தாக்குதலை தொடுத்திருந்தான். அதற்கு காரணமாக இருந்தது நான் போட்ட "இவன் எதுக்கும்,அதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான் " என்றமைந்த பின்னூட்டம் .கடுப்பானால் திருப்பி திட்டுவது வழமை என்றாலும் நான் அந்த பின்னூட்டத்தை போட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA_nhRPD3YHTDCFUJvWumIzih1vG9cHTddeOjOB8K1p60S7abaS2caCA-86uXo3tyK5pyktoUcMvFuBOS7_LnlkD6lNG8YZYYRBCzIvOpueOUPi1HjUjQxEnL-7ABpKIHZDuvt6mPKCV0P/s1600/10346274_10154442810410022_6247821443286502990_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA_nhRPD3YHTDCFUJvWumIzih1vG9cHTddeOjOB8K1p60S7abaS2caCA-86uXo3tyK5pyktoUcMvFuBOS7_LnlkD6lNG8YZYYRBCzIvOpueOUPi1HjUjQxEnL-7ABpKIHZDuvt6mPKCV0P/s1600/10346274_10154442810410022_6247821443286502990_n.jpg" height="400" width="225" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
(கடின வார்த்தைப்பிரயோகங்கள் மேலே உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன)</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg21j2utbOZMYmSWeVrkFjJjpCQQHUpk_NupEBAjQqJg0woVmSS3dZOPL7fqXDdtn5B4U-NOPGxvCfgkm_QpCzEamwhE4dw6HUpCImDuBQD4He9vqlP_v2lMKDTgT_TsnqNJZiS6-JlKYaV/s1600/beautiful_indian_girls_in_saree_by_bollywoodesigns-d6xp02n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg21j2utbOZMYmSWeVrkFjJjpCQQHUpk_NupEBAjQqJg0woVmSS3dZOPL7fqXDdtn5B4U-NOPGxvCfgkm_QpCzEamwhE4dw6HUpCImDuBQD4He9vqlP_v2lMKDTgT_TsnqNJZiS6-JlKYaV/s1600/beautiful_indian_girls_in_saree_by_bollywoodesigns-d6xp02n.jpg" height="377" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
2028 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டம் 2003 மாணவர்கள் 20 வருடங்களின் பின்னர் மீள் இணைப்பு நிகழ்வை கொண்டாடவென ஒன்று சேர்ந்திருந்தனர். தலைநகரிலிருந்த 5 நட்சத்திர விடுதி ஒன்றில் முதல்நாளிரவே வந்து ஒன்று கூடிய நண்பர்கள் இரவிரவாக தண்ணீரில் மிதந்துகொண்டிருக்க மறுபக்கம் அவர்களின் மனைவிமார்கள் ஒன்று கூடலில் என்ன ஆடை அணிவது என்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
"என்ர அவருக்கு இன்னும் தலைமுழுக்க நல்ல கருப்பு முடி.அதால அதுக்கு மட்ச் பண்ணுற மாதிரி நான் கருப்பு சாறி கட்டப்போறன்" </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
சொல்லிவிட்டு சுகாவின் மனைவி நெஞ்சை நிமிர்திக்கொண்டாள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
"நான் வெள்ளைச்சாறி கட்டப்போறன்.அவருடை வெண்பஞ்சு போல அழகான நரைத்த முடிக்கு சும்மா அதிரும்".சிரிப்பு ரவுடியின் சம்சாரம் மின்சாரம் பாய்ந்தது போல உடலை உதறி நளினம் காட்டிக்கொண்டாள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
"என்ர செல்லத்துக்கு சேல்ட் அண்ட் பெப்பர் தலை. கருப்பு வெள்ளை கலப்பில் கட்டினால் கலக்கும்" இது அப்பாசின் காதல் மனைவி.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
சௌந்தரின் மனைவியோ முதுகில் ஆழமான பிளவு வைத்த பிளவுஸ் போட்டு சாறி கட்டுவேன் என்று பிடிவாதமாய் இருந்தாள். சௌந்தரின் பின்பக்கம் வெளித்த மொட்டைத்தலை ஞாபகத்தில் வர பெண்கள் "நல்ல கலாரசனை உங்களுக்கு" என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<b>"லூசாடி உங்களுக்கு"</b></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
கலகப்பாக போய்க்கொண்டிருந்த சூழலில் காட்டெருமை கத்தியதுபோல் ஒரு சத்தம். அங்கே அலியப்பாவின் மனைவி ஆக்ரேசமாக நின்றிருந்தாள்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<b>"என்ர புருசனுக்கு தலையில் மயிரே இல்லை. உந்த மயிர் மட்சிங் பார்த்தா நான் அம்மணமாவெல்லோ வரோணும்?"</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-29030008001598190782014-06-01T20:58:00.000+09:002014-06-01T21:10:32.207+09:00சண்டை போடாமல் கிழிந்த சட்டை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGdnkXbk7qp4GuDZgKKxkOtS-3dBdNLT8CgUTU86Nbf4rF7VmqOR4-8pTy9EtAnl3mIr2iPq52FYjdNFzmiDdPXVJRYychyphenhyphenhLcSgBIpWh4xm_ArMmwUHdbqf9S_wYBNx_YKaaRu1fLk15b/s1600/hqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGdnkXbk7qp4GuDZgKKxkOtS-3dBdNLT8CgUTU86Nbf4rF7VmqOR4-8pTy9EtAnl3mIr2iPq52FYjdNFzmiDdPXVJRYychyphenhyphenhLcSgBIpWh4xm_ArMmwUHdbqf9S_wYBNx_YKaaRu1fLk15b/s1600/hqdefault.jpg" height="480" width="640" /></a></div>
<br />
<br />
சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும்.சட்டை மட்டுமில்லை. சிலசமயம் யட்டி கூட கிழிபட வாய்ப்பிருக்கிறது. கட்டிய கோவணம் களவு போன கதை கேள்விப்பட்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் கட்டிய கோவணம் மட்டுமில்லை. அரை நாண் கயிறே தெறித்துப்போன சம்பவம் சிங்கபுரியில் நடந்தது. இப்போதெல்லாம் கேவலமான சம்பவம் ஒன்று நடந்தால் அதனை உடனடியாக ஆவணப்படுத்திவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தாமதிக்கும் ஒரிரு நாட்களுக்குள் ஒரு போத்தில் உற்சாகபானத்தோடு அந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த கேவலம் நடந்ததே எனக்குத்தான் என்று மாற்றிவிடுகிறார்கள். பல வருடங்களாக புறஜெக்ட் மனேச்சராக இருப்பவர்களுக்கு தெரியாததை தெரிந்ததாக கதைப்பது, வரலாற்றை மாற்றி எழுதுவது எல்லாம் கைவந்த கலையாக இருப்பதால் அவர்கள் முன் நான் கையாலாகாதவனாகி விட்டேன்.<br />
<br />
இந்த கதைக்கு அவசியப்படுகிற கிளைக்கதையை சொல்ல ஒரிரு மாதங்கள் பின்னே சென்றாக வேண்டும்.மலேசிய விமானம் காணாமல் போயிருந்த சமயம்.யாரோ ஒரு அமெரிக்க புத்திசாலி இணையத்தளம் விமானத்தை தீவிரவாதிகள் தரையிறக்கியிருக்கக்கூடிய சாத்தியமுள்ள இடங்கள் என்ற வரிசையில் பலாலி விமானத்தளத்தையும் சேர்த்து காமெடி பண்ணியிருந்தார்கள். "பலாலியில் போர் ஜெட்விமானமே இறக்க முடியாது. போயிங்கை எப்படி இறக்க முடியும்?" என்று ஒரு மொக்கையான கருத்தை வெளியிட்டுவிட்டு அருகேயிருந்த நண்பர்களின் பதிலுக்காக காத்திருந்தேன். வழமையாக இப்படிப்பட்ட "அதிமேதாவித்தனமான" உரையாடல்களை வளர்ப்பதில் ஆர்வமுடைய பேர்வழிகள் அமைதியாக இருக்க பதிலளித்த நண்பர் வாசிப்புப்பழக்கம் அறவே இல்லாதவர். புத்தகவாசிப்பு மட்டுமல்ல இணைய வாசிப்புப்பக்கம் கூட அண்டாதவர். அப்படிப்பட்ட அவர் "பிளேனை கடல்ல இறக்கிட்டு போட்டால கட்டி இழுத்திட்டு வரலாம்" என்ற பதிலோடு வீராப்பாக வீற்றிருந்தார்.<br />
<br />
"கடல்ல இறக்க அது என்ன கடல் விமானமா?" நான் விடவில்லை.<br />
<br />
"போடா பேயா! போயிங்ட Catalog புத்தகத்தை எடுத்து பார்.கடல்ல மிதக்கும் என்று தெளிவா எழுதி இருக்கு"<br />
<br />
கில்மா புத்தகம் கூட வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் போயிங் கற்றலொக் வாசிக்கிற அளவுக்கு போயிட்டானா?. அல்லது இவன்ட கையில் கற்லொக் சிக்குற அளவுக்கு போயிங் கொம்பனி தரமிழந்து விட்டதா?என்று எனக்கு பல விதமான குழப்பம். இருந்தாலும் கமுக்கமாக இருந்து அவனை சில நாட்கள் தொடர்ந்து அவதானித்தேன். புதிதாக வந்து IT பெடியனொருவன் தனது வேலை பற்றி பெரிதாக பில்டப் குடுக்கப்போக குறுக்கிட்ட இவன் " எல்லாம் பூச்சியம் ,ஒன்றுக்க தான்.தேவையான Out put ஐ வரையறுத்திட்டு அதுக்கேற்ற மாதிரி கோடிங் எழுதினா சரி" என்று ஒரே போடாக போட்டு விட்டான். பாவம் IT அப்பாவி. இதுவரை நாமாக கேட்டாலும் இவனுக்கு முன்னால் தனது வேலை சம்மந்தமாக பேச மறுக்கிறான். இந்த அட்டகாசம் இதோடு நிற்கவில்லை. சில நாட்களின் பின்னர் ஒரு நண்பன் ஒருவன் சிங்கபுரியில் சிறிய சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொண்ட விடயத்தை குழுவாக ஆராய்ந்து கொண்டிருந்த போது "சிங்கப்பூர் சட்டத்தில் வெளிநாட்டு தனி நபருக்கான உரிமை என்ற பகுதியே கிடையாது" என்று குண்டை கொழுத்தி இவன் போட வாதம் சூடு பிடித்தது. இபிகோ 335 , 336 என்று பேசாத குறையாக விளக்கம் கொடுத்து "அட இவனுக்கு சட்டமும் தெரியுமா?" என்று எண்ண வைத்து விட்டான். அடுத்த நாள் இன்னொரு வாதம். இந்த முறை மருத்துவம். இதிலும் நம்ம ஆள் சத்திர சிகிச்சை நிபுணர் ரேஞ்சுக்கு அசத்தி விட்டான்.<br />
<br />
மேலோட்டமாக பார்த்தால் சகலகலா வல்லவன் என்ற எண்ணம் ஏற்படுமளவுக்கு இருக்கும் அவனது பேச்சு. கூர்ந்து அவதானித்தால் எதுவுமே இருக்காது. உதாரணத்துக்கு நீங்கள் நியூசிலாந்து நல்லின கறவை மாடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது முதலாம் ஆண்டு படிக்கும் சிறு பிள்ளை குறுக்கிட்டு "பசு பால் தரும், பசுவிற்கு நான்கு கால் உண்டு, பசு புல் தின்னும், பசு கன்று ஈனும், பசுவின் சாணம் எருவாக பயன்படும்" என்று சொல்வது போலத்தான் பேச்சின் உள்ளீடு இருக்கும். இதன் பின்னணி குறித்து ஆராய வெளிக்கிட்ட போது தான் அவனுக்கு புதிதாக காதலி கிடைத்திருப்பது தெரியவந்தது. கோவேறு கழுதை குதிரையாகி கொம்பு வச்சு அலைவதன் மர்மம் விளங்கி விட்டது. அடுத்த வாரம் நானும் நண்பர்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தபடி அவன் வரும் நேரத்தில் இந்தியா செவ்வாயை நோக்கி அனுப்பிய மாங்கல்யான் பற்றி வலிந்து பேச்சை ஆரம்பித்தோம். வலை விரித்திருப்பது தெரியாமல் பயல் செருமலோடு கருத்து சொல்ல ஆரம்பித்தான்.<br />
<br />
"எல்லாம் நீயூட்டன்ட தேர்ட் லோ தான்டா, செவ்வாய்க்கு கிட்ட போகேக்க தான் அடிபட சான்ஸ் இருக்கு"<br />
<br />
"பெண் நண்பி கிடைத்தால் தன்னம்பிக்கை கூடும் என்பது இதைத்தானா?. அப்படி என்றால் எனக்கு நண்பியே தேவையில்லை.ஏனண்டா எனக்கு தேவையை விட அதிகமா தன்னம்பிக்கை இருக்கு.அவ்வ்வ்வ்வ்"<br />
<br />
......................................................................................................<br />
<br />
மறுபடி சட்டை கிழிந்த கதைக்கு வருகிறேன். 2011 ஆம் ஆண்டில் ஒரு நாள். நானும் நண்பர்களும் உண்வருந்திக்கொண்டிருந்த மேசைக்கு அருகே கவர்ச்சியான மலேசிய கட்டழகி . கூடவே ஒரு நாற்பது வயதுகளை தாண்டிய முதிர்ந்த பெண். கட்டழகி மார்பில் வரைந்திருந்த டாட்டூவில் பாதி வெளியே எட்டிப்பார்க்கும் படி உடை அணிந்திருந்தாள். மற்றவன் என்றால் பார்த்தமா ரசித்தமா என்று போயிருப்பான். எதையும் ஆராய்ந்து பார்க்கும் நமக்கு முழு டாட்டூ உருவம் என்னவாயிருக்கும் என்பதை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டு விட்டது.ஒருவன் வண்ணாத்து பூச்சி என்றான். இன்னொருவன் நட்டுவக்காலி என்றான். இல்லையில்லை இரட்டை இலை என்றேன் நான். சந்தேகத்தை கேட்க நேரடியாக அவளிடமே கேட்பது என்று முடிவானது. கேட்பதற்கு நெஞ்சின் துணிவும், குளறாத நாவும் உள்ள ஒரு ஆண் மகன் வேண்டுமே?. நான் அடுத்த நொடி கட்டழகி மேசையருகே நின்றேன்.<br />
<br />
"உங்களது டாட்டூ அருமை. என்ன வரைந்திருக்கிறீர்கள் அதில்?"<br />
<br />
பல ஆங்கில தூசணங்களை கட்டுக்கட்டாக கட்டழகி வீசினார்.<br />
<br />
" மிக்க நன்றி. இவ்வளவையுமா எழுதி வைத்திருக்கிறீர்கள்?"<br />
<br />
பதிலைக்கேட்ட கட்டழகி காட்டேரியாக மாறிப்போனார். நான் ஒரே ஓட்டமாய் ஓடி வந்துவிட்டேன். நண்பர்கள் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்கள். இப்போது எல்லோர் முகத்திலும் ஒரு ஏக்கம். அந்த டாட்டூவிலிருப்பதை அறியாமலே போய் விடுமா?. இந்த நேரத்தில்தான் அது வரை அமைதியாகவிருந்த ஹீரோ அலியப்பா அறிமுகமாகிறார்.<br />
<br />
"கட்டழகியை இவன் கடுப்பாக்கிட்டான். அதாலை கூடவிருக்கும் ஆன்ரிக்கு கண்ணி வைக்கப்போகிறேன். அவளிடம் கேட்டாலும் சொல்லுவாள் தானே?"<br />
<br />
அடுத்த அரை மணித்தியாலங்கள் அலியப்பா அன்ரியை நோக்குவதும் ஆன்ரி திரும்பவும் நோக்குவதாய் கழிந்தது.<br />
<br />
"எப்படியும் தலை ஆன்ரியை மடக்கிடும். ஆன்ரிட போன் நம்பரை வாங்கி கதையை போட்டு கட்டழகிட நம்பர வாங்கி அவளையும் கவிக்க போகுது"<br />
<br />
சிரிப்பு ரவுடி தலையை உசுப்பேத்திக்கொண்டிந்த போது தான் மஞ்சள் நிற தலை மயிரோடு கொடூரமான வில்லன் போல ஒரு மலேசியாக்காரன் அதிரடியாக அறிமுகமானான்.<br />
<br />
"டேய் என்ர மனுசியை பார்த்தது எவன்டா?"<br />
<br />
இதற்குப் பிறகு நடந்ததை சொன்னால் சட்டை கிழிந்த கதை ஆபாசமாகிவிடும்.<br />
...........................................................................................................................<br />
<br />
மூன்று வருடங்களுக்குப்பிறகு அதே சிங்கபுரியில் அதே நண்பர்களோடு மீளவும் ஒரு ஆனந்தமான சனிக்கிழமை இரவு. தலைவர் அலியப்பா ஆரம்பித்தார்.<br />
<br />
"இப்பெல்லாம் காய்ஞ்ச மாடு கம்பில விழுந்தது போல அலையுறாங்கள் பெடியள். கிழவி கிடைச்சாக்கூட காணும் என்று திரியுறாங்கள்"<br />
<br />
"அப்பவே மலேசியா கிழவியை மடக்க முயற்சி செய்த நீ இதை சொல்லக்கூடாது"<br />
<br />
நான் ஒரே போடாக போட்டு தலையை அமத்த முயற்சி செய்தேன்.<br />
<br />
அலியப்பா அசரவில்லை. அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்தார். சபையில் அச்சம்பவம் பற்றியே அறிந்திராத புதியவர்கள் நான்கு பேர் இருந்தனர். நிபந்தனையற்ற ஆதரவு வழங்க சிரிப்பு ரவுடி இருந்தார். அதை விட மாங்கல்யான் புகழ் நண்பரும் பக்க பலமாக இருந்தார்.<br />
<br />
"மலேசிய ஆன்ரிக்கு நூல் விட்டு அவளின்ர புருசனட்ட அடிவாங்க பார்த்தது நீ தான். என்ன கதையை மாத்துறியா?"<br />
<br />
அதன் பிறகு நான் வைத்த வாதம் எதுவும் எடுபடவில்லை. சில தருணங்களில் குறுக்குக் கேள்விகள் கேட்டு அலியப்பாவை சற்று ஆட்டம் காண வைத்த பொழுதுகளில் எல்லாம் "மாங்கல்யான்" குதித்து என்னை தாக்க ஆரம்பித்தான். என் மீது என்ன கடுப்போ?. தாக்குப்பிடிக்க முடியாமல் உறங்கச்சென்றுவிட்டேன். அது தான் நான் செய்த மிகப்பெரும் வரலாற்றுத்தவறு. இரவிரவாக ஒரு போத்திலோடு அந்த வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டார்கள்.<br />
<br />
.....................................................................................................<br />
<br />
சிங்கபுரியில் ஒரு நாள் ஞாயிறுக்கிழமை. ஊரிலிருந்து புதிதாக வந்திருந்த ஒருவனோடு MRT இல் போய்கொண்டிருந்தேன். எனக்கு அருகே ஒரு 50 வயதை தாண்டிய பெண்மணி வந்து இடப்பக்கமாக அமர வலப்பக்கமாக இருந்தவன் முழங்கையால் விலாவில் இடித்து விட்டு காதில் கிசுகிசுத்தான்.<br />
<br />
"மடக்குங்கோ! மடக்குங்கோ"<br />
<br />
"எதை?"<br />
<br />
"பக்கத்த இருக்கிற ஆன்ரியைத்தான்"<br />
<br />
"கறுமம். இதையா?"<br />
<br />
"சும்மா நடிக்காதையுங்கோ. ஆன்ரிமார் மேல உங்களுக்கு பிளான் எண்ட விசயம் ஊருக்கே தெரியும்"<br />
<br />
அவ்வ்வ். சண்டையில் சட்டை கிழிந்தால் நியாயம். சண்டையே இல்லாமல் சட்டையை கிழித்து கழுசானை கழற்றினால் நான் என்ன செய்வேன்?<br />
<br />
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-8981435081176240142014-05-01T12:39:00.000+09:002014-05-01T12:39:15.662+09:00ஜிம் கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜிம் கதைகளை ஆரம்பிக்க முதல் ஒரு ஜென்கதையை சொல்லிவிட்டு வருகிறேன்.ஜென்கதைக்கும் ஜிம்முக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதிலும் இந்த ஜென்கதையே ஜிம்மில் நடந்தது தான் என்பதால் சம்மந்தமுடையதாகிறது. முன்னொரு காலத்தில் குன்றின் உச்சியில் இருந்த ஒரு குருவானவர் பலவீனமான உடல்வாகு உள்ளவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். அவரது வலுவூட்டல் நிலையத்துக்கு நடைபிணமாக வந்தவர்களெல்லாம் சில மாதங்களில் பயில்வான்களாக திரும்பிப்போனார்கள். குருவானவர் தன்னிடம் வந்த மாணவர்களுக்கு மரக்குற்றிகளாலும்,பாறைகளாலும் செய்யப்பட்ட பழுக்களை தூக்க வைத்து பயிற்சியளிப்பார்.நேரம் தவறாமல் நிறை உணவு அளிப்பார்.ஆனாலும் அவரிடம் இருந்த ஒரு மாணவன் மட்டும் எவ்வளவு பயிற்சி,உணவு அளித்த போதிலும் தேறாமலே இருந்தான்.அவனது உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடமாடும் எலும்புக்கூடு போல் ஆகிக்கொண்டிருந்தது. இதைக் கண்டு பரிதாபமடைந்த குரு தனது தவவலிமையால் அவனது உடலை ஹாலிவூட் நடிகர் ஆர்னல்ட் சுவாசினேக்கர் போல கட்டுமஸ்தாக மாற்றி வீடு செல்ல அனுப்பிவைத்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9a4jQoQaU0m6UIKJvS9BFVhBzxyxAg8FNPnIyTjqPBgaxqcp-2y7JPffdgo85mFx2P1nK0MqjAO2fNyIk4VvimqeoUJAqtSXiuwxgcaR_YZTeNtE0Rokrn8esp3_cLGRc4IQ8Pr1ygxkp/s1600/9430435.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9a4jQoQaU0m6UIKJvS9BFVhBzxyxAg8FNPnIyTjqPBgaxqcp-2y7JPffdgo85mFx2P1nK0MqjAO2fNyIk4VvimqeoUJAqtSXiuwxgcaR_YZTeNtE0Rokrn8esp3_cLGRc4IQ8Pr1ygxkp/s1600/9430435.jpg" height="371" width="640" /></a></div>
<br />
வீட்டுக்கு போனவனை பார்த்த பெற்றோர் கதவை திறக்க மறுத்தார்கள்.மகன் உருவில் அரக்கன் வந்திருப்பதாக கூச்சல் போட்டு ஊரைக்கூட்டினார்கள். பயந்து போன அவன் ஒரே ஓட்டமாய் குருவிடம் வந்து சேர்ந்தான்.நடந்ததை கேட்ட குரு இந்த முறை அவனை வாரணம் ஆயிரம் சூரியா போல ஆறு பை உடம்போடு மாற்றிவிட்டு செல்லும் படி பணித்தார். அவனது புதிய தோற்றத்தை கண்ட பெற்றோர் அளவில்லா மகிழ்வுற்றார்கள். அவனது மனைவியும் தனது கணவனின் சுந்தர வடிவைக்கண்டு மிகைப்பெருமிதம் அடைந்தாள். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் அவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கின.அவனுக்கு பிற பெண்களோடு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மனைவி எந்நேரமும் அவனை திட்டித்தீர்க்க தொடங்கினாள்.<br />
<br />
ஒரு கட்டத்துக்குமேல் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாத அவன் மீண்டும் குருவிடம் அவன் சென்றான். சுந்தர ரூபம் வேண்டாம் எனக்கு பழைய உடம்பே போதும் என்று இறைஞ்சத்தொடங்கினான். அவனை பழையபடி ஆக்கிய குருவானவர் சுற்றியிருந்த மாணவர்களிடம் முக்கியமான வாழ்க்கை தத்துவம் ஒன்றை இச்சம்பவத்தோடு தொடர்புபடுத்தி சொல்ல விரும்பி "இவனது கதை மூலம் நீங்கள் உணர்வது என்னவென்றால் இயற்கையாக கடவுள் அளித்த தோற்றமே மேலானது என்பதாகும்" என்று சொல்லிவிட்டு தியானத்தில் ஆழலானார். கடுப்பான மாணவர்கள் "அப்ப என்ன மயிருக்கு இதுகளை இவ்வளவு நாளா தூக்குறம்" என்றபடி கையிலிருந்த உடற்பயிற்சி நிறைகளை ஆசான் தலையில் போட்டுவிட்டு சென்று விட்டார்கள். தலையில் பலமாக அடிபட்ட ஆசான் சித்தசுவாதீனமுற்று பரிதாபமாக சிலகாலத்தின் பின்னர் இறந்து போனார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibI8hOe_i4Mg7yuHJo82tdXiis17stc-b64L9BWLMVnaV8gfk6IbYKVWybLY75FO7XGN2ZtDi0tHfBrgemreOh1J2ERMn94dGeh46rxmfQyiK2rWnLFb9e18G27kv9BZ_dlBfSOMLmLXQr/s1600/gym-girl-hot-butt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibI8hOe_i4Mg7yuHJo82tdXiis17stc-b64L9BWLMVnaV8gfk6IbYKVWybLY75FO7XGN2ZtDi0tHfBrgemreOh1J2ERMn94dGeh46rxmfQyiK2rWnLFb9e18G27kv9BZ_dlBfSOMLmLXQr/s1600/gym-girl-hot-butt.jpg" height="640" width="444" /></a></div>
<br />
தகுதியில்லாத மாணவர்களை வைத்திருக்கும் ஆசானுக்கு அவல முடிவேயேற்படும் என்பதற்க்கு மேற்சொன்ன ஜென் கதை ஒரு நல்ல உதாரணமாகும்.இங்கே ஜென் குருவின் தலையில் கல்லை போட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் கால் மீது வெயிட்டை போட்ட அளவுக்காவது ஜிம் மாணவர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அடியேன் பத்து வருடமாக ஜிம்முக்கு போவதாக பலமாக அறிக்கை விட்டு திரிவதாலும், 6 பக் உள்ளதாக ஊரைப்பேய்க்காட்டி வைத்திருப்பதாலும் அடிக்கடி மாணவர்கள் வந்து குருவாக ஆட்கொண்டு அருளும்படி இறைஞ்சும் பாக்கியம் அமையப்பெற்றவன் ஆவேன் என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அப்படி இதுவரை தானா வந்து சிக்கிய மாணவர்கள் எண்ணிக்கை எப்படியும் இருபதை தாண்டும். சிலர் ஆறு பை வயிறு கேட்டு வந்து மாட்டினார்கள். இன்னும் சிலர் உருக்கு உடம்பு வேண்டுமென வந்து உருக்குலைந்தார்கள். ஆயினும் வண்டி குறைக்கும் வழி கேட்டு வந்து விளக்கில் விழுந்த வண்டாக சின்னாபின்னப்பட்டோர் தொகைதான் அதிகம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyIR8KeiLiwd-QrMLNFpU3g6u9nAXDNKINWxX6zKjIIhi1fQxE_dMfblls-VfkTRuEAwmt_L9o9v3j_S_BS-jZB3wNC2nrrJAKd1HoNw_-K0CIVNctKup7qsbvVM33yIcVioXX-RX3B9Zn/s1600/hot_fit_girls_5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyIR8KeiLiwd-QrMLNFpU3g6u9nAXDNKINWxX6zKjIIhi1fQxE_dMfblls-VfkTRuEAwmt_L9o9v3j_S_BS-jZB3wNC2nrrJAKd1HoNw_-K0CIVNctKup7qsbvVM33yIcVioXX-RX3B9Zn/s1600/hot_fit_girls_5.jpg" height="640" width="476" /></a></div>
<br />
எனக்கு வாய்த்த ஜிம் மாணவர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். சிலர் கூச்சசுபாவம் மிக்கவர்கள். ஜிம்முக்கு வரும் முதல் நாளில் அங்கே அகன்ற தேக்கு மரம் போண்ற தோள்களோடும் அனகொண்டாவையொத்த திரண்ட புயங்களோடும் உலாவும் மாமல்லர்கள் தூக்கும் பிரமாண்ட நிறைகளை கண்டு அஞ்சி,தம்மால் சிறிய நிறைகளையே தூக்க முடிவதையிட்டு வெட்கி ஒதுங்க நினைப்பவர்கள். ஊக்கமும்,நோக்கமும் இவர்களுக்கு வரவைக்க குரு அதிகம் கஸ்டப்படவேண்டியிருக்கும். அடுத்த வகை இதற்கு எதிரானவர்கள். குருவானவர் 50 கிலோ அளவுள்ள நிறைகளை தூக்கி காட்டினால் 55 கிலோ போட்டு மூத்திரப்பை வெடிக்குமளவுக்கு முக்கி முதல்நாளே குருவை மிஞ்சிய சிஸ்யனாக முயல்பவர்கள். ஜிம்மில் அருகே ஊக்க மருந்துகளை சாப்பிட்டு தூணுக்குதவாத முருக்குப்போல் பெருத்திருக்கும் மாமல்லர்கள் வந்தால் குருவை ஒரம் கட்டி வைத்துவிட்டு கைபெருக்க,கால் பெருக்க மல்லர்களிடம் அறிவுரை கேட்க விளைபவர்களும் இவர்கள் தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd0r1dSitNpe29unt0INS3bcpIj6z66G3OixUtJCCdvhFh1whIyMwYVRmx09iLS1qr4lfGnrxiP1VNvQX2DtPd31HBKaIJ4dgXCPmQDFa90qdU-XGo2G8OO9_MFSAJYmWHUkoTTyvYuCWv/s1600/i_girls_047_50c0b81fa6911.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd0r1dSitNpe29unt0INS3bcpIj6z66G3OixUtJCCdvhFh1whIyMwYVRmx09iLS1qr4lfGnrxiP1VNvQX2DtPd31HBKaIJ4dgXCPmQDFa90qdU-XGo2G8OO9_MFSAJYmWHUkoTTyvYuCWv/s1600/i_girls_047_50c0b81fa6911.jpg" height="640" width="326" /></a></div>
