Showing posts with label வழக்கிட்ட காரிகை. Show all posts
Showing posts with label வழக்கிட்ட காரிகை. Show all posts

வழக்கிட்ட காரிகை-05


காவல்துறை நிலையத்தில் உம்சாண்டியின் சைக்கோ தந்தை கொடுத்த "கொலை மிரட்டல்" முறைப்பாட்டை ஏற்று என்னையும் அலியப்பாவையும் பிடித்து செல்லவென நான்கு போலீசார் காலை 7 மணிக்கெல்லாம் பல்கலை வாசலில் வந்திறங்கிவிட்டனர்.இடியே விழுந்தாலும் காதருகே கிளைமோர் வெடித்தாலும் காலை 8.30க்கு பின்னரே தூக்கம் கலையும் நானும் சன்ராவும் நடப்பதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தோம்.காவல்த்துறையை உள்ளே அனுப்ப முடியாது எனக்கூறித்தடுத்த பல்கலைக்கழக காவலர்கள் எம்மை பிடிக்கவென விடுதிக்குள் இறங்கினார்கள்.ஆனால் எமது அதிஸ்டம் அவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.சில மாதங்களுக்கு முன் நடந்த உள்மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணை போயிருந்த அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கடுப்பில் இருந்தார்கள்.தமது ஆதிக்க பகுதியான விடுதிக்குள் நுழைந்து இரு மாணவர்களை அழைத்துச்செல்வதை விரும்பாமல் விரட்டிவிட்டார்கள்.நடந்தது எதுவுமே அறியாமல் வெளியே வந்து விடயம் தெரிந்து அதிர்ந்து போனோம்.விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிந்திருந்தது.அரை விசரன் வணிகதுங்க கூப்பிட்டு கடிந்து கொண்டான்.மதிய வேளை அவசரமாய் 7ஜி குழுமம் கூடியது.மீள காவல்த்துறை வர முதல் நாமாகவே சென்று விடுவது நல்லது என முடிவானது.அடுத்த அரை மணிநேரத்தில் காவல் நிலையத்தில் நின்றோம்.



முறைப்பாடு ஒரு தாளின் இரண்டு பக்கங்களிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது.தமிழே தெரியாத நிலைய பொறுப்பதிகாரி உள்ளீட்டை "பெண் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வீடு புகுந்து கொலை மிரட்டல்" என எழுதி கீழே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.அருகே இருந்த பெண் பொலீஸுக்கு உம்சாண்டியின் தந்தை கையூட்டு கொடுத்திருக்க வேண்டும்.எங்களை பிடித்து உள்ளே போட வேண்டும் என அடிக்கடி பொறுப்பதிகாரிக்கு சொல்லிக்கொண்டு இருக்க உசாரான அலியப்பா அகலமான வாயை திறந்து புன்னகைத்தபடி வரிக்கொரு "சேர்" போட்டு குழைய தொடங்கினான்.அந்த புன்னகையில் மயங்கிய பொறுப்பதிகாரி முறைப்பாட்டை கையில் கொடுத்து மொழிமாற்றி சொல்லும் படி பணித்தார்.அதை தகப்பனார் சொல்லச்சொல்ல மகள் எழுதியிருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்டோம்.பலவிதமான குற்றச்சாட்டுக்கள் நிரம்பியிருந்த அவ்முறைப்பாட்டில் இறுதிப்பந்தி எம்மை அவசரகால சட்டத்தில் பிடித்து போடக்கூடியவகையில் வடிக்கப்பட்டிருந்தது."வட பகுதியை சேர்ந்த தீவிர நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியப்படும் இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என்றிருந்த அந்த வரிகளை அலியப்பா தயங்கி தயங்கி மொழிமாற்றி சொல்லிவிட்டு பொறுப்பதிகாரியை பார்த்து "சேர்ர்ர்ர்ர்ர்ர்" என்று இழுத்தான்.எம்மவர்களின் தனிப்பட்ட விரோதத்துக்காக போட்டுக்கொடுக்கும் இயல்பை பலதடவை கண்டதாலோ என்னவோ பொறுப்பதிகாரி இறுதி வரிகளை படித்தவுடன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.ஜெயவர்த்தன பல்கலையில் பயின்றிருந்த அவர் நடந்திருக்கக் கூடியதை சரியாக ஊகித்திருப்பார் போலும்.நீண்ட பிரசங்கம் ஒன்றை நடத்தி "நான் என்றதால் தப்பித்தீர்கள்.வேறு யாராவது என்றால் இப்படி எழுதியிருப்பதைப்பார்த்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.கவனம்" என்று முடித்து செல்ல அனுமதித்தார்.


துள்ளிக்குதித்து ஓடி வந்த நாம் பிரச்சனைகள் ஓய்ந்தனவென்று முடிவெடுத்து என்று மீள கமெராவை தூக்கிக்கொண்டு நின்று போன படத்தை எடுக்க தொடங்கினோம்.ஒரு பக்கமாய் "புறஜெக்ட் ரிப்போட்" கொடுக்க வேண்டிய திகதி நெருங்கிக்கொண்டிருந்தது.இரவில் புரஜெக்ட் பகலில் படப்பிடிப்பு என்று தீயாக தூக்கம் மறந்து இயங்கிக்கொண்டிருந்தோம்.2007 மார்கழி மாதம் கிளைமோரில் சிக்கி வவுனியாவில் இருந்து ஓடிவந்தோம்.2008 ஜனவரியில் அலியப்பாவை தூக்கிக்கொண்டு போய் தெகிவளை குடுக்காரன்கள் பிரிச்சு மேய்ந்தார்கள்.என்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.இன்னொரு பூச்சி மட்டக்களப்பில் இருந்து எச்சரிக்கை கடிதம் வரும் ஆளணி அம்போடு மிரட்டிக்கொண்டிருந்தான்.2008 மார்ச்சில் கட்டுப்பெத்தை குடுகாரன்கள் அலியப்பாவும் சிரிப்பு ரவுடி,சௌந்தர் வெளியே சாப்பிட போகும் போது தட்டிப்பிழிந்து தக்காளி சட்னி வரவைத்து அனுப்பி வைத்தார்கள்.இது போதாது என்று கூடவிருந்த ரிஸ்மி வேறு கலவரம் செய்து எக்குத்தப்பாய் சிங்கள மாணவர்களிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்.இப்படி "சனியன் உங்கட ஹொஸ்டல் றூமுக்க படுத்திருக்குதோ மச்சான்?" என்று பிறர் கேட்கும் அளவுக்கு அடி அடியாய் வாங்கிக்கொண்டிருந்தோம்.நடப்பதை பார்த்து கலங்கிப்போன அச்சுதனும் வெறிக்குட்டியும் ஒரு நடுட இரவில் வீட்டுக்கு ஓடிப்போய் ஒரு மாதம் கழித்துத்தான் விடுதிக்குள் வந்தார்கள்.இப்படியான ஒரு நிலையில்த்தான் நாங்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தோம்.புரஜெக்ட் றிப்போட் எழுதிக்கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராமல் எனக்கு பல்கலை கழக விசாரணைக்கு அழைப்பு வந்தது.கமல்சுக்கும் வந்திருந்தது.கூடவே மங்கோலியனுக்கும்.



பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று பிரிவால் நடத்தப்பட்ட விசாரணை நடந்த ஒரு மணித்தியாங்களும் என் வாழ்நாளில் மிக அசிங்கமானவை.எனக்கு பேசவே சந்தர்ப்பம் தராது மலையாக குற்றச்சாட்டிக்களை அடுக்கிய சிங்கள விரிவுரையாளர்கள் ஆளாளுக்கு சிக்மண்ட் பிராய்ட்டை மிஞ்ச முயன்று கொண்டிருந்தார்கள்.நான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கான உளவியல் காரணங்களை வாயெல்லாம் அசிங்கமாய் லிப்ஸ்டிக் குதப்பிய ஒரு பெண் சிங்களவிரிவுரையார் வரிசைப்படுத்தினார்.நான் மறுத்த போது ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவு என்று சொன்னாள்.எனக்கு சினிமாவில் பார்த்த விசாரணை காட்சிகள் தான் நினைவுக்குள் வந்தன."இதெல்லாம் ஒரு கம்பஸ்,இதெல்லாம் ஒரு டிகிரி" என்ற மனநிலையில்தான் விசாரணைக்கு வரும் போது இருந்தேன்.நீள்வட்டமாக மேசை போட்டு சுற்றியிருந்து மிரட்டிய மிருகங்களை பார்த்ததும் வெள்ளைக்கொடியை தூக்கி விட்டேன்.இறுதியில் "உனக்கு தண்டனை வழங்கப்படும்.அதை பிறகு சொல்கிறோம்" எனச்சொல்லி சில வாரங்களுக்கு என்னை உள நெருக்கடிக்குள் புதைத்தார்கள் அந்த கவுன்சிலிங் மேதைகள்.




முடிவில் புறஜெக்ட் கொடுக்க முடியாதபடி ஒரு மாதம் தடை கிடைத்தது.ஆயினும் பல்கலைச்சூழலிலும் வெளியேயும் தமிழ் மாணவர்கள் அப்போது எதிர்நோக்கிய மிகச்சிக்கலான நிலையை கருத்தில் கொள்ளுபடி இரக்க மனம் படைத்த விரிவுரையாளர்கள் கேட்டதையிட்டு அது பின்போடப்பட்டது.கமல்ஸும் நானும் விசாரணை விடயங்கள் பற்றி பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம்.என்னை முதல் குற்றவாளியாகவும் கமல்சை இரண்டாம் நிலை குற்றவாளியாகவும் கருதி இருக்கிறார்கள் என்று புரிந்தது.மங்கோலியன் எப்படி தப்பினானோதெரியவில்லை."எனக்கு தெரியாது.அவர்களை கேளுங்கள்" என்று விசாரணையில் சாதித்திருப்பான் போலும்.இறுதி வரை அவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.



2008,ஜூன் மாதம் கட்டுப்பெத்தையில் நடந்த கிளைமோர் வெடிப்பு பேரனர்தமும் பின் நிலவிய பயங்கர சூழலும் எங்களை வெள்ளவத்தை அறைகளுள் முடக்கிப்போட்டன.செப்ரெம்பரில் லண்டன் வந்த பின் நானும் கமல்சும் இவ்விடயம் தொடர்பில் அலசத்தொடங்கினோம்.என்னென்ன வழி முறைகள் ஆப்பு அடிப்பதுக்கு உண்டோ அவ்வழிமுறைகள் எல்லாவற்றையும் பரிந்துரைத்த கொழும்பு "டமில்" சகமட்ட பேர்வழிகள்,சைக்கோ ஜூனியர்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.Material department உதவி விரிவுரையாளராக இருந்த போது மங்கோவுக்கு உதவப்போய் சிக்குப்பட்ட சீனியர் ஒருவரிடமிருந்தும் பெறுமதியான தகவல்களை உருவினோம்.மங்கோவின் தந்தையுடன் கூடிக்குலாவி வழக்கிட உறுதுணையாக இருந்த வீணைகள்,வதையன்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.வேலைப்பழுவும் காலமும் அந்த அருவருப்பான நிகழ்வை மறக்கச்செய்திருந்தது.ஆயினும் சிங்கபுரிக்கு 2011 Januaryல் போன போது கேள்விப்பட்ட சிலவிடயங்கள் கோபத்தை கிளறி முதலாவது பாகத்தை எழுத தூண்டின.அதற்கு எதிர்வினையாக மங்கோ செய்த கீழ்தரமான செய்கைகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இத்தொடரை ஐந்து பாகங்களாக எழுத தூண்டுகோலாக அமைந்தன.

{இத்தொடரின் நோக்கம் தனிநபர் தாக்குதலை நோக்கமாக கொண்டதல்ல.தனிநபர் தாக்குதலை தடுப்பதற்காக பல விடயங்களை தணிக்கை செய்து இருக்கிறேன்.உளப்பாதிப்பு கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்கள் சமுதாயத்தில் பல் பாதிப்புக்களை சந்திக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே எழுதும்படி ஆனது}

பிற்குறிப்பு-காவல் நிலையத்திலிருந்து நானும் அலியப்பாவும் வெளியே வரும் போது அந்த பெண் பொலீஸ் அலியப்பாவிடம் வந்து தொலைபேசி இலக்கத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டாள்.காவல் நிலையத்திலிருந்து அழைக்காமல் பிரத்தியோக கைத்தொலைபேசி மூலமாக அடிக்கடி அழைத்து "மீள விசாரிக்க வரும்படி" சொல்லிக்கொண்டிருந்தாள்.7ஜி குழுமம் கூடி முடிவெடுத்து அலியப்பாவிடம் சொன்னது "மச்சான்! அவள் கூப்பிடுறது விசாரிக்க இல்லை.அவளுக்கு உன்னிலை ஒரு பிளானடா".பிறகென்ன வந்த ஒரு மாதத்துக்கும் அலியப்பா சிங்களத்தில் டூயட் பாடிக்கொண்டு திரிந்தான்.ஆயினும் இதுவும் ஒருவகையான பொறியாக இருக்கலாம் என கருதி இறுதி வரை சந்திக்க போகவில்லை.இவன் ஒரு வாய் வேட்டுப்பேர்வழி என முடிவெடுத்த அவள் தானாகவே தொடர்பை நிறுத்திக்கொண்டாள்.

