Showing posts with label மனதில் நின்றவர்கள். Show all posts
Showing posts with label மனதில் நின்றவர்கள். Show all posts





"அப்பாஸ் அண்ணை வாறார்,அப்பாஸ் அண்ணை வாறார்" எண்டு பலரும் பரபரத்திருக்க கட்டை கால்ச்சட்டையோடு படுவேகமாக சைக்கிளில் வந்து யாழ் இந்து மைதான மதிலருகே பெடியள் மத்தியில் இறங்கிய அந்த பேர்வழியை பார்க்கும் போது "கடும் சுறுசுறுப்பான ஆள் போல" என்ற எண்ணம் தோண்றுவதை தடுக்க முடியவில்லை.அது நடிகர் அப்பாஸ் மிக பிரபலமாக இருந்த நேரம்.அப்பாஸ் போலவே முகச்சாயலோடு இருப்பதாக அவனை உசுப்பேத்திவிட்ட நண்பர்கள் அப்பாஸ் என்ற பெயரையும் உவந்தளித்து உயரமான பப்பாவில் ஏற்றி விட்டிருந்தார்கள்.பெண்கள் மத்தியிலும் அப்பாஸ் வாறான் எண்டால் ஒரு சலசலப்பு கிளம்புமளவுக்கு அப்பெயர் பிரபலமாகி விட்டிருந்தது.இந்நிலவரமே மிகக்கொடும் சோம்பேறியான அவனை சுறுசுறுப்பானவனாக நடக்கும்படி தூண்டிக்கொண்டிருந்தது.இவ்வாறு பள்ளி நாட்களில் எனக்கு சீனியராக இருந்த அப்பாஸ் பல்கலையில் சகதோழனாக வந்து வாய்த்தார்.


அடக்கமிகு ஆண்மகன் -
{விரிவுரையாளர் அறைவரை நீண்ட சுகாவின் மறைப்பு கமெரா}

பல்கலை ஆரம்ப நாட்களில் அத்துக்கோறளை கிழவன் வீட்டில் கமலரூபன்,தினேஸ்,லெஸ்லி,கிரிவக்சன்,ரஜீந்திரதாஸ்,சசிக்குமார் ஆகியோருடன் ஒரு வருடங்களுக்கு மேலாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலரூபன் எனும் அருமையான நண்பன் எனக்கு அறிமுகமானது அங்கே தான்.அப்பாஸ் அடிக்கடி அவிழ்த்துவிடும் கதைகள் அநேகமாக பள்ளிநாட்களில் எவரோடாவது சண்டை பிடித்தது பற்றியோ,பிகருகளை விரட்டியது பற்றியுமே இருக்கும்.அவையனைத்தையும் உண்மையென நம்பியவர்கள் அப்பாசை எவருக்கும் அஞ்சாத முரட்டு காதல் நாயகனாகவே எண்ணியிருப்பார்கள்.காதலை பற்றி போட்டுத்தாக்கினால் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்ற பஞ்சு டயலாக்கை எடுத்துவிட்டு முகம் சிவக்க பாய்ச்சல் தொடுக்கும் அப்பாஸ் குறித்து அனைவரும் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் பின்னாட்களில் தலைகீழாய் மாறிப்போயின.எமதுமட்டம் வலிந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் அப்பாஸ் சிலபல காரணங்களை சொல்லி பின்வாங்க "இவன் சிங்கமல்ல,சின்னஞ்சிறு பிள்ளை பூச்சியே" என பலரும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.உருவத்தில் பரவலாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறிய குழந்தையின் மனமே இருந்தது.குரலில் முரட்டுத்தன்மை இருந்தாலும் உள்ளுக்குள் மலர் போண்ற மென்மை அவனுள் இருந்தது.நண்பர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் போது உதவ ஓடி வருபவர்களில் முதலாவதாக கட்டாயம் கமலரூபன் இருப்பான்.

முள்ளுக்குள் ஈரம் -இந்த முள்ளுத்தலைக்குள் இருக்கும் ஈரம் எக்கச்சக்கம்.

கண்ணை மூடிக்கொண்டு கமலரூபன் பற்றி யோசிக்கும் போது முதலாவதா நினைவுக்கு வாறது அவனோட வண்டியும் இடைவிடா நெடும் தூக்கமும் ஓயாமல் தின்பண்டங்களை அரைத்தபடியிருக்கும் வாயும் தான்.மூன்று நேர சாப்பாடு என்பதைத்தாண்டி பின்னேர சாப்பாடு,பின்னிரவுச்சாப்பாடு என பல புதிய உணவு நுட்பங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வேலிக்கதியால் போல இருந்த எனது பாடியை பழனிப்படிக்கட்டுகளாக்க வழிகாட்டியவன்.எவ்வளவு சண்டை வந்தாலும் ,வாக்குவாதம் வந்தாலும் கமலரூபன்,சேகரன்,ரியாஸ்,சுகந்தமாறன் கூட்டணிக்குள் பிளவு ஒரு போதும் எட்டிப்பாராது.சிங்கள பெடியளோட Project செய்தா பாதுகாப்பா பாஸ் பண்ணிடலாம் எண்டு எல்லா பெடியளும் எஸ்கேப் ஆகிவிட இனவெறி பொங்கி வழிந்த விரிவுரையாளர்கள் மத்தியிலும் தன்மானச்சிங்கங்களாய் நின்று Project செய்து காட்ட அச்சாணியாய் நின்றவன் கமலரூபன்.கமலரூபனை பற்றி எழுதலாம் என முடிவெடுத்து உட்கார்ந்த போது பாற்கடலை பெட்டைப்பூனை நக்கிக்குடிக்க வெளிக்கிட்ட கதையாக போகுது என்று எனக்கு சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது.எத்தனை சம்பவங்கள்? எத்தனை நினைவலைகள்? ஒவ்வொண்றும் கனமானவை.ஒன்றுக்கு முக்கியம் கொடுத்து இன்னொன்றை எழுதாமல் விட மனது இடம் கொடுக்கவில்லை.இதனால் பிரபலங்களில் சுயவிபரம் எழுதும் வழமையான பத்திரிகை பாணியில் அப்பாஸை அடக்கிவிட விளைகிறேன்.

பெயர்-கமலரூபன்.க

ஏனைய பெயர்கள்-அப்பாஸ்,கமல்ஸ்,அரசியல்வாதி

வயசு- பதினாறு

பால்- 100% ஆம்பிளை சிங்கம்.

நிறை- ஒரு தொன்

பிடித்த உணவு- உலர் ஒடியல் (இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு இன்றளவும் குடும்பத்தினரால் விநியோகிக்கப்படுவதாய் கேள்வி)

சாதனைகள்- பல கிலோ நிறையுடைய வண்டி இருந்தும் கால்பந்தாட்ட வீரனாய் திகழ்ந்தது.மனிதனின் அதிகபட்ச நாளொன்றுக்கான உணவு உள்ளெடுக்கும் அளவுக்கான பழைய சாதனைகளை முறியடித்தமை.

வாழ்நாள் கவலை- நீண்டகாலமாக கண்ணி வைத்து மாட்ட முயன்ற முயல் தப்பியோடியது.யாழ்ப்பாணமும் தமிழ்ப்பெண்களும் என்ற தலைப்பில் சங்கம புத்தகத்தில் போடவென எழுதிய ஆய்வுக்கட்டுரையை பெடியள் போட்டுத்தாக்கி தடுத்தமை.

வாங்கிய ஆப்புக்கள்- நிழல் போல இருந்த நண்பன் காரணமாக வில்லங்க வழக்குகளை சந்தித்தது.வளைந்து கொடுக்கும் நடைமுறையை கைக்கொண்டதன் காரணமாக காட்டி சிலரால் திட்டமிடப்பட்டு சுமத்தப்பட்ட அரசியல் வாதி என்ற பட்டத்தை தவிர்க்கமுடியாமல் போனமை.

சமீபத்திய சாதனை- வாயும் வயிறுமாய் இருப்பது போலிருந்த உடம்பை உருக்கு டேஞ்சர் படிக்கட்டு போல ஆக்கியது.லண்டனின் காப்பிலி மாணவனுக்கு ஆசிரியனாகியது.

பலவீனம்- அறணை தலை போன இடத்துக்கு வால் வர முதல் நடந்தது எல்லாம் மறந்து போடுமாம்.அப்பாஸ் ஒரு இரண்டு கால் அறணை.தொலைத்த தொலைபேசிகள்,மற்றும் இதர பொருட்கள் தொகை கணக்கிலடங்காது.

பலம்- பல மொழி வித்துவம்.முன்பு மும்மொழியில் கலக்கியவர் இப்போது முந்நூறுக்கு மேல் பேசுவதாக கேள்வி.ஏனடா நாங்கள் கதவ தட்ட ஓடினனி எண்டு காவல்துறை சொய்சாபுரத்தில் வைத்து கேட்க " இஸ்ஸரா They will come தானே?" என்று கேட்ட மும்மொழிக் கேள்வியை மரணப்படுக்கையில் நினைத்தாலும் சிரிப்பு வரும்.

நினைவில் நின்றவர்கள் பகுதி நீண்டகாலமாக எழுதப்படாமல் விடுபட்டுப்போனது.படுவேகமாக மங்கிவரும் நினைவுகளின் வீரியம் குறைய முதல் அவற்றை பதிவுகளாக்கிவிட வேண்டும் என்பதால் வேலைப்பழுவின் மத்தியிலும் எழுதுவதை தொடருகிறேன்.தனிமனித கூக்குரலாக ஒரு மட்டத்தின் புளொக் இருப்பதை நான் விரும்பவில்லை.எனவே நீங்களும் உங்கள் பங்களிப்பை தரும்படி மீளவும் அழைக்கிறேன்.