<br />
ஜிம்முக்கு போகிறேன்,ஆறு பை வயிறுக்கு முயற்சி செய்கிறேன்,டயட்டில இருக்கிறேன் என்று யாழ்ப்பாணத்திலிருக்கும் சாதாரண தரம் தாண்டாத பெடியங்களே கிளம்பியிருக்கும் காலம் இது.சினிமா அவ்வளவு தூரம் ஆறு பக் ஆசையை பெடியள் மனதில் ஊற்றிவிட்டது.ஆனால் நான் ஜிம்முக்கு போன காலத்தில் சூரியா கூட அரிந்தபலகை பாடியோடுதான் இருந்தார். பல்கலைக்கு வரும்போது செத்த பல்லி போல இருந்த நான் ஜிம்முக்கு போக ஆரம்பித்ததும் மெதுவாகவும் உறுதியாகவும் தேறி வருவதையும் கண்ட ஒரு நண்பன் என்னை அணுகினான். இது நடந்தது 2005 ஆம் ஆண்டில். நானாவது பரவாயில்லை பல்லிபோல இருந்தேன். அவன் நிலை மிகவும் கவலைக்கிடம். பெருத்த தலையும் சுருங்கிய உடம்புமாக ஏலியன் போல இருந்தான்.<br />
<br />
"மச்சான் ஒரு பத்து கிலோ ஏத்தினா காணுமடா. என்ர முகவெட்டுக்கு நல்ல ஸ்மார்ட்டா இருப்பேன்"<br />
<br />
சிரிப்பு வந்தாலும் எனக்கு அவனது தன்னம்பிக்கை பிடித்திருந்தது. இரண்டு பக்கமும் பத்து பத்து கிலோ நிறைகளை கொழுவிவிட்டு barbell ஐ அவனது தோளில் தூக்கிவைத்துவிட்டேன்.<br />
<br />
"பத்து தரம் இருந்து எழும்பு.அதையே நான் நிப்பாட்ட சொல்லுற வரை செய்.முடிஞ்சாப்பிறகு "நிசாந்த" கடையில பால் போத்தில் ஒண்டு வாங்கி குடி.மூண்டு மாசத்தில முரட்டுத்தனமா இருப்பாய்"<br />
<br />
நான் சொன்னதை நம்பி முக்கி முக்கி அவ்வளவும் செய்தான். "நிசாந்த" கடையில் ஒன்றுக்கு இரண்டு பால் போத்திலாக குடித்தான். அற்றைக்கு பிறகு அவனுக்கு மூன்று நாளா விடாமல் வயித்தால அடித்தது. என்னை தூசணத்தில் திட்டித்தீர்த்தபடி அவன் படுக்கைக்கும் கழிவறைக்குமாய் ஓடித்திரிந்து பட்ட அவலம் இன்றும் நினைவில் இருக்கிறது. எனது முதல்ச்சீடன் முதலும் இறுதியுமாய் ஜிம்முக்கு வந்தது அன்றுதான். அவன் இன்று வரை மழைக்கு ஒதுங்க கூட ஜிம்பக்கம் போவதில்லை. அதே நேரத்தில்த்தான் இன்னொரு நண்பன் கட்டுமஸ்தான ஆண்மகனாக ஆக வேண்டுமென்ற பேரவாவில் புரோட்டின் மாவை அளவுக்கதிகமாக உண்கொண்டு மருத்துவமனையில் படுத்த சம்பவமும் நடந்தது. இச்சம்பவங்களின் பிறகு பிறகு நான் மிகவும் அவதானமாக இருந்தேன். ஜிம் குருவாக இருப்பதற்க்கு சில காலம் இரும்பு நிறைகளை தூக்கியிருக்கிறோம் என்ற தகுதி மட்டும் போதாது. ஆழ்ந்த அறிவு வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcaVx2r1xw3xDuArRBtoPv5pVLxlXslXx10OxS-dcyD0QMIs1lVObEeyTHjj5rMHE_FC9VaPVm-ob4vE5OlzH1uVcY0jDlBR-rypsRM9GFtDwH7GUnGGKg1G2LUwfZHfYo7SvtuiwxtfNh/s1600/JenFerruggia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcaVx2r1xw3xDuArRBtoPv5pVLxlXslXx10OxS-dcyD0QMIs1lVObEeyTHjj5rMHE_FC9VaPVm-ob4vE5OlzH1uVcY0jDlBR-rypsRM9GFtDwH7GUnGGKg1G2LUwfZHfYo7SvtuiwxtfNh/s1600/JenFerruggia.jpg" height="426" width="640" /></a></div>
<br />
பிறகு இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. கிழமையில் 5 நாட்கள் ஜிம்முக்கு போனதும் உண்டு.வாரணம் ஆயிரம் படம் வெளியாகிய நேரம் அது. சும்மா வீட்டில படுத்திருந்த ஓணான் எல்லாம் நாலைஞ்சு தண்டால் எடுத்துவிட்டு முகநூலில் போட்டோ போடுமளவுக்கு சிக்ஸ் பக் பனி பரவிப்போய் இருந்தது. மார்கழி மாத குளிரில் லண்டன் விறைத்துப்போய் இருக்க நானும் நண்பன் சேகரும் நான்கு மாதத்தின் பின்னர் ஆறு பக்கோடு முகநூலில் போட்டோ போடுவதாக சபதம் எடுத்துக்கொண்டோம்.நாட்கள் உருண்டன. அவித்த கோழியும் பழங்களும் தின்று வாழப்பழகி விட்டிருந்தோம். ஒரு கட்டத்தில் இனியும் சோறு சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்த போது சேகர் சொன்னான்.<br />
<br />
"மச்சான் என்ர வயித்தில படிக்கட்டு வாற அறிகுறியே தெரியேலை.உனக்கு கிட்டதட்ட வந்திட்டுது. நீ இனி போட்டோவை எடுத்து போடு"<br />
<br />
தோழன் பேச்சை மீற முடியுமா?. முகநூலில் போட்டோ போட்டு அடுத்த நாள் தெருவில் எதிர்ப்பட்ட நண்பர்கள் சைக்கிள் ரயருக்கு காத்து பார்ப்பது போல வயிற்றை அழுத்திப் பார்த்தார்கள். சிலர் பகிரங்க இடங்களில் ரிசேர்ட்டை தூக்கி பார்த்து நெளியவைத்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் இன்னொரு நண்பர்கள் குழு நள்ளிரவில் வேலையால் வந்து கொண்டிருந்த என்னை வீதியில் வழிமறித்து சேர்ட்டை கழட்டி பார்த்து உறுதிப்படுத்திவிட்டு ஆதாரத்துக்கு போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு போனார்கள். இந்த பரபரப்பு ஓய முதல் தங்களை மாணவர்களாக சேர்க்கும் படி அழைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. அழைத்த பேர்வழிகளில் குறிப்பிடத்தக்கவர் நண்பர் அலிபாய். நண்பரைப்பற்றி ஏற்கெனவே நன்கறிந்திருந்த படியால் பல நிபந்தனைகளை முன்னெச்சரிக்கையாக முன்வைத்தேன். "எதிர்த்து கதைக்கக்கூடாது, ஜிம்முக்கு நேரம் தவறக்கூடாது, நண்பன் தானே என்ற உரிமையில் தகாத வார்த்தையில் திட்டக்கூடாது, சோறு சாப்பிடக்கூடாது" என்று ஆரம்பித்து வரிசையாக அடுக்கினேன். ஆனைக்கும் அடிபணியாத அலிபாய் கூட ஆறுபக் ஆசைக்காக அன்று அடிபணிந்து பேசியது ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் ஆச்சரியம் நீடிக்கவில்லை. அலிபாய் மூன்றாம் நாள் பாய்ந்துவிட்டார்.<br />
<br />
" உன்ர உடம்பை விட என்ர நல்லாத்தானே இருக்கு. பிறகு எதுக்கு நீ சொல்லுறத நான் கேட்க வேணும்?".<br />
<br />
நான் அசரவில்லை. எதிர்பார்த்ததுதான். மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுள்ள நான் அலிபாய் தொலைபேசியில் ஜிம் மாணவனாக தன்னை சேர்க்கும் படி அழைத்த போதே ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதை முகநூலில் பதிவேற்றி நாறடித்துவிட்டேன். கொலைவெறி கொண்ட அலிபாய் "என்னை கண்ட இடத்தில் அடிப்பேன்" என்று எச்சரிக்கை விட்டதோடில்லாமல் எனது வீட்டுக்கும் தாக்குதல் நடத்த வந்திருந்தார். தெய்வாதீனமாக வெளியே சென்றிருந்ததால் மயிரிழையில் உயிர்தப்பினேன். அலிபாய் போனாலும் சிலநாட்களுக்குள் எனக்கு அரை டசினுக்கும் குறையாத அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான நல்ல சீடர்கள் கிடைத்தார்கள்.<br />
<br />
சிலமாதங்களுக்கு எல்லாம் நல்ல படியாய் போய்க்கொண்டிருந்தது. ஜிம்மில் அழகு பெண்களோடு கடலை வறுத்து கவர்ச்சி கன்னிகளை ஏக்கப்பார்வை பார்த்தபடி சீடர்களுக்கு நல்லாசானாய் வாழ்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அமைதியாய் இருந்த குளத்தில் நீர் யானை குதித்தது போல ஒரு சீடன் வந்தான். பரம சாதுவாய் தென்பட்ட அவன் உண்மையில் ஒரு படுபயங்கரவாதி என்பது அத்தருணத்தில் தெரியாது. ஜிம்மில் சேருவதற்கான பதிவுகளை எல்லாம் முடித்தபின் போதனையை ஆரம்பிக்கும் எண்ணத்தோடு ஒரு பயிற்சிபொறியருகே கூட்டிச்சென்றேன்.<br />
<br />
"இதை செய்தால் நெஞ்சு வலுவாகும்"<br />
"ஐயா! எனக்கு நெஞ்சு வலு தேவையில்லை"<br />
<br />
ஒரே வயதுடையதாய் இருந்தாலும் "ஐயா" என்று விழிக்கிறானே! என்ன ஒரு பண்பு,பணிவு " எனக்குள் வியந்து கொண்டேன். அடுத்த பொறிக்கு நகர்ந்தேன்.<br />
<br />
"இதில் பயிற்சி செய்தால் கரங்கள் பலமடையும்"<br />
"ஐயா! எனக்கு அது தேவையில்லை"<br />
<br />
ஆசானுக்கு அழகு பொறுமை.கடுப்பை அடக்கிக்கொண்டு நகர்ந்தேன்.எட்டு பொறிகள் தாண்டிவிட்டன. கடைசியாக கண்ணில் பட்டது "AB Crunch".<br />
<br />
"இதில பயிற்சி செய்து பாருங்கோ. மூண்டு மாசத்தில் உங்கட வண்டி படிக்கட்டா மாறி இருக்கும்"<br />
<br />
"ஐயா! எனக்கு படிக்கட்டும் வேண்டாம்.பணியாரமும் வேண்டாம்"<br />
<br />
"அப்ப என்னதான் உங்களுக்கு வேணும்?"<br />
<br />
"ஐயா! எனக்கு Fat burn பண்ணோணும்"<br />
<br />
"அதுக்கு உங்கள தலைகீழா கட்டி தொங்க விட்டிட்டு கீழ நெருப்பை கொளுத்துறதுதான் ஒரே வழி"<br />
<br />
அந்த சீடன் சீற்றமடைந்து வெளியேறிப்போனான்.அத்தோடு நில்லாமல்<br />
"இவன் நமது உடல்வாகிற்கேற்ற பயிற்சியை தராமல் தனது விருப்பை திணிக்கிறான்" என்று கருத்தையும் வெளியிட்டு பிறமாணவர்கள் மத்தியில் எனது செல்வாக்கை பெரிய அளவில் சரியவைத்தான்.அச்சீடன் ஐயா என்று விழிப்பதே ஒரு வகையான நக்கல்தான் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டபோது தலையில் அடித்து கொண்டேன்.<br />
<br />
தசாப்தங்களை தாண்டியும் நீளும் எனது ஜிம் வாழ்க்கையில் இப்போதுதான் 5 வருட இடைவெளியுள்ள வயது மாணவர்களை சந்திக்க தொடங்கியுள்ளேன். புதிய தலைமுறையை சேர்ந்த அவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு இருக்கிறார்கள். நல்ல விடயம்தான். ஆனால் பல இடங்களில் அது தகுதிக்கு மீறியதாக இருக்கிறது. என்னை ஆட்டம் காணவைத்த பல மாணவர்களில் சிலரை மேலுள்ள பத்திகளில் விபரித்தேன். ஆனால் அவர்கள் இந்த புதிய தலைமுறை மாணவரின் கால்தூசிக்கு பெறமாட்டார்கள். சென்ற வாரம் சிங்கபுரியில் உடம்பை குறைக்க விரும்பிய ஒரு புதிய தலைமுறை மாணவனோடு ஜிம்முக்கு சென்றிருந்த போது துன்பியல் நிகழ்வு நடந்தது. வயதில் இளையவன் என்பதால் அவனுக்கு அதிக அக்கறை எடுத்து சொல்லித்தரவேண்டும் என்ற மனநிலையில் ஜிம்முக்குள் போகும் போது இருந்தேன். அவனை அரை மணித்தியாலம் Treadmill இல் ஓடவிட்ட பிறகு Lateral pull-down Machine அருகே கூட்டிச்சென்றேன்.<br />
<br />
"டேய் இப்ப நான் செய்யுறத கவனமா பார்"<br />
<br />
மூன்று தடவை இழுத்திருப்பேன்.<br />
<br />
"பிழை,பிழை நிப்பாட்டுங்கோ,கழுத்து நேர நிக்கோணும்.முதுகை வேற வளைக்கிறியள்.பின்னால சாயக்கூடாது"<br />
<br />
அதிர்ந்து போன நான் எழுந்துவிட்டேன்.<br />
<br />
"டேய்! முன்ன பின்ன ஜிம்முக்கு போய் இருக்கிறியா?"<br />
<br />
"இல்லை"<br />
<br />
"நான் 10 வருசமா இந்த மிசின பாவிக்கிறன். எது சரி பிழை எண்டு எனக்கு தெரியும்"<br />
<br />
"நீங்கள் பத்து வருசமா பிழையா செய்து இருக்கிறியள். மிசினில இருக்கிற விளக்கபடத்த பாருங்கோ "<br />
<br />
"ஓ அப்ப நீ விளக்கப்படத்த பார்த்தே எல்லாத்தையும் செய். எல்லாம் தெரிஞ்ச உனக்கு எதுக்கு விளக்கம்"<br />
<br />
பத்து நிமிடத்தில் எனது பத்துவருட ஜிம் அனுபவத்தை பல் இளிக்க வைத்துவிட்டானே படுபாவி என்று புறுபுறுத்தபடி வீட்டுக்கு வந்து முதல்ப்பந்தியிலுள்ள மொக்கை ஜென்கதையை எழுத ஆரம்பித்தேன். இனியும் இளைய பேர்வழிகளுக்கு ஆசானாக ஆசைப்பட்டால் பரமார்த்த குருவும் சீடர்களுமாய் மீன் பிடித்த கதை போல என்கதை ஆகிவிடும் அபாயம் இருப்பது புரிகிறது. ஓடி விளையாடி, சண்டை பிடித்து வெயிலிலும் புழுதியிலும் வளர்ந்த எங்கள் தலைமுறையை ஐபாட்டும் ,அங்றி போர்ட்டும் விளையாடி வளர்ந்த புதிய தலைமுறை மிஞ்ச முயல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எமது தலைமுறைக்கும் எம்மை பார்த்து புறுபுறுத்த பெரிசுகளுக்கும் இடையில் குறைந்தது 30 வருடங்களாவது வயது வித்தியாசம் இருந்தது. நமக்கு அவ்வளவு பெரிய இடைவெளி கிடைக்கவில்லை அவ்வளவுதான்.<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-69733198776078919582014-02-27T02:14:00.002+09:002014-02-27T02:14:36.802+09:00மன்மதன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAI7i6UOrZstV4m8cWi-eB010gnvklqBGs1Z74UETyzDCelfdPfdPqfbRUgmigq1m6B0SAUTzSIJX88IbS7GpQPaoQuGRj3iGzUqnIQIiNDNmkd6cKFZ5UFK0UhvAfQu3AWI5YHYMQ9QwS/s1600/Manmadhan_Movie_Stills_1318_41_44.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAI7i6UOrZstV4m8cWi-eB010gnvklqBGs1Z74UETyzDCelfdPfdPqfbRUgmigq1m6B0SAUTzSIJX88IbS7GpQPaoQuGRj3iGzUqnIQIiNDNmkd6cKFZ5UFK0UhvAfQu3AWI5YHYMQ9QwS/s1600/Manmadhan_Movie_Stills_1318_41_44.jpg" height="273" width="400" /></a></div>
<br />
அந்த நண்பர் வெளிப்படையானவர் அல்ல.உள்ளொன்று வைத்து புறமொன்று செப்புபவர்.ஆனால் ஒரே ஒரு பலவீனம் அவரிடம் இருந்தது. தண்ணியைப்போட்டால் திறந்த புத்தகம் ஆகிவிடுவார்.உள்ளுள்ள அனைத்தையும் வெளியே துப்பிவிடுவார்.சிங்கபுரியில் சிலநாள் முன்பாக உள்ளே போனதண்ணி அவரை திறந்த புத்தகம் ஆக்கிய போது பல அரிய தகவல்கள் கிடைத்தன.<br />
<br />
நண்பர்: மச்சான்! சிங்கப்பூர் கொம்பனியளுக்கு A1,A2,A3,B1,B2 என தரப்படுத்தல்கள் இருக்கிறது போல பிகர்களுக்கும் தரப்படுத்தல் இருக்கு.<br />
<br />
நிருபர்: ஓ! புதுசா இருக்கே இந்த விசயம்.<br />
<br />
நண்பர்: இந்தோ பிகரை வச்சிருந்த அது "கிறேட் 01. ஆக அடிமட்டம். பிலிப்பைன்ஸ் தரம் 02.மலேசியாக்காரியள வச்சிருக்கிறவன் தரம் 03க்க வருவான்.சிங்கபுரி பெண் என்றால் தரம் 04.ரஸ்ய,கிழக்கு ஐரோப்பிய பெண்மணிகள் 05.உச்ச கிறேடிங் அமெரிக்க,பிரித்தானிய,பிரெஞ்சு பெண்களை வச்சிருக்கிறவங்களுக்கு குடுக்கலாம்.அது தான் தரம் 06.<br />
<br />
நிருபர்: அப்ப நீ இப்ப எந்த கிறேட்டில இருக்கிறாய்?<br />
<br />
நண்பர்: கிறேட் 03 தாண்டிட்டன்.நாலுக்கை இப்பதான் வந்திருக்கிறன்.இந்த வருசத்துக்குள்ள தரம் 05 க்க வரோணும் என்றதுதான் என்ர நோக்கம்.<br />
<br />
நிருபர்: ஊக்கமும் நோக்கமும் இருந்தா நீ தரம் ஆறுக்கே போகலாம் மச்சான்.<br />
அப்ப நம்ம ஊர் பெட்டையள கட்டுறவனுக்கு என்ன தரம் குடுக்கலாம்?<br />
<br />
நண்பர்: அவங்களுக்கு எல்லாம் பூச்சியத்துக்கு கூட லாயக்கில்லாதவங்கள்.அவங்கள் பற்றி கதைச்சா அடிச்ச மப்பு இறங்கிடும்.<br />
<br />
நண்பர் தரம் ஆறையும் தாண்டி வளர கனாக்காலம் வாழ்த்துகிறது.நண்பரது முகவெட்டுக்கும்,முடிவெட்டுக்கும் அண்ணாந்து பார்த்தால் அமீர்கான் போலவே இருப்பார்.அவருக்கு இதெல்லாம் பெரிய விடயமாய் இருக்காது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjicjsN1tHcldafS8XoneSo19tg74GMtZ_Ci95uhDzBzk3w_xe7r1TnoIPXGgJrYHvN21XRLZ8S2AyuHXb8RoRaine_TdcSvVsjbxZqkme1TdOg8TfszHb_r0Qv_K28mSyOhyphenhyphenuBKiXrGQi3/s1600/dhaush-selvaraghavan-kadhal-konden.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjicjsN1tHcldafS8XoneSo19tg74GMtZ_Ci95uhDzBzk3w_xe7r1TnoIPXGgJrYHvN21XRLZ8S2AyuHXb8RoRaine_TdcSvVsjbxZqkme1TdOg8TfszHb_r0Qv_K28mSyOhyphenhyphenuBKiXrGQi3/s1600/dhaush-selvaraghavan-kadhal-konden.png" height="161" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
இந்த பதிவை முடிக்க முதல் ஜெர்மானிய மன்மதன் ஒருவரைப்பற்றியும் சொல்லியாகவேண்டும்.அவர் பிறந்தது யாழ்ப்பாணத்தின் குக்கிராமம் ஒன்றில்.சோடாப்புட்டி கண்ணாடியோடு பார்த்தால் செல்வராகவன் பட "சைக்கோ" நாயகன் போலவே இருப்பார்.நாடு திரும்பிய அவர் சமீபத்தில் நல்லூர் கோவிலில் பாரியார் குடும்பம் சகிதம் உலாவியிருக்கிறார். கூடப்படிச்ச பாசத்தில் நண்பர் ஒருவர் புன்னகையோடு ஓடிப்போய் "எப்ப மச்சான் வந்தனி?" என்று கேட்க "I just came from Germany" என்று பதில் வந்திருக்கிறது.ஆங்கிலம் பேசிட்டு திடீரென தமிழுக்கு மாற கஸ்டப்படுறான் போல என்று மனதை திடப்படுத்து பேச்சை தொடர்ந்த நண்பருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.மன்மதன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியிருக்கிறார்.அதை கூடவந்த பாரியாரும் குடும்பத்தினரும் பெருமை பொங்க பார்த்துக்கொண்டு நின்ற விதம் வேறு நண்பரை கொலைவெறிகொள்ளச்செய்திருக்கிறது. <br />
வான்கோழி மயில் போல ஆடினாலும் மயிலாக முடியுமா?.உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்று நண்பர் இன்று வரை புலம்பிக்கொண்டு திரிவதாக கேள்வி.உண்மைதான்.அற்பன் வெளிநாடு போய் வந்தால் அர்த்த ராத்திரியில் ஆங்கிலம் கதைப்பான். </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-72281526116063079352013-12-25T14:04:00.000+09:002013-12-25T14:04:10.154+09:00தற்போதைய நிலவரம்-09<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
கட்டுப்பெத்தையில் பெரிய சாமி ஐங்கா நடத்திய ஆசிரமத்தில் 3 சின்னச்சாமியார்கள் இருந்தார்கள்.அறிவகம்,12B போண்ர பேர்வழிகளெல்லாம் கிட்ட நெருங்கவே அஞ்சுமளவுக்கு சக்தி மிக்க சாமியார்களாகவும் அவர்கள் விளங்கினார்கள்.நீலப்படம் பார்க்காமலும் மஞ்சள் புத்தகம் வாசிக்காமலும் படிப்பே கண்ணென பெரிய சாமியாரால் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட அம்மூன்று சாமியார்களில் இளையவரும் சிறியவருமானவரே குட்டிச்சாமியார் என அழைக்கப்படும் பரணி ஆவார்.தவ வலிமையால் கல்வியில் கடும் சித்திகளை பெற்ற குட்டிச்சாமியார் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கென பயணமாகிறார்.இலங்கையில் பெண்களை நேர் நோக்காது,அவர்களை தாயை,சகோதரியைப்போல் பாவித்து வாழ்ந்த சாமியார் பிகினி அழகிகள் பூனை நடைபோடும் நாட்டில் சென்று தடுமாறுவாரா? மாட்டாரா? என்று நண்பர்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSPCMvqBHWk2kWbfVud9qcHai98qg4OsVmdncNvE94v9XGwphVOImth6ivCbQPPStvAElz0-gTuHScILec_Ysnj9n10xP_AJKiX3BHu50KXSeBuasnuS14uh4XQmrku7l-y7ot4FOAHn-/s1600/20131215_180335.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="263" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSPCMvqBHWk2kWbfVud9qcHai98qg4OsVmdncNvE94v9XGwphVOImth6ivCbQPPStvAElz0-gTuHScILec_Ysnj9n10xP_AJKiX3BHu50KXSeBuasnuS14uh4XQmrku7l-y7ot4FOAHn-/s400/20131215_180335.jpg" width="400" /></a></div>
<br />
<br />
கௌபாய் திருமணம் முடித்து மிகக்குறுகிய காலத்துள் அப்பா ஆகி சாதனை படைத்தது யாவரும் அறிந்ததே.கௌபாய் தனது திருமணத்தின் முன்பு மட்டத்தை சேர்ந்த அநேகருக்கும் தனித்தனியாக அழைப்பு எடுத்து வரவேற்றிருந்தார்.முகநூலில் அழைப்பிதழை போட்டுவிட்டு பெயரை tag பண்ணும் இந்த உலகத்தில் கௌபாய் போண்றவர்கள் வித்தியாசமானவர்கள் தான் என்று பலரும் அந்நேரம் பேசிக்கொண்டார்கள்.அத்தருணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.கௌபாய் அத்தருணத்தில் இங்கிலாந்திலிருந்த கனாக்காலம் நிருபருக்கு ஸ்கைப்பில் அழைப்பை எடுத்து திருமண விடயத்தை சொல்லியிருக்கிறார்."கல்யாணத்தின் டென்மார்க்கில் செட்டில் ஆகப்போகிறேன்" என்று கௌபாய் சொல்ல தன்னை எல்லாம் தெரிந்த ஆள் என காட்ட நினைத்த நிருபரும் "டென்மார் கடுமையான நிற வெறி பிடிச்ச நாடு,கவனமா இருங்கோ கௌபாய்" என்று செப்பியிருக்கிறார்.கௌபாய் என்ன லேசுப்பட்ட ஆளா?.ஒரே பதிலில் நிருபரை தூக்கியடித்திருக்கிறார். அவர் சொல்ல பதிலை இன்றுவரை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லித்திரிகிறாராம் நிருபர்.கௌபாய் அப்படி என்னதான் சொல்லியிருப்பார்?<br />
<br />
"ஓ அப்படியா? நல்லகாலம்,நான் வெள்ளையெண்டதால தப்பிட்டன்"<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixqdsRI19d5DyUNNpcG9WCzg5tpI7G7XvC6HMw15GuyHCEDT68pwpkKeGTCCr4Shw4M5S2lJWW6d-64WA4a1iZWlxWfpAI4yp2FMbjQR6iTW6scO34r_b60upkbXyJGLVyxlP0yUVxHW3M/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixqdsRI19d5DyUNNpcG9WCzg5tpI7G7XvC6HMw15GuyHCEDT68pwpkKeGTCCr4Shw4M5S2lJWW6d-64WA4a1iZWlxWfpAI4yp2FMbjQR6iTW6scO34r_b60upkbXyJGLVyxlP0yUVxHW3M/s400/images.jpg" width="271" /></a></div>
<br />
சிந்தா இலங்கையில் வகை வகையாக வாகனங்களில் திரிகிறார்.கூட யாராவது ஏறுங்கடா என்று கேட்டால் அக்கம்பக்கத்தில் இருபவர்கள் எல்லாம் பாய்ந்து ஓடுகிறார்கள்.அவர்களில் பயத்திலும் நியாயம் இருக்கிறது.ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு நாய்களையும் ஒரு வயோதிகரையும் இடித்துத்தள்ளியிருக்கிறார்.இவ்வளவு நடந்த பின்னரும் விடயம் தெரியாத ஒரு பூச்சி புதுசா வந்து சிக்க சிந்தா சில நாட்களுக்கு முன்னர் வானில் கிளம்பியிருக்கிறார்.அன்று சிக்கியது பருத்த வீதியோர பாலை மரம் ஒன்று.வழமை போல சிந்தா தப்பித்து விட கூட வந்தவன் கட்டுகளுடன் உலாவுகின்றானாம்."இப்போதெல்லாம் கனவில் எமன் வராமல் சிந்தா வாகனத்துடன் வந்து ஏறச்சொல்லிக்கேட்பது போல வருகிறது" ஒரு அன்பர் பார்ட்டியில் சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு உதிர்த்தாராம்.அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை வலிகள் மறைந்திருக்கின்றனவோ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdNIpkEvtrnhKKb3Gm7lJaFbsGDL0XgJUrHCdMrryZuK4yh5KDKZ1aCjY6iZnrTUwdwQNReD2-HkX1bCWTK9lNehTqlcdRH6mYn0xEtaAvJREyUUkjywgQvwF_j1MRlER4NKzoD4ZfzxD1/s1600/20130808_112751.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdNIpkEvtrnhKKb3Gm7lJaFbsGDL0XgJUrHCdMrryZuK4yh5KDKZ1aCjY6iZnrTUwdwQNReD2-HkX1bCWTK9lNehTqlcdRH6mYn0xEtaAvJREyUUkjywgQvwF_j1MRlER4NKzoD4ZfzxD1/s320/20130808_112751.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-51029615708431173632013-10-25T12:44:00.003+09:002013-10-25T15:18:06.209+09:00A Study in Sunlight<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5pALPpgqzL4L84PfJE7P6Tqx0DCpCn9e4K3wK5cFNhySm0qRzQrZq_wDEH1Xmf5y80Aokay_ihVPezeuerc3rCPMdq9Bctgyg4UfCWJbsIpNlNvZCrhkgsR2pZO0qbmj9LQTsCC7I_oec/s1600/sherlock_holmes_movie_poster-normal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5pALPpgqzL4L84PfJE7P6Tqx0DCpCn9e4K3wK5cFNhySm0qRzQrZq_wDEH1Xmf5y80Aokay_ihVPezeuerc3rCPMdq9Bctgyg4UfCWJbsIpNlNvZCrhkgsR2pZO0qbmj9LQTsCC7I_oec/s400/sherlock_holmes_movie_poster-normal.jpg" width="400" /></a></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="padding: 0px;">
