சில்வண்டுக்கும் சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்.ஒரு பிகர இலக்கு வைத்து வருடக்கணக்கில் காய் நகர்த்தி கஸ்டப்படுபவன் சில்வண்டு.பல பிகர கவரும் விதமா செயல்பட்டு, கவரப்பட்டதுகளில சிலத தெரிஞ்செடுத்து ஒண்டை கைப்பிடிப்பவன் சிறுத்தை.ஆதாம் ஏவாள் பற்ற வைத்த யுகங்கள் தாண்டி எரியும் ஆண் பெண் பாலின கவர்ச்சி நெருப்புக்கு எவரும் விதி விலக்காக முடியாது.பெண் மீது ஆணுக்கு ஈர்ப்பு உண்டாவதற்கான காரணங்கள் எத்துணையோ அதை விட பல மடங்கு அதிகமான காரணிகள் ஆண் மீது பெண்ணுக்கு உண்டாவதற்குண்டு.



அக்காரணிகளில் ஒன்றோ பலவோ உள்ள ஆண் பெண்களை கவர்வதில் வெற்றி பெறுகிறான்.உண்மையான ஆண்மகன் பெண்களை கவர்வதற்காக மொறட்டுவை கம்பசில் தமிழ் மாணவர்களைடையே நடைபெறுவது போல வாளி வைப்பது,குப்பி எடுப்பது,அடுத்தவனை மட்டம் தட்டுவது,குறும் தகவல் அனுப்புவது,கௌபாய் வேடமிடுவது,பந்தா காட்டுவது,பிளாக்கனாகி பிதற்றுவது போண்ற ஈனச்செயல்களை ஒருக்காலும் செய்யமாட்டான்.ஒரு ஆணால் பெண் மீது வருகிற ஈர்ப்பை நேரடியாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவது போல பெண்ணால் முடிவதில்லை.பலதரப்பட்ட சைகைகள் மூலமாக தெரியப்படுத்த முயல்வாள்."இஞ்சருங்கோ! உம்மை போல ஒரு கட்டழகனை கண்டதே இல்லையுங்கோ" எண்டு ஏவளாச்சும் வலிய வந்து சொல்லுவாள் என்று எதிர்பார்த்திருந்தால் பேச்சு கலியாணம் தவிர்க்க முடியாததாகிவிடும்.தனது மனதுக்கு பிடித்தமான அல்லது உடல் கிளர்ச்சியூட்கிற ஆணுக்கு முன்னிலையில் பெண் காட்டுகிற சைகைகள் பற்றி அறிந்து வைத்திருப்பது இளைஞர்களாகிய எமக்கு மிக அத்தியாவசியமானது.இது உங்கள் பால் ஈர்க்கப்பட்ட பெறுமதிமிக்க பெண் கைவிட்டு போகும் துன்பியல் நிகழ்வுகள் நிகழ்வதை தடுக்க உதவும்.






மேல இருக்கிற காணொளியில அடிப்படையான விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

1)ஒரு பிகருக்கு உங்கள பிடிச்சு போச்சு எண்டா பேசும் போது கண்ண தொடர்ந்து பார்க்காது.பார்த்திட்டு சட் டென்று திரும்பிடும்.மோகனப்புன்னகையோடு தொடர்ந்து அசராமல் கண்ணையே பார்க்குது என்றால் துணிஞ்ச பிகர்.வெறும் நட்ப தாண்டி உடலுள்ள பகிர்வு தொடர்பாக பிகர் யோசிக்கிறது என கருதலாம்.இயல்பாக பழகும் பெண்களாலும் இன்னொரு ஆணின் கண்களை நேரடியாக பார்த்து பேச முடியும்.அதையும் இதையும் முடிச்சுப்போட்டு அலிபாயாகி அவதிப்பட வேண்டாம்.