கடைசியா அப்பாசின் ரேட்மார்க் டயலாக் ஒண்டு-


"நீங்கள் பங்களிச்சாலும் பிரச்சினை இல்லை,பங்களிக்காட்டியும் பிரச்சினை இல்லை,குறைநினைக்கமாட்டன்.ஆனா பங்களிச்சா நல்லது"


"எழுதாடா நாயே எழுதடா பேயே" என்று என்னை கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் வதைத்த சுகாவுக்கு முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு எம் ட்ரிங்கியைப்ற்றி ஒரு பதிவை தொடர்கிறன்…


மனதில் நின்றவர்கள்-04-ட்ரிங்கோ உமா


ட்ரிங்கோ உமா , தாடிக்காரனுடைய உமா , மீசை உமா என பல பெயரால் அழைக்கப்படும் இவன் நான் கம்பஸ் வாழ்வில் கண்டவர்களில் ஒரு போதும் மறக்க முடியாதவன். அவனைப்பற்றி இந்த பதிவிடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி… அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இங்கு தருகிறேன்… உமா எனக்கு அறிமுகமாகியது நல்ல ஞாபகம் இருக்கிறது … இரண்டாம் செமஸ்டர் றிசல்டினை எமக்கு அறிவித்தது மது . அப்போது நாமெல்லாரும் யாழ்ப்பாணத்தில் இருந்தோம்.. எங்கோ திருநெல்வேலியில் அவனுடைய சொந்தக்கார வீட்டில் கடலை போட்டுக்கொண்டிருந்தபோது கம்பஸிலிருந்த யாரினூடாகவோ றிசல்ட் கேட்டுச் சொன்னான் மதுவதனதன்… எனக்கு றிசல்ட் பெரிதாக பிரச்சனை இல்லாவிட்டாலும் மோட்டுக்குத்து குத்திய மட்டீரியல் A தான் வந்திருந்தது… அதுதான் அப்செட்… ஆக றிகரக்சன் போடபோவதாக பலநாட்களின் பின்பு யாரிடமோ கதைத்த போது யாரோ உமாக்காந்தன் ஆமிக்காரனுடைய பாடத்துக்கு றிகரக்சன் போட்டதாக தெரிவித்திருந்தார்கள்;.. ஆகவே கம்பஸ் வந்தவுடன் உமாகாந்தனை தேடிக்கண்டு பிடித்து அவனிடம் கதையை விட்டேன்.. சிம்பிளாகச் சொன்னான்… நான் A க்கு செய்தனான். B+ போட்டுட்டான் எண்டு... நானும் சரி என்று ப்ரொசீட்சரை அறிந்து கொண்டு விட்டு விட்டேன்…இப்படித்தான் அறிமுகம் (பின்பு அவனுக்கு A வந்து விட்டிருந்ததாக பைனலியரில் சொன்னான்...)


அதன் பின்பு இரண்டாம் வருடம்… இலத்திரனியல் என்டர் பண்ணிவிட்ட படியால் நான் என்னுடைய படிப்பின் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு விட்டிருந்தேன்… இனிமேலும் மண்டையை உடைக்க முடியாது என்று நினைத்து இசை , விழா ஒழுங்கமைப்புகள் , சினிமா பார்ப்பது என்று பிசியாகி விட்டேன்.. ஏதோ முதலாவது செமஸ்டரும் முடிந்து றிசல்ட் வந்தது … உமா பட்டையைக் கிளப்பியிருந்தான்.. தமிழரில் முதல் GPA .. இப்படி முதல் செமஸ்டரில் திரும்பிப்பார்க்க வைத்த உமா கடைசி வரையும் படிப்பில் ஹீரோதான்…


அதிலும் கடைசியடி நெருப்படி… எல்லாப் பெரிய மண்டைகளும் பயந்த ஒரு பைனல் இயர் புரோஜேக்டை கடைசியாக ட்ரிங்கோவில் கோயிலில் எங்கேயோ திருவிழாவில் நின்று விட்டு வந்த படியால் உமாவுக்கு தெரிவு செய்ய வேண்டியிருந்தது.. எல்லாரும் முதல் ப்ரோட்டோ டைப் முடித்திருந்தபோது அவன் ஒன்றுமே செய்யாமல் ப்ரசென்டேசன் செய்தான்… கடைசி ஒரு மாதம் மெனக்கட்டிருப்பானோ தெரியேல்ல .. அவனுடைய ப்ரொஜெக்டை ஒரு வெள்ளைக்காரன் அரை மணிநேரம் பாத்துக்கொண்டிருந்தானாம்… பிறகென்ன அதுக்கும் A+ தான்…




இனி காமெடிகளுக்கு வருவோம்… இவரும் சினிமாப்பைத்தியம்… கம்ப்யூட்டர் ஆக்கிரெக்சர் எக்சாம் மிற்கு முதல்நாள் ஆதியைப்பார்த்துவிட்டு இரவு கொடாவில் சிறியைக்கட்டிப்பித்து சொல்லித்தாடா சொல்லித்தாடா என்று அழுது கொண்டிருந்தேன்.. அடுத்த நாள் எக்சாம் நன்கு கடித்து விட்டது… சே சினிமாவுக்கு போன படியால்தான் இப்படியானது என்று என்னை நானே கடிந்து கொண்ட வேளை உமா புன்னகையுடன் வந்து நின்றான்…
நான் : எப்பிடி மச்சான் எக்சாம்?
உமா: பரவால்லடா! ஏ வரும் (இது உமாவின் ஸ்டைல் )
நான் : அடப்பாவி! எனக்கு கையிலதான்…
உமா: டேய் சும்மாவிடாத! நேற்று எனக்கு முன்னுக்கு நிண்டாய் கியூவில..
நான் :ஙே?
உமா: உன்னை அங்க கொன்கோட்டில நேற்று முன்னால கண்டன் … பிறகு கதை விடுறா… படிக்காம போனனீயெண்டு அவிக்கப்போறியா போறியா எனக்கிப்ப ?



அவனுக்கு ஏ ப்ளஸ் வந்திருந்தது அந்த பாடத்துக்கு..



உதே காமெடி சிவாஜி நேரம் திருப்பி நடந்தது… நான் 4.30 மணிக்கு (காலமை) பஸ் பிடிச்சு 5 மணிக்கு கொன் கோட் வாசலில நிக்கிறன் ஒருவனையும் காணேல்ல… எனக்கு பெரிய சந்தோசம்… சிவாஜி பெஸ்ட் சோ எப்பிடியாவது பாத்திடலாமெண்டு… ஆனா எனக்கு பிறகு வந்த ஒருத்தன் கதைவை தாண்டி உள்ள பாய்ஞ்சான்;.. எனக்கு கடுப்பாகி நானும் உள்ள பாய்ஞ்சா உள்ள பத்து பதினைஞ்சு பேர் இருக்கிறாங்கள். கிட்டப்போனா ஒருத்தன் கூப்பிடுறான்… கூர்ந்து பாத்தா நம்ம உமா… மயங்கி விழாத குறை நான்…



அடுத்தது எப்ப படிக்கிறான் எண்டு கண்டு பிடிக்க முடியாது.. நானும் கவனிச்சுப்பாத்துட்டு ஏலாதெண்டு விட்டிட்டன்.. ஆனா அவன் செய்த உதவிகளை ஆயுளுக்கும் மறக்கமாட்டன்.. சில செமிஸ்டர்கள் ஓவரா விளையாடி கடைசி நேரம் உமா முருகதாஸ் போன்றவர்களின் குப்பியிலதான் பிழைப்பே ஓடியது… உமாவிடம் போட்டியற்ற தன்மை காணப்பட்டமை என் போன்றவர்களுக்குதான் உதவியது..


பெடியர் வீணைவாசிச்சு செமையா வாங்கிக்கட்டுவார்… ஆனா பிசாசு ஒருக்காலும் விட்டுக்கொடுக்கமாட்டான்.. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால்தான்.. அறிவகம் அலுப்பகம் எல்லாம் போய் வறுக்கும் … பாக்கிற எங்களுக்குத்தான் வேர்க்கும்…


அதோட போய்ஸ் படத்தில வாற செந்தில் மாதிரி எங்கெங்க அன்னதானம் போடுவாங்க எப்பப்ப பரீயா படம் போடுவாங்க எல்லாம் பெடிக்கு அத்துப்படி… டாண் எண்டு போய் நிண்டுடுவான் சரியான டைமுக்கு.. என்ககெண்டால் இவனென்னடா இப்பிடியிருக்கான் எண்டு யொசினை… ஆனா அதுவும் அவனுடைய ஒரு அட்ராக்சன் பொயிண்ட்தான்… அதோட காச கண்டபடி செலவழிக்க மாட்டான்… உதாரணத்துக்கு ஒண்டு சொல்றேனே… இவனுடைய 3315 போனை ஒருத்தன் சுட்டுட்டான்.. அதில இருந்தது ஒரு நாசமறுந்த ஹச் சிம்… அதுவும் அதில தெரியாத நம்பரிலருந்து கோல் வந்தா எடுக்கவே மாட்டான்.. ஏனென்றால் அப்போ இன்கமிங் காசு… ( ஒரு அந்தர அவசரத்துக்கு கூடி எடுக்கமாட்டான் கொடுமை!) இந்த வள்ளலில அந்த போனை வாங்கிறதுக்காக கள்ளன் கூட போனூடாக பேரம் பேசி 1000 இல முடிச்சு பிறகு பேர்சில 700வை மட்டும்கொண்டு போய் அவனை பிரிட்ஜ் இல சந்திச்சு 700 க்கு மடக்கி போனை வாங்கி வீடு திரும்பும்Nபுhது அவனும் கள்ளனும் ப்ரெண்ட்ஸ்.. நீங்க எடுப்பங்களா இப்பிடி ஒரு றிஸ்க்? என்னால செத்தாலும் முடியாதப்பா!