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வரும் நான் "பற்றரி Low" என்று அது கத்தி கதறி அழுது தானாக நிற்கும் போதுதான் வீட்டுக்கு கிளம்ப தயாராகுவேன்.ஹோம்ஸ் அப்படியல்ல.ஒன்றுக்கு மேற்பட்ட பற்றரிகளை வைத்திருக்கும் அவர் ஒன்று முடிய இன்னொறை மாற்றிவிடுவார்.ஐந்துக்கு மேற்பட்ட பெண்களோடு சற்றேனும் ரசனைக்குறைவில்லாமல் ஒரே நேரத்தில் சட் பண்ணும் திறமையுள்ள அவர் அதே நேரம் நான் கேட்கும் கேள்விகளுக்கும் நீண்ட விபரமான விளக்கங்கள் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறார்.நான் இங்கே வரமுதல் அவர் இங்கே தனியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்.அடிக்கடி அவரிடம் இளம் பெடியன்களும் அரிதான சமயங்களில் முதிர்ந்த ஆண்களும் வந்து போவதை கண்டிருக்கிறேன்.அவர்கள் கொண்டுவருபவை அநேகமாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் தான்.பெண்கள் சம்பந்தபட்ட விடயங்களில் ஆழ்ந்த அறிவை கொண்டுள்ள அவர் ஒரு பெண்ணை காதலித்திருந்த போதிலும் முடிவில் அவள் லண்டன் வாசி ஒருவனை திருமணம் முடித்து போனதால் புத்தி பேதலித்து இருப்பதாக ஊரார் அப்போது பேசிக்கொள்வதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு,ஆடிக்காற்றில் ஆலமரம் போரோசையோடு இரைந்து கொண்டிருந்த நாளிலே எனது ஒருதலை காதலை இருதலை ஆக்குவது தொடர்பாக அறிவுரை கேட்க அவரிடம் வந்ததிலிருந்து எங்கள் நட்பு ஆரம்பித்தது. அன்றிலிருந்து ஒருநாள் விடாமல் இங்கே வருகிறேன்.ஷெர்லக் ஒரு முரண்பாடுகளின் மூட்டையாய் இருக்கிறார். உதாரணத்துக்கு "ஐஸ்கிரீம் உருவானது எப்படி?" என்ற வரலாற்றைக்கூட விரல் நுனியின் வைத்திருக்கும் அவருக்கு "றியோ" ஐஸ்கிறீம் கடை எங்கே இருக்கிறது என்ற விபரமே தெரியாதிருந்தது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
சில நபர்களை ஒரு வரியில் எழுதிவிட முடியும்.அரிதான சிலரை கட்டுரையாக அடக்கிவிட முடியும்.ஷெர்லக் போண்ற ஆளுமைகளை விளக்க கீழ்வருவது போண்ற வேறுபட்ட வழிகள் தேவைப்படுகின்றன.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
1) இலக்கிய அறிவு- பூச்சியம்.திருவள்ளுவர் குறித்த பேச்சு எழுந்த போது "அவர் உங்களது சொந்தக்காரரா?" என்று கேட்குமளவுக்கு உள்ளது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
2) விஞ்ஞானம்- மிக குதர்க்கமாக சிந்திக்கிறார்.நியூட்டனின் விதியே பிழை என்கிறார்.தலையில் ஆப்பிள் விழுவது ஈர்ப்பு ஆகும் என்றால் தலையில் கல் விழுவது கூர்ப்புக்கு வழிவகுக்குமா? என்று மொக்கைத்தனமாக வாதிடுகிறார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
3)வானியல்- பூச்சியத்தை விட மோசமானது.யாழ்ப்பாணத்தில் பயங்கரமாக வெயிலடித்துக்கொண்டிருந்த நாள் ஒன்றில் தனது போனை பார்த்து "இன்று இரவு கடும் பனி பொழிவு ஏற்படும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். திடுக்கிட்ட நான் போனை வாங்கி பார்த்த போது லொகேசனாக "கனடா" தெரிவுசெய்யப்பட்டிருந்தது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
4)அரசியல் அறிவு-கேவலமானது.மாண்பு மிகு ஜனாதிபதி சிரித்தபடி நின்ற வடக்கின் வசந்தம் விளம்பர பலகையை பார்த்து "படத்தின்ர பெயர் நல்லாத்தான் இருக்கு.ஆனால் ஹீரோதான் காமெடியன் போல இருக்கிறான்" என்றார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
5)சினிமா அறிவு- பிரமிக்கத்தக்கது.நடிகைகளின் பிறந்த திகதி முதல் அவர்களின் பள்ளிக்கால காதல்கள் வரை அறிந்து வைத்திருக்கிறார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
6)வெடிப்பொருட்கள் பற்றிய அறிவு- அறவே இல்லை எனலாம்.கடைக்காரர் மிதிவெடியை சாப்பாட்டு தட்டில் வைத்த போது "மிதித்தால் வெடிக்கும் என்றால் சாப்பிட கடிக்கும் போது வெடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று சண்டைக்கு போகும் அளவுக்கு மோசமானது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
7)பெண்கள் பற்றிய அறிவு- அளவில்லாதது.ஒரு பெண்ணை பார்த்துமே அவளை எப்படி அணுகவேண்டும் என்றும் அவள் எப்படிப்பட்ட ஆணுக்கு கிடைப்பாள் என்று சொல்லிவிடுகிறார்.கூந்தலை மட்டும் வைத்து பெண்ணின் வயதை அவரால் சொல்லிவிட முடியும்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
8)விலங்குகள் பற்றிய அறிவு- கச்சிதமானது.நாய்கள் பற்றி அளவுக்கு அதிகமாக தெரியும்.கோபக்கார கடி நாய்கள் கூட அவரிடம் வாலாட்டிக்கொண்டு குழைந்து வருகின்றன.எனது செல்லப்பிராணியான "TOBY" என்னைவிட அவரிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்கிறது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
9)கைத்தொலைபேசி பற்றிய அறிவு- அதிசயிக்கத்தக்கது.வித்தியாசமான அப்ளிகேசன்களையெல்லாம் பாவிக்கிறார்.ஒரு தடவை எனது கையை கைத்தொலைபேசியால் ஸ்கான் பண்ணிவிட்டு "சுட்டு விரல் எலும்பில் சிறிய வெடிப்பு இருக்கிறது" என்றார்.அதிர்ந்தே போய்விட்டேன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
10) தற்பாதுகாப்புக்கலை அறிவு - தப்பி ஓடுவதே தற்பாதுகாப்பின் அடிப்படை என்ற சொல்லை தாரகமந்திரமாக கொண்டவர்."வெற்றிகரமான ஓட்டம் என்பது பிரடியில் குதிக்கால் பட பறப்பதே ஆகும்" என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
11) மதுபானங்கள் பற்றிய அறிவு - விசித்திரமானது.பியர் என்பது சாராய வகைகளை பருகும் போது கலக்குவதற்கென உருவாக்கப்பட்டது என ஆழமாக நம்புகிறார்.பலர் மறுத்துரைத்த போது மேற்சொன்ன கருத்தை மாற்ற மறுக்கிறார்.எவ்வளவு குடித்தாலும் அவருக்கு போதை ஏறுவதில்லை.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
உழைக்கவிரும்பாத இளைஞர்களும்,வெளிநாட்டுப்பணத்தில் சௌகரியமான வாழ்க்கை வாழும் குடும்பஸ்தர்களும் நிரம்பிய இந்த தேசத்திலே அநேக பிரச்சினைகளுக்கு பாலியல் வறட்சித்தனமே காரணமாக இருக்கிறது.பருவ வயதுக்கு வரும் இளைய சமுதாய உறுப்பினர்களின் உணர்வுகள் கலாச்சாரம் என்ற போர்வையில் மிலேச்சத்தனமாக நசுக்கப்படுகின்றன."முகநூலில் இளம் பெண்ணொருத்தி ஒரு படத்தை போட்டு நூறு லைக் வாங்க 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இங்கு போதுமாக இருக்கிறது" என்று ஹோம்ஸ் அடிக்கடி சொல்லி சிரித்துக்கொள்வார்.உண்மைதான். இங்கிருக்கும் அநேக இளையவர்கள் சாதிக்கும் வேகமும் விவேகமும் ததும்பி வழியும் வயதுகளை எதிர்ப்பாலின ஈர்ப்பினால் அலைக்கழிக்கப்படுவதால் வீணடித்துவிடுகின்றனர்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அன்றைய பொழுது வழமைக்கு மாறாக அமைதியாய் இருந்தது.தூரத்தே இருளாக கவிந்திருந்த மழை மேகங்கள் நீடித்த கோடையின் முடிவு நெருங்கி விட்டதை இயம்பிக்கொண்டிருந்தன.மதியம் நான் ஏதும் சாப்பிடவில்லை.நேற்று சாப்பிட்ட கொத்து ரொட்டி வயிற்றை முறுக்கி வன்முறை செய்வதால் உண்ணும் விருப்பு ஏற்படவில்லை. ஹோம்ஸ் உணவுப்பிரியர். வேளை தவறாமல் பேக்கரியோடு சேர்ந்திருந்த உணவகத்தில் மிதமான அளவில் சாப்பிட்டுவிடுவார். அன்று ஷெர்லக் ஹோம்ஸ் மதிய உணவை முடித்துக்கொண்டு திரும்பிய சற்றைக்கெல்லாம் ஒரு உந்துருளி வாகனத்தில் வந்த நேர்த்தியான ஆடைகள் அணிந்த மனிதன் வெதுப்பக வாசலில் நின்று கடைக்காரரிடம் வினவிக்கொண்டிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியடைந்தேன். அவரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். முகவரியையே அல்லது தனிப்பட்ட நபரையோ விசாரிப்பதை அவரது தோரணையில் இருந்து என்னால் கணிக்க முடிந்தது.சில கணங்களின் பின்னர் அவர் கடைக்காரர் சுட்டிக்காட்டிய திசையில் இருந்த எங்களை நோக்கி நேராக நடந்து வர ஆரம்பித்தார். "Angry Bird" விளையாடிக்கொண்டிருந்த ஹோம்ஸும் இதனை கவனித்திருக்க வேண்டும்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"அங்கே வந்து கொண்டிருக்கும் மனிதர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்கள்.இளைய பெண் மட்டுமே கூட இருக்கிறாள்.அவருக்கு சமீப நாட்களாக பெரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக அது இளைய பெண் சம்பந்தமானது தான்.அவருக்கு சலரோகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.மனைவியோடு சண்டை பிடித்த போது கறி அகப்பையால் அடி வாங்கியதில் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவரது மனைவிக்கு பயந்து சமையல் வேலைகளை எல்லாம் செய்கிறார். என்னிடம் வர அவர் விரும்பாத போதிலும் பிரச்சினையின் தீவிரம் இங்கே இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
ஷெர்லக் ஹோம்ஸ் சொல்லிக்கொண்டு போக நான் உறைந்து போயிருந்தேன்.அவர் இப்போது ஹோம்ஸ் உடன் பேசத்தொடங்கியிருந்தார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"எனது மகளை மர்ம மனிதன் ஒருவன் பின் தொடர்கிறான்.சில வாரங்களாக போனில் அழைப்பெடுத்து தொந்தரவு செய்தவன் நேற்று இரவு வீட்டுக்கே வந்து சென்றிருக்கிறான்"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
ஷெர்லக் ஹோம்ஸ் பதிலேதும் கூறவில்லை.அந்த முதிர்ந்த மனிதனின் கையில் இருந்த நோக்கியா 3310 ஐ கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"நீங்கள் வீட்டுக்கு செல்லலாம்.அந்த நபர் யாரென்று நாளை சொல்கிறேன்"ஹோம்சின் வார்த்தைகளை தீர்க்கமாக நம்பியது போல தலையசைத்த அவர் தளர்நடையோடு கிளம்பிப்போனார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
"வாட்சன் நாமிருவரும் இப்போது பெரியவரை பின் தொடரப்போகிறோம்"</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
எனது பதிலுக்கு காத்திராமல் ஹோம்சின் கருப்பு பல்சர் புரவியின் கனைப்புக்கொப்பான இயந்திர ஒலிபோடு கிளம்பி விட்டிருந்தது.பின்னால் "அடுத்தது என்ன நடக்கப்போகிறது?" என்ற திகைப்போடு நான் தொற்றிக்கொண்டேன்.பெரியவர் புகுந்த வீட்டை அவதானித்த ஹோம்ஸ் உந்துருளியை அருகேயிருந்த ஒழுங்கைக்குள் நிறுத்தினார்.வேட்டை நாய் ஒன்றின் வெறியும் மோப்ப நாயின் ஆற்றலும் அவர் செய்கைகளில் தெரிந்தன.வீட்டு பின் பக்க வேலியில் தெரிந்த இடைவெளியை கண்டதும் குதூகலத்தோடு தன்னை உள் நுழைந்துக்கொண்டார். பலவகை மரங்களால் நிரம்பியிருந்த போதிலும் அந்த வளவு சருகுகள் இலைகள் இன்றி துப்பரவாக இருந்தது. தினசரி கூட்டி துப்பவரவாக்கப்படுவதாய் இருக்க வேண்டும்.இம் முதிர்ந்த இம்மனிதனோ அவரது மனைவியோ தினமும் சுத்தமாக்குவது என்பது இயலாத விடயமென்ற போதிலும் ஹோம்ஸ் சொன்னபடி இளைய மகள் இருக்கும் பட்சத்தில் அவள் இங்கே வந்து பெருக்க வாய்பிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் இப்போது ஈரமான வாழை பாத்திகளுள் நின்றபடி எதையோ கண்டு பிடித்த மகிழ்சியில் சத்தம் வராமல் சிரித்துக்கொண்டிருந்தார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அங்கே ஒரு வளர்ந்த மனிதனின் காலணி அடையாளங்கள் தென்பட்டன. சற்று இடைவெளியில் ஒரு நாயின் கால்தடங்களும் இருந்தன. இத் தடங்களுக்கு மேலாக செருப்பு அணிந்த ஒருவர் நடந்திருப்பதையும் ஷெர்லகிடம் காண்பிக்க முயன்ற போதும் அவர் அதில் அக்கறை கொள்ளாதவராக காணப்பட்டார். அவருக்கு இபோது மனித தடங்களை விட நாயின் தடங்களை தொடர்வதில் ஆர்வம் மிகுந்திருந்தது.வீட்டிலிருப்பவர்கள் தங்களது வளவில் அந்நியர்கள் நுழைந்திருப்பதை உணராவண்ணம் கவனமாக அசைவுகளை மேற்கொண்ட அதே நேரம் தடயங்களை விழிப்பாக தேடுகிற அவரது ஆற்றல் எனக்குள் பெரு வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மணி நேரமாக நீடித்த தேடுதலின் முடிவில் ஹோம்ஸ் சலிப்புற்றவராக காணப்பட்டார். மெலிதான விசிலில் சமிக்கை கொடுத்துவிட்டு வேலி இடைவெளியூடு வெளியேறியவரை பின் தொடர்ந்தேன். அவர் அடுத்த சில கணங்களில் காலடி வைக்கப்போகும் இடத்தில் ஏதோவொரு மிருகத்தின் வாந்தி போண்ற அருவருப்பான பொருள் இருப்பதை கண்டு கொண்ட நான் எச்சரிக்க வாயெடுக்க முதல் ஹோம்ஸ் குனிந்து குச்சியால் அதனை கிளறவாரம்பித்தார்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அன்று தான் நானும் ஷெர்லக் ஹோம்ஸும் பேசிக்கொண்ட இறுதி நாள்.என் பக்கம் தப்பு இருந்தாலும் கூடவிருந்த நண்பன் என்றும் பார்க்காமல் என்னை காட்டுத்தனமாய் தாக்கியது அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. கால ஓட்டத்தில் நான் இங்கிலாந்துக்கு வந்துவிட்டேன்.நான் வேலை செய்த பப்புக்கு அருகே தான் ஷெர்லக் ஹோம்ஸ் மியூசியம் இருந்தது. Arthur Conan Doyle எழுதிய புத்தகங்களை எனது ஆங்கில அறிவை அதிகரித்துக்கொள்ளும் நோக்கோடு படிக்கத்தொடங்கிய நான் புழுதி படிந்த வெயிலடிக்கும் யாழ் நகர ஒழுங்கைகளில் அவர் செய்திருந்த துப்பறியும் சாகசங்கள் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் விபரிக்கப்பட்டவற்றுக்கு எவ்வகையிலும் குறைவில்லாதிருப்பதை கண்டு கொண்டேன். சேரலாதனாகிய அவரை ஷெர்லக் ஹோம்ஸ் ஆகவும் வாகீசனாகிய எனது பெயரை வாட்சனாகவும் உருவகித்து எழுத ஆரம்பித்த இந்த கதையை அவரின் உதவியின்றி என்னால் முடிக்க இயலாதிருக்கிறது. அந்த பெரியவரின் மகளை பின் தொடர்ந்தது நானே தான் என்பதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?.என்பது உள்பட இருபது வினாக்களை அவருக்கு எழுதி இமெயிலில் அனுப்பிவிட்டு காத்திருந்தேன். பதில் அனுப்பாத அளவுக்கு இன்னும் கோபமாகவே இருப்பார் என்று நான் நினைத்திருந்த போதிலும் இன்று இன்பாக்ஸ் இல் "நண்பன் வாகீசன் நலமா?" என்ற தலைப்பிடப்பட்டு விழுந்திருந்த அவரது பதில் என்னை மனமகிழ்வு கொள்ள வைத்து விட்டது.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<strong>வணக்கம் நண்பரே!</strong></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="padding: 0px;">
<strong style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">சம்பவங்கள் நடந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டிருந்த போதிலும் வெகு சிரமத்தோடு நினைவகங்களிலிருந்து இயலுமானவரை மீட்க முயன்றிருக்கிறேன்.சம்பவ தினத்தன்று அந்த பெரியவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரது கையில் இருந்த தொலைபேசியின் "space key" அதிகமாக தேய்ந்திருப்பதை கவனித்தேன். தினமும் குறுந்தகவல் அதிகளவில் அனுப்பினாலேயே அப்படி ஆகும்.ஆகையால் அவரது மகள் அவர் அறியாவண்ணம் அந்த ஆடவனோடு தொடர்பு கொள்ள அக்கைப்பேசியை பாவிக்கிறாள் என்ற முடிவுக்கு வந்தேன்.சில சமயங்களில் உள்வந்த அழைப்புக்களை பெரியவர் எடுத்துவிட"அநாமதேயமாய் அழைப்புக்கள் வருகின்றன" என அவள் சமாளித்திருக்கக் கூடும். மழை சமீபத்தில் பெய்திராத போதும் பெரியவரின் செருப்புகளில் சேறு ஒட்டிக்கொண்டிருந்தது. அத்தோடு இரவில் மர்ம மனிதன் வந்து சென்றிருப்பதை காலடி தடங்களை வைத்தே அவர் சொல்கிறார் எனவும் ஊகித்துக்கொண்டேன்.வளவுக்கு நேற்று நீர் இறைக்கப்பட்டிருந்தாலே இவையிரண்டும் சாத்தியம்.நாம் அங்கே போன போது காலணி தடங்களோடு நாய் ஒன்றின் தடங்களும் இருந்தன. அது வந்து போன மர்ம மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவ்வாறான சீரான இடைவெளியில் பின் தொடர வாய்ப்பு இருக்கிறது.நீ செருப்பு தடங்களை காண்பித்து என்னை குழப்ப முயன்றாய்.அது பெரியவருடையவை. வளவுக்கு அந்நிய மனிதன் உலாவிய தடங்களை கண்டு குழப்பமாகி அங்குமிங்கும் நடந்து தேடியதால் ஏற்பட்டது.வந்த நாயின் தடங்கள் ஊர் நாயின் பாதங்களை விட பெரிதாக இருந்தன. அது ஒரு ஜெர்மன் செப்பேட் வகை நாய் என என்னால் கணிக்க முடிந்தது.கிட்டிய பிரதேசத்தில் உள்ள அவ்வகை நாய் உனது "TOBY" மட்டும் தான்.இறுதியாக சிக்கிய தடயம் முக்கியமானது. அது கிடைத்திராவிட்டால் வழக்கு மேலும் கடினமாகியிருக்கும்.நிலத்தின் இருந்த வாந்தியில் ஒரு "lunch sheet" இருந்தது.சம்பவம் நடந்த தினம் வெள்ளிக்கிழமை ஆதலால் அசைவ உணவு விரும்பியான நீ கொத்து ரொட்டி வாங்கி சென்றிருப்பாய் என்று எனக்கு தெரியும். டொபிக்கு மீதியை கொடுத்த போது அது ஆர்வக்கோளாறில் "lunch sheet" ஐயும் சேர்த்து விழுங்கி விட்டது.சில மணி நேரத்தின் பின்னர் நிலவொளியின் காதலியை சந்திக்க நீ வந்த போது உன்னை தொடர்ந்து வந்த </strong><span style="font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 16px;"><b>டொபி</b></span></span><strong style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"> செரிமானமாகாததை வாந்தியாய் எடுத்துவிட்டது.</strong></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="padding: 0px;">
<strong style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">அந்த பெரியவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர் தொடர்பாக பலவிபரங்களை சொன்ன போது நீ திடுக்கிட்டிருப்பாய். நீ காதலித்த பெண்ணின் அக்காதான் என் முன்னாள் காதலி "ஐரீன்" என்பதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தங்கை உனக்கு தனது குடும்ப விபரங்களைசொல்லியிருந்தது </strong><span style="font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 16px;"><b>போல் </b></span></span><strong style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">ஐரீனும் </strong><span style="font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 16px;"><b>காதலியாய் இருந்த நாட்களில் </b></span></span><strong style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">எனக்கு சொல்லியிருந்தாள். அன்று நான் உன்னை கடுமையாக தாக்கி ஊரைக்கூட்டி விடயத்தை பகிரங்கமாக்கியது உனது நன்மைக்காகத்தான். அதானாலேயே தகப்பன்காரன் உனக்கு மகளை அவசர அவசரமாக மணமுடித்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இல்லாவிட்டால் தகப்பன் காட்டிய வெளிநாட்டு ஆடவனை மணமுடித்து உனது காதலியும் விமானம் ஏறியிருப்பாள். நீயும் என்னைப்போல இன்று வரை மரத்தடியிலேயே இருந்து கொண்டிருப்பாய்.அங்கே உனக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி.அடுத்த முறை இங்கே வரும் பொழுது 221B Baker street ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து சில நினைவுப்பொருட்களை இந்த நண்பனுக்காக வாங்கி வருவாய் என எதிர்பார்க்கிறேன்</strong></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<strong>இப்படிக்குஅன்பு நண்பன்</strong></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<strong>சேரலாதன்.</strong></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<strong>25/10/2013</strong></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-67464276639732294342013-10-15T21:11:00.003+09:002013-10-15T21:11:59.147+09:00கலாச்சார தூண்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhozcYYdueK5lt3uV0W4z-hYl9Vui0Vsn3MfopDEslPDXo-U4ZOiIaVKCMCapaHpU94CUqcA7t1WVOBOQsDNMrV7Jxi_EvDsao6IxL2TqqywzSC3ahjuCN2QNHnX2UTFyHw6hXV9RuYvJuV/s1600/01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhozcYYdueK5lt3uV0W4z-hYl9Vui0Vsn3MfopDEslPDXo-U4ZOiIaVKCMCapaHpU94CUqcA7t1WVOBOQsDNMrV7Jxi_EvDsao6IxL2TqqywzSC3ahjuCN2QNHnX2UTFyHw6hXV9RuYvJuV/s400/01.jpg" width="262" /></a></div>
<br />
யாழ்ப்பாண கலாச்சாரம் என்கிற தூணை விழவிடாது காக்கிற அத்திவாரம் போண்றவர் தான் கமலரூபன் என்கிற அப்பாசென்று சொன்னால் அது மிகையாகாது.ஏனென்றால் நாமெல்லாம் வயதுக்கோளாறில் கண்டதையும் கிறுக்கிகொண்டிருந்த போது அவர் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெருமைக்குரியவர்.நாம் "காதலா? காமமா? " என்று விவாதம் நடத்தும் பொழுதுகளில் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்று அறச்சீற்றம் காட்டியவர்.அப்படிப்பட்ட மதிப்புக்குரியவர் யாழ்ப்பாண கலாச்சாரம் தொடர்பில் விட்ட சமீபத்திய கருத்து புரட்சிகரமானது.<br />
<br />
<b>"உண்மையா யாழ்ப்பாண கலாச்சாரம் அழிகிறது என்று கவலைப்பட வேண்டியவர்கள் 1980- 1990 இடைப்பட்ட தசாப்தத்தில் பிறந்த நாங்களே ஒழிய மற்றவர்கள் அல்லர்"</b><br />
<br />
மேலோட்டமா பார்க்கும் போது புரியாவிட்டாலும் ஆழமாக நோக்கும் போது நிலாவரை கிணறு போல ஆழமில்லாத அரிய கருத்து இது.இந்த தசாப்தத்தில் யாழ்ப்பாணத்தில் நாம் பிறந்திருந்த போது போர் தொடங்கியது.நாமெல்லாம் வளர்ந்து இளமைப்பிராயம் கழித்து முதிர்வடைந்த போது போர் முடிந்துவிட்டது.இடையில் இடம்பெயர்வுகளையும் அழிவுகளையும் கண்டபடி வளர்ந்த எம் வாழ்கை வித்தியாசமானது.எமக்கு முந்திய தலைமுறையோ சிறுவயதில் இந்திய சினிமாவில் திழைத்திருந்தது.வாலிபம் வரமுதலே திருமணம் என்ற பெயரில் தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்ததோடு திருப்தி அடையாமல் சின்னவீடுகளையும் பேணிவந்தது.பெல் பொட்டம் ஜீன்ஸ்,கண்வரை வழியும் தலை முடி அலங்காரம் என உலாவிய அந்த காலகட்டத்தவர்கள் போர்க்காலத்தில் குடும்பஸ்தர்களாகிவிட்டவர்.எமக்கு பின்னைய சதாப்தத்தில் பிறந்தவர்கள் சிறுவயதில் போரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வளர்ந்து வாலிபர்களாக முதல் போர் ஓய்ந்துவிட்டது.அவர்களும் பிறகு நன்றாக வாழ்ந்துவிட்டார்கள்.கட்டுப்பாடு,கலாச்சாரம்,ஒழுக்கம்,கண்ணியம் என்றிருந்த போர்க்கால ஒழுங்குகளால் புடம் போடப்பட்டது நாம்தான்.லௌகீக வாழ்வை அனுபவிக்காது கட்டுப்பெட்டியாக வளர்ந்ததும் நாம் தான்.<br />