-முற்றும்.




வவுனியாவில் நடந்த சம்பவம் மெலிதாக பல்கலைக்கழகத்துள்ளும் கசியத்தொடங்கியிருந்தது."அது எப்படி நீங்கள் போகிற இடத்தில் மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது?" என்று வேறு சிலர் நேரடியாக கேட்டு வேறு பீதியை கிளப்பினார்கள்.வடபகுதி அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே கைது செய்யப்பட போதுமானதாக இருந்த நாட்களில் மனநோயாளியான உம்சாந்தியின் தந்தை பல்கலைக்கழக கவுன்சிலரான வணிகதுங்கவிடம் வந்து முறைப்பாட்டை தாக்கல் செய்தான்.2007 சங்கமம் நூலில் இருந்த புகைப்படத்தை எடுத்து அரைவேக்காட்டு வணிகதுங்க பிரச்சினையை உருவாக்கும் பேர்வழிகளை காட்டும்படி கேட்டுக்கொள்ள உம்மாசாண்டி என்னையும் கமல்சையும் சுட்டி வழக்குக்கு பிள்ளையார் சுழியை போட்டு வைத்தாள்.விரிவுரை முடிந்து மதிய உணவுக்கு போவதற்கு தயாராகிக்கொண்டிருந்த ஒரு மதியம் வணிகதுங்கவிடம் இருந்து அழைப்பு வந்தது.

வெருளிக்கு நாகரிக உடை அணிவித்தது போல இருக்கும் வணிகதுங்க தன்னை ஒரு அறிவாளியாக காட்டுவதற்கு எடுக்கும் சிரத்தை விரிவுரை மாணவர்களுக்கு விளங்கவேண்டும் என எடுக்கும் கவனத்திலும் அதிகமாவே எப்போதும் இருப்பதாய் கருதி நான் அடிக்கடி கடுப்பாவதுண்டு.அவனது அறைக்குள் போனதும் "நீ ஒரு பெண்னை பின் தொடர்வதாகவும் பௌதீக ரீதியாக அவளை அணுக முயல்வதாகவும் எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கிறது.அந்த பெண்ணைப்பார்த்தேன்.அழகான குணமான பெண்.ஆனால் நீ அவளை பிழையான விதத்தில் அணுகுகிறாய் என நினைக்கிறேன்" என்று பெரிய உளவியலாளர் பருப்பு போல கதைத்துக்கொண்டு போனான்.எனக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த உருவத்தை அழகு என்றதும் அதன் பின்னால் நான் செல்வதாக கூறியதும் படுபயங்கரமான கோபத்தை ஏற்படுத்தின.வணிகதுங்கவிடம் வாதிடத்தொடங்கினேன்.இலங்கை அரச பல்க்லைக்கழகங்களில் விரிவுரையாளர் சொல்வதை மறுத்து உரையாடுவது மிக அரிதானது.இருந்த போதிலும் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டதை பொறுக்கமுடியாமல் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்து போராடினேன்.வணிகதுங்க விடுவதாக இல்லை.இது பெரிய பிரச்சினையை உருவாக்கப்போக்றது.மேன் மேலும் அதை வளர்க்காமல் இருக்கவேண்டுமானால் அந்த பெண் பின்னால் செல்லாதே என்று கூறிவிட்டு போகும் படி சொல்லிவிட்டான்.


விடுதிக்கு வந்தவுடன் நண்பர்களுக்கு அழைப்பை போட்டேன்.எல்லோரும் ஒவ்வொரு திக்கில் நின்றார்கள்.அலியப்பா மோட்டார் சைக்கிளில் அடுத்த ஐந்தாம் நிமிடம் அறையில் நின்றான்.விசரியின் வீட்டு விலாசத்தை ஒரு தெரிந்த நண்பரிடம் இருந்து எடுத்தாகிவிட்டது."விட்டா நாளைக்கு பிள்ளைய நீ குடுத்திட்டாய் எண்டும் சொல்லுவாள் போல கிடக்கு" என்று வேறு அலியப்பா பீதியூட்டினான்.ஒரு வேளை வேற யாராவது பின்னால போய் ஏதாவது பண்ணிட்டு சிக்கலாகின உடன என்ர பெயர போட்டுகொடுத்திட்டு மாறிட்டானோ தெரியேலை.ஆனா புத்தகத்தில் என்ர படத்த தெளிவா காட்டியிருக்கிறாளே!.ஏதாவது பார்வை கோளாறு உள்ளவளா இருப்பாளே!.வகைவகையாக யோசித்துக்கொண்டிருக்கும் போதே அலியப்பாவின் பைக் சொய்சாபுரத்தையும் தாண்டி பறக்க தொடங்கிவிட்டிருந்தது.


பிளட்ஸ் வாசலில் நின்ற காப்போனிடம் விபரங்களை கொடுத்துவிட்டு உள்ளே போய் கதவை தட்டினோம்.
"நான் சுகந்தமாறன்.மொறட்டுவை யூனிவெர்சிட்டியிலிருந்து வந்திருக்கிறேன்.நான் உங்கள் மகளுக்கு பிரச்சினை கொடுத்ததாக முறைப்பாடு கொடுத்துள்ளீர்கள்.பெயர் மாறி கொடுத்துவிட்டீர்களொ தெரியவில்லை.அதை கேட்டறியவே வந்துள்ளேன்"
"எதுக்கும் கீழே போய் நில்லும்.நான் வருகிறேன்" சொல்லிவிட்டு கதவை அடிச்சு சாத்தியவன் உம்சாண்டியின் தந்தையாகயாக இருக்கவேண்டும் என்பதை ஊகித்துக்கொண்டு கீழிறங்கி வந்தோம்.