2)கண்ணாடி பிரதிபலிப்பு செயல்பாடுகளை வெளிப்படுத்தல்.உதாரணமா கைக்கடிகாரத்த பார்த்து விட்டு திடீரென பிகர பாருங்கள்.அது தடுமாறி தன்னோட கடிகாரத்தையோ போனையோ பார்த்தால் அதுவரை உங்களத்தான் சைட் அடித்திருக்கிறது என்று முடிவெடுத்து புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

3)உடற்பரிமாணங்கள் மாறுதல்.தனக்கு பிடித்தமான ஆண் முன்னிலையில் ஒரு பிகர் சாதாரண நிலையை விட பெருத்து இருக்கும்.இங்கு பெருத்து என்பதை உரிய முறையில் விளங்கிக்கொள்ளாவிட்டால் அசிங்கப்பட நேரிடும்.அதாவது நிமிர்ந்து உட்காருதல்,பெண்மையின் அடையாளமாகிய முன் அழகை தெளிவாக காட்டுதல் என்பன.

4)நீளமான தலை முடி பெண்மையின் இயல்பென்றும்,குட்டையாக வெட்டப்பட்ட முடி ஆண்மை இயல்பாகவும் மனித மனங்களில் பொதிந்துள்ளது.பிகர் தலை முடியை உங்கள் முன்னிலையில் ஸ்டைலாக தூக்கிப்போட்டால்,அல்லது தலைமுடியோடு விரல்களால் விளையாடினால் "நான் ஒரு ஆரோக்கியமான பெண் என்பது என் கூந்தலை பார்த்தும் தெரியவில்லையா? மடையா,வந்து கடலையை போடலாமே" என உள்ளே நினைக்கிறது என்று அர்த்தம்.அநேகமான பெண்கள் நேர்த்தியை விரும்புவார்கள்.காற்று போண்ற புறக்காரணிகளால் கலையும் கூந்தலை உடனடியாக ஒழுங்கு படுத்த விளைவார்கள்.எனவே இந்த விடயத்திலும் தவறான விளக்கம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் விழிப்பாயிருத்தலவசியம்.

5)வெளிப்பாடு.முக மென்மையாக்கல்.மனிசருக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு வரும் போது வார்த்தைகளால் கொட்டி முழங்கி விடுவோம்.ஆனால் மிருகங்கள் என்ன செய்யும்?.கடும் கோபக்கார கடிநாயான லக்ஸிக்கு அயல் வீட்டு கடுவன் நாய் ஜிம்மி மேல் காதல் வந்து வேலிப்பொட்டு இடைவெளிகளூடு காதல் வளர்க்கும் தருணத்தில் கல்லெறிந்து கலைக்காமல் லக்ஸி முகத்தை பார்த்து இருந்தீர்களானால் அதி மலர்களின் மென்மை தெரிவதை கண்டு இருப்பீர்கள்.அதே போல கோபக்கார பிகர் எண்டாலும் உங்கள் முன்னால் அநியாயத்துக்கு பிள்ள பூச்சி போல நடந்து கொண்டால் பெண்ணுக்குரிய மென்மை எனக்கும் இருக்கு எண்டு பிகர் உங்களுக்கு காட்ட முனையுது எண்டு அர்த்தம்.

6)பிகர் உங்கள் முன்னால் இருக்கும் சந்தர்ப்பங்களில் கால்களை குறுக்கே போட்டபடி பாதங்களின் நுனி உங்களை நோக்கும்படி இருந்தால் அது உங்களுக்கான தெளிவான பச்சை சமிக்கை.பெண்கள் பொது இடங்களில் இருக்கும் போது கால்களை ஒடுக்கியே வைத்திருப்பார்கள்.பிகர் உங்கள் அருகாமையில் கால்களை விரித்து அமர்ந்திருப்பின் உங்களை நெருக்கமான நபராக உணர்கிறது என எடுத்துக்கொள்ளலாம்

7)பெண்கள் பொதுவாக தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேசும் போதே உள்ளங்கை,மணிக்கட்டுப்பகுதிகளை காட்டும்படி இருப்பார்கள். கரங்களை,அணிந்திருக்கும் ஆபரணங்களை,மணிக்கட்டுப்பகுதியை,கழுத்துப்பகுதியை,அல்லது முன்னால் இருக்கும் பொருளை மெதுவாக வருடினால் உங்களிடம் இருந்து அதே மாதிரியான அன்பான வருடலை பிகர் எதிர்பார்க்குது என்பதை உணர்ந்து காலம் தாழ்த்தாமல் காரியத்தில் இறங்க வேண்டும்.