<br />
ஆகையால் ஒரு கிழடோ முதிர் குடும்பஸ்தரோ,முளைச்சு மூன்று இலை விடாத கலாச்சாரம் பேணும் பெடிசுகளோ நமக்கு முன்னால் நின்று "யாழ்ப்பாண கலாச்சாரம் கெட்டுப்போச்சு" என்றூ புலம்பினாலோ சத்தம் போட்டாலோ இந்த நியாயத்தை கூறி புரிய வையுங்கள்.அடங்காவிட்டால் தட்டி பிழிந்து அடக்குங்கள்.அதேவேளை அப்பாசின் இந்த அரிய கருத்தை பாராட்டி அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் கலாச்சார தூண் என்ற பட்டத்தை வழங்குவதில் கனாக்காலம் பெருமை கொள்கிறது.<br />
<br />
கம்ல்ஸ் தூண் என்றால் கலாச்சாரத்தின் கூரை யார்? "கலாச்சாரத்தின் அத்திவாரம்" யார்? .நீண்ட அலசலுக்கு பின் கலாச்சாரத்தின் கூரையாக கெமிக்கல் அலியாகிய சசிவர்ணன் தெரிவுக்குழுவால் அறிவிக்கப்பட்டார்.அந்நாளில் வன்னி வள நாட்டின் கலாச்சாரத்தை பாவாடை ஜீன்ஸ் அணிந்தும் சைவ கலாச்சாரத்தை நெற்றியில் திருநீற்று குறி அணிந்தும் பேணிய அலிபாய் இன்று பிரித்தானிய கலாச்சாரத்தை நைக்கி காலணியும் கெல்வின் கெவின் உள்ளாடையும் அணிந்து கட்டிக்காத்துவருகிறார்.குடும்பஸ்தர் ஆனபோதும் பல்வகை கலாச்சாரங்களை யும் கட்டி காப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.<br />
<br />
பிற்குறிப்பு- "கலாச்சார அத்திவாரம்" ஆக தெரிவானது ஒரு பெண்.அவரது பெயரை இங்கே போட்டாலே கொந்தளித்து வழக்கு போடுமளவுக்கு கட்டுக்கோப்பானவர்.எங்கே உங்கள் உய்த்தறியும் ஆற்றலுக்கு தீனி போட்டு கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-84026959175183729392013-08-31T17:26:00.002+09:002013-08-31T20:09:38.187+09:00தற்போதைய நிலவரம்-08<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3_t4-wkiAKUgi0ApdEYqXb7bRvwOSNdEbEjdhXz5qN3i-mZtKzK4E90keU8-2RmrOeYWwOloMPV7ZS2eRCMS69eS-GAInP6mUtgY9hyphenhyphenpYiye9TDlbMDUUC8dOLkZ8f6gMCPIuGKp18n2l/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3_t4-wkiAKUgi0ApdEYqXb7bRvwOSNdEbEjdhXz5qN3i-mZtKzK4E90keU8-2RmrOeYWwOloMPV7ZS2eRCMS69eS-GAInP6mUtgY9hyphenhyphenpYiye9TDlbMDUUC8dOLkZ8f6gMCPIuGKp18n2l/s1600/download.jpg" /></a></div>
<br />
<br />
இங்கிலாந்தின் மிகப்பெரும் அரசியல் வாதியும் பிரபல நர்சரி ஆசிரியருமான கமல்ஸ் யாழ்நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.இலங்கையை விட்டு இனி இம்மியளவும் அசையமாட்டேன் என இவர் அடிக்கடி அவிழ்த்து விழும் அறிக்கையை கேட்பவர்கள் "இவனல்லவா மண்பற்றுக்காரன்" என்று மயிர் கூச்செறிந்து போகிறார்களாம். இரண்டாயிரத்து பதினெட்டு வரை பிரித்தானிய விசாவை அடித்து பொக்கற்றுக்குள் பத்திரமாக வைத்திருக்கும் விடயம் அறிந்தவர்கள் நமட்டுச்சிரிப்போடு அறிக்கையை கேட்டு செல்வதுவும் குறிப்பிடத்தக்கது.இதே நேரம் யாழ் போதனா வைத்தியசாலையில் கமல்சின் மூக்கை பிளந்த வைத்தியர்கள் உள்ளிருந்து பெரிய ஒரு கல்லை கடந்த வாரம் கிண்டி எடுத்தனர்.கல் எப்படி உள்ளே போனது என்பது தொடர்பில் குழப்பமுற்ற வைத்தியர்கள் பலப்பல சாத்தியங்களை தெரிவித்துள்ளனர்.எது எப்படியோ அறுவைச்சிகிச்சையில் பின்னர் "அதெண்டாலும் சரிதான்.இதெண்டாலும் சரி தான்" என்று அரைவாசி வாயாலும் மிகுதி அரைவாசி மூக்காலும் கமல்ஸ் பேசும் பாணி மாறாதிருக்க "கமல்ஸ் ரசிகர்கள்" பிரார்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVRHvgQQFP4uUbEYOqm-KQVUadknGqkPsmCm_jW4AM0BmpA0u5iTnjhaQ1Q6Nf1jkjUyEIavHVaJhtfF8bIMRXNbHzZFhBLtNKDIa35IIp2JdcoM8-pszLbbQfklI5ZOUW3Y_Mk1tfc3po/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="172" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVRHvgQQFP4uUbEYOqm-KQVUadknGqkPsmCm_jW4AM0BmpA0u5iTnjhaQ1Q6Nf1jkjUyEIavHVaJhtfF8bIMRXNbHzZFhBLtNKDIa35IIp2JdcoM8-pszLbbQfklI5ZOUW3Y_Mk1tfc3po/s400/images+(1).jpg" width="400" /></a></div>
<br />
<br />
இலங்கை மின்சார சபையின் யாழ்பாண மின்பிறப்பாக்கி தற்போது அதி நவீன ஹொண்டா சிவிக் காரில் உலாவி வருகிறாராம்.எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அதிகமாக கவலைப்படும் அவர் காரை மின்சாரத்தின் ஓடச்செய்வதற்கு மாற்றீடுகள் உண்டா என்றும் சிந்தித்து வருகிறார்."இந்த வருடம் முடிய முதல் மாடர்ன் பிகரா மடக்குவேன்" என்று சபதமெடுத்து நல்லூர் தேர்முட்டியிலும் முட்டுசந்து மறைப்புகளிலும் வெறியோடு காத்திருக்கும் இவர் இந்த முறையும் தோல்வியே தழுவுவார் என்று நண்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."ஒழுங்கைகளிலும் ,கோயில்களிலும் பிகர் பிடித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.பஸ்களிலும் ரெயில் பயணங்களிலும் போறவன் வாறவன் எல்லாம் சிக்க வைக்கிறான்.வச்சிருக்கிற ஹொண்டா சிவிக்கை ஓட்டுற மாதிரி ஓட்டினா பிகர் தானா பிக்கப் ஆகும்" என்று இவர் தொடர்பில் கருத்து தெரிவித்த இன்னொரு மின்சார பொறியியலாளர் கனாக்காலம் நிருபரிடம் அங்கலாய்த்துக்கொண்டார்.மின்சாரத்தோடயே வீம்பா விளையாடுறவருக்கு சம்சாரம் பிடிக்கிறது ஒரு பிரச்சினையா இருக்கக்கூடாது பாருங்கோ!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgpIOWwKnuQJ6WTXlZQuH6QakNutrcU84xsDbQsfEUSQoIPHA46kUgSLdH7YWwEpCUxpZCknhbu5ovvaTAShThldkFOB9OQSc5jYSevyH-cyHQRNh2UqY7ZhozB81zMZs7oappQwelIZi/s1600/anniyan-lovedetector3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="186" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgpIOWwKnuQJ6WTXlZQuH6QakNutrcU84xsDbQsfEUSQoIPHA46kUgSLdH7YWwEpCUxpZCknhbu5ovvaTAShThldkFOB9OQSc5jYSevyH-cyHQRNh2UqY7ZhozB81zMZs7oappQwelIZi/s320/anniyan-lovedetector3.jpg" width="320" /></a></div>
<br />
<br />
மட்டத்தின் நண்ப ,நண்பிகளுக்கு திருமணம் என்றாலே வாயார,மனதார வாழ்த்தி குதூகலிக்கும் நண்பர்கள் "றெமோ" வின் திருமணம் விடயத்தில் மட்டும் அனல் பறக்கும் ஆத்திரத்தோடு இருக்கிறார்களாம்.ஹிட்லரின் நாட்டில் பணி புரிந்து வரும் "றெமோ" நீல கண்களும் வெளிறிய சருமமும் உள்ள ஆரிய அழகியைத்தான் கரம் பிடிப்பார் என அவதானிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிவிட்டு வந்த போதிலும் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு உள்ளூர் பெண் ஒருவரை யாழ்ப்பாணத்துக்கு வந்து கரம் பிடித்து கூட்டி சென்றிருக்கிறார்.சில முக்கிய நபர்களைத் தவிர ஏனைய மட்டத்து நண்பர்களுக்கு "றெமோ" பெப்பே காட்டி கண்ணில் மண்ணை தூவி மூன்று முடிச்சை போட்ட விதம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க்கியுள்ளது.அன்று காதால் புகை வருமளவுக்கு காட்டுக்குத்து குத்தியவர் இன்று நண்பர்கள் காதில் பூவை வைத்து விட்டு கலியாணம் கட்டியதொன்றும் பெரிய விடயம் இல்லைத்தானே!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAk9G6uxwrpL3u37rhMg5QZmVU1tOTWNZKBjjrZq2RhCXs9cFNzCCEXIgdPLNHUcUbaybk7oSBpBD0nNDd9tBIc1dyNrx-qAzwxNy6jBVQSAfrVRaWZ3RKHCDadvpeFmIsikEaE0_LcMPD/s1600/civil-engineering-funny-picture.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAk9G6uxwrpL3u37rhMg5QZmVU1tOTWNZKBjjrZq2RhCXs9cFNzCCEXIgdPLNHUcUbaybk7oSBpBD0nNDd9tBIc1dyNrx-qAzwxNy6jBVQSAfrVRaWZ3RKHCDadvpeFmIsikEaE0_LcMPD/s400/civil-engineering-funny-picture.jpg" width="400" /></a></div>
<br />
<br />
கட்டப்படும் கட்டடங்களையும் நீண்டுகொண்டே போகிற வீதிகளையும் பார்த்தால் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைகிறது என்று சின்னப்பிள்ளை கூட சொல்லிவிடும்.சும்மா இருந்தவன் கூட வேலியை வெட்டி வீசிவிட்டு மதில் கட்டி பெயின்ற் அடிக்கிறான்.குழி கக்கூஸ் போதாதென்று கொமெட் கட்டுகிறார்கள்.போகிற போக்கைப்பார்த்தால் இன்னும் பத்து வருடங்களில் யாழ்ப்பாணம் சிங்கபுரி போல கொங்கிறீட் கூடு ஆகும் அபாயமுண்டு.நிற்க,விடயத்துக்கு வருகிறேன்.பல்கி பெருகும் கட்டுமான தொழிலில் மட்டத்தின் நண்பர்கள் பலரும் குதித்திருக்கிறார்கள்.எல்லோருக்கும் சுள்ளான் "ராக் தீபன்" தான் முன்னோடி.கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் சுள்ளான்.ஐந்தாறு கட்டுமானங்களை நிர்வகிக்கும் அதே சமயம் அப்பாவும் ஆகியிருக்கிறார்.ஒரே பந்தில் இரண்டு "சிக்ஸர்" அடிக்க யாராலும் முடியாது என்று எவன்டா சொன்னது?.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0novZqEXRpE1PG2GhDQOfUt65k0KWXBlqTepL_0Ir8CXmPTq0qTug17Nsm_bFV1JCoRIAZcIhJRP7LNewxpfQsJeoZyzrZwEFtumKgHw0dakMdwE8DfRcW0tDb2kbKKEmYXRkTLF0DG93/s1600/1001689_678444705503660_1885361292_n.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0novZqEXRpE1PG2GhDQOfUt65k0KWXBlqTepL_0Ir8CXmPTq0qTug17Nsm_bFV1JCoRIAZcIhJRP7LNewxpfQsJeoZyzrZwEFtumKgHw0dakMdwE8DfRcW0tDb2kbKKEmYXRkTLF0DG93/s320/1001689_678444705503660_1885361292_n.jpeg" width="320" /></a></div>
<br />
சிங்கபுரியில் மிகப்பெரும் திட்ட நிர்வாகியாக இருக்கும் சிரிப்பு ரவுடி உச்ச சம்பளத்தை எட்டிய பூரிப்பில் வறுத்த தவளை கறியை சாப்பிட்டதுமில்லாமல் முகநூலில் "முதன் முதலாக தவளை சாப்பிடுகிறேன்" என்றும் நிலைக்குறிப்பிட்டுமிருக்கிறார்.யாரோ ஒரு குறுக்கால போனவன் "மலிவான விளம்பரத்துக்காக இயக்கத்துக்கு முருக்கம் செத்தலால் அடித்ததாக புளுகியது போல இன்னொரு புளுகு" என கருத்து எழுதிவிட வெகுண்ட சிரிப்பு தவளை கறி தின்னும் படத்தை பிடித்து கீழே போட்டிருக்கிறார்.அந்த படம் அங்கே போய் இங்கே போய் கடைசியாக கனாக்காலம் நிருபரிடம் சிக்கிவிட்டது.உசுப்பேத்தினா சிரிப்பு ரவுடியை கிணத்துக்க குதிக்கவும் வைக்கலாம் என்று அந்த "குறுக்கால போன" நண்பர் சிரிப்புடன் கருத்து தெரிவித்தார்.<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-68090025526941415232013-07-29T01:47:00.000+09:002013-07-29T02:32:32.841+09:00"டானியல் ஒப்ரயன்" - ஒரு பிரித்தானிய அகதி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsR6GiFFcQCbx4oTFsOWHVuZtgRsl7SbBr6qFkuPUDTguPLhp6EZ1oHZjCXAcY6_YUF6eMnBP6iR67hewDo9s0g4Ah4snjb2Z5g00o0MaTFnYtE3M_54oJ2veLYe2PdHMIcVv-WcNp1_Op/s1600/ROBOT-MAIN_1743534a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="553" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsR6GiFFcQCbx4oTFsOWHVuZtgRsl7SbBr6qFkuPUDTguPLhp6EZ1oHZjCXAcY6_YUF6eMnBP6iR67hewDo9s0g4Ah4snjb2Z5g00o0MaTFnYtE3M_54oJ2veLYe2PdHMIcVv-WcNp1_Op/s640/ROBOT-MAIN_1743534a.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
கதையின் நாயகன் டானியல் பரபரப்போடு அந்த முப்பரிமாண உரையாடல்ப் பொறி முன்பாக காத்திருந்தான்.இன்னும் 438 வினாடிகள் கடந்ததும் ஐக்கிய தமிழ் ராட்சியத்தின் தலைவனான திராவிடா வந்து கேள்விகளை அடுக்க தொடங்கும்.பதில்களில் அதற்கு திருப்தியென்றால் பக்கவாட்டில் புலி பாய்கிற சின்னம் பதித்த கடவுச்சீட்டு கையில் கிடைக்கும்.பிடிக்காவிட்டால் முகத்தை திருப்பி விடும்.பிறகு.....நாசமாப்போன இங்கிலாந்துக்கு திரும்ப போக வேண்டியது தான்.அங்கு போய் காய்ஞ்ச பார்கருக்கும் நெய்ந்து போன உருளைக்கிழங்கு சிப்சுக்கும் நாய்படாப்பாடு பட வேண்டியிருக்கும்.ஹீத்ரோ விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்த அம்மா எம்மா செஸ்டனின் கவலை தேய்ந்த முகம் நினைவில் வந்தது."நீ அந்த நாட்டிலிருந்து அனுப்பும் ஒவ்வொரு சதத்துக்கும் இங்கே கட்டுக்கட்டாக பவுண்ட்ஸ் கிடைக்கும்.நம்பிக்கையோடு அனுப்புகிறேன்.கவிழ்த்துவிடாதே" விடைபெற்ற இறுதி கணத்திலும் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தாள்.கிபி 2113,மாசி 23ம் திகதி பிரித்தானியா முழுக்க பனி படர்ந்த நாளொன்றில் டானியலோடு இன்னும் 499 பேர் கிளம்பியிருந்தார்கள்.வேல்ஸ் முருகனை நேர்துவிட்டு கிளம்பியபோதிலும் அதிஸ்டம் டானியல் பக்கம் இருக்கவில்லை.ஆள்க்கடத்தல் முகவர் நிறுவனத்தின் கடந்த நூற்றாண்டை சேர்ந்த அந்த ராட்சத விமானம் ஐதரா வை நெருங்கமுன் நடுவானில் கண்ணில் எண்ணெய் ஊற்றி கண்காணித்துக்கொண்டிருந்த "கருடன்" வானூர்தியிடம் வசமாக மாட்டிக்கொண்டது. அகோரப்பசியில் இருக்கும் பெலிகன் பறவை முழு மீனை சாப்பிடுவதுபோல நடுவானில் கருடன் போயிங் 747 ஐ பெரும் சப்தத்தோடு முழுங்கியபோது "அக்ளி ஆஸ்கோல்" என்று தொடங்கி முருகனை கண்டபடி டானியல் திட்டியிருந்தான்.<br />
<br />
பஞ்சம் தலைவிரித்தாடும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள இளைஞர்களின் குறிக்கோளெல்லாம் ஐ.த.ராவுக்கு போகவேண்டும் என்பது தான்.டானியல் பள்ளிக்கூடத்தில் ஐந்தாமாண்டு படிக்கும் போதே முளைவிட்டிருந்த நெடுநாள் ஆசை அது.ஆசிரியர் வருங்காலத்தில் என்னவாகப்போகிறீர்கள் என்று வகுப்பில் வரிசையாக கேட்டு வந்த போது ஐதராவுக்கு போக போகிறேன் என்று சொல்லி சிரித்தவன் அவன்."நீ நினைத்த படியே நடக்கட்டும்.ஆனால் சர்வதேச தமிழ் மொழி பரீட்சையில் 10 இற்கு 9 எடுப்பது எந்த ஆங்கிலேயனாலும் முடியாதேப்பா" என்று அவர் சொன்னதைக்கேட்டும் கலங்காமல் தமிழ் வகுப்புக்கு போக தொடங்கியவன்.டானியல் பிறக்க சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரித்தானியா முழுக்க தமிழ் கலாச்சார மோகம் தலைவிரித்து ஆட தொடங்கி விட்டது.கடும் குளிரிலும் வேட்டி,சேலை கட்டி இளசுகள் அலைந்து கொண்டிருந்தார்கள்.தமிழ் பெண்கள் போல ஊதிப்பெருத்த அழகிய இடை வேண்டுமென்பதற்காக பிரித்தானிய மகளிர் கண்டதையும் மென்று கொண்டிருந்தார்கள்.ஆறே வாரத்தில் கருப்பழகு கிரீமுகள் சந்து பொந்தெல்லாம் விற்பனையாகிக்கொண்டிருந்தன.பள்ளிக்கூட பெடியள் தமிழ் சினிமா நாயகர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் திறந்து ஆளுக்காள் அடிபட்டுக்கொண்டிருந்தார்கள்.டானியலும் நண்பர்களும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக மனம் கவர்ந்த கவர்ச்சி நடிகை கும்காவுக்கு டூட்டிங் நிலக்கீழ் நிலையமருகே சிலை வைத்தார்கள்.தொப்பை வயிறும் குலைந்து விழும் கொங்கைகளுமாய் நின்ற கும்கா சிலையை கண்ணாலே கற்பழிப்பதற்கே தினம் தோறும் பெரிய கூட்டம் வந்து போனது.கும்கா,குடி,குட்டி என்று ஒரு பக்கம் அலைந்தாலும் தமிழ் படிப்பில் விடாப்பிடியாய் இருந்தான்.வெறியாய் தமிழ் படித்து முதல் தடவை பரீட்சை எழுதியபோது பத்துக்கு ஐந்து வந்தது.இரண்டாம் தடவை 5.5 மூன்றாம் தடவை 6.அதுக்கு பிறகு எத்தனை தடவை எழுதினான் என்று அவனுக்கே தெரியாது.ஆறை தாண்டி அரை இஞ்சி கூட நகரவில்லை.கிழட்டு தமிழிச்சியை எண்டாலும் இணையத்தில் மடக்கி ஐக்கிய தமிழ் ராட்சிய குடிமகனாகலாம் என்ற எண்ணத்திலும் சட்ட விதிகளை மாற்றி மண்ணை போட்டு விட்டார்கள்.அதன் பிறகு களவாகப்போய் கையை தூக்குவதை தவிர வேறு வழி டானியலுக்கு இருக்கவில்லை.<br />
<br />
"ஐக்கிய தமிழ் ராட்சியம் வடக்கே இந்திய உபகண்டத்திலிருந்து ஈழத்தீவு வரை பரந்துள்ளது.உலகத்திலேயே பணக்கார நாடு.உலக மகா சண்டியன் நாடு.அதி புத்திசாலிகள் நிறைந்த தேசம்.உலகிலேயே கவர்ச்சிகரமான பெண்கள் வாழுகிற இடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அன்ரோமீடா பால்வெளியில் இருந்து நீசிகள் படையெடுத்த போது உலகின் வல்லாதிக்கங்கள் எல்லாம் தகர்ந்து போக ஐதரா ராணுவம் நின்று போரிட்டது.உலகம் இறுதி கணங்களை எண்ணிக் கொண்டிருக்க நீசிகளின் பலவீனத்தை பிடித்துக்கொண்ட தமிழர்கள் திருப்பி தாக்க தொடங்கினார்கள்.வலிந்ததாக்குதல்,முற்றுகைச்சமர்,ஊடறுப்பு சமர் என்று காற்று மண்டலத்திலிருந்து சந்திரமண்டலம் தாண்டி பரந்த நெடும் போரில் ஏலியன்களை தோற்று ஓடத்தொடங்கிய போது தமிழ் ராஜ்சியத்தின் வலிமை வெளிப்பட்டது.இன்றும் கூட உலகை பாதுகாக்க பல ஒளியாண்டுகள் தாண்டிய தூரங்களிலெல்லாம் சமரிட்டுக்கொண்டிருக்கும் தேசம் அது.இப்படிப்பட்ட தேசத்தின் தலைவன் தான் "திராவிடா".அதற்கு ஏழு அறிவு.முக்காலமும் தெரியும்.உலகின் எல்லா மொழிகளும் தெரிந்திருந்தாலும் தமிழ்தான் பேசும்.நம்மையெல்லாம் பாடாய் படுத்தி எடுக்கும் சர்வதேச தமிழ் மொழி பரீட்சை முறையை கொண்டு வந்ததும் அது தான்"<br />
<br />
தமிழாசிரியர் டொமினிக் கூப்பர் சொல்லிக்கொண்டு போன போது டானியல் குறுக்கிட்டிருந்தான்.<br />
<br />
"ஒரு நாட்டின் தலைவரை தமிழ் இலக்கணப்படி "மேதகு" என்று சொல்வது தானே முறை?.ஏன் திராவிடாவை "அது" என்கிறீர்கள்?"<br />
<br />
அன்று தான் திராவிடாவுக்கு உயிரே கிடையாது என்று டானியலுக்கு தெரிந்தது.ஒற்றுமையில்லாத தமிழர்கள் தமக்கென நாடு உருவான பின்பும் தலைமை கதிரைக்காக சண்டையிட்டு கொண்டிருந்தார்களாம்.வெறுத்துப்போன தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து திராவிடா என்கிற செயற்கை மூளையை உருவாக்கி அதை மக்கள் பிரதி நிதிகள் மூலமாக கட்டுப்படுத்தும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.தினமும் ஆயிரக்கணக்கான பொறியியலாளர்களாலும்,விஞ்ஞானிகளாலும் மெருகேற்றப்பட்டபடியிருந்த செயற்கை மூளைக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் ஒரு கட்டத்தில் கிடைத்தது யாருக்கும் தெரியவில்லை.அயல் நாட்டோடு ஏற்பட்ட எல்லைத்தகராறில் சமாதானமாக போவதா? சண்டை பிடிப்பதா? என்று பிரதிநிதிகள் முரண்பட்டுக்கொண்டிருக்க திராவிடா பொறுமையிழந்து எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.ஒரே நாளில் அந்த அயல் நாட்டை அடித்து துவம்சம் செய்து வெற்றி வாகை சூடிய போது இளைஞர்கள் எல்லோரும் திராவிடாவின் ரசிகர்களாகிப்போனார்கள்.பிறகு இந்தியாவை எதிர்பாராமல் தாக்கி துண்டு துண்டாக பிரித்து தமிழ் நாட்டை கூட இணைத்து ஐக்கிய தமிழ் ராஜ்ஜியத்தை உருவாக்கி கொண்டது.உயிர் அல்லாத தன்னை தமிழ் இலக்கணப்படி "அது" என்றே அழைக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவைக்கூட போட்டு வைத்திருக்கிறதாம்.<br />
<br />
டானியல் தடுப்பு முகாமில் இருந்த கடந்த ஒரு மாதமும் தமிழர்கள் பாடாய் படுத்திவிட்டார்கள்.காலை ஆகாரத்தின் பின்னர் கிரகிப்பு கட்டில்களில் போய் படுக்க வேண்டியது தான்.கல்தோண்ற முன்னர் வந்த மூத்த குடி என்று தொடங்கி முதலில் விமானம் விட்டது,அணு சக்தியை அறிந்தது,விண்வெளிக்கு போனது எல்லாமே தமிழன் தான் என்று முடிப்பார்கள்.கேட்கச்சொன்னால் காதை பொத்தலாம்.வாசிக்க சொன்னால் கண்ணை மூடலாம்.நேரடியாக மூளை நரம்புகளுக்கு அனுப்பினால் என்ன செய்வது?.கண்ணை மூடிக்கொண்டு கிரகிக்க வேண்டியது தான்.குமரிக்கண்ட நகரங்களை கடலுக்கு வெளியே இழுத்து கொண்டு வந்து காட்சிக்கு வைத்தது,ராவணனை காட்டிக்கொடுத்த விபீசணனை காலம் கடந்து பயணித்து போய் போட்டு தள்ளியது,சந்திரனில் அவ்வை பாட்டிக்கு சிலை வைத்தது என "திராவிடாவின்" சாதனைகளை எல்லாம் காணொளியாக பார்க்கும் படி செய்வார்கள்.அதை விட தமிழ் உச்சரிப்பு பயிற்சி என்ற பெயரில் தட்டிப்பிழிவார்கள்.நாக்கு வீங்கி ஒரு நாள் பேச முடியாமல் கூட ஆனது.திரும்ப இங்கிலாந்துக்கு போவமா என்று கூட சில நேரம் யோசித்து இருக்கிறான்.அந்த நேரத்தில்த்தான் அனித்தாவின் அறிமுகம் கிடைத்தது.அனித்தா நான்கு தலைமுறைக்கு முன்னர் பிரித்தானியா வந்து கையைத்தூக்கிய தமிழனின் வழி வந்தவள்.இடையில் காப்பிலி,ஜெர்மன்,சோமாலிய இனங்கள் கலந்து அனித்தாவை விசித்திர உருவமாக மாற்றிவிட்டிருந்தது.அவளுக்கு நீல கண்களும் பொன்னிற கூந்தலும் இருந்தாலும் தோல் நிறத்தில் பழுப்பாய் இருந்தாள்.பருத்து இருந்த இடை மட்டும் அச்சு அசப்பில் கும்காவினது போல் இருந்தது.அனித்தாவோடு கடலை போட தொடங்கிய பிறகு டானியலுக்கு நாள் போனதே தெரியவில்லை.<br />
<br />
கருவி முன் மெலிதாக வெட்டிய மின்னல் மறையமுதல் திராவிடா ஒளிப்பிழம்பாய் வந்து நின்றது.அதன் அடி கருவியில் இருக்க முடி வானை நோக்கி முடிவில்லாமல் சென்றது.முடியை தேடிப்பிடிச்சால்த்தான் உனக்கு வீசா என்று சொல்லப்போகுதோ என்று டானியல் பயந்தான்.திராவிடாவும் மனிதர்கள் போல மெல்லிய செருமலுடன் தான் ஆரம்பித்தது.<br />
<br />
"ராஜராஜ சோழனுக்கு பிறகு வந்த தமிழர்களின் ஒப்பில்லா தலைவரின் தந்தையின் பெயர் என்ன?"<br />
<br />
"திர்வேங்கட் வேலுப்பில்லை"<br />
<br />
"தலைவர் இருக்கிறாரா? இல்லையா?"<br />
<br />
டானியல் மௌனித்தான்.திராவிடா 30 வினாடிகளை காற்றில் ஒளிரவிட்டு குறைக்க தொடங்கியது.<br />
<br />
"இருக்கிறார்"<br />
<br />
"புதிய ஐக்கிய தமிழ் ராட்சியத்தின் குடிமகனுக்கு வாழ்த்துக்கள்" என்றபடி நீட்டிய இயந்திரகரங்களில் புத்தம் புதிய கடவுச்சீட்டு மின்னிக்கொண்டிருந்தது.<br />
<div>
<br /></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-68755715564939909002013-06-30T00:54:00.001+09:002013-06-30T00:54:48.457+09:00நான்காம் ஆண்டு நிறைவில் "கனாக்காலம்"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjddL0sQ7RUpSPUEhhDuyoj1cO21Oqw3DaH1bF6h9YO1fiKDzefZBpExAgVnrwlGGXFH6MRd0-Kbc7YFxAn_XkdKSz_6wQytDOWMt1rBnVFatZP4r0GhbHgy5WhkTbJNRsx0ZlspLsOJ0V/s226/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="392" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjddL0sQ7RUpSPUEhhDuyoj1cO21Oqw3DaH1bF6h9YO1fiKDzefZBpExAgVnrwlGGXFH6MRd0-Kbc7YFxAn_XkdKSz_6wQytDOWMt1rBnVFatZP4r0GhbHgy5WhkTbJNRsx0ZlspLsOJ0V/s400/images.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம்.இலங்கை பதிவுலகில் எமது மட்டட்தை சேர்ந்த மூன்று பதிவர்கள் கலக்கிக்கொண்டிருந்தார்கள்."புளொக்" எழுவதற்கு மிகப்பெரிய திறமை வேண்டும் என்ற எண்ணவோட்டத்தோடு இருந்த நான் அவர்களின் பதிவுகளை இங்கிலாந்தில் இருந்து ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.எமது மட்டத்துக்கு "புளொக்" தொடங்க வேண்டும் என்ற சலசலப்பு அந்நேரம் தான் கிளர்ந்தது."மச்சான் தயவு செய்து தொடங்குங்கடா" என்று ஆளாளுக்கு மாறி மாறி மூன்று பேரையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருத்தனும் ஒழுங்கான பதிலை சொல்லுறான்கள் இல்லை. காத்திருந்து ஒருநாள் முகநூல் சட்டில் சிக்கனை தின்று வளர்ந்த பதிவரை பிடித்து "மச்சான் நீயாவது கெதியா தொடங்கடா" என்று கேட்டு வைத்தேன்.நெல்சன் மண்டேலா,காந்தி பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருந்த அந்த பெரும் பதிவர் "தனிமனித தாக்குதலை நான் விரும்புவதில்லையாதலால் தொடங்க முடியாது" என்று பதில் போட்டு என் கடுப்பை கிளறி கனாக்காலத்தை தொடங்க வழிசமைத்தார்.<br />
