.

மொறா மட்டம் 2003 இல் படித்த சக நண்பர்களுக்கு எல்லாம் வயது 25 இனைத்தாண்டி விட்டது.இதில் சசிக்குமார்,லெஸ்லி ஆகியோர் 28 வயதைத்தாண்டப்போகிறார்கள்.செம கட்டையா கட்டணும் என்றிருந்த கனவு மங்கி 30 வயதுக்கு பிறகாகவது கலியாணம் நடக்குமா? என்ற அதிர்ச்சி அனைவரையும் பீடிக்க தொடங்கி விட்டது.அடுத்தது யார் கலியாணம் கட்டப்போகிறார்கள்? என முகப்புத்தகத்தில் தேடிக்கொண்டு வேலை,உணவு,உறக்கம் என செக்குமாட்டுத்தனமாய் ஓடுகிறது அநேகரின் வாழ்க்கை.மொறா 2003 ஹொஸ்டல் ஆண்கள் தொடர்பில் யாராவது நம் இளைய,மூத்த மட்ட பெண்களிடம் கருத்துக்கேட்டால் அகராதியில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் பதிலாக வரும்.கேட்டவர் ஒரு பிகரின் தந்தையாக இருக்கும் பட்சத்தில் மொறட்டுவை பொறியியல் ஆண்கள் எவருக்கும் தன் பெண்ணைக்கொடுக்க முன்வர மாட்டார்.அது மட்டுமல்ல தன்னோடு தொடர்பில் உள்ள எவரும் பெண் கொடுக்க விளைந்தாலும் தடுத்து ஆட்கொண்டு விடுவார்.அந்தளவுக்கு கடுமையாக தரப்பட்டிருக்கும் நமது மொறா பெண்களின் நம் பற்றிய விபரிப்பு.இந்தளவுக்கு மோசமானவர்களா இந்த விடுதி வாழ் போக்கிரிகள்?,இந்தப்பெண்கள் அவ்வளவுக்கு நல்லவர்களா?,அந்த காவாலிகள் இந்தளவுக்கு நல்ல கருத்து எடுக்கு அளவுக்கு என்னவெல்லாம் செய்தார்கள்?,அந்த பொறுக்கிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது?.........
என தொடராக நீளும் கேள்விகளுக்கு பதில் சொல்வதே இந்த ஆய்வின் நோக்கம்.ஒரு புகைப்படமே ஒழுங்கா எடுக்கத்தெரியாதவன் திரைவிமர்சனம் எழுதுவது,பொம்மை துவக்கே கண்டிராதவன் ராணுவ ஆய்வு எழுதுவது போலவும் இல்லாமல் பல நண்பர்களோடு அலசி எழுதப்பட்டிருக்கிறது இந்த ஆய்வு.




7ஜி பிளஸ்,அறிவகம்,12 பி ஆகிய குழுமங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 20 பேரளவில் இந்த பொறுக்கிகள் என்ற பாகுபாட்டில் உள்ளடக்கப்பட்டார்கள்.


பெண்களின் இவர்கள் தொடர்பான வெளிப்பாடு


இவர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நம் மட்ட பெண்கள் அநேகமாக வர மாட்டார்கள்.

இவர்கள் ஒரு இடத்தில் குழுமி இருந்தால் இந்த இடத்தை தாண்டும் வரை தாழ்த்திய தலையை நிமிர்த்த மாட்டார்கள்.

நாலு பேருடன் கதைக்கும் போது இவர்கள் பற்றி "நச்" என்று நங்கூரம் போல இரண்டு வசவு வார்த்தைகளை போட்டு நல்ல பெயர் வாங்கி தருவார்கள்.

ஜீனியர் மாணவிகளுக்கு விளக்கங்கள் கொடுத்து கிட்டப்போனாலே அலறும் படி செய்வார்கள்.

வாளி சீனியரிடம் வலிந்த நடவடிக்கை எடுக்கும் படி தூண்டி விடுவது.(நடவடிக்கை எடுக்கும் துணிவு வருவதற்கே நம் செயற்பாடுகள் இடமளிக்கவில்லை.)

மிக்க அன்பு மிகும் போது விரிவுரையாளர்களிடம் கோள் மூட்டி கூத்துப்பார்ப்பது.




அப்படி பெண்கள் வெளிப்படுத்தும் அளவுக்கு இந்த 20 பேரும் செய்தவை என்ன?

ஸ்டோன் பென்ஞ்சில் குந்தி இருந்து பெண்கள் போய் வரும் போது காமப்பார்வை வீசியமை.

நாணமிகுதியால் தலை குனிந்து போகும் பெண்களின் பெயரை சொல்லி கூக்குரல் இடுவது.

பெண்களின் அன்புக்குரிய வாளிகளை போட்டுத்தாக்குவது.

சுவீட் "பாய்" களான கலம்பு பையன்களை அடிக்கடி கடுப்பாக்குவது.

வாளி வைத்து பின்னால் திரியாமல் இருப்பது.