8)ஆண்மையின் அடையாளமான உடல் உறுதிப்பாட்டை தொட்டுணர்வதன் மூலம் அறிய முயலுதல்.உங்களை கடந்து செல்லும் போது எதேச்சையாக உரசுதல்,புயங்களினை விளையாட்டாக அழுத்துதல்,மார்பை அழுத்துதல் போண்ற செயல்பாடுகளை செய்தால் உங்கள் அரவணைப்பு தேவைப்படுகிறது என்று கொள்ளலாம்.உதடுகளை உற்று நோக்குதல்,முதுகுப்பக்கத்தின் கீழ்ப்புறமாக கரங்களால் கோடாக இழுத்தல்,தொடைப்பகுதியை தொடுதல்,தலை முடியை கோதி விடுதல் என்பன உடல் ரீதியான நெருக்கத்தை விரும்பும் சமிக்கைகளாகும்.இச்செயற்பாட்டை சமூகத்துக்கு அஞ்சி உணர்வுகளை கொண்று வாழும் பிகர்களால் பொது இடத்தில் மேற்கொள்ள முடியாது.இத்தருணத்தில் அந்த பெண் "promiscuous women" வகையறாவா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுவது உளப்பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கும்

9)பிகரை பார்த்து இயற்கையாக புன்னகை ஒன்றை வீசி விடுங்கள்.பதிலுக்கு கவித்துவமான புன்னகையும் கண்களில் மலர்ச்சியும் தென்பட்டால் மைனா வலையில் கிட்டத்தட்ட சிக்கி விட்டது என்று அர்த்தம்.செயற்கையா பூக்கிறாளா? இயற்கையா பூக்கிறாளா? என்ற சந்தேகம் வரின் கண்களை சூழவுழ்ழ பகுதி தசைகளை கூர்ந்து அவதானிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.உதடுகள் அப்பழுக்கில்லா புன்னகை பூக்கும் போது கண்ணைச்சூழவுள்ள தசைகளில் சுருக்கக்கோடுகள் தென்படும்.புன்னகை வீசிய பிகர் நீங்கள் வந்து கடலைய போடமாட்டீர்களா என்று நிச்சயம் எதிர்பார்க்கும்.அநியாயத்துக்கு நல்லவனாக கடலேறி போல நடிக்க வெளிக்கிட்டால் அதே கதியாகிவிடும்.

10)பிகருடன் எதிர் எதிராக இருந்து பேசிக்கொண்டிருக்கும் போதோ வேறு சந்தர்ப்பத்திலேயோ உங்களை நோக்கிய திசையில் முன்னோக்கி வளைந்தால் அது மிகத்தீவிரமான ஓரு சமிக்கை.பதில் சமிக்கை கொடுக்காமல் அலவாங்கு விழுங்கின மாதிரி இருந்தால் பல புள்ளிகளை இழக்க நேரிடும்.வளைந்த பிகர் சாதரண நிலைக்கு போய்விட்டு ஏதாவது சம்பந்தமில்லா மொக்கை கேள்விய கேட்டால்......."நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா?..தூ!" என்று மனதுக்குள்திட்டுகிறது என்று அர்த்தம்.