<br />
கடந்து போன நினைவுகளை மீட்ட தொடங்கப்படும் தளத்தில் காந்தீயமும்,சிவப்பு சித்தாந்தமும் பேச முடியுமா?.ஜூன் மாதன் 2009 ஆண்டு கனாக்காலம் தொடங்கியது.அன்று தொடங்க மறுத்த பதிவர்கள் எவரும் பதிவுலகில் உயிர்ப்புடன் இல்லை.தனிமனித பிரபலத்தை நோக்கமாக கொண்ட எந்த பதிவரும் நீடிக்க முடியாது.சுய திருப்திக்காகவும்,உள வெளிப்பாடாகவும் எழுதுபவர்களே பதிவுலகில் நிலைக்கிறார்கள்."மச்சான்! அடிக்கடி எழுதாட்டியும் மாதமொண்டு எண்டாலும் விடாமல் எழுதுறாய். அப்படியே தொடர்ந்து எழுது! நண்பனொருவன் சொன்ன வார்த்தைகள் இவை.தொடர்ந்து பத்து வருடம் எழுதுவதற்கு நண்பன் சொன்ன வார்த்தைகளே போதும்.<br />
<br />
எச்சரிக்கை கடிதம்,மிரட்டல் கடிதம்,அனானி கடிதம் என்று பலதை கனாக்காலம் கண்டிருக்கிறது.விருப்பத்தோடு வாசிப்பவர்கள் அளவுக்கு கடுப்போடு வாசிப்பவர்களையும் கொண்ட தளம் இது.தளத்தில் பதிவுகளை இட்டு பங்களிப்பு நல்கிய பவானந்,இளம்செழியன்,சசிக்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.இத்தளம் தொடர்ந்து காத்திரமான படைப்புக்களை வழங்கி நீடிக்க உதவுமாறு "மட்டம் 2003" மாணவர்களிடம் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-68316470231967853032013-06-13T18:44:00.001+09:002013-06-30T00:04:32.975+09:00டாக்டர் பான்கிமூனும் பாவப்பட்ட புறஜெக்ட் மனேச்சரும் (18+)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuwGZbo762HMxNy0gpWTTEaItH4bn0wTV-pA9jafMdq_TjqjURy9EruUb5LmMoJW6ecl7Jkzm7WtfL-FdPEWAKoLo7I6fbSo14x8kEoBNbrSkbgLm2JbwDU1ZlkQ7wMpAvogM7E_LsGJ5V/s1600/china_needle404_675809c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="301" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuwGZbo762HMxNy0gpWTTEaItH4bn0wTV-pA9jafMdq_TjqjURy9EruUb5LmMoJW6ecl7Jkzm7WtfL-FdPEWAKoLo7I6fbSo14x8kEoBNbrSkbgLm2JbwDU1ZlkQ7wMpAvogM7E_LsGJ5V/s400/china_needle404_675809c.jpg" width="400" /></a></div>
<br />
டொக்டர் பான் கீமூன் தனது முப்பது வருட சேர்விசில் இப்படி ஒரு மோசமான கேசை கண்டதேயில்லை.பழுதடைந்த தவளை சூப்பை வாயில் வைக்கும் போது வரும் அருவருப்பு உணர்வு "அதை" பார்க்கும் போதெல்லாம் வந்தது."கிழடு தட்டினவங்களுக்கு இப்படி இளம் பெண்களை இஞ்சினியர் என்ற காரணத்துக்காக மட்டும் கட்டிக்கொடுப்பதை தமிழ் சமுதாயம் நிறுத்தாதவரை இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்க இயலாது" என்று சொல்லியபடி பான்கிமூன் ஸ்ரெச்சரை தள்ளிக்கொண்டு வந்த பிலிப்பைன்காறனை பார்க்க அவன் "சேர்! அலமா! திஸ் வண் ஆ மெனி மெனி புறப்லம்" என்றபடி தலையை சொறிய ஆரம்பித்தான்.பான்கிமூன் ஒன்றும் ஏட்டை சப்பிதுப்பி உருவான சராசரி வைத்தியன் அல்லர்.தவழ்ந்து திரிந்த நாட்களிலேயே ஆறுமாதமும் நிரம்பியிராத அயல் வீட்டு பெண் மிங்காவின் மூக்கை கடித்து இழை போடவைத்தவர்.பத்தாவது வயதில் முத்தம் கொடுக்கும் போது மூக்கும் மூக்கும் இடித்துக்கொண்டால் என்னாவது என்ற ஐயம் எழுந்த போது மீளவும் மிங்காவின் உதட்டை கடித்து மாட்டுப்பட்டவர்.பிறகு 18வது வயதில் இனப்பெருக்கதொகுதி பற்றி படித்த போது கிளர்ந்தெழுந்த சந்தேகங்களை தீர்க்க மிங்காவை இழுத்துக்கொண்டு போய் 20 மாதங்களுக்குள், ஜெட்லீ புரூஸ்லீ எனும் இரண்டு ஆண் ட்ராகன்களுக்கு அப்பா ஆகிய மின்னல் வேகக்காரர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU6wF0NvZnNKM-lySVvuUPcWpWTrCXSYs3F54KJmB1XelMt58U29yjA-egGNymjGERqOJ9HpHpDzmjbw2JtpsTjD70cvlhGvrDeprLfNxJBYqUtssZTeT-5IjkdBBdpipDIT1JwL8J095C/s1600/aaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="145" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU6wF0NvZnNKM-lySVvuUPcWpWTrCXSYs3F54KJmB1XelMt58U29yjA-egGNymjGERqOJ9HpHpDzmjbw2JtpsTjD70cvlhGvrDeprLfNxJBYqUtssZTeT-5IjkdBBdpipDIT1JwL8J095C/s400/aaa.jpg" width="400" /></a></div>
<br />
<br />
17/05/2029 11 PM டாக்டர் பான்கிமூன் மட்டுமல்ல சிங்கபுரியிலேயே மிகப்பிரபலமான மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையும் தனது ஐம்பது வருடகால வரலாற்றில் இவ்விதமான பிரச்சினையை கண்டதில்லை.பிணைந்திருந்த அந்த உடலங்கள் உள்ளாடைகளோடு இருந்தன.பெண் மயக்க நிலையில் இருந்தாள்.ஆண் கடுமையான வேதனையில் முனகிக்கொண்டிருந்தான்.முத்தமிட்டு கொண்டிருக்கும் போது பெண் நினைவிழந்துவிட இருவரது வாய்களும் அப்படியே சிக்குண்டிருக்க வேண்டும்.கடவாய்த்தோலை இழுத்துப்பார்க்க அவள் பற்களிடையே ஆணின் கீழுதடு பொறியில் சிக்கிய எலி போல நசிந்து கிடந்தது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHTyRH16q2bReTlVRs5lQEPsdnpJLKQPz0g-FQLp04TXsrN4MO4gTO2ZJtz_gi8KxGO5UrQr96y7dPOcpqF1oziRc8fdnFPzPRXWiHMQKLiGUHUfD35vRZuT1yKEMGvsZpAHM9Vb-tdxq/s1600/bbb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="365" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHTyRH16q2bReTlVRs5lQEPsdnpJLKQPz0g-FQLp04TXsrN4MO4gTO2ZJtz_gi8KxGO5UrQr96y7dPOcpqF1oziRc8fdnFPzPRXWiHMQKLiGUHUfD35vRZuT1yKEMGvsZpAHM9Vb-tdxq/s400/bbb.jpg" width="400" /></a></div>
<br />
<br />
"இது எப்படி நடந்தது என அறிய விரும்புகிறேன்.உன்னால் பேச முடியாதிருப்பதால் எழுத்து மூலமாய் தொடர்பாடலாம் சரிதானே?"<br />
<br />
காகிதமும் பேனாவும் உதடுகள் பிணைந்திருந்தவன் எழுதுவதற்கு வாகாய் வைக்கப்பட்டன.<br />
<br />
"எனது பெயர் சுதன்.நான் ஒரு புறஜெக்ட் மனேச்சர் வயது 45"<br />
<br />
பான்கிமூன் காகிதத்தில் எழுதியிருந்தை பார்த்தவுடனேயே தன்னிலை மறந்து "சிறிலங்கன் தமிழன்" என்று உரக்க கத்திவிட்டார்.<br />
<br />
"ஊர்முழுக்க மெனி மெனி சிரிலங்கன் தமிழ் Project Manager தான் .மேலே சொல்லவும்"<br />
<br />
"இவ பேர் மாலினி.வயது 20.போன கிழமை ஊரிலை வச்சு கலியாணம் கட்டி கூட்டிக்கொண்டு வந்தனான்"<br />
<br />
"அப்ப சிரிலங்காவில முத்தம் கொடுக்கேக்க இப்படி பிரச்சினை ஒண்டும் வரேலைதானே.சிங்கப்பூர் வெக்கை மாலினிக்கு ஒத்துக்கொள்ளாம "Heat Stroke" வந்திருக்கலாம்.இப்ப சரியாக்கிடுவன் கவலைப்படாதையும்"<br />
<br />
பரபரத்தபடி ஏதோ ஒரு மருந்தை எடுக்கப்போன டொக்டரை கையை காட்டி தடுத்த P.M சுதன் மீள எழுதத்தொடங்கினான்.<br />
<br />
"ஊரில ஒன்றும் முயற்சி செய்யேலை.வீடு முழுக்க ஒரே சனம்.அசௌகரியமா இருந்ததால பேசாம இருந்திட்டன்.இண்டைக்குத்தான் "Day off" போட்டிட்டு வந்து அலுவலை தொடங்கினனான்.என்னுடைய வீட்டுக்காறர் 45 வயசில கலியாணம் கட்டி வச்சதே பெரியவிசயம் டொக்டர்.அதுவும் இப்பிடி ஆகிட்டுது.நீங்கள் தான் என்னை வாழ வைக்கோணும்"<br />
<br />
பதினெட்டு வயதில் குடும்பம் நடத்திய பான்கிமூனுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.இலங்கைதமிழனாய் பிறக்கவைத்து சிவில் இஞ்சினியரிங் படிக்க வைத்து ,சிங்கப்பூரில் புறஜெக்ட் மனேச்சர் ஆக்காததற்காக எல்லாம் வல்ல குங்பூ புத்தருக்கு மனதுள்ளே நன்றி சொல்லிக்கொண்டார்.<br />
<br />
"ஒழுங்கா நீங்கள் பல்லு மினுக்காட்டியும் வாய் நாற்றம் தாங்க முடியாமல் மயங்கியிருக்க வாய்ப்பு உண்டு மிஸ்ரர் சுதன்.ஆனா இவளைப்பார்த்தால் "கோமா" நிலைக்கு போன ஆள் மாதிரியல்லவா இருக்கு"<br />
<br />
"சுதன்! உங்களது மனைவி தமிழ் தானா?"<br />
<br />
"யூ திங் ஐ ஆம் ஸ்ருபிட் ஆ?,அவள பார்த்தால் சைனாக்காரி போலவா இருக்கு?"<br />
<br />
கடுப்பாகி சுதன் எழுதியதை பார்த்ததும் பான்கிமூன் "க்ளுக்" என்று சிரிப்பு வந்தது."முகம் ஓகே.உடம்பு அப்படி இல்லையே" என வாய் வரை வந்த வார்த்தைகளை எச்சிலோடு சேர்த்து விழுங்கிக்கொண்டார்.<br />
<br />
பான்கிமூன் இப்போது மாலினியை நெருக்கமாக ஆராய ஆரம்பித்தார்.சருமம் அத்துணை திருத்தமாய் இருந்தது.நாசிகள்,விழிகள்,புருவங்கள் எல்லாம் அளவு தப்பாமல் செதுக்கியது போலிருந்தன."36- 28 - 34 வருமோ? இந்த இனத்தில் இப்படி ஒரு வளைவு நெளிவுகள் இருக்க வாய்ப்பேயில்லையே?".கண்களாலேயே அளவெடுத்து பார்க்க பொறிதட்டியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgULH6UX-H4wOiu6o6JkFlo9zo-gWGe0VtMauk8jeA7zQXgmtRs9pDxC_8ujjWRYjxoqRnApdB-DViqPWqzWJttXpA-jYLbCGL3puwrCzVJKyfHkBKZiy5ejSfHeakaPwFn3D9gJoIhS57-/s1600/04_peo_ch_asm990_hand.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="297" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgULH6UX-H4wOiu6o6JkFlo9zo-gWGe0VtMauk8jeA7zQXgmtRs9pDxC_8ujjWRYjxoqRnApdB-DViqPWqzWJttXpA-jYLbCGL3puwrCzVJKyfHkBKZiy5ejSfHeakaPwFn3D9gJoIhS57-/s400/04_peo_ch_asm990_hand.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
அவசரமாய் x கதிர் உபகரண கூடத்திலிருந்து உருவிக்கொண்டு வந்த ASM -990 (Advance survey meter) கருவித்தலைப்பை வைத்து மாலினியை புரட்டிப்புரட்டி பான்கிமூன் பத்து நிமிடங்களாக தடவிக்கொண்டிருந்தார்.கச்சைக்குள் கருவியை விட்ட போது சுதன் "சீபாய்" என்று தொடங்கி கெட்ட வார்த்தைகளை எழுதி திட்டியதை கண்டும் காணாததுபோல் கருமமே கண்ணாக இருந்தார்.எல்லாம் இடமும் பார்த்தாகிவிட்டது.அந்த ஒரு இடத்தை தவிர.யோசித்துக்கொண்டிருக்க நேரமில்லை.கண நேரம் தான்.பான்கிமூன் உள்ளாடையை விலக்கிவிட்டு கருவியை விட்டார்.<br />
<br />
"கீக் கீக் கீக் கீஈஈஈஈஈஈஈஈ"<br />
<br />
கருவியின் அலாரம் அலற சுதன் பந்தி பந்தியாக எழுதி திட்டிக்கொண்டிருந்தான்.மீற்றரில் "பீற்றா" கதிர்கள் சிக்கியிருந்தன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSFsH6q0NIuwAGgDAE77fpJI8gPlvBLH4HNNA4XBttvC50fGiEXhrizk1Ok9qdnIx89ZP80eCit7N6BOEZ1pYLSPRxC66Zq1J6IBKKPDvRxPwKAV4eV6vwGaKwb4KSiTXeM5ynxvzjO_j0/s1600/china-newspaper1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="246" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSFsH6q0NIuwAGgDAE77fpJI8gPlvBLH4HNNA4XBttvC50fGiEXhrizk1Ok9qdnIx89ZP80eCit7N6BOEZ1pYLSPRxC66Zq1J6IBKKPDvRxPwKAV4eV6vwGaKwb4KSiTXeM5ynxvzjO_j0/s400/china-newspaper1.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<b>23/05/2029 அன்று சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு பத்திரிகை செய்தி:</b><br />
<br />
இயந்திர பெண் விவகாரத்தில் சிங்கப்பூர் சிறப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூரில் வதியும் பொறியியலாளருக்கு பாதுகாப்பற்ற இலங்கை தயாரிப்பான இயந்திர பெண்ணை ஏமாற்றி திருமணம் முடித்து வைத்த தரகர் இலங்கை போலீசாரின் உதவியோடு கைது செய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய எந்தவொரு தமிழ் பெண்ணும் மறுக்கும் நிலை இலங்கையில் காணப்பட்ட போதும் சுதன் வீட்டார் பெருமளவிலான பணத்தை தரகு கூலியாக தருகிறோம் என ஆசை காட்டியதால் இந்த இயந்திர பெண்ணை வடிவமைத்து கட்டி வைத்ததாக தரகர் தெரிவித்தார்.30 ஆண்டுகால ஆயுட்காலமுள்ள அணு மின்கலம் இணைக்கப்பட்டிருந்த போதிலும் குளிரூட்டும் அமைப்பு வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெண்ணின் இயக்கம் சடுதியாக நின்றதே இந்த "குட்டு" அம்பலத்துக்கு வர காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது."மாலினியை" வடிவமைத்த மொறட்டுவை "மெக்கானிக்கல்" பீட மாணவர்களான "அலிபாய்" "கெமிக்கல் அலி" ஆகியோரையும் இலங்கை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதே நேரம் இயந்திரமாலினியை இயக்க உபயோகிக்கப்பட்ட Tritium பற்றரி முறையாக கவசமிடப்படாமையால் கதிரியக்க தாக்கத்தால் சுதனின் ஆண்மைக்கு பங்கம் உண்டாகியிருக்கலாம் என்றும்அஞ்சப்படுகிறது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-40036063178735266552013-04-26T02:37:00.000+09:002013-04-26T18:07:49.096+09:00"இஸ்ஸறா You all came தானே? Sir"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR1ngKPY0ttFK-9siuaTVjIO6oAWp7RxBHH0bst2y7yIhnyrAYQ1t9r-f8EJQ4dKeWw2_2Aa2BNATAVGIE3wt3rb06KXzNBkQhgXqqofmIq8qc5N70NS7GT7mc6tbpYShht2SB4XgshYRO/s1600/194938-header.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR1ngKPY0ttFK-9siuaTVjIO6oAWp7RxBHH0bst2y7yIhnyrAYQ1t9r-f8EJQ4dKeWw2_2Aa2BNATAVGIE3wt3rb06KXzNBkQhgXqqofmIq8qc5N70NS7GT7mc6tbpYShht2SB4XgshYRO/s640/194938-header.jpg" width="640" /></a></div>
<br />
நள்ளிரவை தாண்டிய வேளைகளில் சொய்சாபுரம் உறங்கிக்கொண்டிருந்தது.கட்டாக்காலி தெருநாய்களோடு இரவின் மைந்தர்களான குடுக்காரர்கள் மட்டுமே விழிப்போடு இருந்தனர்.அந்த மயான அமைதியை குலைப்பது போல் வாகனங்களில் வந்து குதித்த காவல்த்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஒரு வீட்டை சுற்றிவளைத்து கதவை தட்ட உள்ளே இருந்தவர்களின் தலைவன் பின்வழியால் இருந்த மதிலை தாண்டி ஓடும்படி கட்டளையை பிறப்பித்துவிட்டு மான் காரத்தேயை பாவித்து பறக்கிறான்.சிதறி ஓடிய அடிப்பொடிகளில் ஒரு அதீத புத்திசாலி செருப்பை கழற்றி வைத்து விட்டு குழாய் வழியாக கட்டிட கூரையில் ஏறி பதுங்கி கொள்ள ஆட்டம் சூடு பிடிக்கிறது.துப்பறிவில் ஸ்கொட்லண்யார்ட்டுக்கே சவால்விடும் நுண்மதியுள்ள இலங்கை போலீசார் காரிருளிலும் அந்த கரிய "பாட்டா செருப்பை" கண்டு பிடித்து மேலே ஒருத்தன் பதுங்கியிருக்க வேண்டும் என உய்த்தறிந்து பிடித்துவிட்டார்கள்.பிறகென்ன பிடிபட்டவனை கைத்தொலைபேசியில் இருந்து ஏனையவர்களுக்கு அழைப்பு எடுக்கும் படி சொன்னார்கள்.ஒரு குறோட்டன் செடிக்கு பின்னாலிருந்து நோக்கியா 3310 கதற தொடங்கியது.ஆனால் பத்து அழைப்பு போயும் உள்ளே ஒளித்திருந்தவன் அசரவில்லை.கடுப்பான காவல் ஒன்று அவனை வெளியே இழுத்துப்போட்டுவிட்டு ரேடியோவில் "சேர்! ஒருத்தன காட்டுக்க இருந்து பிடிச்சிருக்கிறம்.ஓவர்" என்று விறைப்பாக சொல்லி சல்யூட் அடிக்க முதலாவதாக பிடிபட்டவனுக்கு வயிற்றை கலக்கியது.மேலதிக போலீஸ் அணிகள் களத்தில் இறங்க தாக்குப்பிடிக்க முடியாமல் ஒவ்வொருத்தராய் சரணடைந்துவிட்டார்கள்.போலீஸ் தலைமை அதிகாரி முரட்டு குரலில் கேட்டார் "கம்பஸ் பெடியள் என்று சொல்லுறியள்.அப்ப ஏன்ரா ஓடினீங்கள்?".குழுவின் தலைவனுக்கு இப்படியான கேள்விகள் புதிதல்ல.கடந்தகாலங்களில் இதை விட சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்திருக்கிறான்.ஆனால் அன்று அவன் சொன்ன பதில் விசேடமானது & காலத்தால் அழியா புகழ் பெற்றது.<br />
<br />
"இஸ்ஸறா You all came தானே? Sir"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7HUYbfusmukQI4CL9Eh-Ld_nsfC3sl7tGkDdMsdz-fnm-lY7mSfRCdKgfHw_W3rK58vNxbi9scCahC7YhplqwPpZ1oRhlm6lv4P1brAr6uhXXdzFX5Zakf-Q9QQOUQVer2u-xnKl8gO2m/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7HUYbfusmukQI4CL9Eh-Ld_nsfC3sl7tGkDdMsdz-fnm-lY7mSfRCdKgfHw_W3rK58vNxbi9scCahC7YhplqwPpZ1oRhlm6lv4P1brAr6uhXXdzFX5Zakf-Q9QQOUQVer2u-xnKl8gO2m/s640/images.jpg" width="523" /></a></div>
<br />
<br />
விஞ்ஞானி கெமிக்கல் அலி குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து தெஹிவளைக்கு நகர்ந்த நேரம் அது.சிக்கலான கால கட்டம்.யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் தரைவழி துண்டிக்கப்பட்டிருந்ததால் மாதங்களுக்கு ஒருமுறையாவது கிடைக்கிற வீட்டுச்சாப்பாடும் இல்லாமல் தவித்திருந்தோம்.எங்கள் நிலையுணர்ந்த விஞ்ஞானி "30 பெடியள வீட்டுக்கு கூப்பிட்டா சிக்கல் வருமோ?" என்று கொஞ்சம் கூட யாழ்ப்பாணத்தனமா யோசிக்காமல் அழைத்துவிட்டார்.பெரிய அணியா கிளம்பிப்போனோம்.வீடு அடையாளம் பிடிபடாததால் அழைப்பை சசிக்கு போடும் படியாயிற்று.<br />
<br />
"டேய்! வாற வழியிலை River ஒண்டு Run பண்ணிக்கொண்டிருக்கும்.அத கடந்தா First ஆ வாற Two story building ல Up story தான் என்ர வீடு".<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYXJtBxPF6wBRio3vIdSCwhppa5tWNPGnJ7VRqLLBtQWnXn4aqd3S7H2ZuFFeaAeYg76GT-mdd8XehEZJdEmNtzq6ci24uMYFp8z8-r1N6WzutaiVQAalw5j66jxKcW8iolNBtHBPFKBI7/s1600/ClimbingCoconutTree.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYXJtBxPF6wBRio3vIdSCwhppa5tWNPGnJ7VRqLLBtQWnXn4aqd3S7H2ZuFFeaAeYg76GT-mdd8XehEZJdEmNtzq6ci24uMYFp8z8-r1N6WzutaiVQAalw5j66jxKcW8iolNBtHBPFKBI7/s640/ClimbingCoconutTree.jpg" width="531" /></a></div>
<br />
எங்கள் மட்டத்தின் வௌவால் மனிதன் வசந்தன் பகல் முழுக்க தூங்கி இரவு வேளைகளில் தான் விடுதியை விட்டு வெளிக்கிடுவார்.இருளை போர்வையாக்கி சுற்று வட்டாரத்திலிருக்கும் தென்னை,வாழை மரங்களை மொட்டை அடித்து விடியமுன் மீண்டுவிடுவார்.சாகச வீரருக்கு நெடிந்து ஒரு வளர்ந்த தென்னை நிறைந்த இளநீர்க்குலைகளோடு சவால் விடுத்துக்கொண்டிருந்தது.பலமுறை தோல்வியை சந்தித்திருந்த போதிலும் இறுதியாக உச்சியை அடைந்து குலைகளை பறித்து வெற்றிக்களிப்பில் கீழிறங்கிய போது துன்பியல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.கால் சறுக்கி மரத்தோடு வழுக்கி விழுந்த அலியப்பாவின் நெஞ்சு முழுக்க உராய்வுக்காயங்கள்.வைத்தியர் தந்த கருநீல நிற மருந்தை நெஞ்சுமுழுக்க பூசி திரிந்தவனை விசித்திரமாக பார்த்த சிங்களவர்களிடம் அலியப்பா சொன்னான்.<br />
<br />
"I hugged தென்னமராக் tree மச்சான்"<br />
<br />
சீனியர்களே இப்படி என்றால் அவர்களுக்கு வாய்த்த ஜூனியர்கள் லேசுப்பட்டவர்களாக இருப்பார்களா?.அவ்வகையில் பிரபலமானவர் "பண்ணாகம் தாசன்". றூமுக்குள் சோதனையிட வந்த போலீஸ்காறன் தாசனின் கட்டுப்பல் இருந்த நீர்க்குவளையை பார்த்து "குண்டா இருக்குமோ?" என ஐயப்பட செப்பியது தான் "சேர்! மகே Body parts எக்கக் தியன்னவா".கம்பியூட்டரை போடும்படி போலீஸ் பணித்தபோது பாழாய்ப்போன "பிளக்" அடம்பிடித்தது.வயரை ஆட்டியபடி பண்ணாகம் தாசன் "சேர்! கறண்ட் இன்னவத" என்று கேட்டு வைக்க அதிர்ச்சியடைந்த காவல்த்துறையினர் சற்றும் தாமதிக்காது "மகே அம்மே! அபி யெனவா" என்றபடி ஓடிப்போனார்கள்.<br />
<br />
உட்கார்ந்து இருந்து சிந்திக்கும் போது சசியின் "நான் படிக்க வரேலை,வேலைத்திட்டத்துக்கு வந்ததனான்" சிரிப்பு ரவுடியின் "நாங்கள் இயக்கத்துக்கு அடிச்ச ஆட்கள்" கமல்சின் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" மற்றும் "எதெண்டாலும் சரிதான்" ஜேன்கொன்சாலின் "நான் சொல்ல மாட்டனே" சௌந்தரின் "எனக்கு ஒன்னுமே வெளங்கலடா" போண்ற பல பிரபலமான வாக்கியங்கள் நினைவிற்குள் வருகின்றன.ஆயினும் "இஸ்ஸறா You all came தானே? Sir" க்குள்ள புகழும் பிரபல்யமும் ஏனையவற்றுக்கு இல்லை.மும்மொழியையும் ஒரு வாக்கியத்தில் உள்ளடக்கி நிற்கும் "இஸ்ஸறா You all came தானே? Sir" ஆனது காலத்தால் அழியாததாகும்.அந்த மகுட வாக்கியத்தை உதிர்த்த பன்மொழிவித்தகர் "கமல்ஸ் aka கமலரூபன்" இன் புகழ் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் வாழும் நாள் வரை வாழும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-82403261509445904472013-04-07T12:32:00.001+09:002013-04-08T02:13:33.728+09:00எர்வின் ரோமல் The Desert Fox<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb8rDIOWy4cRJRlKhJwO6MP2vNMQ9L7dw_UKa8o7CYNRGIEkx9vomGNPv8GqbU8mA6tX_rQyFsfMlAiU5H_kgTMqf1feNSwAhffJQAr53oWQB2XgcNKHwCl5YQ0nm1OmtkTAllxdN4PDOj/s1600/Erwin_Rommel_by_AlixofHesse.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb8rDIOWy4cRJRlKhJwO6MP2vNMQ9L7dw_UKa8o7CYNRGIEkx9vomGNPv8GqbU8mA6tX_rQyFsfMlAiU5H_kgTMqf1feNSwAhffJQAr53oWQB2XgcNKHwCl5YQ0nm1OmtkTAllxdN4PDOj/s400/Erwin_Rommel_by_AlixofHesse.png" width="240" /></a></div>
<br />
நாசி ஜெர்மனி தளபதிகள் பற்றி எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது தற்செயலானது.2 ஆம் உலகப்போர் ஆவணப்படம் ஒன்றை பார்வையிட்டபோது தூண்டப்பட்ட ஆவல் நீடித்து சங்கிலிக்கோர்வையாக நூற்றுக்கும் குறையாத விபரணபடங்களை பார்ப்பதில் முடிந்தது.நவீன போரியலில் எத்தனையோ பிரசித்தமான தளபதிகள் வந்த போதிலும் ஜெர்மானிய இரண்டாம் உலகப்போர் தளபதிகளுக்கு ஒருவரும் ஒப்பாகமுடிவதில்லை.அதற்கான காரணங்கள் தெளிவானவை.மனித நாகரிகம் கடந்து வந்த யுத்தங்களிலேயே மிகப்பெரியதும் கொடூரமானதுமான இரண்டாம் உலகப்போரை நடத்திய இவர்கள் ஜெர்மனி தோற்றுப்போயிருந்த முதலாம் உலகப்போரில் இளநிலைத்தளபதிகளாக இருந்தவர்களிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள்.அதிகரித்த எதிரியின் ஆட்பலத்தால் மீண்டும் ஜெர்மனிக்கு தோல்வி நேராதிருக்க உயர் நுட்ப படைக்கல பிரயோகத்தோடு வித்தியாசமான முறையில் யுத்தம் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற நாசி தலைமைப்பீட சிந்தனைக்கு அமைவாக திட்டங்களை வகுத்தவர்கள்.அவ்வகையில் எரிக் வென் மன்ஸ்ரைன்,குடேரியன் ஆகிய நட்சத்திர தளபதிகள் கிழக்கு முனையில் ரஸ்யாவோடு போரிட்டுக்கொண்டிருக்கையில் தெற்கே தனியாக நின்று பிரித்தானியாவை நெருக்கிய எர்வின் ரோமல் தனித்துவமானவர்.</div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCUV0Z-AHAu1M1kbgrh4ji4hw3UneZw_mLr-SwcC0gjVoGRCiLPTJe-8j36D4xaWsW-NbufJFcICWB6-Tz4J4V4hJSV1wpTWH9xEArstwnObE_ooLZtgJEOwyad2n-sJ_5dm-ZiW2zw7Ff/s1600/erwin-rommel-inspecting-defences-in-franc-01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="358" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCUV0Z-AHAu1M1kbgrh4ji4hw3UneZw_mLr-SwcC0gjVoGRCiLPTJe-8j36D4xaWsW-NbufJFcICWB6-Tz4J4V4hJSV1wpTWH9xEArstwnObE_ooLZtgJEOwyad2n-sJ_5dm-ZiW2zw7Ff/s400/erwin-rommel-inspecting-defences-in-franc-01.jpg" width="400" /></a></div>