ஐந்தாவது நிமிடம் சிகெரெட்டை புகைத்தபடி ஒரு சிரிப்பு ரவுடிக்குரிய பாவனைகளோடு கீழே இறங்கி வந்தவன் ஆக்ரோசமாக கத்ததொடங்கினான்.
"நீங்கள் வவுனியாவில வெடியில அம்பிட்டது கேள்விப்பட்டவிடனயே திட்டத்தை போட்டுட்டன்டா! உன்ர வரலாறே எனக்கு தெரியும்.உன்ர குடும்பம் எங்க இருக்குது? என்ன செய்யுது என்றும் தெரியும்.சரியா ஆளுக்கு எதிராகத்தான் முறைப்பாட்டை கொடுத்து இருக்கிறேன்.அங்க வழக்க போட்ட உடன ஓடி வந்து கதவை தட்டி காலில் விழவச்சன் பார்த்தியோ.இனித்தான்ரா மிச்சம் இருக்கு" என்று சொல்லிவிட்டு வெறித்தனமாக மனநோயாளிபோல சிரிக்கத்தொடங்கினான்.அலியப்பா என்னை தடுத்துவிட்டு சமாதானம் போசத்தொடங்கினான்.எதையுமே அவன் காலில் விழுத்தாமல் என்னை ஒரு பாலியல் குற்றவாளி ரீதியில் அவன் பேசிக்கொண்டு போக நானும் வாய்த்தர்க்கத்தில் இறங்கிவிட்டேன்."இவனோடு பேசிப்பிரியோசனமில்லை வாடா போவம்" என்று பைக்கில் பாய்ந்து ஏறி ஓடித்தப்பும் வரை அவனது பேய்சிரிப்பும்  நிற்கவில்லை.

புதிய விடுதியில் இன்றைய இரவு சந்திப்பு பெரியதாக இருந்தது.மங்கோவைத்தவிர அனைவரும் நடந்ததை கேள்விப்பட்டு வந்திருந்தார்கள்.ரெக்ஸ்டைல் சிங்களபெட்டையள் விசயத்தை கேள்விப்பட்டுட்டு "சுகி மேல பாலியல் வழக்கா?,வாய்ப்பே இல்லை.பெண்ணா போனாலும் அவன் ஓடியிருப்பானே?" என்று சொன்னதை மீட்டி என்னை சிரிக்கவைக்க நண்பர்கள் முயன்று கொண்டிருந்தார்கள்.நெருங்கிய நண்பர்கள் ஆளுக்கொவ்வொரு விதமாய் மனதில் பட்டதை சொன்னார்கள்.சிப்லி "என்ன தான் இருந்தாலும் ஒரு பெட்டை இப்படி வழக்கை போட்டிருக்கெண்டா ஏதோ நடந்திருக்கு.உண்மைய சொல்லிடு மச்சான்" என்று வேறு கேட்டு கடுப்பேத்தினான்.என்மீது பிறர் அனுதாபம் காட்டுவதை விரும்பாத போதும் இவ்வளவு நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்களே என்பதை நினைக்க ஆறுதலாக இருந்தது.விடிகாலையில் காவல்துறைவாகனம் ஒன்று "வீடு புகுந்து கொலை முயற்சிக்கு முயன்றனர்" என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் என்னையும் வசந்தனையும் கைது செய்ய கம்பஸ் வாசலில் வந்து நிற்கபோகிறது என்பதை அறிய வாய்ப்பில்லாத நான் அன்றிரவு நிம்மதியாக உறங்கிப்போனேன்.

(வழக்கு நீளும்.பாகம் 5 வெகு விரைவில்)






காதல்க்கிறுக்கன் நுண்ணிய புலன்களைக்கொண்டவன்.வெளுத்தெல்லாம் பாலென்று நம்பும் சாதாரண தமிழன் போலவில்லாது "மச்சான் இவன் ஒரு மார்க்கமனான ஆள், கவனமா இருக்கோணும்" என்று அடிக்கடி மங்கோ தொடர்பாக கருத்து தெரிவிப்பவன்.நாயகன் முரட்டு துணிச்சல்காரன்.இரண்டுபேருள்ளும் எனது மனதில் உருவான சந்தேகம் ஏற்கனவே முளைவிட்டிருந்ததால் கணநேரத்தில் நடுஇரவை அண்மித்த பொழுதுகளின் காரிருளை போர்வையாக்கி மங்கோ அறையுள் நடப்பவற்றை அவதானிக்கக்கூடிய சமீபத்தில் நிலையெடுத்துவிட்டிருந்தார்கள்.உள்ளே போன உரையாடல்களை செவிமடுத்த இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.

பின்னிரவில் அறைக்கு திரும்பிய மங்கோவின் அறையில் வதியும் சீனியர் ஒருவருக்கு நடந்த சம்பவம்,அதற்கான காரணம் என்பன திரிபில்லாமல் மெலிந்த குரலில் சொல்லப்பட்டாலும் இரவின் நிசப்தம் சுவர்களை தாண்டி வெளியே இருந்த காதல்கிறுக்கன் பாம்பு காது வரையும் அவற்றி எடுத்து வந்துவிட்டிருந்தது.அடித்தவர்கள் சும்மா அடிக்கவில்லை "எங்களோட தங்கச்சியோட சொறிவியா?, சொறிவியா?" என்று கேட்டு கேட்டுத்தான் மொங்கி இருக்கிறார்கள்.அதை வெளியில் சொன்னால் கேவலமாகிவிடும் என்று நினைத்த மங்கோ பாமன் கடைப்பன்னியின் ஆட்கள் சுகந்தமாறனை தேடிவந்த இடத்தில் தனக்கு அடித்து விட்டதாக கதை ஒன்றை வெகுநேர்த்தியாக பின்னியிருக்கிறார் என்பதை ஊகித்துக்கொள்ள புலனாய்வு அறிவொன்றும் தேவையில்லைதானே?.அது இளம்செழியனாலேயே முடியக்கூடியது.