11)நீங்கள் கெட்டிக்காரத்தனமாய் புல்லட் அளவுக்கு இல்லாவிட்டாலும் பூச்சிபுள்ளதனமாய் கொழுத்தி போடும் மொக்கைக்காமெடிகளுக்கு கூட விழுந்து விழுந்து சிரித்து சீன போட்டால் பிகருக்கு உங்கள ரொம்ப பிடிச்சுப்போச்சு என்று அர்த்தம்.தைரியமாக கிட்டப்போய் "இப்ப இஞ்சினியரா சாதுவா இருந்தாலும் ஊர்ல நான் பெரிய ரவுடி. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு.......என்ன தெரியுமா?....பண்டி... பாமன் கட பண்டி" என்று உரத்து பாட்சா ஸ்டைலில் சொல்லிவிட்டு வரலாம்.பிகர் 1000% நம்பும் அல்லது 2000% நம்பியது போல நடிக்கும்.

12)பெண்கள் பொதுவாக எதையும் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.ஒரு பிகர் உங்களோடு உணவு,ஹெட் போன் போண்றவற்றை பகிரும் பட்சத்தில் அவள் உடலுள்ள பகிர்வு தொடர்பாயும் சிந்திக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.பேசிக்கொண்டிருக்கையில் கண்களை தொடர்ந்து நோக்குவது,உதடுகளை கடிப்பது,பெருமூச்சு வாங்குவது என்பனவற்றை பிகர் செய்தும் நீங்கள் ஒண்டும் செய்யவில்லை எனில் செருப்பை கழட்டி....
உங்கள் மூஞ்சியில் பலமாக பலமுறை அடித்துக்கொள்ளவும்.
மேற்சொன்னவை அடிப்படையான விடயங்கள்.இவை தவிர பலநூறு வெளிப்பாடுகள் உள்ளன.அவை எல்லாவற்றையும் படித்து வைத்தால் ஒரு பிகரையும் நம்பமுடியாத அளவுக்கு ஆகிவிடும்.அளவோடு நிறுத்திக்கொள்ளல் நலம்.

இக்கட்டுரையின் நோக்கம் இது வரை வாழ்க்கைத்துணை சிக்காமல் இன்று வரை அலைந்து கொண்டிருக்கும் என் போண்ற இளைஞர்களுக்கு வழிகாட்டுவதே அன்றி வேறெதுவும் இல்லை.பிகரை சைக்கிளில் விரட்டி பேச்சுக்கொடுக்கும் பள்ளிக்கால காதலையும், முதல் நாள் பார்த்துவிட்டு அடுத்த நாள் முடிவை கேட்கும் கேவல கட்டுப்பெத்தைக்காதலையும் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டோம்.பொறுப்பான பதவிகளில்,சமுதாய கௌரவத்தோடு வாழும் நீங்கள் பிடித்தமான பெண்ணை விரட்டிக்கொண்டு கிளம்பினால் சந்தி சிரிக்கும் படி ஆகிவிடும்.ஆனால் கேவலத்துக்கு பயந்து அடக்கி வாழ்ந்து வீட்டார் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வதும் வாழ்நாள் துன்பியல் நிகழ்வு நிகழ்வாகவும் அமையும் வாய்ப்புக்களை நிறையவே கொண்டதாகும்.எனவே உங்களை ஒரு லட்சிய ஆண்மகனாக மாற்றிக்கொண்டு உங்கள் பால் ஈர்க்கப்படும் பெண்களை இனம் கண்டு கொண்டு அவர்களில் பெறுமதியானவரை தெரிந்து எடுப்பதே இந்த வயதுக்கு தோதான வழிமுறையாகும்

அடுத்தாக உளவியல் பற்றி எழுத நீ என்ன டாக்டரா? என்று சிலர் கேணத்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள்.ஒவ்வொரு உளவியல் கருத்துக்களும் அவதானித்தல்,கருத்தறிதல்,அலசுதல் போண்ற செய்முறைகள் மூலமாக உருவாக்கபட்டவை.எங்களோடு கூடப்படித்த மனனம் செய்யும் ஆற்றல் தவிர வேறு எதுவும் இல்லாத சில பேர்வழிகளே இலங்கை அரசின் பரீட்சைகளில் சித்தியடைந்து வைத்தியர்களாகி நாலைந்து நூல்களை வாசித்து விட்டு மக்களின் உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறிய புறப்பட்டு இருக்கிறார்கள்.அதையும் விடவா நான் இங்கே எழுதுவதால் பெரிய பாதிப்பு வந்துவிடப்போகிறது?.