பெண்கள் பக்கமே இவன் தலை வைத்து படுத்ததில்லை ஆனால் எல்லாரும் ஒரு பஸ் பிரயாணத்தில் தோளில் யாரோ தூங்கியதாகவும் அதை கொன்சால் பார்த்ததாகவும் சொல்லி வறுப்பார்கள்… பெடி சின்ன ஸ்மைலோட போயிடும்…


நாங்கள் கப்பலில யாழ் போனபோது ஒரு கவனிப்பு கவனிச்சான் ட்ரிங்கோவில வச்சு … ஒருத்தனும் சொன்னா நம்ப மாட்டான்… சினிமாவில வாறமாதிரி கோழி அடிச்சு குழம்பு வைச்சு கொலை வெறி கவனிப்பு… மூச்சு முட்டிப்போச்சு எங்களுக்கு… கப்பலில சிவானுஜன் அஞ்சு நிமிசத்துக்கொருக்க உதைப்பற்றிதான் கதை… காசு சேர்க்கிற புத்தியுள்ளவன் கஞ்சனாயிருப்பான் எண்ட கொள்கை அதோட புஸ் ஆகிடிச்சு…


மாப்பளையிண்ட பிசினஸ் புத்தி இவருக்கு ஒவவொரு முறையும் வினையிலதான் முடியுறது… ஏதொ கோல்ட் கொய்ன் பிரமிட்டில சேர்ந்து காசு விட்டவன் (என்னையும் சேர்க்கப்பாத்தவன் நல்லகாலம் நான் சேரேல்ல) திருந்தாம பிறகும் சீகல்லில போட்டு நாமம் வாங்கினான்… இப்ப என்னவேலையில இருக்கானோ?



இவனைப் பார்ட்டியளுக்கு கூப்பிn எல்லாருக்கும் பயம்… காரணம் இவனுடைய அசகாய சாப்பாட்டு ராமானுஜம்… பாக்கிற எனக்கே தொண்டைய அடைக்கும் ..இவனோ ஒருத்தரையும் சட்டை பண்ணாமல் தன்பாட்டுக்கு உள்ளே தள்ளிக்கொண்டிருப்பான்… ஆனால் ஒரே நிம்மதி என்னவென்றால் மச்சான் முட்டை ட்டும்தான் அசைவமாக உண்பார்…ஹிஹி! அதுக்காக மிக்சர் ப்க்கட் பிஸ்கட் பக்கட் குளிர்பானம் ஏதாவது இவன் கண்ணில் பட்டால் .... பிறகென்ன கள்ளக்கடத்தல்தான்.. ரூமில போனா கிடக்கும்…


ரஜீ ஒரு முறை இவனுடைய கிடங்கு றூமைப் நக்கலடிப்பதாக கூறி ஓட்டைக்கதிரையை எல்லாம் கதையில் கொண்டுவந்து அடித்த காமெடி இப்போது நினைத்தாலும் குடல் பிய்யும் வரை சிரிக்கலாம்… எல்லாருக்கும் ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறேன் … மறந்து விடாதீர்கள்.. உமாவின் மகனுக்கு சொல்லவேண்டும்.. ஹாஹாஹா!



ஒரு முறை இவன் றூமுக்கு சென்றபோது பயோட்டினெக்ஸ் ஈ மாத்திரை உறைகள் வெளியே கிடந்தன…எதுக்கடா இது பாவிக்கிறது எண்டு கேட்டன்.. மயிர் நல்லா வளரும் மச்சான் எண்டான்.. அந்த நேரம் எனக்கு மீசை முளைக்கிற ஐடியாவிலயே இருக்கேல்ல இவனுக்கோ இடும்பன் மீசை… நானும் ஏதோ அவனுடைய மீசையிண்ட மந்திரத்தை கண்டு பிடிச்சமாதிரி அறாவிலைக்கு அந்த மருந்தில ஒரு சீட் வாங்கிக்கொண்டு வந்து ஒளிச்சு வைச்சு குடிச்சன்.. ஆனா அதை அந்த நாசமாப்போன குட்டி உமா கண்டுபிடிச்சு வெளில சொல்லி பரிசு கெடுத்திப்போட்டான்.. ஹாஹாஹா!


றஜீ எக்சாம் மூட்டங்களில இவனுடைய றூம் வாசலில வந்து நிண்டு சொல்லித்தருமாறு கேட்பான்.. இவனோ இன்னும் படிக்கலடா என்று சொல்லுவான்… அவ்வளவுதான் அந்த வாசிலில உருண்டு புரண்டு உலகத்தில இல்லாத நல்ல வார்த்தையெல்லாம் பாவிச்சு கத்திக்குழறி பிறகு ஓய்ஞ்சுபோய் “என்ட உமா கூட என்னை கைவிட்டிட்டான்” எண்டு சின்னப்பிள்ளை மாதிரி றஜீ விசும்பும்… அதுக்கு பிறகு உமா அவனை கூப்பிட்டு குப்பி டைம்டேபிள் குடுக்கும் … இந்தக்காமெடியை ஒவ்வொரு செமஸ்டரும் பார்க்கலாம் …


இப்படி சொல்லப்போனா சொல்லிக்கொண்டே போகலாம் … ஆகையால நிறுத்துறன்… மொத்தத்துல உமாவிண்ட கொள்கைகள் be simple ,ஓசியில கிடைச்சா ஒயிலையும் குடி , கல்வியில எவனுக்கும் உதவு , ஊரையும் உறவையும் மறக்காத ..

எல்லாமே நல்லதுதான்போல கிடக்கு இல்லையா?


நான் இவனைப்பற்றி எழுதக்காரணம் … இவனுடனான தொடர்பு இப்போ முற்றுமே இல்லை.. ஞாபகங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது… அவசரமாக பதிந்து வைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.. குறையிருந்தால் சுட்டிக்காட்டவும்… நன்றி …

Bullet

.

ஞாபகங்கள் தாலாட்டும் (கோகிலன்)





2004களில் மெலிதாய் உயரமாய் ஒட்டித் திரிந்த அந்த உருவத்தை முதன் முதலில் எங்கள் ஆங்கில வகுப்பறையில் சந்தித்தேன்.



எங்கள் ஆங்கில புலமையின் அருமை தெரியாமல் எங்களை கடைசி வகுப்புக்களில் சேர்த்து விட அங்கே பெரும் பான்மையினர் சிறுபான்மையினராகிப் போன அவலம் நடந்தது.
பக்கத்து வகுப்புகளில் தமிழ் முழக்கம் கேட்க அங்கே எட்டிப் பார்த்த போது கோகிலன் தனக்கே உரிய புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்



பின்னாளில் பல தருணங்களில் நாங்கள் ஒன்றாகவே பயணப் படப் போகிறோம் என்றறியாமல் நடந்த அந்த முதல் சந்திப்புகளை பற்றியநினைவுத் தடங்கள் இப்போது என்னிடம் இல்லை..வழக்கமான பெயர் ஊர் விசாரிப்புகளாக அவை அமைந்திருக்க கூடும்.



தனது முதல் வருட வதிபிடத்தை எங்கள் மூத்த குடிகளுடன் பகிர்ந்து கொண்ட கொண்ட கோகிலனை பற்றி பலருக்கும் தெரியாது ஆனால் மிகச்சிறந்தமாவட்ட மற்றும் தேசிய பெறு பேறுகளை பெற்றவர் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும்.



முதல் வருடத்தில் கோகிலன் முதல் குழுவிலும் நாங்கள் எல்லோரும் இரண்டாம் குழுவிலும் இடம் பெற கோகிலனுடன் அவ்வளவாக பழக்கம் ஏற்பட வில்லை



பொதுவாகவே சிவில் மாணவர்களின் இரண்டாம் வருடம் சோகமாய் தொடங்கும் மற்றவர்களுக்கு முன்னாலேயே வதைக்க தொடக்கி விடும் விரிவுரைகளும் கோர்ஸ் வோர்க்குகள் ஒரு புறமும்எலேக்ட்ரோனிக்யும் கம்ப்யூட்டர்ரையும் தவற விட்ட ஏக்ககங்கள் மறுபுறுமுமாக வாட்டும்.



ஆனால் ஒரே ஒரு சந்தோசம் மட்டும் எங்களுக்கு மிஞ்சியது சிவில் தான் பல்கலையில் அதிக தமிழ் மாணவர்களை கொண்ட பிரிவு கிட்டுவும் ரிஷியும் தன்யாவும் பின்னர் எங்களுடன் சேர்ந்து கொள்ள மொத்தமாக ஐந்து பேரும்(deni, thaksha ,yoga ,aingaa ,atc) மெல்லிசாக பதினாறு பேரும் எல்லாமாக இருபத்தொரு பேர் தேறினோம்.