நமது உள்வீட்டு விவகாரம் கொழும்பு அரைடமில்சுக்கு தெரிந்தால் கேவலமாகிவிடும் என முடிவெடுத்த நாம் சாத்வீக வழியில் மங்கோவிடம் விளக்கம் கேட்க முடிவெடுத்தோம்.காதல்கிறுக்கனும், குடிகாரனும் மறுநாள் விரிவுரை முடிந்து வந்த பொழுதுகளில் விடயத்தை மெதுவாக போட மங்கோ முதலில் தடுமாறி பின்னர் வன்சொற்களால் தாக்கத்தொடங்கிவிட்டார்.சிலநாட்களின் பின்னர் மங்கோவிடம் நேரடியாகவே பேசிவிடுவது என்று முடிவெடுத்தேன்.எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக கருதிக்கொண்டிருந்தவனிடம் எப்படி இதைக்கேட்பது என்பது தொடர்பில் எனக்குள் மிகுந்த தயக்கம் இருந்ததால் சில நாள் தாமதமாயிற்று.

"உனக்கு என்ன விசரா?,உன்னால தான் நான் அடிவாங்கினான்,ஏன் இப்பிடி கதைய மாத்துறாய்?" என்று சொன்னவனிடம் இறுதியாக கேட்டேன்.
"எங்களோட தங்கச்சியோட சேட்டை விடாதே" எண்டு அடிச்சவங்கள் சிங்களத்தில் கேட்டதாக நீ "பிர----" என்கிற சீனியரிடம் செல்லவில்லையா?"

"இல்லை.அப்படி சொல்லேலை" மங்கோ அழுத்தமாக சாதித்தான்.கழுத்தறுப்பு,நம்பிக்கைத்துரோகம்,நயவஞ்சகம்,ஆப்படிப்பு,குழிபறிப்பு எனபனவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக மங்கோ தெரிந்தான்.மங்கோ ஒரு வெள்ளிதவறாமல் கோயிலுக்கு செல்வான்.தினமும் கடவுளை வழிபடுவான்.துளிகூட கடவுள் நம்பிக்கையில்லாத நான் கூட அவனின் நம்பிக்கை தூய்மையானது என மதிப்பளித்திருந்தேன்."ஓவரா சாமி கும்பிட கோயிலுக்கு போறவனை ஒரு காலமும் நம்பக்கூடாது" என அலியப்பா சொன்னது சரியென்று பட்டது.அத்தோடு அவனோடு பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் தொற்றிக்கொண்ட குறும்படங்களை உருவாக்கும் ஆர்வம் காரணமாக கமெராவுடன் 7ஜி குழுமத்தோடு அலைந்ததில் ஏறக்குறைய இந்த விடயம் முற்றாகவே மனதைவிட்டு அகன்று போயிருந்தது.இறுதி வருடம் முதலாவது செமிஸ்டர் லீவுக்கு நுவரெலியாக்காடுகளுக்குள் சூட்டிங் என்று அலைந்துவிட்டு இறுதி செமிஸ்டருக்காக திரும்பிய போது வேலைநிறுத்தம் வந்து பல்கலை மூடப்பட்டது.விடுதிகளை விட்டு வெளியேறுமாறு நோட்டிஸ் ஒட்டிவிட்டார்கள்.எல்லோரும் போய்விட யாழ்மாணவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டோம்.முகமாலையில் தொடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலை அடுத்து பாதை மூடப்பட்டதால் எமக்கு வீடுகளுக்கு செல்ல வழியேதும் இருக்கவில்லை.பல்கலைக்கு வெளியே அறைகளை அவசரமாய் பார்த்து எங்களை திணித்துக்கொண்டேம்.ஏரியாவே வெறிச்சோடிப்போய் இருந்தது.பொழுது போவது மிகக்கடினமாக இருக்கவே வவுனியாவில் இருந்த நாயகனின் சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தோம்.சிரிப்பும் கும்மாளமுமாய் சிலநாட்கள் நகரமுதல் அந்த சம்பவம் நடந்தது.எமக்கு வெறும் ஆறே மீற்றர் தொலைவில் கிளைமோர் வெடித்தது.சிதறிய உருக்கு கோளங்கள் பெரும்பகுதியை அரணாக நின்ற வாகனம் ஒன்று தடுத்துக்கொண்டடலும் அதையும் மீறி இரு கோளங்கள் மங்கோவை தாக்கின.எல்லோரும் துடித்துப்போனோம்.சம்பவ இடத்தில் நின்ற அந்நியர்கள் நாமே என்றதால் பிரச்சினை பேயாய் விரட்டியது.நாயகனின் சகோதரியிடம் அவனை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு கொழும்புக்கு மாறினோம்.மொறட்டுவையில் தங்க இடமில்லாது தனித்து நின்றபோது கண்டுகொள்ளாது வீடுகளுக்கு ஓடிய குறிப்பிட்ட சில வவுனியா சகமட்ட பேர்வழிகள் விடயமறிந்து வைத்தியசாலைக்கு சென்று ஓடியதற்காக எங்களை தூற்றினார்கள்.அங்கே மங்கோவை சொந்த சகோதரனைப்போல கவனித்துக்கொண்டிருந்த நாயகனின் சகோதரியின் மனம் நோகும்படி மங்கோ வார்த்தைகளை வெளிவிடும்படியாக தூண்டிவிட்டார்கள்.மீள கட்டுப்பெத்தைக்கும் வந்து ஊளையிட்டார்கள்.

நடந்த சம்பவம் வழக்கிட்ட காரிகையின் தந்தைக்கு மட்டத்தின் வீணை மூலமாக போனது.அதே நேரம் வ.இ.காரிகையும் மீள பல்க்லையில் இணைந்து கொள்வதற்கான காலமும் நெருங்கிக்கொண்டிருந்தது.வவுனியாவில் நாங்கள் சிக்கிக்கொண்ட விடயம் கனதியானது என்பதை ஊகித்த அவன் ஆழமாக வலைபின்ன தொடங்கினான்.மகளின் மனவியாதியை உண்மை என நம்பி அதற்காக அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கையோடு விளையாடப்போகிறோம் என்பது அவனுக்கு தெரிந்திருகவில்லை.

பல்கலைகழக தலைமை கவுன்சிலரான வணிகதுங்க என்ற அரைலூசன் முன்பு வழக்கிட்ட காரிகையோடு வந்தமர்ந்த தகப்பன்காரன் "எனது மகளுக்கு மீளவும் பிரச்சினை வரக்கூடாது" என்று கேட்டுக்கொள்ள வணிகதுங்கவின் கரங்கள் மேசையில் இருந்த சங்கம புத்தகத்தை நோக்கி நீண்டன.