நல்ல பிகர் எண்டா சில்வண்டாயிருக்கணும்.அது சிக்கலை எண்டா பேசாம சிறுத்தை ஆகிடணும்.

ராவணன் இலங்கைய ஆண்ட அரசன்,அனுமான் எண்டவன் நடு இரவில வந்து இலங்காபுரி நகருக்கு நெருப்பூட்டிவிட்டு தப்பி ஓடின குரங்கன்.ராவணனை அரக்கனெண்டும்,ராமன கடவுள் எண்டு வடக்கன் சொல்லலாம்.ஏனெண்டா அவன் அவங்கட ஆள்.ஆனா இலங்காபுரியான இலங்கையில இருக்கிற திராவிடதமிழன் ராமன கும்பிட்டு அனுமான் கலையாடி ஆவேசப்பட்டா...........இத என்னெண்டு சொல்லுறது?

அதே போல நரகாசுரன் திராவிட அரசன்.எண்ணிக்கையில் பெருத்த ஆரியன் படையெடுத்து நரக சூரனை கொன்றுவிட்டு இன்னாளே நன்னாளாம் என்று கொண்டாட அதை பார்த்து நம் நன்னாளும் இன்னாளாம் எண்டு புது உடுப்பு போட்டு மினுக்கி திரியிறத........என்ன வகைக்குள்ள அடக்குறது?






தமிழர் வாழ்வியல் செயல்பாடுகள்,மனோநிலைகள் போண்றனவற்றை அலசினால் இப்படி ஆயிரம் புரிந்துகொள்ளமுடியா புள்ளிகள் தென்படும்.தமிழ் நாட்டை ஆண்ட எம்ஜி ஆரிலிருந்து மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் வரைக்கும் தமிழரல்லர்.திரையுலகில் கூட திராவிட பண்புகள் கொண்ட தமிழிச்சி நாயகியாக தோண்றுவதை இன்றளவும் தமிழனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் இனத்தவனோடு பேசும் போது தன் நிலையை குறிகாட்ட ஆங்கிலம் கலப்பதன் பின்னால் உள்ள மனோநிலை.மிதி வெடி எடுக்க வந்த சிம்பாவே நாட்டு படிப்பறிவில்லா வெள்ளைக்காரனை பாடசலை ஆங்கில தினத்துக்கு பிரதம விருந்தாளியாக அழைத்து காலில் விழும் யாழ்ப்பாணத்து சிந்தனை.......இப்படி ஆயிரம் ஆயிரம் பு.கொ.மு புள்ளிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.




இவ்விசித்திர சிந்தனை ஓட்டத்துக்கு காரணமாக இருப்பனவற்றை அறிந்து கொள்ள ஆழ்ந்த ஆராட்சி ஒன்றும் செய்யதேவையில்லை.பதில் ஒற்றைச்சொல்லில் ஒளிந்து கிடக்கிறது.ஆயிரம் ஆண்டையும் தாண்டி தொடரும் காட்டிக்கொடுப்புக்கும் குழிபறிப்புகளுக்கும் தாழ்வு மன போக்குக்கும் காரணமான ஒற்றைச்சொல் அது.