<br />
ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் ஆதிக்கத்தில் கொண்டு வரும் பொருட்டு 1940,ஜூன் மாதம் ஆபிரிக்காவில் யுத்தத்தை தொடங்கிய முசோலினிக்கு அடி மேல் அடியாக விழுந்துகொண்டிருந்தது.பிரித்தானியர் கொலனி நாடுகளிடமிருந்து அணியணியாக ஆட்களை போருக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.பிரமாண்டமான ரோயல் நேவி படைகளுக்கு இடைவிடாது ஆயுதங்களை விநியோகித்துக்கொண்டு இருந்தது.நண்பனின் படைகள் படும் கஸ்டத்தை கண்டு பொறுக்க முடியாத ஹிட்லர் பிரான்சை துவம்சம் செய்து திரும்பியிருந்த எர்வின் ரோமலை உதவிக்கு போகும்படி பணித்தார்.அன்றிலிருந்து ஒரு தனிமனிதன் சிறு படையோடு ஒரு பேரரசையே ஆட்டம் காணவைத்த வரலாறு ஆபிரிக்க களமுனையில் ஆரம்பமானது.இரண்டாம் உலகப்போரின் ஆபிரிக்க களமுனை பிரித்தானியருக்கு வாழ்வா சாவா போராட்டம்.ஜெர்மனிக்கோ இரண்டாம் முக்கியத்துவமுள்ள முனை.பாபரோசா நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மில்லியன் ராணுவ வீரர்களுக்கே விநியோகம்,வான் ஆதரவு என்பன முக்கியமாக தரப்பட வேண்டும் என ஜெர்மன் தலைமைப்பீடம் நினைத்ததால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு போரிட வேண்டிய கட்டாயம் ரோமலுக்கு இருந்தது.</div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwWvZPeYLW1OSWXTFcAV4eROD5mRzaxCaitzr-0DxXMX8O3tW-1V2MPD9JEMQ9k_ftJvDbfxEvRLAz-WZ2EmCg8kTeF6XLYmViR_iM5bC0a3YZrFFVUD5zH71C4Qqk_s0x31AC2XcOtY70/s1600/tumblr_ll0sj9q7M31qjztbyo1_500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwWvZPeYLW1OSWXTFcAV4eROD5mRzaxCaitzr-0DxXMX8O3tW-1V2MPD9JEMQ9k_ftJvDbfxEvRLAz-WZ2EmCg8kTeF6XLYmViR_iM5bC0a3YZrFFVUD5zH71C4Qqk_s0x31AC2XcOtY70/s400/tumblr_ll0sj9q7M31qjztbyo1_500.jpg" width="307" /></a></div>
<br />
50 000 ஜெர்மானிய சிறப்பு படை வீரர்களும் நொந்து போன இத்தாலி வீரர்களுமாய் சேர்ந்து வட ஆபிரிக்காவில் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என இறுமாந்திருந்த பிரிட்டிஸ்காரர்கள் அடுத்து நடந்தவை கண்டு அதிர்ந்து போனார்கள்.எதிரியின் முன்னரங்களை உடைத்து மிகவேகமாக முன்னேறுவது,திருப்பி தாக்க அவகாசம் தராது விரட்டுவது என ரோமலின் தாக்குதல்கள் எல்லாம் புதுவிதமாய் இருந்தன.ஜெர்மானிய டாங்கிகள் தான் ரோமலுக்கு வெற்றியை கொடுக்கின்றன என கருதி தடித்த கவசம் போர்த்திய மார்க் வகை டாங்கிகளை ஆயிரக்கணக்கில் தருவித்தார்கள்.மிகுந்த உயர் வேகத்தில் குண்டுகளை சுடும் 88 mm விமான எதிரிப்பு பீரங்கிகளை "U" வடிவில் தரையில் குழிவெட்டி நிலைப்படுத்தி விட்டு இலகு ரக தாங்கிகளால் போக்கு காட்டி அந்த பிரிட்டிஸ் கவசங்களை உள்ளிழுத்து முழுமையாக அழித்தொழித்தார் எர்வின் ரோமல்.தந்திரமிக்க ரோமலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய தளபதிகள் அவரை "Desert Fox" என்று அழைக்கத்தொடங்கினார்கள்.உயர் வேக விமான எதிர்ப்பு குண்டுகளின் கவசங்களை துளையிடும் திறன் குறித்து எவரும் அந்நாட்களில் சிந்தித்திருக்கவில்லை.</div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEEikEux-BGF6b2JDhuhP_GNvIgusfQydhjKRBaCoN6SMZxsvGmtMdbZncx9vpSOKCCYR5jHr7s4o5brBAFcMvcoBjVbp6xDs8i9-RrxtVg5pZCIzByREGvWM1_XgxddHnwCQlPUhHiA_k/s1600/tumblr_m4g82p0L0R1qc0h08o1_500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="221" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEEikEux-BGF6b2JDhuhP_GNvIgusfQydhjKRBaCoN6SMZxsvGmtMdbZncx9vpSOKCCYR5jHr7s4o5brBAFcMvcoBjVbp6xDs8i9-RrxtVg5pZCIzByREGvWM1_XgxddHnwCQlPUhHiA_k/s400/tumblr_m4g82p0L0R1qc0h08o1_500.jpg" width="400" /></a></div>
<br />
பாலைவன கவசபோர்களின் போது எழும் புழுதி நகரும் அணிகளில் கனதியை சொல்லி விடும்.இன்னொரு முறை ரோமலின் திட்டப்படி முன்வரிசையில் டாங்கிகளும் பின்னால் மரக்கிளைகளை கயிறு கட்டி இழுத்து வந்த நூற்றுக்கணக்கான டரக்குகளுமாய் சென்ற போலித்தாக்குதல் அணி எழுப்பிய புழுதியின் கனதியை கண்ட பிரித்தானியர் பிரதான எதிர்த்தாகுதலை அதை நோக்கி தொடுத்தார்கள்.அதே நேரம் சற்றும் எதிர்பாராமல் வேறொரு முனையில் தொடுக்கப்பட்ட கவச தாக்குதல் பிரித்தானியருக்கு பேரழிவை உண்டாக்கியது.ரோமல் Tobruk நகரை காத்துநின்ற 33 000 நேச படைகளை சிறைப்பிடித்த போது ஹிட்லர் "Field Marshal" பதவி உயர்வு வழங்கினார்.எதிரியை முன்னரங்கு அமைத்து ஓய்வடைய விடக்கூடாது என்பதில் ரோமல் எப்போதும் குறியாக இருப்பார்.தன்னிடம் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் தாக்குதல் நடத்துவார்.இதனால் பிரித்தானியரால் சிறிதளவேனும் எதிரியின் நகர்வுகளை கணிக்க முடியாமல் வரிசையாக தோல்விகளை தழுவினார்கள்."சூரிய மறையாத சாம்ராஜ்யத்தின் படைகள் ஜெர்மனியின் உபகளமுனையில் இவ்வளவு அடி வாங்குவது எவ்வளவு அவமானம்?" என பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுந்தது.அதிருப்தியாளர்களுக்கு வின்ஸ்டன் சேர்ச்சில் அமைதியாக பதிலளித்தார் "<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">We have a very daring and skillful opponent against us, and, may I say across the havoc of war, a great General".</span></div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4jxJ7d19BeqBha69OmjSO7V5rapMrapJSGiWtJzDGjqaZqa0RpFMW8C2lrgzc3ulDuSAw1p21vNZaHFU92KOhe50e9iVryvUigd0XFdH-Dhxh4qsY3Ty5xPDG7Vc3XaZjqU5lCfPw4A_m/s1600/tumblr_mdk7ioMjZT1r7xvs4o1_500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4jxJ7d19BeqBha69OmjSO7V5rapMrapJSGiWtJzDGjqaZqa0RpFMW8C2lrgzc3ulDuSAw1p21vNZaHFU92KOhe50e9iVryvUigd0XFdH-Dhxh4qsY3Ty5xPDG7Vc3XaZjqU5lCfPw4A_m/s400/tumblr_mdk7ioMjZT1r7xvs4o1_500.jpg" width="283" /></a></div>
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span><span style="background-color: #fafafa;"><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">மிக நேர்த்தியாக சீருடை அணிந்து சவரம் செய்த முகத்தோடு முன்னரங்கில் உலாவரும் எர்வின் ரோமலை பார்த்ததுமே வீரர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும்."வரலாறு முக்கியம்" என்று அந்த நாளிலேயே நினைத்தாரோ என்னவோ கையடக்க லைக்கா கமெரா மூலம் அடிக்கடி களக்காட்சிகளை சுட்டுக்கொண்டு இருப்பார்.வெற்றி மேல் வெற்றி குவித்து முன்னேறி 1942,June 21 இல் "</span></span><span style="background-color: white; color: #363636; font-family: Arial, 'Times New Roman', 'Times serif'; font-size: 14px; line-height: 23.03125px; text-align: justify;">El Alamein" </span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">என்ற இடத்தில் முன்னரங்கை அமைத்து </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">விட்டு </span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">எகிப்தை முழுமையாக கைப்ப</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ற்றுவதன் மூலம்</span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"> சுய</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஸ்</span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"> கால்வாயை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">இறுதி நடவடிக்கையை மேற்க்கொள்ள தேவையான விநியோகங்களை அனுப்பும் படி தலைமைப்பீடத்துக்கு அனுப்பிய கோரிக்கை சிக்கலடைந்து கொண்டிருந்த கிழக்கு போர்முனையினை காரணமாக முக்கியத்துவமற்றதாக நிராகரிக்கப்பட்டது.</span></div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyw4PCeH1TtYZnjjp_zM0vWY_eW1tjVwFgzHqMyv0bHh_qgEK-GNW-ssHWx0aJZ03Q9qYC0V-VkErEIPPbi2IEEW55Xr48LxmBvTXKNKuqgCb6E6X6VpndiSXHFE6Vette6ZpRG5KdyhcZ/s1600/tumblr_m9qub9PwHA1rwatkjo1_500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyw4PCeH1TtYZnjjp_zM0vWY_eW1tjVwFgzHqMyv0bHh_qgEK-GNW-ssHWx0aJZ03Q9qYC0V-VkErEIPPbi2IEEW55Xr48LxmBvTXKNKuqgCb6E6X6VpndiSXHFE6Vette6ZpRG5KdyhcZ/s400/tumblr_m9qub9PwHA1rwatkjo1_500.jpg" width="293" /></a></div>
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">மறு பக்கத்தில் சேர்ச்சில் "</span><a class="mw-redirect" href="http://en.wikipedia.org/wiki/Bernard_Montgomery" style="background-color: white; background-image: none; color: #0b0080; font-family: sans-serif; font-size: 13px; line-height: 19.1875px; text-decoration: none;" title="Bernard Montgomery">Bernard Montgomery</a>" <span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">என்ற புதிய தளபதியை நியமித்திருந்தார்.</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">தடையில்லா ஆள்,ஆயுத விநியோகத்தை பெற்ற மொண்டகமூரி முதல் தடவை சண்டையை தொடக்கி ரோமலிடம் அடி வாங்கினார்.ஆயினும் ரோமல் பாதிக்கப்பட்ட உடல் நிலை காரணமாய் தாயகம் திரும்பியிருந்த போது தொடங்கிய இரண்டாம் "</span><span style="background-color: white; font-family: sans-serif; font-size: 13px; line-height: 19.1875px;">El Alamein"</span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">யுத்தத்தில் அதிஸ்டம் </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">மொண்டகமூரி </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">பக்கம் இருந்தது.</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ரோமல் இரு தினங்களின் பின்னர் மீள வந்த போதும் நிலவரம் கை மீறி விட்டது.இதே நேரம் ரஸ்யாவை வென்ற பின்னர் பிரிட்டிஸ் கூட்டணியை பார்த்துக்கொள்ளலாம் என கருதிய ஹிட்லரும் முசோலினியும் ஆபிரிக்க களமுனையை மூடிவிட முடிவு செய்தார்கள்.மிகப்பெரியதாய் உருவெடுத்திருந்த ஆபிரிக்க நேச கூட்டுப்படைகளோடு மோத விடாமல் ரோமலை கட்டாய சுகவீன விடுமுறையில் ஹிட்லர் அனுப்பி வைத்தார்.ஜெர்மன் மக்கள் மனதில் போர்க்கள நாயகனாக வீற்றிருந்த எர்வின் ரோமல் கொல்லப்படுவதன் /சிறைப்படுவதன் மூலம் போர் எழுச்சி குறைவதை ஹிட்லர் விரும்பவில்லை எனச்சொல்லப்படுகிறது.</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">இவ்வாறு </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஒரு தனி மனிதனின் ஆற்றலால் ஜெர்மனியின் கைக்கு அருகே வந்த வெற்றி </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">அடுத்து வந்த சில மாதங்களில்</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"> 200,000 அச்சு படைகளின் சரணடைவோடு கை நழுவிப்போனதுமில்லாமல் மேற்கு களமுனையை எதிர்கொள்ள மூலகாரணமாயும் அமைந்தது.</span></div>
<div style="text-align: left;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTtjVqOKBa7Q3VZ-PxI9S5ayor1R_etRvdXr-LKQ0OnudnwBow7cnEgrpVWVBjVzJP7j1TXAcfOuV-HDN_zgIQJRuoIGlZ6hKiV_Fjiyl9h55MKelle11OeIQvrqtcreX7WXrUZ40RTIyd/s1600/4_midi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTtjVqOKBa7Q3VZ-PxI9S5ayor1R_etRvdXr-LKQ0OnudnwBow7cnEgrpVWVBjVzJP7j1TXAcfOuV-HDN_zgIQJRuoIGlZ6hKiV_Fjiyl9h55MKelle11OeIQvrqtcreX7WXrUZ40RTIyd/s400/4_midi.jpg" width="220" /></a></div>
<br /></div>
<div style="text-align: left;">
ERWIN ROMMEL-சில சுவாரசியமான குறிப்புக்கள்</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஒரு தடவை ஜெர்மனி பத்திரிகை குழு ஒன்று ரோமலை பேட்டியெடுக்க ஆபிரிக்காவுக்கு சென்றிருந்தார்கள்.வீரர்கள் சுட்டிக்காட்டிய திசையில் ஒருவர் எண்ணெய் படிந்த ஆடைகளோடு டாங்கி ஒன்றின் கீழ் படுத்திருந்து பழுது பார்த்துக்கொண்டு இருந்தாராம்."தளபதி ரோமலிடம் பேட்டி எடுக்க வேண்டும்.எங்கே இருக்கிறார் எனச்சொல்ல முடியுமா? "என கேட்க "பேட்டியை ஆரம்பிக்கலமா?" என்றபடி வெளியே வந்தவரைக் </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">கண்டு பத்திரிகையாளர்களுக்கு </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஒரே ஆச்சரியம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஆபிரிக்க களமுனையில் ஒரு சுற்றி வளைப்பு தாக்குதலை மேற்கொள்ள 150 மைல்கள் தூரம் டாங்கிகள் பயணிக்க வேண்டியிருந்தது.50 கள் செல்ல தேவையான</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"> எரிபொருளே கையிருப்பில் இருந்தது.மீது தூரம் பயணிப்பது எப்படி என்று இளநிலை தளபதிகள் கேட்க "தாக்க வரும் பிரிட்டிஸ் கவசங்களின் எரிபொருளை பயன்படுத்துங்கள்" என பதில் கிடைத்தது.</span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">பிரான்ஸ் மீதான போரின் போது ரோமலின் கவசப்பிரிவு "Ghost Division" என அழைக்கப்பட்டது.அப்பிரிவு </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஒரே</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"> நாளில் 320km முன்னேறிய சாதனை இன்று வரை உடைக்கப்படவில்லை.கட்டளைப்பீடம் அடிக்கடி விபரம் கேட்டு தொந்தரவு செய்ததால் தகவல் தொடர்பை துண்டித்துவிட்டு போரிட்டார்.உயர் அதிகாரிகள் இச்செயல் தொடர்பில் கோபித்த போதிலும் ஹிட்லர் "நீ எங்கே இருக்கிறாய் என அறியாது நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்" என ரோமலிடம் சொன்னாராம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஆபிரிக்க களமுனையில் பிரிட்டிஸ் கமாண்டோ அணியினர் ரோமலை கொல்வதற்கு முன்னரங்கத்திலிருந்து 200 மைல் பின்னாலிருந்த தலைமைப்பீடம் மீது தாக்கினார்கள்.அவர்</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"> அரிதான சந்தர்ப்பங்கள் தவிர எப்போதுமே முன்னரங்கு மிக சமீபமாகவே இருப்பது அவர்களுக்கு தெரியாது.</span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">முதலாம் உலகப்போரில் கப்</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">டன் தரநிலையில் இருந்த ரோமல் 3 தடவை காயப்பட்டார்.குண்டுகள் தீர்ந்த நிலையிலும் 3 பிரெஞ்சு வீரர்களை துப்பாக்கி கத்தியால் </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">தாக்கியது, 9000 </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">இத்தாலி வீரர்களை சிறைப்பிடித்த போரில் பங்கேற்றது போண்றவற்றிற்காக </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">ஜெனரல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய </span><span style="background-color: white; color: #363636; font-family: Arial, 'Times New Roman', 'Times serif'; font-size: 14px; line-height: 23.03125px; text-align: justify;">"Pour le Merite" </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">விருது கிடைத்தது.தனது முதல் உலகப்போர் அனுபவக்களை கொண்டு எழுதிய </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">"Infantry attacks</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">" </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">என்ற புத்தகம் </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">மிகப்பிரபலமானது.</span><br />
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-680-1WkbTRihhPWB8stn4F-iqT5ZEceo2WVGpCnDC4_MV_lFoy4RPSRR4J5BlESil75lUXAByu3l-HTqMKbKw9WQjntqKaSp7ZPKxkJDW05HPLIYsprM9EvxGM8QY2SYgQtO-pfEXGQz/s1600/Bundesarchiv_Bild_183-J30704,_Ulm,_Beisetzung_Rommel.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-680-1WkbTRihhPWB8stn4F-iqT5ZEceo2WVGpCnDC4_MV_lFoy4RPSRR4J5BlESil75lUXAByu3l-HTqMKbKw9WQjntqKaSp7ZPKxkJDW05HPLIYsprM9EvxGM8QY2SYgQtO-pfEXGQz/s400/Bundesarchiv_Bild_183-J30704,_Ulm,_Beisetzung_Rommel.jpg" width="400" /></a></div>
<br />
<br /></div>
<div style="text-align: left;">
<span style="background-color: #fafafa;"><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">1944,பிரான்ஸ் கரையோரமாக நேச நாடுகளின் கடல்வழி தரையிறக்கத்தை தடுக்</span></span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">கும் </span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">அட்லாண்டிக் சுவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த ரோமல் "ஜெர்மன் விமானப்படை பலவீனப்பட்டிருக்கும் நிலையில் பொதுவான இடத்தில் கவசப்பிரிவை நிறுத்தி தேவைக்கேற்ப கடற்கரைகளை நோக்கி நகர்த்துவது சாத்தியமற்றதால் அவை கடலுக்கு சமீபமாகவே நிறுத்தப்பட வேண்டும்" என்று சொன்னார்.அந்த யோசனையும் ஹிட்லரால் புறக்கணிக்கப்பட்டது.இறுதியில் தரையிறக்கம் நடந்த போது அவர் கணிப்பிட்டவாறே நேச விமானப்படை டாங்கிகளை முடக்கிப்போட்டன.</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">தரையிறங்கிய படையினருக்கு எதிரான போரின் 40வது நாள்,</span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">17 July 1944 </span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">அன்று </span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">காரில் பயணித்துக்கொண்டிருந்த போது பிரித்தானிய விமானப்படை தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWlXMcsYr1Yw78JLfAmDNsccy5jO-xX0n50-dAxG867BBxjE5hsYY74C6vb7EZlZDEBLumesrcq4xsZNBZv7OBkqoA_7YwNblCUIgoz554alPVncaQRgQFhua6H7zEyxgoq5o46oc0H-KQ/s1600/Bundesarchiv_Bild_146-1972-025-10,_Hitler-Attentat,_20._Juli_1944.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWlXMcsYr1Yw78JLfAmDNsccy5jO-xX0n50-dAxG867BBxjE5hsYY74C6vb7EZlZDEBLumesrcq4xsZNBZv7OBkqoA_7YwNblCUIgoz554alPVncaQRgQFhua6H7zEyxgoq5o46oc0H-KQ/s400/Bundesarchiv_Bild_146-1972-025-10,_Hitler-Attentat,_20._Juli_1944.jpg" width="400" /></a></div>
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span>
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"></span><br />
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">3 நாட்கள் கழித்து 20,அன்று உலகையே அதிரவைத்த அந்த குண்டு வெடிப்பு சம்பவம் கிழக்கு போர்முனை கட்டளைப்பீடமான "Wolf's Lair" இல் நடந்தது.வரைபட மேசையின் கீழ் ஹிட்லருக்கு எதிரான அதிகாரிகளால் வைக்கப்பட்ட சூட்கேஸ் குண்டு வெடித்து சிதறி நான்கு உயிர்களை குடித்தது.ஹிட்லர் கால்சட்டை மட்டும் கிழிந்து போக காயங்கள் எதுவுமின்றி தப்பிக்கொண்டார்.திட்டத்துக்கு துணைபோன 4980 பேர் சுட்டும் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டார்கள்.பிரதான குற்றவாளிகள் ரோமலின் நெருங்கிய முதலாம் உலகப்போர் கால நண்பர்கள்.பீல்ட் மார்சல் ஒருவரின் ஆதரவு இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி ரோமலை சந்தித்து உதவி கேட்டிருந்தார்கள்."ஹிட்லரை கொல்வதில் உடன்பாடில்லாத போதும் அவர் செய்து கொண்டிருக்கும் குற்றங்களுக்காக நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என ரோமல் சொல்லியதாக" இருந்த எதிர்ப்பு குழுவின் பதிவுகள் சிக்க </span><span style="background-color: white; font-family: sans-serif; font-size: 13px; line-height: 19.1875px;">14 October 1944 </span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">அன்று காயங்களிலிருந்து முழுமையாக மீளாமல் போராடிக்கொண்டிருந்தவரிடம் வந்தவர்கள் மரணிக்க இரண்டு தெரிவுகளை வழங்கினார்கள்.ஒன்று தரப்படும் சயனைட்டை உட்கொள்வது.இரண்டாவது ராணுவ நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனையை ஏற்பது.தரப்பட்ட பத்து நிமிட அவகாசத்தில் மனைவி ,மகனிடம் விடைபெற்ற அந்த ஒப்பற்ற வீரன் தனது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடமொன்றில் சயனைட் வில்லையை மென்று மரணத்தை தழுவிக்கொண்டார்.</span><br />