......................................................(வருவாள் வ.இ.கா)


************************************

புலனாய்வுக்குறிப்புக்கள்-

மங்கோவுக்கு அடிவிழுந்ததன் உண்மையான காரணத்தை நீண்டகாலமாக தேடிக்கொண்டிருதேன்.பல்கலை இறுதி நாட்களில் அதற்கான விடை சிக்கியது.வழக்கிட்ட காரிகைக்கு ஒரு சகோதரன் இருந்தான்.குரே பார்க்கில் இருக்கும் சிங்கள பெடியளோடு பழகும் வாய்ப்பை பெற்ற அவன் தமக்கையின் கல்வியை சிலர் குழப்பிவிட்டதாக கதையோடு கதையாக செண்டெமெண்ட் ரசம் கலந்து போட்டிருக்கிறான்.ஆத்திரப்பட்ட சிங்கள பெடியளிடம் மங்கோ ஒவ்வொரு வெள்ளியும் கோவிலுக்கு வருவான் என்ற விடயத்தை சொல்லி அழைத்துப்போய் எட்டநின்று ஆளைக்காட்டிவிட்டு நழுவியிருக்கிறான்.அடிக்க வந்தவர்கள் மீது கெமிக்கல் சசி தாக்குதலை நடத்த ஓரிரு அடிகளோடு மங்கோ தப்பிவிட்டான்.அடித்தவர்களின் முதலாவது இலக்கு மங்கோ தான்.இரண்டாவதாக நான் இருந்திருக்கலாம்(வழக்கிட்ட காரிகை தனது படிப்பை குழப்பியவனாக என்னையும் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில்).அப்படியெனில் "சுகந்தமாற எங்கே" என்று கேட்டது உண்மையாக இருந்திருக்கலாம்.ஆனால் என்னை அடிக்கவந்தவர்கள் தன்னை அடித்துவிட்டதாக மங்கோ குறிப்பிட்டதுதான் தவறாகிவிட்டது.பின்னாளில் வழக்கிட்டகாரிகையின் சகோதரன் செய்ததும் நியாயமாகவே பட்டது.எனக்கு ஒரு அக்கா இருந்து இவ்வாறான குற்றச்சாட்டை ஒருவன் மீது தெரிவிக்கும்பட்சத்தில் நானும் அவன் செய்ததைத்தான் செய்திருப்பேன்.



நீண்ட இடைவெளிக்கு பின்னர் வழக்கிட்ட காரிகை பாகம்-02 மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.இயந்திரகதியில் ஓடும் வாழ்நாட்பொழுதுகளில் உட்கார்ந்து 3 வருடங்கள் முன்பாக நடைபெற்று முடிந்த அருவருப்பான ஒரு நிகழ்வை மீட்டி எழுத்துக்களாக்குவது கடினமானது.இருந்த போதிலும் இச்சம்பவத்தை பதிவிடுவதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு மாணவனாவது இவ்வாறான அசாதரண மனநிலை கொண்ட பெண் மூலமாக பாதிக்கப்படும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படுமென்ற இழையோடும் நம்பிக்கை தொடர்ந்து எழுத உத்வேகம் தருகிறது.பாகம்-01 பரபரப்பை கிளறிய அதே நேரம் சில சுவாரசியமான எதிர்வினைகளுக்கும் வழிவகுத்து இருக்கிறது.அவெதிர்வினை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்த சிங்கபுரி வாழ்க்கையை சில நாட்களாய் பரபரப்பாக்கி விட்டிருந்தது.




07/05/2011 அன்று சிங்கப்புரி வாழ் மொறட்டுவை தமிழ் மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சி பலூன் உடைப்பு,பேப்பர் பாலம் கட்டுதல்,இனிய பாடல்கள் போண்ற சிறப்பு நிகழ்சிகள் புடைசூழ நடைபெற்று கடந்து போனது.நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்த மூத்த அண்ணாமாருக்கு நன்றிகள்.நிகழ்சிக்கான தயாரிப்பு வேலைகள் பலவற்றையும் 2003 மட்டத்தில் எவ்விடயத்தையும் எதிர்த்து கதைப்பவர் பொறுப்பேற்றிருந்தார்.நிகழ்சிக்கு 2003 மட்டத்தை சேர்ந்தவர்களை அழைக்கும் பொறுப்பு மட்ட கைப்பொம்மை தலைவர் மங்கோலியனுக்கு தரப்பட்டிருந்தது.கைக்கு வந்த பொறுப்பை மூலமாக வைத்து "வழக்கிட்ட காரிகை-பாகம்-01" பதிவுக்கான எதிர்வினை ஒன்றுக்கு மங்கோலியன் திட்டமிட்டார்.அதன்படி 7ஜி குழுவினருக்கான நிகழ்ச்சி அழைப்பு தவிர்க்கப்பட்டது."பெரிய இடத்து ஆசீர்வாதத்துடன் தான் நடக்கிறது போல" என்றெண்ணி ஒதுங்கிப்போக முடிவெடுத்தவர்கள் "மங்கோலியனின் தன்னிச்சையான் நடவடிக்கையே இது" என்ற தகவல் கிடைத்ததும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் குறும்படம் ஒன்றை திரையிட்டு பங்களிப்பை செலுத்தவும் திட்டமிட்டார்கள்.மிகுந்த சிரமத்தோடு சிலநாட்களுள் உருவாக்கிய அக்குறும்படம் இறுதி நாளன்று திரையிட உகந்தது அல்லாததாக நிராகரிக்கப்பட்டு அருவருப்பான அரசியல் ஒன்று அரங்கேற்றப்பட்டது.இத்தோடு இவ்விடயம் நிற்க இனி பிரதான கதைக்கு நான் வருகிறேன்.