பெண்களிடம் திட்டு வாங்கினால் இன்முகம் காட்டாமல் தூசணம் கொண்டு பொழிவது.

நடு இரவில் தொலைபேசியில் அழைத்து லந்து பண்ணுவது.

ஒருவனுக்கு காதல் வந்தால் 20 பேரும் சேர்ந்து தெரிவித்து காதலை ராணுவ நடவடிக்கை போல செய்வது.(இரு துன்பியல் நிகழ்வுகள்...உபயம் அலிபாய்,சின்ரா)

அடிக்கடி தண்ணிப்பார்ட்டி போடுவது.

நிறைவெறியில் உளறுவன எல்லாம் வாளிகள் மூலமாய் பெண்களை சென்றடைய அனுமதிப்பது.

பேடிகள் மூலமாக ஜோடிக்கப்பட்ட பலான வழக்குகளை எதிர்கொண்டமை.

பொது இடம் என பாராமல் வாக்குவாதப்பட்டு தூசணங்களை பிரயோகிப்பது.



இந்த நிலவரம் 4 ஆண்டுகாலம் நீடித்தது.இந்த 20 பேரும் பொறுக்கிகளாகவே இருந்தார்கள்.அவர்களை பொறுக்கிகளாக பட்டம் சூட்டிய பெண்கள் போனில் ஒருத்தன்,chat இல் ஒருத்தன்,நேரில் ஒருத்தன்,சகோதர மொழி நண்பன் என உல்லாசப்பறவைகளாய் பறந்தார்கள்.பல்கலை முடியும் தறுவாயில் பலவிதமாய் மறைக்கப்படிருந்த தொடர்புகளும் சம்பவங்களும் வெளிப்பட்ட போது 20 பேரும் அதிர்ந்தே போனார்கள்.அதில் நல்லபிள்ளை பெயர்வாங்கிய மட்டத்து ஆண்கள் பலரும் சம்மந்தப்பட்டிருந்தார்கள்.

"அட இவளவ செய்ததில ஆயிரத்தில் ஒன்றைக்கூட நாங்கள் செய்யவில்லையே?,சும்மா குத்து மதிப்பா கதைச்சமே தவிர எக்குத்தப்பா ஒன்றுமே செய்யவில்லையே?,வெளிப்படையா கத்தினோமே தவிர ஒளித்து வைத்து பண்ணவில்லையே?,ஆனா பொறுக்கி பட்டம் மட்டும் நமக்கா?"

என இந்த 20 பேர்வழிகளும் தண்ணிப்பார்ட்டி போட்டு இறுதியில் வாய் விட்டு அலறியும் ஒரு பிரியோசனமும் கிட்டவில்லை.பொறுக்கி என்ற பெயர் பிடுங்கி எறியப்படாத அளவுக்கு ஆழ வேரூன்றிப்போயிருந்தது.

பரிதாபத்தின் பகுப்பாய்வு.

பொதுவாக "கம்பஸ் பெடியள் என்றால் லவ் பண்ணி இருப்பாங்கள்" என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.ஏனென்றால் அநேக பல்கலைகளில் ஆண்கள்,பெண்களிடையான வீதம் சமனாகவோ,பெண்கள் அதிகம் என்ற வகையிலேயே காணப்படுகின்றது.ஆனால் பாழாய்ப்போன மொறட்டுவை பொறியியல் பீடத்தில் மட்டும் ஏழுக்கு ஒன்று என்ற விகிதம்.சில பல்கலைகழகங்களில் சில பீடங்களில் ஆண்களை விட பெண்கள் 3 மடங்கு அதிகம்.அங்க பெடியள் எல்லாம் அஜித்,விஜய் ரேஞ்சில பில்டப் குடுத்துக்கொண்டு திரிவாங்கள் எண்டு சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்.ஆனால் மொறட்டுவவில் பறவை முனியம்மா ரேஞ் பிகர் கூட பாவனா ரேஞ்சில் பில்டப் குடுக்கிற அளவுக்கு மோசமாக விகிதாசாரம் ஆண்கள் பெண்கள் இடையில் நிலவுகிறது.ஆரம்பத்தில் கலர் கலர் கனவுகளோடு வரும் தமிழ்பெடியங்கள் அதிர்ந்து போய் காலப்போக்கில் மனதை தேற்றி "ஏதோ ஒண்ட ரை பண்ணுவம்,வடிவா முக்கியம்,படிச்சு குணமா இருந்தா நல்லது தானே?" என்ற தர்க்க கேள்வியோடு களமிறங்குகிறார்கள்.சூப்பர் பிகருக்கு பத்து விண்ணப்பம் வந்தா பந்தா பண்ணும்.காலப்போக்கில பத்தில நல்லதா ஒரு அடிமைக்கு சிக்னல காட்டிடும்.மாறாக மட்ட பிகருக்கு பத்து விண்ணப்பம் போனாலோ......
விபரீதம் முளைவிடுகிறது.மொறட்டுவையில் நடந்ததும் அது தான்..........

............சோகம் நீளும்.