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">இன்று உலகில் உள்ள எந்த ராணுவத்திலும் எர்வின் ரோமல் பற்றி சொல்லாமல் போர்வீரர்களுக்கு கவச போரியல் பற்றி கற்பிக்க முடிவதில்லை.போரில் சிறைப்படும் கைதிகளை பராமரிக்கும் விதம் பற்றி சொல்லும் போதும் உதாரணமாக காட்டப்படுபவர்களில் ரோமல் நிச்சயம் இருப்பார்.</span><span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">அதைவிட </span><span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">நாசி ஜெர்மனியின் போர்க்குற்றங்களை மீறியும் பலரால் இன்றளவும் நினைவு கூரப்படுவதானது எர்வின் ரோமலுக்கு கிடைத்த "</span><a href="http://en.wikipedia.org/wiki/Field_Marshal_(Germany)" style="background-color: #f9f9f9; background-image: none; color: #0b0080; font-family: sans-serif; font-size: 12px; line-height: 17.265625px;" title="Field Marshal (Germany)">Generalfeldmarschall</a>" <span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;">பதவியிலும் பெரிய கௌரவம் எனலாம்.</span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD1WMcszyRtslIrl2tCAZ_Mma915fSzP7T4VwtCygMnjFr1gE4mt9nA8cNTIYI8b66JUoX5q123w9EqnaRaZ-O698ZhFM_fEDITN1_5lm69x6XY90viLVTbkqtfhFD4hDJDlHJ2OTQoXpL/s1600/492px-Erwin_rommel_death.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD1WMcszyRtslIrl2tCAZ_Mma915fSzP7T4VwtCygMnjFr1gE4mt9nA8cNTIYI8b66JUoX5q123w9EqnaRaZ-O698ZhFM_fEDITN1_5lm69x6XY90viLVTbkqtfhFD4hDJDlHJ2OTQoXpL/s320/492px-Erwin_rommel_death.jpg" width="262" /></a></div>
<span style="color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="background-color: #fafafa; color: #333333; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-53149375001948085252013-03-13T14:20:00.001+09:002013-03-13T20:09:07.959+09:00வழக்கிட்ட காரிகை-05<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTcLNENcfVACRHZYbUei18UhvvOBeS4hTaojH2QkymJ_ieomMEo94uOlYlVGFZATGkcCEOL73toIA8lxM5YW1M6UDz81-pAXSaxkvswMMRxWJ231Fe3-f71KDVNeFg00ICXUhZmoBnvq0M/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTcLNENcfVACRHZYbUei18UhvvOBeS4hTaojH2QkymJ_ieomMEo94uOlYlVGFZATGkcCEOL73toIA8lxM5YW1M6UDz81-pAXSaxkvswMMRxWJ231Fe3-f71KDVNeFg00ICXUhZmoBnvq0M/s640/images.jpg" width="640" /></a></div>
<br />
காவல்துறை நிலையத்தில் உம்சாண்டியின் சைக்கோ தந்தை கொடுத்த "கொலை மிரட்டல்" முறைப்பாட்டை ஏற்று என்னையும் அலியப்பாவையும் பிடித்து செல்லவென நான்கு போலீசார் காலை 7 மணிக்கெல்லாம் பல்கலை வாசலில் வந்திறங்கிவிட்டனர்.இடியே விழுந்தாலும் காதருகே கிளைமோர் வெடித்தாலும் காலை 8.30க்கு பின்னரே தூக்கம் கலையும் நானும் சன்ராவும் நடப்பதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தோம்.காவல்த்துறையை உள்ளே அனுப்ப முடியாது எனக்கூறித்தடுத்த பல்கலைக்கழக காவலர்கள் எம்மை பிடிக்கவென விடுதிக்குள் இறங்கினார்கள்.ஆனால் எமது அதிஸ்டம் அவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.சில மாதங்களுக்கு முன் நடந்த உள்மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணை போயிருந்த அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கடுப்பில் இருந்தார்கள்.தமது ஆதிக்க பகுதியான விடுதிக்குள் நுழைந்து இரு மாணவர்களை அழைத்துச்செல்வதை விரும்பாமல் விரட்டிவிட்டார்கள்.நடந்தது எதுவுமே அறியாமல் வெளியே வந்து விடயம் தெரிந்து அதிர்ந்து போனோம்.விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிந்திருந்தது.அரை விசரன் வணிகதுங்க கூப்பிட்டு கடிந்து கொண்டான்.மதிய வேளை அவசரமாய் 7ஜி குழுமம் கூடியது.மீள காவல்த்துறை வர முதல் நாமாகவே சென்று விடுவது நல்லது என முடிவானது.அடுத்த அரை மணிநேரத்தில் காவல் நிலையத்தில் நின்றோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiijZQvj_3MLanI25zBQWh-hKhlf0V0soJ9b0HYOg53KTDmH4mKSCl_vQ5sa8Nr7wvUd0mujHmGcrUO02EKp7h6zj-cIulhcMJyZNkNSTmbPCLMNVvH4oKxkaf4PpQfcdK-YjesotBX9AYW/s1600/Arrest1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiijZQvj_3MLanI25zBQWh-hKhlf0V0soJ9b0HYOg53KTDmH4mKSCl_vQ5sa8Nr7wvUd0mujHmGcrUO02EKp7h6zj-cIulhcMJyZNkNSTmbPCLMNVvH4oKxkaf4PpQfcdK-YjesotBX9AYW/s320/Arrest1.jpg" width="320" /></a></div>
<br />
<br />
முறைப்பாடு ஒரு தாளின் இரண்டு பக்கங்களிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது.தமிழே தெரியாத நிலைய பொறுப்பதிகாரி உள்ளீட்டை "பெண் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வீடு புகுந்து கொலை மிரட்டல்" என எழுதி கீழே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.அருகே இருந்த பெண் பொலீஸுக்கு உம்சாண்டியின் தந்தை கையூட்டு கொடுத்திருக்க வேண்டும்.எங்களை பிடித்து உள்ளே போட வேண்டும் என அடிக்கடி பொறுப்பதிகாரிக்கு சொல்லிக்கொண்டு இருக்க உசாரான அலியப்பா அகலமான வாயை திறந்து புன்னகைத்தபடி வரிக்கொரு "சேர்" போட்டு குழைய தொடங்கினான்.அந்த புன்னகையில் மயங்கிய பொறுப்பதிகாரி முறைப்பாட்டை கையில் கொடுத்து மொழிமாற்றி சொல்லும் படி பணித்தார்.அதை தகப்பனார் சொல்லச்சொல்ல மகள் எழுதியிருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்டோம்.பலவிதமான குற்றச்சாட்டுக்கள் நிரம்பியிருந்த அவ்முறைப்பாட்டில் இறுதிப்பந்தி எம்மை அவசரகால சட்டத்தில் பிடித்து போடக்கூடியவகையில் வடிக்கப்பட்டிருந்தது."வட பகுதியை சேர்ந்த தீவிர நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியப்படும் இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என்றிருந்த அந்த வரிகளை அலியப்பா தயங்கி தயங்கி மொழிமாற்றி சொல்லிவிட்டு பொறுப்பதிகாரியை பார்த்து "சேர்ர்ர்ர்ர்ர்ர்" என்று இழுத்தான்.எம்மவர்களின் தனிப்பட்ட விரோதத்துக்காக போட்டுக்கொடுக்கும் இயல்பை பலதடவை கண்டதாலோ என்னவோ பொறுப்பதிகாரி இறுதி வரிகளை படித்தவுடன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.ஜெயவர்த்தன பல்கலையில் பயின்றிருந்த அவர் நடந்திருக்கக் கூடியதை சரியாக ஊகித்திருப்பார் போலும்.நீண்ட பிரசங்கம் ஒன்றை நடத்தி "நான் என்றதால் தப்பித்தீர்கள்.வேறு யாராவது என்றால் இப்படி எழுதியிருப்பதைப்பார்த்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.கவனம்" என்று முடித்து செல்ல அனுமதித்தார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnV9Grxa1V6mMcsK5e2hyFbu7pROLECbtuEdekoWGth_IMAnenx2J4AXCaBgONs_QiEoCZ6JMtPPVzKkfsatf4mZNVaNw1pFtqEsJjjibQazn-1FdYcq6D1Zy1RTFeUh5Fon_xFQSn0hKQ/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnV9Grxa1V6mMcsK5e2hyFbu7pROLECbtuEdekoWGth_IMAnenx2J4AXCaBgONs_QiEoCZ6JMtPPVzKkfsatf4mZNVaNw1pFtqEsJjjibQazn-1FdYcq6D1Zy1RTFeUh5Fon_xFQSn0hKQ/s400/images+(1).jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
துள்ளிக்குதித்து ஓடி வந்த நாம் பிரச்சனைகள் ஓய்ந்தனவென்று முடிவெடுத்து என்று மீள கமெராவை தூக்கிக்கொண்டு நின்று போன படத்தை எடுக்க தொடங்கினோம்.ஒரு பக்கமாய் "புறஜெக்ட் ரிப்போட்" கொடுக்க வேண்டிய திகதி நெருங்கிக்கொண்டிருந்தது.இரவில் புரஜெக்ட் பகலில் படப்பிடிப்பு என்று தீயாக தூக்கம் மறந்து இயங்கிக்கொண்டிருந்தோம்.2007 மார்கழி மாதம் கிளைமோரில் சிக்கி வவுனியாவில் இருந்து ஓடிவந்தோம்.2008 ஜனவரியில் அலியப்பாவை தூக்கிக்கொண்டு போய் தெகிவளை குடுக்காரன்கள் பிரிச்சு மேய்ந்தார்கள்.என்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.இன்னொரு பூச்சி மட்டக்களப்பில் இருந்து எச்சரிக்கை கடிதம் வரும் ஆளணி அம்போடு மிரட்டிக்கொண்டிருந்தான்.2008 மார்ச்சில் கட்டுப்பெத்தை குடுகாரன்கள் அலியப்பாவும் சிரிப்பு ரவுடி,சௌந்தர் வெளியே சாப்பிட போகும் போது தட்டிப்பிழிந்து தக்காளி சட்னி வரவைத்து அனுப்பி வைத்தார்கள்.இது போதாது என்று கூடவிருந்த ரிஸ்மி வேறு கலவரம் செய்து எக்குத்தப்பாய் சிங்கள மாணவர்களிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்.இப்படி "சனியன் உங்கட ஹொஸ்டல் றூமுக்க படுத்திருக்குதோ மச்சான்?" என்று பிறர் கேட்கும் அளவுக்கு அடி அடியாய் வாங்கிக்கொண்டிருந்தோம்.நடப்பதை பார்த்து கலங்கிப்போன அச்சுதனும் வெறிக்குட்டியும் ஒரு நடுட இரவில் வீட்டுக்கு ஓடிப்போய் ஒரு மாதம் கழித்துத்தான் விடுதிக்குள் வந்தார்கள்.இப்படியான ஒரு நிலையில்த்தான் நாங்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தோம்.புரஜெக்ட் றிப்போட் எழுதிக்கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராமல் எனக்கு பல்கலை கழக விசாரணைக்கு அழைப்பு வந்தது.கமல்சுக்கும் வந்திருந்தது.கூடவே மங்கோலியனுக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijEsaXX3sZsrwFIZcg9rbUIKdphMg74Y5KNqpQlvMQ9CMBI1i4MuXKLWCXBZaGoPsN48rpKaf6W02lEIAf3T3vmTV0Jwq5sD7GpORWpm25xpGb59zadmDdLsoQdbGIHLHlThljWTKttZdo/s1600/InquiryLetter_crop380w.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="264" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijEsaXX3sZsrwFIZcg9rbUIKdphMg74Y5KNqpQlvMQ9CMBI1i4MuXKLWCXBZaGoPsN48rpKaf6W02lEIAf3T3vmTV0Jwq5sD7GpORWpm25xpGb59zadmDdLsoQdbGIHLHlThljWTKttZdo/s400/InquiryLetter_crop380w.jpg" width="400" /></a></div>
<br />
<br />
பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று பிரிவால் நடத்தப்பட்ட விசாரணை நடந்த ஒரு மணித்தியாங்களும் என் வாழ்நாளில் மிக அசிங்கமானவை.எனக்கு பேசவே சந்தர்ப்பம் தராது மலையாக குற்றச்சாட்டிக்களை அடுக்கிய சிங்கள விரிவுரையாளர்கள் ஆளாளுக்கு சிக்மண்ட் பிராய்ட்டை மிஞ்ச முயன்று கொண்டிருந்தார்கள்.நான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கான உளவியல் காரணங்களை வாயெல்லாம் அசிங்கமாய் லிப்ஸ்டிக் குதப்பிய ஒரு பெண் சிங்களவிரிவுரையார் வரிசைப்படுத்தினார்.நான் மறுத்த போது ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவு என்று சொன்னாள்.எனக்கு சினிமாவில் பார்த்த விசாரணை காட்சிகள் தான் நினைவுக்குள் வந்தன."இதெல்லாம் ஒரு கம்பஸ்,இதெல்லாம் ஒரு டிகிரி" என்ற மனநிலையில்தான் விசாரணைக்கு வரும் போது இருந்தேன்.நீள்வட்டமாக மேசை போட்டு சுற்றியிருந்து மிரட்டிய மிருகங்களை பார்த்ததும் வெள்ளைக்கொடியை தூக்கி விட்டேன்.இறுதியில் "உனக்கு தண்டனை வழங்கப்படும்.அதை பிறகு சொல்கிறோம்" எனச்சொல்லி சில வாரங்களுக்கு என்னை உள நெருக்கடிக்குள் புதைத்தார்கள் அந்த கவுன்சிலிங் மேதைகள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqiMyYCT1l5Vp1Hd4EE-0u-i-bdccjY-Pd2ogNr5n1jg_c22qMuL8dV3J44fuYf_aTac-AXorjVldUvFn7rE_KKJOD8Mk00gwvDUSQJCTMnGTcQjHDPbcV1jmY-iWbQJLf78xV5l8s35cz/s1600/images+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="315" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqiMyYCT1l5Vp1Hd4EE-0u-i-bdccjY-Pd2ogNr5n1jg_c22qMuL8dV3J44fuYf_aTac-AXorjVldUvFn7rE_KKJOD8Mk00gwvDUSQJCTMnGTcQjHDPbcV1jmY-iWbQJLf78xV5l8s35cz/s400/images+(2).jpg" width="400" /></a></div>
<br />
<br />
முடிவில் புறஜெக்ட் கொடுக்க முடியாதபடி ஒரு மாதம் தடை கிடைத்தது.ஆயினும் பல்கலைச்சூழலிலும் வெளியேயும் தமிழ் மாணவர்கள் அப்போது எதிர்நோக்கிய மிகச்சிக்கலான நிலையை கருத்தில் கொள்ளுபடி இரக்க மனம் படைத்த விரிவுரையாளர்கள் கேட்டதையிட்டு அது பின்போடப்பட்டது.கமல்ஸும் நானும் விசாரணை விடயங்கள் பற்றி பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம்.என்னை முதல் குற்றவாளியாகவும் கமல்சை இரண்டாம் நிலை குற்றவாளியாகவும் கருதி இருக்கிறார்கள் என்று புரிந்தது.மங்கோலியன் எப்படி தப்பினானோதெரியவில்லை."எனக்கு தெரியாது.அவர்களை கேளுங்கள்" என்று விசாரணையில் சாதித்திருப்பான் போலும்.இறுதி வரை அவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeaMQeNWPqbCJMSbwwLZdsfRYNQlKPkjC17Y59-okOckOFcWAo0Nq2vOvEQdTRvmYGyKL5xnuQ8edpSAkiUCEwEtMy5_A0uGoXQLkddm-6-ScCORZrdPKTrCGznVENWZqtifCsOX-JIwFk/s1600/inquiry.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeaMQeNWPqbCJMSbwwLZdsfRYNQlKPkjC17Y59-okOckOFcWAo0Nq2vOvEQdTRvmYGyKL5xnuQ8edpSAkiUCEwEtMy5_A0uGoXQLkddm-6-ScCORZrdPKTrCGznVENWZqtifCsOX-JIwFk/s400/inquiry.png" width="398" /></a></div>
<br />
2008,ஜூன் மாதம் கட்டுப்பெத்தையில் நடந்த கிளைமோர் வெடிப்பு பேரனர்தமும் பின் நிலவிய பயங்கர சூழலும் எங்களை வெள்ளவத்தை அறைகளுள் முடக்கிப்போட்டன.செப்ரெம்பரில் லண்டன் வந்த பின் நானும் கமல்சும் இவ்விடயம் தொடர்பில் அலசத்தொடங்கினோம்.என்னென்ன வழி முறைகள் ஆப்பு அடிப்பதுக்கு உண்டோ அவ்வழிமுறைகள் எல்லாவற்றையும் பரிந்துரைத்த கொழும்பு "டமில்" சகமட்ட பேர்வழிகள்,சைக்கோ ஜூனியர்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.Material department உதவி விரிவுரையாளராக இருந்த போது மங்கோவுக்கு உதவப்போய் சிக்குப்பட்ட சீனியர் ஒருவரிடமிருந்தும் பெறுமதியான தகவல்களை உருவினோம்.மங்கோவின் தந்தையுடன் கூடிக்குலாவி வழக்கிட உறுதுணையாக இருந்த வீணைகள்,வதையன்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.வேலைப்பழுவும் காலமும் அந்த அருவருப்பான நிகழ்வை மறக்கச்செய்திருந்தது.ஆயினும் சிங்கபுரிக்கு 2011 Januaryல் போன போது கேள்விப்பட்ட சிலவிடயங்கள் கோபத்தை கிளறி முதலாவது பாகத்தை எழுத தூண்டின.அதற்கு எதிர்வினையாக மங்கோ செய்த கீழ்தரமான செய்கைகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இத்தொடரை ஐந்து பாகங்களாக எழுத தூண்டுகோலாக அமைந்தன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
{இத்தொடரின் நோக்கம் தனிநபர் தாக்குதலை நோக்கமாக கொண்டதல்ல.தனிநபர் தாக்குதலை தடுப்பதற்காக பல விடயங்களை தணிக்கை செய்து இருக்கிறேன்.உளப்பாதிப்பு கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்கள் சமுதாயத்தில் பல் பாதிப்புக்களை சந்திக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே எழுதும்படி ஆனது}<br />
<br />
பிற்குறிப்பு-காவல் நிலையத்திலிருந்து நானும் அலியப்பாவும் வெளியே வரும் போது அந்த பெண் பொலீஸ் அலியப்பாவிடம் வந்து தொலைபேசி இலக்கத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டாள்.காவல் நிலையத்திலிருந்து அழைக்காமல் பிரத்தியோக கைத்தொலைபேசி மூலமாக அடிக்கடி அழைத்து "மீள விசாரிக்க வரும்படி" சொல்லிக்கொண்டிருந்தாள்.7ஜி குழுமம் கூடி முடிவெடுத்து அலியப்பாவிடம் சொன்னது "மச்சான்! அவள் கூப்பிடுறது விசாரிக்க இல்லை.அவளுக்கு உன்னிலை ஒரு பிளானடா".பிறகென்ன வந்த ஒரு மாதத்துக்கும் அலியப்பா சிங்களத்தில் டூயட் பாடிக்கொண்டு திரிந்தான்.ஆயினும் இதுவும் ஒருவகையான பொறியாக இருக்கலாம் என கருதி இறுதி வரை சந்திக்க போகவில்லை.இவன் ஒரு வாய் வேட்டுப்பேர்வழி என முடிவெடுத்த அவள் தானாகவே தொடர்பை நிறுத்திக்கொண்டாள்.<br />
<br />
-முற்றும்.<br />
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-84862598074820052812013-03-02T02:34:00.000+09:002013-03-02T02:45:04.595+09:00சிங்கிள் சிங்கங்கள்-01<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPV0yyN5Zshhyphenhyphen3qH5EPSFh3yGvqCyrlSa8KXr0YdaWgp5r-Z7LImM9_btxK9mHzxWEAua_Y2rGi9-kxtFNd8jQQP1WQz6Ga3aAHr3N13MzacssKpyZ_9um7Z0gzgND_-w3kPFw_r15jYh5/s1600/579725_10151550834295209_813778733_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPV0yyN5Zshhyphenhyphen3qH5EPSFh3yGvqCyrlSa8KXr0YdaWgp5r-Z7LImM9_btxK9mHzxWEAua_Y2rGi9-kxtFNd8jQQP1WQz6Ga3aAHr3N13MzacssKpyZ_9um7Z0gzgND_-w3kPFw_r15jYh5/s400/579725_10151550834295209_813778733_n.jpg" width="400" /></a></div>
<br />
<b>பெயர் - குழந்தைவேல் வசந்தன் அல்லது அலியப்பா/சன்ரா</b><br />
<br />
வகை- சிங்கப்பூர் இஞ்சினியர் மாப்பிள்ளை<br />
<br />
தொழில்-திட்ட முகாமையாளர் (PM)<br />
<br />
உப தொழில்கள்- மாங்காய்,தேங்காய் தொடக்கம் ஜம்புக்காய் வரை களவாக பிடுங்கி உண்பது.முதலை பிடிப்பது,வீண் வம்பிழுத்து அடிப்பது மற்றும் அடிவாங்குவது.<br />
<br />
வாழ்நாள் சாதனைகள்- மல்லாவியில் சும்மா போன முதலையை கவிட்டுப்போட்டு கதற கதற அடித்து கொண்றது<br />
<br />
உடல் அமைப்பு- மலைப்பாம்பு போல பருத்த புயங்களுக்கும் உராங்குடான் போண்ற உறுதியான தேள்களுக்கும் பிதுங்கிய வயிற்றுக்கும் சொந்தக்காரன்.<br />
<br />
நிறம்- அவித்த ஆப்பிள் பழ நிறம்.<br />
<br />
எதிர்பார்க்கும் வரன் - கொஞ்சம் கூட படிப்பறிவு இல்லாதவராயும் காதில் என்ன பூ வைத்தாலும் நம்புபவராயும் அதிக எடை கொண்டவராயும் இருத்தல் அவசியம்.<br />
<br />
சீதனப்பெறுமதி - 20 கோடி (Exclude vat)<br />
<br />
பி.கு- சிவந்த அழகிய பெண்கள் எனில் ஸ்கொலர்சிப் வழங்கப்பட்டு கணிசமான அளவு தள்ளுபடி கிடைக்க வாய்ப்புண்டு.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSBfAwdGvn1pCC8qGwV_LUEBtGmIKmFw99-WleuyQsx_lbelBXGaX_por9TK1irlpJ1ym5G8RP6fatt7JpNgPmhTHwOS_TbV6hQfqD4qr92phGq8HdHiok2umrhus0vG-hrgNnvAcFiNjf/s1600/DSC05001.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSBfAwdGvn1pCC8qGwV_LUEBtGmIKmFw99-WleuyQsx_lbelBXGaX_por9TK1irlpJ1ym5G8RP6fatt7JpNgPmhTHwOS_TbV6hQfqD4qr92phGq8HdHiok2umrhus0vG-hrgNnvAcFiNjf/s400/DSC05001.JPG" width="400" /></a></div>
<br />
<br />
<b>பெயர்- கனகசிங்கம் கமலரூபன் / அப்பாஸ்</b><br />
<br />
வகை- இங்கிலாந்து ரோயல் குடும்ப மாப்பிள்ளை<br />
<br />
தொழில்- அப்படி என்றான் என்ன?<br />
<br />
வாழ்நாள் சோகம்- கூடவிருந்த மங்கோ உம்சாண்டி விசயத்தில் கோர்த்து விட்டதும் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற ஆய்வுக்கட்டுரையை எழுத முடியாமல் போனதுவும்.<br />
<br />
உடல்கட்டமைப்பு- யுத்தடாங்கி போல உறுதியான தசைகளையும் தண்ணி பவுசர் போல மென்மையான வண்டியையும் கொண்டவர்.<br />
<br />
தோல் நிறம்- யாழ்ப்பாண பெண்களுக்கு மிகப்பிடித்தமான கோதுமை நிறம்.<br />
<br />
மணவாட்டிக்கு இருக்கவேண்டிய தகைமைகள்- காதுகேளாதவராக இருத்தல் அவசியம்.(மாப்பிள்ளை படுக்கும் போது நிலக்கரி ரயில் தலைக்கு மேலால் ஓடுவது போலவும்,டிஸ்கவரி சனலை ஒலிபெருக்கி வைத்து பார்ப்பது போலவும் அருகில் இருப்பவருக்கு தோண்றுமளவுக்கு குறட்டை ஒலியை உருவாக்குவார்.)<br />
<br />
சீதனம்- பணமாக எதுவும் தேவையில்லை.பொருளாக ஒரு லோட் புளுக்கொடியலும் ஒரு மாதம் கல்லால் குத்திச்சாப்பிட தேவையான தேக்கங்காய்களும்.<br />
<br />
சிறப்பு இயல்புகள்- தூங்கி களைப்பாகி அந்த களைப்பை போக்க மறுபடியும் தூங்குமளவுக்கு சுறுசுறுப்பானவர்.சாப்பாட்டின் முன் சாப்பாடு & சாப்பாட்டின் பின்னுணவு என பல ஆகாரங்கள் எடுக்குமளவுக்கு ஆசாரம் மிக்கவர்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWWdbaY9sT7O6Qx26MJRb2buG3WdwlRU6Ahh_VdroEQNBjcBWgsIc704PjiGwvX6-6j64GQP0GVyc3OYqncG2C8eJiVdIS1h7H5tA-b8VWTpRgbL1rsgTqJLQ_3JcrBm3RTadk4ZtqItC/s1600/216_21394903259_2144_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWWdbaY9sT7O6Qx26MJRb2buG3WdwlRU6Ahh_VdroEQNBjcBWgsIc704PjiGwvX6-6j64GQP0GVyc3OYqncG2C8eJiVdIS1h7H5tA-b8VWTpRgbL1rsgTqJLQ_3JcrBm3RTadk4ZtqItC/s320/216_21394903259_2144_n.jpg" width="268" /></a></div>
<br />
<br />
<br />
<b>பெயர்- சசிக்குமார் பத்மனாதன்</b><br />
<br />
வகை- கனேடியன் PR* மாப்பிள்ளை (*யாழ்ப்பாண பெண்கள் கவனத்துக்கு)<br />
<br />
தொழில்- MSc செய்வது.ரெஜிபோமில் வெயிட் அடிப்பது.<br />
<br />
வாழ்நாள் சாதனை- 1999 ல் பீரங்கிப்பிரிவுக்கு எறியம் படிப்பித்தது.2004 ஆம் ஆண்டு ரஜீந்திரதாசை பிடிக்க வந்த முனிப்பேய்க்கு வெறும் உடம்பை காட்டி அதைmவெருண்டோட செய்தது.<br />
<br />
உருவ அமைப்பு- மனித உடலில் உள்ள 206 என்புகளையும் உயிருடன் உள்ளபடியே காண்பிக்க வல்ல விந்தையான உடலமைப்பு இவருடையதாகும்.மெடிகல் மிராகிள்!<br />
<br />
சரும நிறம்- தமிழ்ப்பெண்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க வல்ல தங்க நிறத்தில் மின்னும் கவர்ச்சியான சருமம்.<br />
<br />
திருமதி சசிக்குமார் எப்படி இருக்க வேண்டும்- ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உடல் வெளிறியவராகவும் 25 கிலோ எடைக்கு மிகாதவராயும் இருத்தல் வேண்டும்.<br />
<br />
சீதனம்- இலங்கை ரூபாய்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது.ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் அல்லது இரண்டு மில்லியன் கனேடிய டொலர்கள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrw_f4rohyphenhyphenSWIW36q690sNjhBvXwfI7ZEiNOJGCEcfKgwCn6Ytny6GtygZwgXWK-xGQt2qOf7rDZt-nzaq18m7UE7PQdL5dFO7Lpc9Xeu_SEhBL1g8LIIIvc7Ma9PabcxO8ak0GIVA498w/s1600/267977_2036808491229_5063378_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrw_f4rohyphenhyphenSWIW36q690sNjhBvXwfI7ZEiNOJGCEcfKgwCn6Ytny6GtygZwgXWK-xGQt2qOf7rDZt-nzaq18m7UE7PQdL5dFO7Lpc9Xeu_SEhBL1g8LIIIvc7Ma9PabcxO8ak0GIVA498w/s400/267977_2036808491229_5063378_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<b>பெயர்-பெருமாள் சௌந்தராஜன்</b><br />
<br />
தொழில்- அண்டகவரில் இருந்து உளவு பார்த்தல் (விஸ்வரூபம் கமல் போல)<br />
<br />
பிடித்தது- கலெக்சிS3 ,பியர்,வைன்.விஸ்கி,சிக்கன் ஹொட் விங்க்ஸ்<br />
<br />
பிடிக்காதது- ஆப்பிள் ஐபோன்,அட்வைஸ்,காசை தந்துவிட்டு திருப்பி கேட்பது.<br />
<br />
விரும்பி அணிவது- பச்சை நிற செருப்பு.ஒரேஞ்ச் நிற ஜம்பர்,பிங்க் கலர் யட்டி<br />
<br />
வாழ்நாள் சாதனை- 10 மீற்றர் தொலைவில் இருந்த அயல்வீட்டில் தண்ணி அடித்துவிட்டு வீடு வந்து சேர 5 மணித்தியாலங்கள் எடுத்ததுக்கொண்டது.<br />
<br />
சரும நிறம்-பிளாக் லேபிலில் பெப்சியை அரைக்கு அரையாக கலக்கும் போது வரும் கலவை நிறம்.<br />