L-புளொக் கன்ரீன் களைகட்டிப்போய் இருந்தது.புதிதாக மாணவர்கள் வந்த நாள் அது.பெடியள வெருட்டுவதும் பெட்டையள வெருட்டுவது போல வழிவதுமாய் போய் கொண்டிருந்த இடத்துக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் கமல்சும் காலடி எடுத்து வைத்தோம் சனியன் எமக்காக காத்திருப்பதை அறியாமல்.மங்கோலியன் முகமெல்லாம் பல்பு எரிய விட்ட படி ஒரு பெண்ணோடு பேசியபடியிருந்தார்.மங்கோலியன் வேண்டுகோளின் படி எங்கட மட்ட பெடியள் "அவரை உனக்கு பிடிச்சிருக்கா?" என்று அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நாமும் எங்களின் பங்குக்கு மங்கோலியன் பெருமைகளை சொல்லி சிறுவிரிவிரை ஒன்றை நிகழ்த்தி விட்டு விரிவுரைக்கு ஓடிவிட்டோம்.கடந்து வந்த நாட்களில் போவோர் வருவோரெல்லாம் "அவனை உனக்கு பிடிச்சிருக்கா" என்று கேட்பதுவும் அப்பெண் மௌனமாக இருப்பதுவும் சகஜமாகி விட்டது.எதையும் பிளான் பண்ணி செய்யும் கமல்ஸ் இரகசியமாக ஒரு நாள் மங்கோலியன் அவளை காதலிப்பதாக காதில் போட்ட தகவல் குபீர் சிரிப்பை வரவைத்தது.அப்பெண் கடந்து போகையில் "மங்கோ" மங்கோ" என்று மங்கோலியன் பெயர் சொல்லி ஸ்டோன் பெஞ்சில் இருந்து கத்துவதும் சில நாட்களில் அலுத்து போனது.ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த வேளையில் யாரோ காமெடிக்கு ஒட்டிய போஸ்டரில் இக் காதலையும் பிட் ஆக இழுத்துப்போட்டு விட என்னோடு வந்து மங்கோலியன் வாய்த்தர்க்கம் செய்தது பசுமையாக இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.3ம்வருட ஆரம்பத்தில் நடந்த இந்நிகழ்வு தொடர்ந்து வந்த தொழில்ப்பயிற்சி காலமான 6 மாதங்கள் முடிவில் ஏறக்குறைய மறந்து போயிருந்தது.




அது எமது ரெயினிங் பீரியட் இறுதிப்பகுதி நாட்களில் ஒன்று,வெள்ளிக்கிழமை."மங்கோக்கு பம்பலப்பிட்டியில் வைச்சு அடிச்சிட்டாங்களாம்" என்று அழைப்பு வர வேகமாக விரைந்தேன்.நூலகத்துக்கு சமீபமாக மட்டத்து பெடியள் எல்லாரும் ஆக்ரோசமாக விவாதித்தபடி இருந்தார்கள்.கோயிலுக்கு போய் வரேக்க அடிச்தையும் கூடப்போன எல்லோரும் தப்பி ஓடி விட சசிவர்ணன் அவங்களோடு அடிபட்டு ஊமைக்காயங்களோடு தப்பியது பற்றியும் கமல்ஸ் விபரித்தான்.அந்நாளில் பாமன்கடை தாதாவாகிய எம்மட்ட பேர்வழி எங்களோடு பிரச்சினைப்பட்டுக்கொண்டு இருந்தார்.கொழும்பில் உள்ள குழுப்பெடியளிடம் "அவங்களுக்கு அடிச்சு விடு,அடிச்சு விடு" என்று கேட்டபடி திரிந்தது எமது செவிகளையும் எட்டியிருந்தது.ஆனாலும் அவரை வெறும் அட்டைக்கத்தி என கருதியதால் கணக்கெடாது விட்டிருந்தோம்.இச்சம்பவத்துக்கு காரணங்கள் தேடிய போது விடையாக பாமன் கடை ரவுடி பிரமாண்டமாக் தெரிந்தார்.எதிர்வினைக்கு திட்டமிட்டோம்.தாக்குதல் குழு அடித்து நெறுக்க துடித்தது.வழமை போல் அரசியல்க்குழு தடுத்தபடியிருந்தது.பத்துவிதான விடுதியில் அடிவாங்கி உடைந்து போன மூக்கோடு இருந்த மங்கோலியன் தன்னை அடிச்சவங்கள் "சுகந்தமாற எங்க?" எங்க?" என்று கேட்டதாக சொன்னதும் "அவனே தான் ஆள் வச்சு அடிச்சிருப்பான்" என்று உறுதி செய்யப்பட்டது.அறிவக குழுமம் "நீ வாய குடுக்கிறது,அவன் பாவம் அடிவாங்கிட்டான்" என்று என்னோடு கோபப்பட்டது.நீண்ட விவாதத்துக்கு பின்னர் மிகுந்த ஆத்திரத்தோடு கட்டிலில் விழுந்த பொழுதுகளில் அந்த சந்தேகம் முளைவிட்டது.அவசரமாய் அழைப்பெடுத்து 7ஜி குழுமத்துக்கு விபரம் சொல்ல காதல்கிறுக்கனும்,நாயகனும் மங்கோலியன் அறை யன்னலருகே இருந்து வேவு பார்க்க,செவியில் விழுந்த வசனங்கள் வேறு கதையை சொல்லின.

காரிகை வருவாள்...........





மூன்றாண்டுகள் தாண்டி விட்டிருந்த போதிலும் அச்சம்பவம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை.அச்சம்பவத்தைவிட பாரதூரமான சம்பவங்கள் பல எனது வாழ்க்கையில் நடைபெற்றிருந்த போதிலும் அவை ஒவ்வொன்றிற்க்குப்பின்னாலும் ஏதாவது காரணம் இருந்தது.அநேககாரணங்கள் அடித்தது,அடிவாங்கியது,அடிவாங்கினவன் ஆள் வைச்சு திருப்பியடிச்சது,மிரட்டியது,மிரட்டலுக்கு உள்ளானவன் போட்டுக்கொடுத்து உள்ள போனது என்ற வகைக்குள் உள்ளடங்கிவிட்டக்கூடியவை.ஆனால் "அந்த" சம்பவத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பிலான என தேடலுக்கான பதில்கள் பல தளங்களில் கிடக்கின்றன.நீங்கள் வீதியால் போகிறீர்கள் திடீரென்று ஐஞ்சாறு அன்பர்கள் குறுக்கா வந்து தட்டிப்பிழிந்துவிட்டு செல்கிறார்கள்.போகும் போது "மவனே கிக்சாவ இனிமே பார்த்தியெண்டா பின்னிடுவம்" என்று சொல்லிவிட்டும் செல்கிறார்கள்.அடிவிழுந்த வலி ஒருபக்கம் இருந்தாலும் மனக்குழப்பம் பெரிதாக இருக்காது.KICKஷா என்ற மட்ட பிகருக்கு முந்தநாள் போட்ட கடலை பயிராகி இன்று விளைந்திருக்கிறது என்று மனதுக்கு தெரிந்துவிடும்.சேதவிபர அடைப்படையில் அடுத்த முறை கிக்சாவை கண்டால் காததூரம் ஓடுவதா? அல்லது கடலையை இன்னும் ஆழமா போடுவதா? என்று சிந்தித்து முடிவென்றை எடுப்போம்.