அப்போதும் கோகிலன் பொதுவாக முதல் குழுவில் இடம்பெற நான் இரண்டாம் குழுவில் இடம் பெற பெரிதாக பழக்கம் ஏற்படவில்லை ஆனாலும் அவன் நம்ம ஜாதிஎன்ற பெரும் பாசம் அவன் மீது இருந்தது சிவில் பிரிவில் எனது கட்டழகு உடலுக்கு சவால் விடுத்தவர்கள் இருவர் தான் ஒருவன் கோகிலன் மற்றவன் எனது பேரன்புக்குரிய சிஷ்யன் ராபி



கடினமான மூன்றாம் வருட பரீட்சை முடிந்து industrial training கான தெரிவு நடந்தது. எப்போதும் மற்றவர்களின் சேலை தலைப்பை பிடித்து தொங்கும் நாங்கள் வழமை போல் எங்கள் முன்னோர்களின் வழியில் straad தெரிவு செய்து தொலைத்தோம் எங்கள் அறுவர் அணியில் கோகிலனும் அடக்கம்




அப்போது நாட்டு நிலைமை சற்று இறுக்கமாக இருந்தது அதனால் எங்கள் அனைவருக்கும் site வாய்ப்பு மறுதலிக்க பட்டது நாங்கள் அறுவரும் அணிவகுத்து டிசைன் ஆபீஸ் சென்றோம்.




அப்போது தான் எங்களுக்கும் எங்கள் பரமகுருவுக்கும் (நந்தன) இடையிலான முதல் சந்திப்பு நடந்தது.நீலகலர் முழுக் கை சட்டை அணிந்திருந்த பரமகுரு வாய் நிறைய புன்சிரிப்புடன் வரவேற்றார் பரமகுருவுக்கு இருக்கும் அபூர்வமான வியாதியை அறியாத நாங்களும் அவரது வரவேற்பை கண்டு அக மகிழ்ந்தோம்.




அடுத்த ஆறு மாதங்களும் எங்கள் வாழ்க்கை பரமகுருவுடன் தான் கழிந்தது பரமகுரு நல்லவர் தான் ஆனால் அவ்வப்போது பரமகுருவுக்கு அரிப்பெடுக்கும் அப்போதெல்லாம் அவருக்கு சொறிவதற்கு யாராவது ஒருவர் தேவை படுவார் சிக்கினால் நோண்டி நுங்கு எடுக்காமல் விட மாட்டார்.



ஒரு சின்ன கோட்டை டிசைன் கடதாசியில் வரைந்து விட்டு எதோ சந்திர மண்டலத்திற்கு போய் விட்டு வந்த பாவனையில் தனது நகங்களை கடித்து கொள்ளும் பரம்குருவின் செய்கைகளை அவரது இருக்கைக்கு நேர் எதிர் இருக்கையில் இருந்து அவதானித்து கொண்டிருக்கும் நான் வழமையாக அவரிடம் சிக்கி கொள்வேன்.



ஒரு மாதத்திற்கு பின்னர் நான் ஒருவாறாக பரம்குருவின் அழுங்கு பிடியில் இருந்து தப்பி Silkot போகும் வரை இந்த வதை தொடர்ந்தது அதன் பின்னர் அந்த பொறுப்பை சத்தீஸ்வரனும் லம்போவும் தங்கள் தலை மேல் சுமந்தனர்.





பரமகுருவிடம் இருந்து சாதுரியமாக கோகிலன் தப்பி கொள்வான்அவரின் இருக்கைக்கு சமாந்தரமான வரிசையில் இருந்து முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்வான்.அவர் பார்வை வீச்சை அவனை நோக்கி திருப்பும் போது ஒரு புன்னகை வேறு பூப்பான்



கோகிலன் அங்கிருந்த(straad) சசினி மிஸ்சின் நம்பிக்கைக்குரிய சீடனாக விளங்க்கினான் சசினி மிஸ்சின் எல்லா moment redistribution calculations கோகிலன் தான் செய்வான் அது தவிர அவரது மதிய உணவை கொட்டிலில் இருந்துவாங்கி வரும் பொறுப்பும் கோகிலனை சார்ந்ததே அது தவிர கீர்த்திகவுடம் கையளிக்கப் படும் எல்லா ஸ்டீல் டிசைன் calculationனும் கோகிலனின் தலையிலேயே கட்டப்படும்.கோகிலன் எல்லா வேலைகளையும் சமர்த்தாக செய்து முடிப்பான்.



ஒரு நாள் கொள்ளுபுட்டியில் இருந்த சைட்டில் இரவு static load test செய்ய வேண்டி இருந்தது அதற்காக நாங்கள் இரவு அங்கு தங்க வேண்டி இருந்ததுஅப்போது வெள்ளை வானின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்த காலம் இரவு பதினொன்று இருக்கும் தீடிரெண்டு கோகிலனை காணவில்லை நானும் கீர்த்திகவும் பதறி போய் தேட கோகிலன் அங்கிருந்த பெரிய கனரக வாகனத்தில் ஏறி அதனுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்.



நான் அருகில் சென்ற பொது கோகிலனின் கண்கள் சிவந்திருந்தன.நான் என்ன மச்சான் என்ன நடந்தது என்று கேட்ட போது முதலில் எதுவும் சொல்ல மறுத்த கோகிலன் பின்னர் தனது அமைதியை கலைத்தான்.



தனது காதலி கொழும்பு வந்திருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து வெளி நாடு செல்ல இருப்பதாகவும் சொன்னான் நான் வழமை போல்விடு மச்சி இருக்கிறவனுக்கு ஒன்று இல்லாதவனுக்கு ஆயிரம் என்று சொல்ல உனக்கென்னடா தெரியும் காதலை பற்றி என்று எகிறினான்.



எப்போதாவது காதலித்திருக்கிறாயா என எதிர் கேள்வி கேட்ட கோகிலன் தனது காதலியின் முகத்தை வாழ் நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம்என்றும் தான் அவளை மிகவும் நேசித்ததாகவும் சொன்னான்.



உயர் தரம் முடித்த பின்னர் ஒரு முறை பஸ்ஸில் ஏறிய போது அவள் ஒரு புன்னகையை வீசி விட்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவளை பல தடவைகள் பின் தொடர்ந்ததாகவும் ஆனால் பல்கலை தொடங்கிய பின்னர் தான் இங்கே வந்து விட்டதாகவும் அதற்கிடையில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும் சொன்னான்.



பிறிதொரு முறை அவனுடன் கதைத்த போது தனது முன்னாள் காதலிக்கு குழந்தை கிடைத்திருப்பதாக சொன்னான் என்ன பெயராம் என்று கேள்வி கேக்க நினைத்த நான் ஏனோ கேட்க வில்லை அவனும் அதை சொல்லவில்லை.



முதல் வருடத்தில் மோசமான பெறுபேற்றை பெற்ற எங்களுக்கு மூன்றாம் வருட இறுதியில் எங்கள் சிவில் பிரிவு தரும் மிக மோசமான தண்டனை தான் surveying camp.வாழும் போதே நரக வாழ்க்கையை அனுவிக்கும் மோசமான நாட்கள் அவை



அதிகாலை இரண்டு மணிக்கு நித்திரைக்கு போய் விட்டு மீண்டும் ஐந்தரை மணிக்கு எழும்பி குளித்து விட்டு காடளக்க புறப்பட்டு விடுவோம் பலாக் காய்களுடனும் கட்டை சம்பளுடனும் எங்களுக்கு எப்போதும் இணக்கம் இருந்ததில்லை எதோ உயிர் தங்க சாப்பிடு விட்டு காடளக்க புறப்படுவோம் கொளுத்து வெயிலில் எங்களுக்கு ஒதுக்க பட்ட வேலையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் கல்லும் முள்ளும் குத்த குத்த அளவிடை எடுப்போம்.




எல்லோரும் வெறுத்து போயிருந்தார்கள் எல்லோரும் தங்கள் குழுவுக்கு தான் அதிக வேலை என வாதம் செய்வார்கள்



நானும் கோகிலனும் தான் எங்கள் குழுவின் தமிழ் உறுப்பினர்கள் நாங்கள் வேலை எல்லாம் முடித்த பின்னர் குளித்து பவுடர் எல்லாம் போட்டு விட்டு நம்மவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டு எங்கள் குழுவுக்கு பெரிதாய் வேலை இல்லை என்றும் நாங்கள் மர நிழலில் நின்று இளைப்பாறி விட்டு வந்ததாய் கதை விடுவோம் அவர்களும் அதை கேட்டு கடுப்பாவர்கள்



காடளந்து விட்டு வந்தால் எட்டு மணிக்கு வரைதல் தொடங்கி விடும் எங்கள் குழுவின் தலைவர் எங்கள்ளுக்கும் (எனக்கும் கோகிலனுக்கும்) சில வேலை தருவதற்காய் எங்களிடம் வருவார் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எங்களுக்கு விளங்கப் படுத்துவார் நாங்கள் விளங்கிளானும் விளங்க வில்லை எனத் தலையாட்டுவோம்.




அவரும் மறு படியும் விளங்க படுத்துவார் நாங்களும் விடாமல் விளங்க வில்லை என்று தலை அசைப்போம் இறுதியில் தனக்கு வந்து வாய்த்தவர்கள் வேதாளங்கள் என்ற உண்மை விளங்கிய பின்னர் தனது முயட்சியை கைவிட்டு விடுவார்.



சில அளவிடுகள் குடி மனைகளையும் தோட்டங்களையும் ஊடறுத்து எடுக்க வேண்டி இருந்தது நாங்கள் கால்வாய் வெட்டுவதக்காய் அளக்கிறோம் என்று காலம் காலமாக சொன்ன பொய்களால் ஊரவர்கள் வெறுத்து போய் இருந்தார்கள்.