<br />
உடல் தோற்றம்- சிவாஸ் ரீகல் போல வளைவுநெளிவுகளையும் பட்வைசர் கான் போல பளபளப்பையும் மக்னம் போல் "கிக்" கையும் பார்பவருக்கு தருவதாகும்.<br />
<br />
எதிர்பார்க்கும் வரன்-கள்ளுத்தவறனைகாறர்,சாராயக்கடைக்காரர்,கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் குடிவழிப்பிறந்த குலமகளாய் இருத்தல் வேண்டும்.<br />
<br />
சீதனம்- வீடு,நிலம்,பணம் எதுவுமே வேண்டாம்.முதலிரவுக்கு பாலும் பழமும் கொடுத்தனுப்பாமல் வைட் டயமண்டும்,சிக்கன் பைற்சும் அனுப்பிவிட்டால் காணும்.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiuigHd_CVVBeNlAGT6cwmKgQAiei4tZeWgtkViLl7ug-NygoX4Rb2mtGgyUmlDMHV5fApsTpTY3lhcKQWYC4GBMpQ3TDGQ3dHqfB_AjTR9GONa8bs5PpVkxaU2LcyrqMXPU4Y4hyphenhyphen9DtKu/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiuigHd_CVVBeNlAGT6cwmKgQAiei4tZeWgtkViLl7ug-NygoX4Rb2mtGgyUmlDMHV5fApsTpTY3lhcKQWYC4GBMpQ3TDGQ3dHqfB_AjTR9GONa8bs5PpVkxaU2LcyrqMXPU4Y4hyphenhyphen9DtKu/s400/images.jpg" width="295" /></a></div>
<br />
<br />
<b>பெயர்- மொறட்டுவை தமிழ்ப்பெண்</b><br />
(Ex-சரோஜாதேவி,பத்மினி,வித்யா,மீனா,ரேகா,கன்சிக்கா,தீபிகா)<br />
<br />
(எங்கள் அழகிகளைப்பற்றி எழுதினால் "போடுவோம்" என வாளிகள் பலவழிகளாலும் மிரட்டியதால் பயந்து பொதுவாக பெயர் குறிப்பிடாமல் போடும்படி ஆகிவிட்டது.)<br />
<br />
குணம்- அடக்கம்,ஒடுக்கம்,குடும்பப்பாங்கு,நாற்குணம்<br />
<br />
தோற்றம்- சில பெண்ணுங்களை பார்த்த உடனேயே பிடிக்கும்,இன்னும் சிலதை பார்க்க பார்க்க பிடிக்கும்.கட்டுப்பெத்தை கன்னிகளை பார்க்காமலே பிடிக்கும்.<br />
<br />
பிடித்த ஆண்கள்- தண்ணி போடாதவர்கள்,சத்தமாக பேசாதவர்கள்,குனிந்து நடப்பவர்கள்,பேசும் போது கட்டை விரலால் கோலம் போடுபவர்கள்,நோட்ஸ் போட்டோ கொப்பி அடித்து தருபவர்கள்,பெண்களின் புத்ததக பாரம் சுமப்பவர்கள்,விடுதி ஆண்களின் உள்வீட்டு விவகாரங்களை போட்டு கொடுப்பவர்கள்,காலை "குட் மோர்னிங்கும்" மாலை "குட் நைட்டும்" குறுந்தகவல் அனுப்புபவர்கள்.பேரூந்தில் சீட் பிடித்து தருபவர்கள்,கன்ரீனில் பால்,யோக்கட்,ஐஸ்கிறீம் வாங்கி தருபவர்கள் என நீளும்.<br />
<br />
சீதனம் விபரம் - "நாங்கள் சீதனம் தரமாட்டோம்.மாறாக எங்களை மணப்பதானால் ஆண்கள் எங்களுக்கு சீதனம் தந்தாக வேண்டும்" (பிரசித்தி பெற்ற கட்டுப்பெத்தை தமிழ் பெண்களின் மகுடவாக்கியம்)<br />
<br />
பல ஆண்கள் தங்களது விபரங்களை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தபோதிலும் மேற்சொன்ன நால்வரது விரபரங்கள் மட்டும் பிரபல்ய அடிப்படையில் ஆசிரியர் பீடத்தால் தெரிவு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன.ஏனையோர் மனம்தளராது காத்திருக்கவும்.உங்களுக்கேற்ற மணப்பெண்ணை பிடித்து தரும்வரை கனாக்காலம் ஓயப்போவதில்லை.<br />
<br />
<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-81693978229241042342013-02-20T13:02:00.002+09:002013-02-20T13:10:56.925+09:00முக்கிய அறிவித்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0UeNt2SsUQ_8dA8A4PA9VmZ6W0A8VOYqUrjrOSDmAWRm_7iANQVcfN_kz-ok6EVZ7b0VjQePWqMQD8BNTIAmLR8e-NXfyU91zRH1rrsGpWBsRJ1p06YQYYP1iaR1rhyiEtqSynUjwPhsV/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0UeNt2SsUQ_8dA8A4PA9VmZ6W0A8VOYqUrjrOSDmAWRm_7iANQVcfN_kz-ok6EVZ7b0VjQePWqMQD8BNTIAmLR8e-NXfyU91zRH1rrsGpWBsRJ1p06YQYYP1iaR1rhyiEtqSynUjwPhsV/s1600/images.jpg" /></a></div>
<br />
இனிமேல் திருமணம் செய்யும் எமது மட்ட பேர்வழிகளுக்கு வாழ்த்து எழுதுவதில்லை என கடுப்பாகி முடிவெடுக்க முக நூலில் வரிசையாக வந்த கலியாண கோலங்கள் காரணமாய் அமைந்தன.வெளிநாட்டிலை இருக்கிறவன்,உள்நாட்டிலை இருக்கிறவன்,சும்மா இருக்கிறவன்,கடலை போட்டுக்கொண்டு இருந்தவன்,ரெஸ்ற் எடுத்து ரயர்ட் ஆகி திரும்ப ரெஸ்ற் எடுத்துக்கொண்டிருந்தவன் எல்லாரும் கட்டு கட்டு என்று கட்டி முகநூலை கலியாண வெப்சை போல ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள்."பேச்சோ? இல்லை காதலோ?" என்று கேட்டால் "ஒன் இயர் லவ்" "த்ரீ இயர் சின்சியர் லவ்" என்று காதில் வாழைப்பூவை வைத்து கண்ணில் குண்டூசியை ஏத்துகிறார்கள்.கட்டினமா பிள்ளைய பெத்தமா என்று இருக்காமல் தனியா இருக்கிறவனை வேறு வலுக்கட்டாயமாக "சட்" டுக்கு இழுத்து "உனக்கு எப்ப கலியாணம்?" என்று கேட்டு கொலைவெறியை கிளப்புகிறார்கள்.ஆயினும் நேரகாலத்துக்கு கலியாணம் கட்டுவதை மிகச்சிறந்த அடைவாகவும் பிள்ளை பெறுவதை ஆண்மையின் அடையாளமாகவும் பிள்ளைக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை வாழ்நாள் சாதனையாகவும் கொண்ட தமிழ் சமுதாயத்தில் பிறந்த நாமும் இவ்வழக்கின் படி ஒழுகாவிட்டால் எதிர்காலத்தின் பலவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRMbI-Gf3kwbyW3twlqevZekUSdtFmtc5LwBTdXmchgU3T8GqcojhXTPYXdKtarOi-cAR8eCVOIiOsaIeva4_W1U-E37d6jzGLgyrLuFOEVbxaY-fwfzQPwhWwkMVuq8eagkbWlMx253ER/s1600/new-season-bachelor-cartoon-598x667.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRMbI-Gf3kwbyW3twlqevZekUSdtFmtc5LwBTdXmchgU3T8GqcojhXTPYXdKtarOi-cAR8eCVOIiOsaIeva4_W1U-E37d6jzGLgyrLuFOEVbxaY-fwfzQPwhWwkMVuq8eagkbWlMx253ER/s320/new-season-bachelor-cartoon-598x667.jpg" width="287" /></a></div>
<br />
<br />
"பிள்ளை காய்ஞ்சது காணும் இனி தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.இல்லாட்டி நெறி தவறிடுவான்/வாள்" என யதார்த்தமாக சிந்திக்கும் தாய் தந்தையர் பதார்த்தமாக பேசி சம்மந்தம் பிடிக்கிறார்கள்.அத்தோடு "எப்படா கட்டுவம்" என்று இருப்பவர்களில் ஒரு சாரார் முகநூலிலோ ,கோயில் வீதிகளிலோ அதே தேவையோடு சந்திக்கும் எதிர்ப்பாலரிடம் சாதகமான முடிவு கிடைக்கும் பட்சத்தில் "வெற்றிகரமான துரித காதலை" நிறைவேற்றி திருமணம் முடிக்கின்றனர்.இவர்கள் போக எஞ்சியவர்களின் நிலைதான் மிகவும் சிக்கலானது.பலர் தங்கச்சி கலியாணம் கட்டோணும்,தம்பி படிச்சு முடிக்கோணும்,வீடு கட்டோணும்,காணி வாங்கோணும்,கடன் காசு குடுக்கோணும் என்று மிருகமாய் உழைத்தபடியிருப்பவர்கள்.இவர்களுக்கு பெண் நண்பியை பிடிக்கவும் நேரமிருப்பதில்லை,துரிதகாதல் முறையில் பிடிச்சாலும் பராமரிக்க முடியாமல் சொதப்பி விடுகிறார்கள்.பேச்சு கலியாணம் கட்டி வைக்காமல் தாய் தந்தையரால் இழுத்தடிக்கப்படும் இவர்கள் மிகவும் பரிதாபகரமானவர்கள்.சௌகரியமில்லாத தாம்பத்திய வாழ்க்கையையும் உறவுகளின் ஏளனத்துக்கும் எதிர்காலத்தில் ஆளாகக்கூடிய இவர்களுக்கு வழி காட்டுவது மட்டம் 2003 ஆகிய நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.<br />
<br />
இதன்படி நமது மட்டத்தின் உள்ள மணமகன்கள்/மணமகள்கள்,அவர்களது ஆற்றல்கள்,சாதனைகள்,சீதனப்பெறுமதி,எதிர்பார்க்கும் எதிர்ப்பாலரின் தகைமைகள் ஆகியனவற்றை "கானாக்காலம்" வெளியிட்டு ஒரு திருமணதளம் போல செயல்ப்படவுள்ளது.இதனை கேவலமானதாகவோ/மொக்கையாகவோ கருதாமல் அனைவரும் வரவேற்று ஆதரவளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்விபரங்கள் "சிங்கிள் சிங்கங்கள்" என்ற தலைப்பில் வெளியாகவுள்ளன.ஒவ்வொரு பதிவும் 5 (மணமகன் + மணமகள்) களின் விபரங்களை தாங்கிவரும்.நீங்களும் அதில் இடம்பெற விரும்பினால் தலைமைச்செயலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.<br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-70243421599444200252013-01-23T16:41:00.000+09:002013-03-16T12:11:40.505+09:00கர்ப்பமாக்க ஆள் தேவை!-PART 02(18+)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT9QNf4OWSnsO311f3m_dkrbQlUFHPC_MVvmGZgwTD0bkYkl_i4kFmURaQAFj9RyZtYZdLTkYhaAAU7o4L7TbEXfbU1yROu4Q9FHegBIhgn1qbzZPp1SXnNIK-uswPwco4HoD8Of_d1-VQ/s1600/malaravan.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT9QNf4OWSnsO311f3m_dkrbQlUFHPC_MVvmGZgwTD0bkYkl_i4kFmURaQAFj9RyZtYZdLTkYhaAAU7o4L7TbEXfbU1yROu4Q9FHegBIhgn1qbzZPp1SXnNIK-uswPwco4HoD8Of_d1-VQ/s400/malaravan.jpeg" width="267" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
வேலை முடிந்து வீடு செல்லும் சனக்கூட்டத்தை சுமக்க முடியாமல் திணறியபடி வந்த டொக்லாண்ட் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள் நேராக நடந்து வந்து கைகளை நீட்டிய போது கண்களையே நம்ப முடியாமல் இருந்தது.வழமையான வடக்கு இந்திய சாயலில் இருந்த பவல்நாத்துக்கு பக்கத்தில் பிரகாசமான ஆலிவ் நிற சருமம் போர்த்தி மென்பச்சைக்கண்களோடு நின்ற பெண் பாலிவூட் நடிகைகளை ஒத்தவளாய் இருந்தாள். அங்கே நிலவிய சில நொடி மௌனத்தை அவள்தான் முதலில் கலைத்தாள்.<br />
<br />
"ஹாய்! மலரவன்,ஐ ஆம் சஞ்சானா!,நீங்க போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் ஸ்மார்ட்டா இருக்கிறீங்க"<br />
<br />
"சஞ்சானா! பெயர் கூட அழகாய் இருக்கிறது உங்களைப்போலவே.நீங்க மட்டும் அந்த விளம்பரத்தில போட்டோவ போட்டிருந்தா டேவிட் கமரூனே விண்ணப்பம் போட்டிருப்பார் "<br />
<br />
பெரிய ஜோக் கேட்டவன் போல பவல்நாத் தனது சிரிப்பை இங்கேயும் அவிழ்த்துவிட்டான்.சஞ்சானா மெலிதாக புன்னகைக்கையில் கன்னத்தில் வலதுபக்கமாக வந்து ஓடிய குழி அவளுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாய்ப்பட்டது.<br />
<br />
"96 விண்ணப்பம் கிடைச்சது.நிறைய வெள்ளை,கருப்பு இன ஆட்கள்,வந்த தென்னாசியர்களில் இளமையா,ஆரோக்கியமா தெரிஞ்சது நீங்க மட்டும் தான்.நீங்க படித்தவராயும் இருக்கிறீர்கள்.எங்களுக்கு ஒரு புத்திசாலி குழந்தையை தர உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்".சஞ்சானா தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக்கொண்டு போனாள்.அதில் பொய்மை கலந்திருப்பதாக அறிவுக்கு தென்படாததற்கு அவளது ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் காரணமாய் இருக்கலாம் என மலரவன் எண்ணிக்கொண்டான்.அறிமுக உரையாடலை முடித்துக்கொண்டு வீடு நோக்கி பயணிக்கும் வழியில் பவல் நாத் எதோவெல்லாம் சொல்லிக்கொண்டுவந்தான்.டொக்லாண்டை வடிவமைத்த விதம் தொடர்பில் பிரித்தானிய அரசை வேறு கடிந்து கொண்டான்.பிடிக்காது விட்டால் நாற்றமடிக்கும் இந்தியாவுக்கு போக வேண்டியது தானே? என்று மலரவன் கேட்க நினைத்தாலும் சஞ்சானாவுக்காக அடக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.<br />
<br />
ஒரு மாடி வீடுகள் நிரம்பிய லண்டனில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் நிரம்பிய ஒரே இடம் டொக் லாண்ட் எனப்படும் படகுத்துறைத்தேசம் தான்.வளைத்து வளைத்து வெட்டப்பட்ட கால்வாய்களும் தரித்து நிற்கும் படகுகளுமாய் எழில் கோலம் பூண்ட இடமொண்றில் அவர்களது குடியிருப்பு இருந்தது.மார்கழியின் குளிரை விரட்ட வெப்பமாக்கிகளை உச்சத்தில் இயக்கி விட்டு இருவரும் உள்ளே போனார்கள்.வரவேற்பறை அலங்கார பொருட்களின் பெறுமதி இருவரும் சேர்ந்து ஐந்து இலக்க சம்பளம் வாங்குபவர்களோ என எண்ண வைத்தது.சுவரில் இறுக்கமான ஆடைகள் அணிந்த சஞ்சானாவை பின்புறமாக இருந்து கட்டியணைத்தபடி பவல்நாத் சிரித்துக்கொண்டிருந்தான்.அணைப்பில் பிதுங்கிய பாகங்களில் கண்கள் மொய்த்தன."அது,கலியாணம் ஆன புதிதில் எடுத்தது,அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன்" மெல்லிய நைட்டிக்கு மாறிவிட்டிருந்த சஞ்சானா குறுக்கிட்டாள்.குளிர்ந்து போயிருந்த வீடு மிதமான சூட்டுக்கு மாறியிருந்த போது வொட்காவில் அரைப்பகுதி காலியாகிவிட்டிருந்தது.சஞ்சானா சுயநினைவுக்கும் போதைக்கும் இடையில் ஊசலாடியபடி இருந்தாள்.மோகனமாய் வேறு அடிக்கடி புன்னகைத்தாள்.பவல் மெடாக்குடிகாரனாக இருக்க வேண்டும்.பச்சை வொட்காவை எதுவும் கலக்காமல் வார்த்து வார்த்து முகச்சுழிப்பு இல்லாமல் பருகும் விதத்திலேயே தெரிந்தது."நேரம் ஆகிறது சஞ்சானா நீ இவரை அழைத்துச்செல்,நான் இங்கேயே தொந்தரவு படுத்தாமல் இருந்துவிடுகிறேன்" என்றபடி இயர் போனை செருகிய பவல் நாத் மேலுமொரு குவளையை வார்த்துக்கொண்டான்.<br />
<br />
<br />
சஞ்சானா கையை பிடித்துக்கொண்டு முன்னே செல்ல மலரவன் பின் தொடர்ந்தான்.அறைக்கு நுழைந்ததுமே மேலாடைகளுக்கு விடுதலை கொடுத்தாவளின் பாகங்கள் மிகைப்பெருத்து இருந்தன.<br />
<br />
"சிலிக்கன் இம்பிளான்ற் இல்லைத்தானே சஞ்சானா?"<br />
<br />
ஏதாவது பேச வேண்டும்,அத்தோடு பதற்றத்தையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மலரவன் கேட்டான்.<br />
<br />
"சந்தேகம் என்றால் ஆராய்ந்து பார்க்கலாமே?"<br />
<br />
கலகலவென சிரித்தபடி நெருங்கியவளை நடுங்கும் விரல்களால் மெதுவாக அழுத்த கச்சை கழன்று வீழ்ந்தது."கழற்றியது நானில்லை ஆதலால் அவளாகத்தான் கழற்றியிருக்க வேண்டும்" என சூழ்நிலைக்கு தகாமல் மலரவன் புலனாய்ந்து முடிக்க முதல் அரை நிர்வாணம் ஆகியிருந்தான்.<br />
<br />
"ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுவீர்களா?"<br />
<br />
விரல்களால் மார்பில் கோடு வரைந்தபடி கேட்டாள்.<br />
<br />
"ம்"<br />
<br />
"கீழேயும் நானே அவிழ்ப்பது ஆண்பிள்ளைக்கு அழகல்ல"<br />
<br />
குரலில் ஏளனம் தொனித்தது.<br />
<br />
"நானே செய்கிறேன்"<br />
<br />
லேசாக சதை போட்ட அவளது இடையில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் பெல்லி பட்டன் குனிந்து ஆடைகளையும் போது கண்ணில் தட்டுப்பட கண நேரம் தரித்தான்.ரோம நிர்வாணம் செய்த சருமம் அத்துணை திருத்தமாக பிரகாசமாய் ஒளிர்ந்து மஞ்சள் அறை வெளிச்சத்தில் கிளர்ச்சியூட்டியது.<br />
<br />
இப்போது மலரவன் நிமிர்ந்து நிற்க மார்போடு வழுக்கியபடி கீழே இறங்கிய சஞ்சானா மெதுவாக இயங்கத்தொடங்கினாள்.<br />
<br />
**************************************************<br />
<br />
ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீட்டுக்கு சற்றுத்தொலைவாக காரை தரித்துவிட்டு பலவிதமான எண்ணவோட்டங்களோடு உட்கார்ந்திருந்த மாறனும் கமல்சும் உள்ளேயிருந்து வீதிக்கு வாய்நிறைய புன்னகையோடு வந்தவனைக்கண்டு ஆசுவாசப்பட்டார்கள்.<br />
<br />
" என்ன மச்சான் வெட்டிட்டு விட்டுட்டாங்களோ?"<br />
<br />
கமல்ஸ் முதலாவது கேள்வியை கொளுத்திப்போட்டான்.<br />
<br />
"வீடியோ போட்டோ ஒண்டிலயும் சிக்கேலை தானே?" மாறன் தொடர்ந்தான்.<br />
<br />
"நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்கேலை,செம பிகர் மச்சான்.நல்லா கொம்பனி தந்தாள்.இன்னும் ஒரு வருசத்துக்கு தாங்கும்"<br />
<br />
அடுத்ததாக கடந்து போன இரண்டு மணித்தியாலங்களுக்கும் அங்கே நடந்தது பற்றி இருவரும் மாற்றி மாற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே மலரவனுக்கு கடந்து போயிற்று.<br />
<br />
<br />
இருவரிடமும் விடை பெற்று அறைக்கு வந்து நீண்ட வெந்நீர் குளியல் போட்டு உட்கார்ந்த மலரவன் முகநூலை தட்ட தொடங்கினான்."பவல் நாத்" என்று தேட ஆயிரக்கணக்கில் வந்தார்கள்."சஞ்சானா பவல்நாத்" என்று பார்க்க அழகாய் வந்து நின்றாள்.முகப்பு பக்க "Married to" தொடுப்பில் பவல் சிக்கினான்.அவனது திறந்த மனது போலவே சுவரும் திறந்து கிடந்தது.இருபது நிமிடங்களுக்கு முன் போடப்பட்டிருந்த நிலைக்குறிப்பு "பரவசத்தின் உச்சியிலிருந்து இபோது தான் இறங்கிவந்தேன்.மனைவிக்கு நன்றி :) என்றிருக்க சஞ்சானா "லைக்" போட்டிருந்தாள்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-72827197270967927982013-01-09T22:26:00.000+09:002013-08-31T16:55:34.233+09:00தற்போதைய நிலவரம்-07<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<br />
சிங்கபுரி நண்பர்கள் பலரும் தற்போது வளர்ச்சியடைந்து உறுதியான நிலைக்கு வந்துள்ளார்கள்.ஆரம்ப காலத்த்தில் இருந்ததைப்போலல்லாது நிறைவான சம்பளம்,வேலையிடத்தில் உயர்வான பதவி என வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.பதவி உயர்வுகள் தந்த ஊக்கம் பலரையும் பப்பாவில் ஏற்றி விட்டுள்ளதையும் காணமுடிகிறது.அதில் ஒரு விளைவுதான் ஒரு கேள்வியை கேட்டால் உடனேயே பதில் சொல்லாமல் சிறிது நேரம் எடுத்து பதில் சொல்வது.உயர்முகாமைத்துவ உத்திகளில் மிகப்பழமையான கடந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த முறையை சீனத்து முதலாளிமாரிடமிருந்து சிலர் கற்றுக்கொண்டு நண்பர்களிடையே நடைமுறைப்படுத்த முயல்வதை காணும் போது சிரிப்பு மேலிடுகிறது.அடிப்படையில் ஒருவர் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்வது கேட்பவர் பதவி நிலையில் தாழ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவருள் ஒரு விதமான பதற்றத்தையும்,பலவிதமான எதிர்மறை சிந்தனைகளையும் உருவாக்கும்.இந்நேரம் "கேள்வி ஏன் கேட்கப்படுகிறது?,இதற்கு பதில் சொல்வதான் என்ன இலாபம்? எப்படியான பதிலை சொல்லவேண்டும்?" போண்ற உப கேள்விகளை விடையளிக்க வேண்டியவர் உள்ளே உருவாக்கி தீர்த்துக்கொள்கிறார்.வேகமான முடிவுகளை வழங்கவல்ல முகாமைத்துவமே இந்நாளில் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வகையான செயல்பாடுகளை நண்பர்கள் மத்தியிலும் மேற்கொள்வது "அரைக்கிறுக்கன்,மந்த புத்தி,பென்ரியம் -01 " போண்ற பட்டப்பெயர்களை பெற உதவுமே ஒழிய அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ள எந்த வகையிலும் உதவாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkPncDmwNFp0yQJSyTTsBRDiKMveN_ky1uQ8NKxpmB5ucQrYculwQAayvMY5l_Hb_NvElWCgvRLXUnI6hU6G4BbgSlRuA80HsejPsVkRNxRKGb0OJ5aJEe0UwtDPq_R4aJ2ae1SbrCH7IQ/s1600/Frog-Like-a-Boss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkPncDmwNFp0yQJSyTTsBRDiKMveN_ky1uQ8NKxpmB5ucQrYculwQAayvMY5l_Hb_NvElWCgvRLXUnI6hU6G4BbgSlRuA80HsejPsVkRNxRKGb0OJ5aJEe0UwtDPq_R4aJ2ae1SbrCH7IQ/s320/Frog-Like-a-Boss.jpg" width="211" /></a></div>
<br />
திருமணம் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட குயுக்தியான நடைமுறை.பிடித்த பெண்ணோடு சேரவும் அவளை கூடவே வைத்திருக்கவும் நிறைய நேரத்தை செலவிட்டு போராட்டத்தை சந்தித்த ஆதி மனிதன் திருமணம் என்ற நடைமுறையை உருவாக்கினான்.ஆற்றல் மிக்க,பலமான மனிதர்கள் மட்டுமே செழிப்பான பெண்களை அடைய முடியும் என்ற இயற்கைநியதி மறைந்து "எல்லா ஆண்களுக்கும் பெண்" என்ற கோட்டா முறை திருமணம் மூலம் உருவானது.ஆனால் சில பேர்வழிகள் திருமணம் முடித்து விட்டு "அதை ஒரு வாழ்நாள் சாதனையாக" பீற்றிக்கொண்டு திரிவதை காணும் போது மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருக்கலாம் என தோண்றுகின்றது.இது நிற்க தற்போதைய நிலவரத்துக்கு வருகிறேன்.நண்பர்கள் பலரும் திருமணம் தொடர்பில் தீவிரமாக சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.வீட்டுபொறுப்பை முடித்த பின் திருமணம்,பணம் சேர்த்த பின் திருமணம் என பல "பக்கா பிளானுகளை" போட்டு வைத்துள்ளனர்.பதினைஞ்சு பவுணிலை தாலி கட்டி,இருபது லட்சம் செலவழித்து கலியாணம் செய்தால் தான் கழுத்தை நீட்டுவோம் எனச்சொல்லும் பெண்களை அடித்து விரட்டிவிட்டு "மஞ்சள் கயிறே போதும் கண்ணாளா நீ வந்தால் காணும்" எனச்செப்பும் பெண்களை பிடியுங்கள்.கடின உழைப்பில் திரட்டிய பணத்தை ஆரோக்கியமான விதத்தில் முதலிடுங்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgBo9T7YIG9dzvcvlTPTFxKsvQYXWVv2gI75CPrhU28WkfYmQkj9nJo7pQBXkwv_5-boDG_07qyPOgZ0XD8AOlygIyfl6im9f2kDF1ar0DSph9zWGWBnFWX2xjPrPEymARd5LTiVBEHkQd/s1600/funny_wedding+cake+thingies.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgBo9T7YIG9dzvcvlTPTFxKsvQYXWVv2gI75CPrhU28WkfYmQkj9nJo7pQBXkwv_5-boDG_07qyPOgZ0XD8AOlygIyfl6im9f2kDF1ar0DSph9zWGWBnFWX2xjPrPEymARd5LTiVBEHkQd/s1600/funny_wedding+cake+thingies.jpg" /></a></div>
<br />
குடும்பமாகிவிட்ட விஞ்ஞானி மகிழுந்தில் இலண்டன் மாநகரை சுற்றி வரும் வேளை நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சடுதியாக புகுந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்."என்ன மச்சான் காரிலையோ வந்தனி?" என்று நண்பர் கேட்க "நாங்கள் ஓடாத வாகனமோ?,மனுவல் வாகனத்தையே மல்லாக்க வச்சு ஓட்டுற ஆட்கள்.மனுசிட ஓட்டோ கியர் வாகனத்தை ஓடுறது பெரிய வேலையோ?" என்று பதில் சொல்லியிருக்கிறார்.அருகே இருந்த துணைவியார் சிரித்து விட்டு " பார்க் பண்ணேக்க முன்னுக்கு நிண்ட காரை இடிக்க போயிட்டார்.நான் கை பிரேக் அடிச்சிருக்காட்டி அவ்வளவு தான்" எண்டாவாம்.இந்த சம்பவம் லண்டன் தண்ணி பார்ட்டிகளில் "பைற்ஸ்" ஆக அடிக்கடி இழுபடுவதை காணமுடிகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjYLDT_KEhcBwYR0gbvAtspIqLCN2ZgxVaPhyphenhyphenEMGltcsviQOkjuFTuyLmmoDWf_Rncjf4-HLRKtTTUQf-Qx8l1PUTa1p59Mbu4cYp9s3wS47xUr0dSv6UxOpLnowjOHF__HrmfB5_wtB39/s1600/6a00d8341d417153ef0120a61f8e5e970c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="244" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjYLDT_KEhcBwYR0gbvAtspIqLCN2ZgxVaPhyphenhyphenEMGltcsviQOkjuFTuyLmmoDWf_Rncjf4-HLRKtTTUQf-Qx8l1PUTa1p59Mbu4cYp9s3wS47xUr0dSv6UxOpLnowjOHF__HrmfB5_wtB39/s320/6a00d8341d417153ef0120a61f8e5e970c.jpg" width="320" /></a></div>
<br />
மலர்ந்த இந்த புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசத்தையும் தரும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப்பாதையில் தொடர்ந்து நடை போடுவோம் எனக்கூறி அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.</div>
Unknownnoreply@blogger.com5