.
தீபரூபன் பேரை உச்சரிக்கையிலேயே ஒரு கம்பீரம் பிறக்கிறது.நீர்வளம் மிக்க நீர்வேலியில்ப்பிறந்து வன்னிவள நாட்டில் வளர்ந்து கட்டுப்பெத்தைக்காட்டில் கலைகள் பயின்றவன்."அவன் இவன் எல்லாம் கலியாணம் கட்டுறான் நம்ம பெடியள் ஒருத்தனும் கட்டக்காணமே??" என்ற எம் ஆதங்கத்தைப்போக்கிய தீரன்.அன்று முதலாம் வருடத்திலேயே பலராலும் சாதனைகளுக்கு சொந்தக்காரனாவான் என கணிக்கப்பட்டிருந்து இன்று அதை அநாயசமாக மெய்யாக்கிவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிற புது மாப்பிள்ளை....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பல்கலை வாழ்வின் தொடக்க நாட்களின் போது அறிவகத்தில் குளிர்மையான மாலைப்பொழுது ஒன்றில் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு புத்தகம் வாசித்தபடி அறிமுகமானபோதே மனதில் தோன்றியது."இவன் எதிர்காலத்தில் பெரிய ரேஞ்சில சாதிப்பான்" என்று.நினைத்தபடி மட்டத்தின் பெருமையை,ஆண்மையை காப்பாற்றி கரைசேர்த்திருக்கிறான் இந்த இளம் சூறாவளி. தீபரூபன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து புத்தக படிப்போடு இல்லாமல் செயலிலும் காட்டி பெரிய பொறியியலாளனாய் உயர்ந்து சாதனை படைக்க மட்டம் 2003 வாழ்த்துகின்றது.