ஒரு மரவள்ளித தோட்டத்தை ஊடறுத்து அளவிடு எடுக்க இருந்தது கோகிலன் மர வள்ளி கொப்புகள்அளவூட்டை மறைத்ததால் அவற்றை முறித்தான் அப்போது அங்கிருந்த தோட்டக்க் காரன் சிங்களத்தில் பேச அது புரியாத கோகிலன் தனது வழமையான புன்சிரிப்பை தவிழ விட்டு விட்டு மேலும் சில கொப்புகளை முறிக்க தோட்டக் காரன் கடுப்பாகி அடிக்க போக அங்கிருந்த சகோதர இன மாணவன் நிலைமையை தோட்டக் காரனுக்கு விளக்கி தடுத்து நிறுத்தினான்.



கோகிலனுக்கு எங்கள் பல்கலை அருகில் இருக்கும் சைனீஸ் கடை fried rice ரொம்ப பிடிக்கும் எனக்கும் அது ரொம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி நாங்கள் கூட்டணி அமைத்து கொள்வோம் தினமும் chicken சாப்பிடும் எங்கள் இருவரினதும் உடற் கட்டமைப்பை பார்த்து கடை முதலாளி எங்களை தனது கடையின் விளம்பர மாடல்களாக நடிக்கும் படி கேட்டும் நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம்.



இது கோகிலனின் பல்கலை வாழ்வின் முழுமையான பதிவல்ல. அவன் என்னோடு பயணித்த சில காலங்களின் தடங்கள் மட்டுமே இந்த பதிவு முழுமை பெற அவனை பற்றிய உங்களினது பதிவுகளும் அவசியம்.



இன்னும் ஓரிரு வருடங்களில் தனி நூலக உருவெடுக்க இருக்கும் இந்த வலைத்தளத்தின் பதிவுகளுக்கு நீங்களும் உரமிடுங்கள்.



காலப் பெரு வெள்ளத்தில் கரைந்து போகாமல் இருக்கும் உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்வதன் மூலம் எங்கள் பல்கலையின் வாழ்வுகளை மீட்டி பார்க்கும் இந்த இனிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.




இயன்றவரை எல்லோரையும் பற்றிய பதிவுகளுக்கு நாங்கள் முயற்சிப்போம்



மறு படியும் ராபியை பற்றிய பதிவுடன் உங்களை சந்திப்பேன்



வாழ்க்கையின் எந்த தருணங்களும் மீள வரா. அந்த தருணங்களை அசை போடுகின்ற நொடிகளில் தான் நாங்கள் தொலைத்து விட்ட அந்த நொடிகளின் அருமை தெரிகிறது.



-SP





.




வேறு பெயர்கள்-டேஞ்சர் சரி,விஞ்ஞானி,அலிபாய்,கெமிக்கல் அலி

கொக்குவில் எனும் ஊரிலே ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.மிக்க சிவ பக்தி கொண்ட அவர்கள் தவறாது கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு வந்தனர்.ஆனால் அவர்களின் மனைதையும் உறவுகளின் மனதையும் அரித்து வந்த ஒரு விடயம் இருந்தது.அதாகப்பட்டது அவர்களின் உறவுகளில் யாருக்கும் ஆண்வாரிசு கிடையாது என்பது பலத்த கவலையை தோற்று வித்திருந்தது.இதனால் மனமுடைந்த உறவினர்கள்,தம்பதியினர் எல்லோரும் ஆண்டவனிடம் ஆண்மகவு வேண்டி 333 நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.ஆண்டவனும் மனமிரங்கி திருவருள் பாலித்தார்.1983ம் ஆண்டு ஜீன் மாதம் ஊரில்லாம் உறங்கிக்கொண்டிருந்த வேளை கொக்குவிலை பகலாக்கியது போல ஒரு ஒளி வானில் தெரிந்தது.




ஆமிக்காரன் தான் பரா லைட் அடிச்சிட்டு செல் அடிக்கப்போறான் என்று ஊரவர்கள் பதுங்கு குழிக்குள் முடங்கிக்கொண்டனர்.ஆனால் அந்த ஒளி அவர்கள் வீட்டு முற்றத்தில் இறங்கியது.ஊரார் அச்சத்தை விடுத்து அருகே வந்த போது அங்கே அழகா ஆறு குழந்தைகள் காணப்பட்டன.அதில் ஒன்று கட்டுக்கட்டாக புத்தகங்களோடும்,இன்னொன்று மிருதங்கத்தோடும்,இன்னொன்று 5 ரூபாய் குத்திகளோடும்,இன்னொன்று லாண்ட் மாஸ்ரர் பெல்ட்டோடும்,இன்னொன்று இரசாயன குவளைகளோடும்,கடைசிக்குழந்தை ரின் மீனோடும் காணப்பட்டன.ஆசையோடு ஆறு குழந்தைகளையும் அணைத்து எடுத்து உச்சி மோர்ந்த போது ஆறு குழந்தைகளின் உடல்களும் ஒட்டி அரிந்தபலகை போன்ற ஒரு உடம்பு தோன்றிவிட்டது.அவர்கள் அக்குழந்தைக்கு சசிவர்ணன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.



தமிழகராதி அர்த்தங்கள்-சசி - இந்துப்பு(வெடியுப்பு) : கருப்பூரம் : சந்திரன் : பச்சைக் கருப்பூரம் : கடல் : மழை.

அலிகொண்ட அலிபாய்



சசி என்றால் கற்ப்பூரம்.பெயருக்கேற்ர கற்பூரம் போல உடனே பத்திக்கிற இயல்போடும்,வீரத்தோடும் வளர்ந்து வந்த சசிவர்ணன் குத்தில் மட்டுமல்ல,யானை ஏற்றம் ,குதிரை ஏற்றம் முதலியவற்ரையும் கற்று பெரு வீரனாக திகழ்ந்தான்.வன்னி வள நாட்டின் முத்தையன் கட்டுக்குளத்தில் காத்தாடி பூட்டி ஆட்டி கறன்ட் எடுத்து இருண்டா காடுகளை எல்லாம் பகலாக்கினான்.சும்மா திண்டு கொழுத்திருந்த மீன்களை எல்லாம் ரின்னில் அடைத்து ரின்மீன் செய்து பட்டினி போக்கினான்.பாமரமக்களெல்லாம் வண்டியை அமத்த பெல்ட் பாவிக்க சசியோ இயந்திரங்களில் பெல்ட்டை போட்டு ஓட்டி தொழில்நுட்பப் புரட்சி செய்தான்.கன்னியர் உள்ளம் கவர் கள்வனாக திகழ்ந்த இவனை பார்த்த இளம் பெண்கள் எல்லோரும் இவனென்ன இந்திரனா?/சந்திரனா என எண்ணி உடல் சோர்ந்ததாக பழைய வன்னிக்கவிஞர்களின் ஏட்டுச்சுவடிகளில் சசிபற்றி குறிப்புக்கள் காணப்படுகின்றன.ஆனாலும் எல்லா புகழும் வன்னியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள்ளேயே குறுக்கிப்போயிருந்தன.அதாவது குடத்திலிட்ட விளக்கு போல இருந்த சசியின் பிரகாசம் வெளியே தெரிந்தது கட்டுப்பெத்தை என்ற மேட்டில் ஏறியபிறகுதான்.ஆனால் முக்கால்க்கழுசானும் ,ஜெல் வைத்து கிளறி விட்டப்பட்ட முள்ளுத்தலையும் கொண்ட கலம்பு டமில் பெடியளலேயே அடைய முடியாத பிரபலத்தை 3 பிளீட்ஸ் வைச்ச "காதலன் ஜீன்ஸ்",நெற்றி நிறைய திருநீறு பூச்சு,பாட்டா செருப்பு என வலம் வந்த சசியால் எப்படி பெற முடிந்தது???.இதற்கு சசி பாவித்தது தனது பிரச்சாரத்திறனை.இவர் ஜெயசுதன்,தீபரூபன்,அச்சுதன்,ஜெனா,வசந்தன் மாதிரி ஊரைக்கூட்டும் சரவெடியன் அல்ல,அலுங்காமல் குலுங்காமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல காலுக்கடியில் கொளுத்திப்போட்டு,பாதிக்கப்பட்டவன் வெடி என உணர முதலே இடத்தை காலி செய்யும் அசாத்திய திறமைசாலி.வன்னியில் இருந்து புறப்பட்ட இந்த புயல் கட்டுப்பெத்தையில் 4 வருசம் மையங்கொண்டு விளைவித்த சேதாரங்கள் சொல்லிஅடங்காதவை.

கட்டுப்பெத்தையில் கட்டுக்கடங்கா காளை




மொறட்டுவயில் கத்தரிக்கோல்.,கத்தி,நக வெட்டி போன்ற பல ஆயுதங்களை உள்ளடக்கிய அறைச்சாவிக்கொத்தை வெளியே தெரியும் படி விரலில் கொழுவிக்கொண்டு வலம் வந்த சசி "நான் படிக்க வரேல்லை ......... வேலைத்திட்டத்துக்கு தான் வந்தனான்" என்று பயப்படாம பரவலா கொழுத்திப்போட்ட வெடிதான் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.அடுத்த தாக ஹெல்த் சென்ரரில் டாக்டருக்கு சேர்ட்டை கழட்டி பாடி காட்டிவிட்டு திரும்பிய சேகர நோக்கி "என்ன இது உடம்பாடா இது?,எதோ அரிஞ்ச பலகை மாதிரி இருக்கு? நான் இப்ப கழட்டுவன் சேர்ட்ட,நீ நிண்டு பார்த்துட்டு போ" எண்டு சசி சொல்ல சேகர் தன்ர பாடிய இப்பிடி கேவலப்படுத்திட்டானே எண்ட கடுப்பில மேட்டர எல்லாருக்கும் போட "எவனோ சசியாம்? யார்ரா அவன்?" எண்டு தெரியாதவர்கள கேட்க வைத்தது.