ஆனால் முன்னப்பின்ன தெரியாத டம்மி பிகர் ஒன்று திடீரென காவல்த்துறை வாகனத்தில் வந்து "இதோ! இவன் தான் என்னை ரேப் பண்ணினது" என்று போட்டுக்கொடுத்து உங்களை அண்டவெயாரோடு முட்டிக்கு முட்டி தட்ட வைத்தால் எப்படி இருக்கும்?...இதே போலத்தான் அச்சம்பவமும் நிகழ்ந்தது.

அந்த வழக்கை முதலில் அறிக்கையாக சுருக்கித் தருவது இவ்விடத்தில் உசிதமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

குற்றச்சாட்டு-2007 இல் மொறட்டுவைக்கு கல்வி பயில வந்த தமிழ் மாணவி ஒருவரை மிகக்கொடூரமாக உடல் உள நெருக்குதலுக்கு உள்ளாக்கியமை,பின் தொடர்ந்து வந்தமை,தொலைபேசியில் மிரட்டியமை

குற்றவாளிகள்- முதலாம் இலக்க குற்றவாளி,இரண்டாமிலக்க குற்றவாளி

விளைவுகள்- பாதிக்கபட்ட மாணவி ஒருவருடத்தை தவற விட்டு அடுத்த வருடத்தினரோடு சேர்ந்து படிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் மிகக்கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.பல்கலைக்கழகம் வரவே அஞ்சுமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டபட்டவர் வாதம்-குறிப்பிட்ட பெண்மேல் மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த பன்னாடை மையலுற்றது மட்டுமே எமக்கு தெரியும்.வேறு எதுவும் இது தொடர்பில் தெரியாது.

மட்ட சகமாணவர் கருத்து-குறிப்பிட்ட பெண்ணுக்கு இவ்வாறான பிரச்ச்சினைகள் ஏற்படுத்தப்பட்டதாக நமக்கு தெரியாது.குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அப்பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் கொடுத்ததாக அறியவில்லை.ஆனால் ஒரு தமிழ்ப்பெண் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதால் அவர் தரப்பில் உண்மை இருக்கலாம்.

பல்கலை வழக்கை விசாரித்த "வணிகதுங்க" தலைமையிலான அரைலூசுக்கும்பலின் கருத்து-பெண் பாதிக்கப்பட்டது உண்மை.இம்மாணவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.இவ்வாறான சம்பவத்தில் எதிர்காலத்திலீடுபடுபவர்கள் பயம்கொள்ளும்படி தண்டனை இருக்க வேண்டும்.

காவல்துறை நிலையத்திலும் தாக்கல் செய்யப்பட்ட அதே வழக்கை விசாரித்த தலைமைக்காவல் நிலைய அதிகாரி கருத்து-
"மல்லி! பெம்பிளை வழக்குப்போட்டா முடிவு உங்களுக்கு சாதகமா ஒருகாலமும் வராது.அந்த விசரி இருக்கிற பக்கமே போகாதையுங்கோ!.இனிமேல் கவனமா இருங்கோ!"

தற்போதைய நிலவரம்- பிரச்சினையை தொடங்கி வைத்த மட்டத்தின் பிரதிநிதியானவரும் அப்பெண்ணும் ஜோடியாகி விட்டார்கள்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தால் தண்டிக்கபட்டு,சிங்கள காவல்துறை நிலையங்களாக அலைந்து நொந்து நூடில்ஸ் போல ஆகிப்போனார்கள்.

முழு சம்பவத்தையும் அலசிய உளவியலாளர் கருத்து-
குறிப்பிட்ட பெண்ணுக்கு மாணவர் தலைவரான மங்கோலியன் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது.அதன் காரணமாக கல்வியை தவற விட்டிருக்கிறார்.அல்லது கண்டிப்பான வீட்டுக்காரருக்கு அஞ்சி மனதில் உண்டான ஈர்ப்பை மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.அதன் காரணமாகவும் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல்ப்போயிருக்கலாம்.பெறுபேறுகள் குறையுமிடத்து முதல்தெரிவுகளான பொறியியல் பீடங்களுக்கு போகமுடியாமல் போனால் வீட்டார் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை இல்லாமல் போக வாய்ப்புண்டு என அஞ்சி பரீட்சையை அடுத்த வருடம் எதிர்கொள்வதற்காக காரணங்கள் தேடியிருக்கிறார்.அத்தருணத்தில் மங்கோலியனோடு கூடவே சத்தமாக சிரித்தபடி திரிந்த குற்றம்சாட்டப்பட்டவர்களான இருவரும் மனதில் வர காரணங்களாக்கியிருக்கிறார்.அக்காரணக்களுக்கு கொழும்பு மாணவிகளான வீணை வாசிப்பவரும் இன்னும் சிலரும் உரமேற்ற இறுதியாக அதை வழக்காக்கி இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர் வாதம்-
பொய்வழக்கு போட்டதைக்கூட மன்னித்து விடலாம் ஆனால் "பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மாணவர்கள்" என போட்டுக்கொடுத்து மிகச்சிக்கலான காலகட்டத்தில் உயிராபத்தை ஏற்படுத்த முயன்றதை மட்டும் மன்னிக்கவே முடியாது.தமிழனான அக்குறிப்பிட்ட பெண்ணின் தந்தை இப்படி காவல்துறைநிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டை சிங்களவரான நிலையபொறுப்பதிகாரி கோடிட்டுக்காட்டி "நான் என்றபடியால் தப்பித்தீர்கள்,வேறு எவராவது என்றால் அவ்வளவுதான்" என்று சொன்னதையும் மறக்க முடியாது.சரிபிழைகளுக்கு அப்பால்ப்பட்டு இவ்வகையான அசிங்கமனோபாவத்தின் மூலப்புள்ளி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு போகும் போது தெரியும் முடிவிடம் எப்பவும் போல அருவருப்பாகவே காட்சியளிக்கிறது.

{வழக்கு வளரும்}