கடந்து போன நினைவுகளை மீட்ட தொடங்கப்படும் தளத்தில் காந்தீயமும்,சிவப்பு சித்தாந்தமும் பேச முடியுமா?.ஜூன் மாதன் 2009 ஆண்டு கனாக்காலம் தொடங்கியது.அன்று தொடங்க மறுத்த பதிவர்கள் எவரும் பதிவுலகில் உயிர்ப்புடன் இல்லை.தனிமனித பிரபலத்தை நோக்கமாக கொண்ட எந்த பதிவரும் நீடிக்க முடியாது.சுய திருப்திக்காகவும்,உள வெளிப்பாடாகவும் எழுதுபவர்களே பதிவுலகில் நிலைக்கிறார்கள்."மச்சான்! அடிக்கடி எழுதாட்டியும் மாதமொண்டு எண்டாலும் விடாமல் எழுதுறாய். அப்படியே தொடர்ந்து எழுது! நண்பனொருவன் சொன்ன வார்த்தைகள் இவை.தொடர்ந்து பத்து வருடம் எழுதுவதற்கு நண்பன் சொன்ன வார்த்தைகளே போதும்.
எச்சரிக்கை கடிதம்,மிரட்டல் கடிதம்,அனானி கடிதம் என்று பலதை கனாக்காலம் கண்டிருக்கிறது.விருப்பத்தோடு வாசிப்பவர்கள் அளவுக்கு கடுப்போடு வாசிப்பவர்களையும் கொண்ட தளம் இது.தளத்தில் பதிவுகளை இட்டு பங்களிப்பு நல்கிய பவானந்,இளம்செழியன்,சசிக்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.இத்தளம் தொடர்ந்து காத்திரமான படைப்புக்களை வழங்கி நீடிக்க உதவுமாறு "மட்டம் 2003" மாணவர்களிடம் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
0 comments:
Post a Comment