ஒரு நாள் டெக்ஸ்டைல் ரிப்பார்ட்மெண்ட் விரிவுரையில எழுந்தமானமா கிறுக்கிக்கொண்டு போன லெக்சரர் ரெஸ்ட்ரியூப் ஒண்டிண்ட படத்த வரைய அந்தக் கிறுக்கல்கள ஒன்று விடாம பிரதிபண்ணிக்கொண்டிருந்த சசி உடனே பென்சில எடுத்து 2 சமாந்தரக்கோடுகளை வரைந்து,பரிசோதனைக்குழாயின் வளைந்த அடிப்பக்கம் வரைய வெண்டு வட்டவாரிய எடுக்க பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் வயிற்றில புளிய கரைச்ச மாதிரி இருந்தது.நல்ல ஜிபிஏ எடுத்தா கெமிக்கல் டிப்பார்ட்ட்மெண்டுக்கு ஏத்தி வுடுவாங்களாம் எண்டு யாரோ போட்ட வெடிய நம்பி லிfகோ லிக்சனரி, மாக்கர் பேனைகள்,மார்க் பண்ணி கலரா மாறின நோட்ஸூகள்,என டேஞ்சரில் சசி போட்ட "காட்டுக்குத்து"(பெயருக்கான காப்புரிமை சிறிஸ்காந்திடம் இருந்து பெறப்பட்டது) டேஞ்சர் சசி,கெமிக்கல் சசி என்ற பெயர்களை சசிக்கு வாங்கித்தந்ததே தவிர கெமிக்கல் கனவு சாத்தியப்படவில்லை.சற்றும் மனம் தளராத சசி "நமக்கு கெமிக்கல் டிப்பார்ட் மெண்ட் கிடைக்காட்டி என்ன நமக்கு வரப்போறவள் நல்ல டிப்பார்ட் மெண்டா இருந்தா காணும்" எண்டு போட்ட பிளான் மொறட்டுவ வராலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.ஆனால் சசியின் தெரிவுதான் பிசகி விட்டது.எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகள் இவைகள் தான்...............
சசிக்கு ஏன் இந்த கோணல்ப்புத்தி?/சசிக்கு கண்பார்வை குறைபாடா?/சசி பெண்களையே பார்த்ததில்லையா?/சசிக்கு விசரா?.......
இந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் பதில் தேட "பிளாஸ் பேக்"கில 2 ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டியது அவசியமாகிறது.

வன்னிவளநாடும் கைலாயவன்னியனும்.



நிரம்பியோடும் நீர்நிலைகள்,வயல்களில் நிறைந்து பாரந்தாங்காமல் வளைந்து நிற்கின்ற நெற்கதிர்கள் , கொழுத்த ஜப்பான்,திலாப்பியா மீனினங்கள் நிறைந்த பாசன வாய்க்கால்களும் அவற்றை உண்ணும் விருப்புடன் கூடிய பறவைகள் கூட்டங்கள்,மதகு மேல்குந்தி கூட்டம் போடும் வயசுப்பெடியங்கள்,காற்றில் பறக்கவிடாமல் ஆடைகளை அழுத்திப்பிடித்தபடி சைக்கிளோடும் கன்னிப்பெண்கள்,ரொட்டிக்கடை வாசலில் பத்திரிகையோடு கூட்டம் போடும் பெரிசுகள்,பாக்குரலை கடந்த காலத்தை அசை போட்டபடி இடித்துக்கொண்டிருக்கும் கிழவிகள் என விசுவமடுவின் சகல அங்கங்களும் அறிந்தவன் சசி."பிள்ளயெண்டா அவன மாதிரி இருக்கோணும்" எண்டு மாற்றாக்கள சொல்ல வச்சது சசி உடையார்கட்டில் டிசைன் பண்னின ரின் மீன் தொழிற்சாலை.மண்ணெண்னை ரம் தகரத்தில் ரின் செய்து யப்பான் மீனுகள பிடிச்சு துண்ணு துண்டா வெட்டி கடைசியா "யூ" வளைவில போய் டின் அலுங்காம குலுங்காம விழுகிற மாதிரி செய்த இயந்திரம் நியூட்டனின் கண்டு பிடிப்புக்களுக்கு இணையானது ஆகும்.அதுக்கு பிறகு முத்தையன் கட்டுகுளக்கட்டால தன்ர பாட்டில பாய்ஞ்சுகொண்டிருந்த தண்ணிக்கு குறுக்கால காத்தாடி வச்சு கறண்ட் எடுத்து பல சிறார்களின் கல்விக்கு ஒளி ஏற்றியமை சசியின் மனிதாபிமானத்துக்கு எடுத்துக்கு காட்டாகும்.இளம் பிராயத்தின் பெரும் பகுதியை சித்தப்பாவின் பட்டறையில் கழித்த இவனுக்கு இயந்திரத்தின் பெல்ட்டோடு வேலை செய்வது மிகப்பிடித்தமானதாக இருந்தது.அத்தோடு மயூரன் அண்ணா பண்டாரவன்னியன் நாடகத்துக்கு வாள் பிடிக்கும் வேளைகளில் எல்லாம் கைலாய வன்னியனாக வால் பிடிக்கும் வேடம் சசிக்கே வந்துசேர நடிப்பில் பின்னி எடுக்கும் தருணங்களும் சேர்ந்து கொள்ளும்.

மேளத்தில் துயிலும் அழகு கண்டு மோகம் கொண்ட மோகினி.



வனப்பு மிக்க வாலிபன் சசி தன் ஓய்வு நேரத்தில் மிருதங்கம் பயின்று வித்துவானாக வரும் வரை எல்லாம் நன்றாகத்தானிருந்தது.சசியின் துடிப்பைக்கண்ட பரத நாட்டிய ரீச்சர் தனது வகுப்புக்கு மிருதங்கம் வாசிக்கக்கூப்பிட்டு விபரீதத்துக்கு வித்திட்டார்.கன்னிகள் ஆட கண்ணன் போல சசி கொட்டில் நடுவில் இருந்து நல்ல பிள்ளையாட்டம் மிருதங்கம் வாசிச்சு விட்டு தன்ர பாட்டில திரும்பி விடுவான்.இந்த அடக்கம்,அழகு,அறிவு,திறமை எல்லாம் அதில் ஒருத்திக்கு பிடித்துப்போயிற்று.ஒரு நாள் வகுப்புக்கு மேளத்தோடு வேளைக்கே வந்த சசி ஒருத்தரும் வரக்காணாது சற்றே மிருதங்கத்தை தலையணையாக்கி கண்னயர தலை மாட்டில் சற்று நேரத்தில் "சல்" "சல்" என்று கொலுசுச்சத்தம்.விழித்துப்பார்த்தால் அவள்...புன்முறுவல் பூத்தபடி தரையை லேசாக தட்டியபடி இருந்தாள்.




கண்டதும் காதல்




இயந்திரம்,பெல்ட்,ரின் மீன்,கறண்ட் என வறண்டு போன சசியின் மனதுக்குள் குளிர்மையான அருவி போல அவள் புகுந்தாள்.தூக்கமில்லா இரவுகள்,கண்ணாடி முன் போன பகல்ப்பொழுதுகள் என வளர்ந்த அந்தக்காதல்ச்செடி கனகாலம் நீடிக்காது நாயகியின் வெளிநாட்டுப்பயணத்தோடு கருகிப்போனது.ஒருவருடம் தாடி வளர்த்து வாணரம் ஆயிரம் குடுக்கார சூரியா போல திரிஞ்ச சசி போனால் போகட்டும் போடா எண்டு பாடிவிட்டு கடைசி 3 மாசம் படிச்சு வந்ததுதான் புடவைபொறியியல்ப்பீடம்,இல்லாட்டி இருக்கவேண்டிய இடமே வேற...இந்த பிளாஸ் பேக் ஒரு இரவு நேர ஏ_9 வீதிப்பயணத்தில் முதலாவது செமிஸ்டர் நேரத்தில் எனக்கு சசி சொன்னது.முதல் சொன்ன லவ் பெயிலியர் கதையிலும் கடைசி வரியையே சசி முதன்மையால் எனக்கு சொல்ல வந்ததாய்ப்பட்டது எனக்கு."சரி இந்த பிளாஸ் பேக்குக்கும் கம்பஸ் கதைக்கு என்ன தொடர்பு என்ன?" என நீங்கள் முணுமுணுப்பதுக்கு சசி அப்போ சொன்னதை அப்படியே இங்கே எழுதிவிடுகிறேன்.


"இவள நான் பார்த்தது என்னத்துக்கெண்டா,அந்த பீலிங்ஸ்ச மறக்கோணும் எண்டதுக்காண்டி...
அதோட அவளும் இவள மாதிரி சரியான கட்டைதான்.வடிவு எண்டதில அவளோட இவள ஒப்பிடேலாது.ஆனா கொஞ்ச சாயல் இருக்குத்தான்.இனிமேலாவது சும்மா என்ர லவ்வ கொச்சைப்படுத்தாம இரு என்ன?..."


கண்ணியும் சிக்காத கன்னியும்(?????)

இதற்க்குப்பிறகு சசி அந்த தேவதையை(????) மடக்க போட்ட பிளானுகள் ஏராளம்.5ரூபா குத்தியை போட்டு பல்கலை வளாக பொது தொலைபேசியால் மிஸ்ட்கால் அடித்து மறுமுனையில் அழுத்தமுதல் றிசீவரை வைத்து மீள 5 ரூபாயை எடுத்து அடுத்த நாள் மிஸ்ட்கோலுக்கு பக்குவப்படுத்துவது,போனுக்கோ/ஐபொட்டுக்கோ தொடுக்கப்படாத வெறு இயர் போனை காதில் மாட்டிக்கொண்டு திரிவது,பிரபுதேவா ஜீன்ஸிலிருந்து டெனிமுக்கு மாறினது,தமிழோடான ஆங்கில வார்த்தைக்கலப்பை கூட்டியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.எல்லாத்தையும் எழுதப்போனால் புளொக் ஸ்ரக் ஆகிவிடும்.சசி எத்தனை பிளானை போட்டாலும் அவை எல்லாம் கட்சியா வடிவேலு தாலி கட்ட வெளிக்கிட்ட கதயாத்தான் போச்சு.(அந்த பிகர் ரீமா போல இருக்கும் என நினைப்பவர்கள் உங்கள் செருப்பை கழட்டி உங்கள் மூஞ்சியில் 3 முறை அடித்துக்கொள்ளவும்.)




பிணம் கூட சிரிக்கும் இவன் கதை கேட்டு.


சசி பற்றி ஒரு பதிவில் எழுதுவது என்பது சமுத்திரத்தை இறைத்து வற்ற வைப்பது போலவாகும்.சசி போட்ட வெடிகளில் சில எம் காதுகளில் கேட்டன.ஆனால் கேட்க்காமல் போன வெடிகள் தான் பல.நீங்கள் மனது வைத்தால் சசி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கொளுத்திப்போட்ட வெடிகளை ஒவ்வொருவரும் இங்கே பதிவாக்க முடியும்.அவை ஆவணப்படுத்துவது அவசியமாகும்.ஏனேன்றால் சசியின் வெடிகள் சில நூற்றாண்டுகள் தாண்டிப்பேசப்படவேண்டியவை ஆகும்.
சசியின் நடிப்பாற்றலையும் அழகையும் கண்டு இயக்குனர் பவான் அவர்கள் "கபோதி" திரைப்படத்தில் நாயகனாக்கி இருந்தார்.பெண்வேடத்தில் வந்து கலக்கிய சசி உண்மையில் அந்த "தேவதை"யை விட ஆயிரம் மடங்கு அழகாக இருந்தார்.பவான் "கபோதி" பட அனுபவங்களை,காணொளியை இங்கே பதிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்.கபோதி பட திறமை கண்டு சசியிடம் கஸ்டப்பட்டு கால்சீட் எடுத்து காணொளிபப்படுத்தி முற்றுப்பெற வாய்ப்புக்கூடாத அவதாரம் படத்துக்கான அந்த காட்சியை இங்கே இணைத்துள்ளேன்.


.










பயோ டேட்டா-

பெயர்-கிரிஸ்ணன் ஜெயசுதன்

வயசு-கலியாணவயசு

சிறப்பியல்பு-வெடித்தல்,வெடித்தல் மட்டும்

தொழில்- பெரிய பிரித்தானிய பெற்றோல் கம்பனியில் பெரிய உத்தியோகம். (இலங்கைக்காசுக்கு மாதம் 2 லட்சத்துக்கு மேல சம்பளமாம் ...அம்மாடியோவ்)

சமீபத்தைய சாதனை-வேலைத்தளத்துக்கு வந்த காப்பிலி பெண் "கட்டினா உன்னைமாதிரி ஒருத்தனை தான் கட்டணும்.உன்ர சிரிப்ப பார்த்துக்கொண்டே இருக்கலாம்" என்றது.(கடும் மது வெறியில் வந்திருந்தாள்)

வாழ்நாள்க்கவலை -இன்னும் பிகர் செட் ஆகலையே என்பது.

ஒரே எரிச்சல் - சௌந்தர ராஜனுக்கு பெண் கொடுக்க கந்தப்பளையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போட்டி போடுவது.

இனி இவரைப்பற்றிய சுவாரசியமான சில சம்பவங்களைப்பார்த்துக்கொண்டு போகலாமா??



ஜெயசுதன் ஆரம்பகால 7G+ குழு உறுப்பினர்.வசந்தன் 7G+ இன் முப்படை தளபதி என்றால் ஜெயசுதன் ரம்புக்வெல போல.
அதிரடிகள் அலியப்பாவால் பல தனியாக செய்யப்பட்டாலும் வெளி உலகிற்கு ஜெயசுதனின் வாய் மூலமாக சொல்லப்படுகையில் தன்னாலும் செய்யப்பட்டதாக இணைக்கப்பட்டே சொல்லப்படும்.இது ஜெயசுதனின் உண்மையான இயல்பு பற்றி தெரியாதவர்களுக்கு "இவன் கடும் ரவுடி போல"என்ற கருத்து உருவாகிவிடும்.வவுனியாவில் வெறியில் போன கிழவர்களுக்கு அடித்தது.பலாப்பழம் களவெடுத்தது போண்ற் துணிகர அதிரடிகளை அலியப்பா கஸ்டப்பட்டு செய்திருந்தான்.ஆனால் மூச்சு விடாமல் வெடித்து ரணகளப்படுத்தும் ஜெயசுதன் எல்லா தாக்குதள் பெருமைகளையும் அள்ளிச்சென்று விடுவான்.




மொறட்டுவவில் வெறியில் போன குடுகாரனுக்கு வசந்தன் சொட்டை போட்டுவைக்க ஜெயசுதன் உசாராகி பிரச்சாரம் தொடங்கினான்.இது நடந்தது முதலாவது செமிஸ்டரில்.எனக்கும் 7G+ இற்குமான தொடர்பு வந்தது இந்த ஜெயசுதனின் வெடிமூலமாக தான்.அத்துகோறளை வீட்டில் வெம்மையான மதிய வேளையில் லெஸ்லி,கமல்ஸ் கூட இருக்கையில்
குடுகாரனுக்கு அடித்தது பற்றியும் மன்னாருக்கு வவுனியாவிலிருந்து 150 கிலோமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளில்
போனது பற்றியும் கூறிக்கொண்டிருந்த ஜெயசுதன் திடீரென விட்ட ஒரு அதிர் வெடி எல்லோரையும் உலுப்பிபோட்டு விட்டது.
விரிவுரையைக்கு மட்டம் போட்டு படுத்திருந்த நாம் எல்லோரும் கலங்கிப்போனோம்.கமல்ஸ் கூட தூக்கத்தால் எழுந்துவிட்டான்.
வவுனியாவில் .....யக்க பெடியளுக்கு முருக்கம் செத்தலால் அடித்ததாய் சொல்லிவிட்டான்.சேது அடிச்சிருந்தா உள்ள போட்டிருப்பாங்களே?..என்க...நாங்கள் அப்ப உள்ளயே இருக்கிறம்...இது ஜெயசுதன்.நானும் பல வெடி விட்டவன் தான் ஆனால் இப்பிடியும் விடுவாங்களோ என்று குழம்பிப்போனேன்.எல்லோரும் நக்கல் அடிக்கிறார்கள்.ஆனால் அவன் தான் சொன்னதில் உறுதியாக இருந்தான்.




புளுகனோ வெடியனோ கடும் எதிர்ப்பு வந்தால் சற்று தடம் மாற்றுவார்கள்.ஆனால் இவன் அசையவில்லை.எனக்கு மனம் சொல்லிற்று...நீ தேடிக்கொண்டிருந்தவன் இவன் தான்டா.. என்று.செய்யாது விட்டாலும் செய்ததாக சொல்வது அவனது ஆள் மன ஆசை.அப்பிடியென்றால் இவனுக்குள் ரவுடி ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது.நமக்கும் அது தானே இருக்கிறது.ரவுடியாக வேண்டியது தான்.உடம்பால் முடியாட்டி என்ன வாய் இருக்கிறதே.....இவனோடு சேர்வோம்.மனம் முடிவெடுத்து விட்டது.(அன்று செய்த்து எத்துணை பெரிய தவறு என்று எனக்கு பின் உறைத்தது.)

வாய் மெய் இரண்டும் சேர்ந்தால் தான் பெரிய ரவுடியாக முடியும்.பல்கலையில் கராத்தே வகுப்பு தொடங்க போனேன்.ஆச்சரியம்...வெடி ஜெயசுதனும்,அலியப்பாவும் நிற்கிறார்கள்.அட ஒரே ரசனை தான் நமக்குள்...கககபோ...
பயிற்சிகள் தொடங்க அலியப்பா ஓரளவு நேர்த்திக காலைக்கையை ஆட்டுகிறான்.ஜெயசுதனை பார்க்கிறேன்.குடு அடித்தவன் போல தடுமாறிக்கொண்டிருந்தான்.இடைவேளையில் நான் முன்னமே பழகினவனாக்கும் என்பதை காட்டும் முகமாய் "அடிபடவிடுறாங்கலில்லை.காத்துக்கு பஞ்ச் பண்ணுறது நல்லாவே இல்லை" என போட்டு வைக்க,ஜெயசுதன் அலியப்பாவை தட்டி "வசந்தன் அடிபாட்டைபற்றி கதைக்கிறான்" என்க அலியப்பா என்னை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தானே...ஆயுளூக்கும் மறக்க மாட்டேன்.




பிறகு விரிவுரைகள் நடக்கும் ஒவ்வொரு நாளும் தனது ரவுடி வாழ்க்கையைப்பற்றிச்சொல்ல நானும் கவனமாய் கேட்பது போல நடித்துக்கொண்டிருப்பேன்.இவ்வாறு ரவுடி வாழ்க்கை ஒரு பக்கமா போனாலும் ஜெயசுதனின் வாளி வாழ்க்கை அதைவிட வேகமாக போய்க்கொண்டிருந்தது.அச்சுதனும் இவனுக்கும் இடையில் வாளி வைப்பதில் இணாக்கப்பாடு நிலவியது.வட்ட ஸ்டேன் பென்ஞ் இல் பெண்கள் இருக்க இருவரும் மணிக்கணக்கில் சூழ நின்று சூழ அளந்துகொண்டிருப்பார்கள்.வீரமும் காதலும் தானே பழம் தமிழர் பண்பு.காதலின் பல்கலை வேர்சன் தானே வாளி.கலக்குறாங்கள் என மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.விரிவுரை முடிந்து நாமெல்லாம் கூடி கூட்டமா பன்னி கணக்கில் வர முதலாகவே இவர்கள் இருவரும் பெண்களும் வட்ட ஸ்டோன் பென்ஞ்சுக்கு வந்து விடுவார்கள்.தினமும் வழிசல்கள்,வாளியள்,சொங்கியள் என ஆயிரம் அர்ச்சனை கிடைக்கும் நண்பர்களிடமிரிருந்து.ஆனால் அவை அனைத்தையும் தனது திறமைமேல் கொண்ட பொறாமையின் வெளிப்பாடுகள் என ஒதுக்கி புன்முறுவல் பூக்கும் அரிய தகமை இவரிடம் மட்டும் தான் உண்டு.



வாழ்நாளில் மிககேவலமாக ஒரு ஆண் பெண்ணால் அவமானப்படுத்தப்பட்டதை நேரே கண்டது இவர் மூலமாகத்தான்.
அந்த சம்பவம் ஒரு நாள் பின்னேரம் விரிவுரை முடிந்து வந்த போது நடந்தது.அவ்வளவுக்கு கேவலத்தை ஒரு பெடியன் எதிர்கொண்டு சிரித்த முகத்தோடு சென்றதை நான் ஆயுளில் கண்டதில்லை.காணப்போவதும் இல்லை என்றே நம்புகின்றேன்.எங்களோடு வந்த ஜெயசுதனின் முகத்தில் திடீரென பல்ப் எரிஞ்சது மாதிரி ஒரு பிரகாசம் எதிரே வந்த ஒரு பெண்ணை கண்டதாலேற்பட்டது..துள்ளிக்கொண்டு" அங்க முனியம்மா(பெயர் இங்கே மாற்றப்பட்டுள்ளது) வாறா என்ற படி ஒரு ஆட்டுக்குட்டி தாயாட்டிடம் பால் குடிக்க போவது போல தனக்கே உரிய சமச்சீரற்ற நடையோடு ஒடிப்போய் முனியம்மா வுக்கு ஏதோ சொல்லி வாளி வைக்க அவள் "உன்ன மாதிரி ஒரு வளிசல் கேசை நான் கண்டதில்லடா" என்க எங்களுக்கெல்லாம் காற்சட்டை கிளிந்து விளுந்து விட்டது போல இருந்தது.ஆனால் ஜெயசுதன் மாறா புன்னகையோடும் "என்ன
நீரே இப்படி சொல்லலாமா" என்று கேட்டபடி பின்னால் போய்க்கொண்டிருந்தான்.இவ்வளவுக்கும் முனியம்மா வை ஒரு பிகர் என்று சொல்ல முடியாது.கரும்பில்லா ஊரில இலுப்பம் பூ சக்கரை என்ற ரீதியில் தான் அவள் பிரபலம் பெற்றிருந்தாள்.

அடுத்த நாள் ஏனடா இப்படி கேவலப்படுறாய் என்று நானும் கமல்சும் கேட்க ஜெயசுதன் ஒரு கேவலமான சிரிப்புடன் எங்களைப்பார்த்தான்." உங்களுக்கு அவளோட கதைக்க விருப்பமா?.நீங்க கதைச்சா அவள் கதைப்பாள்.நல்ல பெட்டை என்றான்".பெண்களோட பிரண்டா பழகுங்கடா....வவுனியாவில நாங்கள் வீட்டுக்கு போய் உண்வு சாப்பிடுற அளவுக்கு கேர்ல் பிறண்ட் வைச்சிருக்கிறம்.நீங்களும் அவளை ஒரு பெட்டையா யோசிக்காம பிறண்டா பழகுங்க என்க கமல்சும் நானும் சூடாகி தூசணங்கள் சில பொழிந்தோம்.ஜெயசுதனின் கண் சிவந்தது.முகத்தில் ரவுடி களை படர்ந்தது.மீசை முளைக்கிற இடம் துடித்தது(ஜெயசுதனுக்கு 3ம் வருடத்திலேயே மீசை மயிர்கள் முளைத்தன என்பதால் அப்படி குறிப்பிட்டேன்).யாரைப்பற்றியும் கதை அவளைப்பற்றி கதையாதே என்று கப்டன் போல சீறினான்.இந்த சீற்றத்தைப்பற்றி சிலாகித்து பல பார்ட்டிகளில் விழுந்து விழுந்து பின்னாளில் சிரித்திருந்தோம்.
ஆனால் பிற்காலத்தில் தனது தவற்றை உணர்ந்து வாளி வாழ்க்கையை கைவிட்டு மிகச்சிறந்த ஒரு நண்பனாக பலருக்கு இவர் திகழ்ந்ததையும் இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும்.



சமீபத்தில் லண்டன் சௌத் பாங் யுனிவேசிற்றியிலயும் தனது வெடியை கொழுத்திப்போட பாதிக்கப்பட்ட தமிழ் மாணவன் ஒருவன் தனது உள்ளக்குமுறலை கீழ்க்கண்டவாறு மூஞ்சிப்புத்தகத்தில் வடித்திருந்தான்.


//அந்த காலத்தில பெரிய பிரித்தானியா போறவய சீமைக்கு போகினம் எண்டு தான் பழசுகள் சொல்லுங்கள்.ஊர் மாட்டுக்கு பதிலா வெளிநாட்டில இருந்து அறிமுகமான கறவைப்பசுவை சீமைப்பசு
எண்டு கூப்பிட்ட எங்கள் மூத்தகுடிகள் அத விடாமல் சீமையாடு,சீமைமுயல்,சீமை தண்ணி இறைப்பு மிசின்,சீமைச்சரக்கு(தண்ணி) எண்டு தொடர்ந்து பெயரிட்டு தங்களது பிரித்தானிய மோகத்தை காட்டியிருந்தார்கள்.அந்த வரிசையில இப்ப வாறவர்தான் சீமை ரவுடி.கமல் நாயகன்ல தென்பாண்டிச்சீமை ரவுடியா வந்தது போல இவர் தென்வங்கிச்சீமையில இவர்தான் ரவுடி.
ஆளப்பார்த்தா சிரிப்பு வரும்.பேசத்தொடங்கினா அழுகை வரும்.கதைக்க தொடங்கினா பயம் பிடிக்கும்,புளுக தொடங்கினா ரத்தம் வரும்.(காதில)

முந்தி உலக நடப்பு ஒண்டும் தெரியாம இருக்கேக்கயே பயங்கர ரவுடி.இப்ப வாழ்க்கையில நல்லா அடிபட்டு உலகம் அறிஞ்சு எங்கயும் போய் எதயும் முடிக்க்கூடிய நிலைல இருப்பதாக அவர் வாயாலேயே சொல்லக்கேள்விப்பட்டு இதயம் தினமும் பயத்தில் அடித்துக்கொள்கிறது.
என்வாழ்நாளில் என்னப்பற்றிய மிகக்கேவலமான கருத்தாக நான் கருதுவது அவர் என்னப்பற்றி நினைத்து உதிர்த்த அந்த வார்த்தைகளைத்தான்.("நீ வாழ்க்கைய எப்படி சமாளிக்கப்போறாய் எண்டு நினைச்சா எனக்கு கவலையா கிடக்கு".)அவர் பேர் சொல்லவே என்னக்கு முடியல.அவ்வளவுக்கு அவர் மேல் மதிப்பும் மரியாதையும் பயமும் எனக்குண்டு.லண்டனில முருக்கம் செத்தல் இல்லாது எவ்வளவு நல்லது எண்டு நான் நினைத்துக்கொள்வேன்.ஏனெண்டா வாள் வீச்சு,வாய் வீச்சுகளில் மட்டுமல்ல முருக்கம் செத்தல் வீச்சிலும் அவர் கெட்டிக்காரன்.அவர் பெயரை சரியாக கண்டு பிடிச்சு
இங்க எழுதும் அந்த தில்லான ஆளுக்கு தென்வங்கி கோழிக்கடையில் வறுத்த சிக்கன் பெடெக்ஸ் வாங்கித்தரப்படும்.//
இது ஒன்றே போதும் இவர் தீரம் சொல்ல.




வெடிகளுக்கு அப்பால்ப்பட்டு ஜெயசுதன் ஒரு ரொமாண்டிக் ஹீரோ.இவர் நடித்த படத்திலிருந்து ஒரு பாடல்க்காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.பார்த்து மகிழுங்கள்.