"செருப்புப்புத்தி"

இந்த செருப்பு புத்திதான் ஆரம்பத்தில் ஆரியனுக்கு அடிபணிய வைத்தது.ஆரியனை தேவன் என விழிக்க வைத்தது.தன்னை தாழ்ந்தவனாக நினைக்க வைத்தது.தன் காரியமாற்ற தன்னினகருவறுக்கும் வேலைகளை கூட செய்யுமளவுக்கு கொண்டு போய் விட்டது.பெரியார் வந்து பகுத்தறிவு இயக்கம் வைத்துப்பார்த்தார் சரிவரவில்லை.பின்னாளில் படித்து பெரிய அளவில் தமிழன் சிந்திக்க தொடங்கிய பின்னும் செருப்பு புத்தி சப்பாத்து புத்தியாக உருமாறிற்றே தவிர மூலம் குலையவில்லை.

வெளிநாடு வந்து மேற்படிப்பு படிச்சாலும் புரட்சிகர சிந்தனை இருந்தாலும் செருப்பு புத்தி சுயநலபசை போடப்பட்டு தமிழ் மண்டையோடுகளில் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கிறது என்பதை கடந்த ஐப்பசி மாதம் 25 ம் திகதி நிரூபித்தார்கள் மொறா 2003 மட்ட மாணவர்கள்.


பின்னணி


கீழைத்தேயவரான எமக்கு மேலைத்தேய கலாச்சாரம் கிளுகிளுப்பூடுகிறது.நாளையை பற்றி யோசிக்காமல் தனக்காக உழைத்து தனக்காக வாழ்வது.கண்ணைப்பறிக்கும் ஒளிவிளக்குகளின் மின்னல்களோடு அதிரவைக்கும் இசைசேர்த்து நடனமாடி உற்சாகபான மிதப்பில் தாபங்களை தணிக்கும் தற்காலிக துணையோடு இரவுகளை ஓட்டுவது என்பனவெல்லாம் எமக்கு அந்நியமாக இருந்தாலும் அடிக்கடி ஆசையூட்டுபவை.அதேபோல் அமைதியான பந்தபிணைப்புகள் நிரம்பிய தியானம் வழிபாடு கலாச்சாரம் கட்டுப்பாடுகள் சேர்ந்த கீழைத்தேய வாழ்க்கை முறையாலும் மேற்க்குலகத்தினர் கவரப்படுகிறார்கள்.அவ்வாறு இந்து மதம் மீது ஈர்க்கப்பட்ட பிரித்தானியர்கள் வேல்ஸ் எனும் இடத்தில் ஒரு முருகன் கோவிலை கட்டி வழிபாடுகள் செய்து வருகின்றனர்.நம்மவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி ஆங்கில துதிப்பாடல்களை பாடி வழிபடுவது போல அவர்கள் செய்கிறார்கள்.

செருப்பு புத்தி வெளிப்பாடு


வழமையான ஒன்றுகூடல்களுக்கு கூட வராத பலரும் வரலாறு காணாதவாறு(?) பெருமெடுப்பில் ஒன்று கூடி 1000£ பவுண்ட்ஸ் செலவில் வாகனம் ஒன்றை அமர்த்தி வேலைகளுக்கு விடுமுறை எடுத்து 2 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளைக்காரர் பூசை செய்யும் அந்த புனித தலத்தை தரிசித்து வரங்கள் வாங்கி திரும்பி வந்தார்கள்.


இந்த அறிவு ஜீவிகளிடம் இந்த தளத்தின் வழியாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கையை வாழ்க்கைக்கு ஊன்று கோல போண்றது.தடுமாறும் சமயங்களில் பிடித்தே ஆகவேண்டும்.வாழ்க்கையே தடுமாற்றம் என்றால் வாழ்க்கை முழுக்க இடுப்பில் மந்திரித்த அரைஞாண் கயிறு கட்டியே ஆகவேண்டும்.பிழை சொல்லவில்லை.ஆனால்....

1) கடவுளை தேடி இவ்வளவு தூரம் பெரும் பண செலவோடு போயே ஆகவேண்டுமா?.
நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் சிலவற்றை தெரிந்தெடுத்து உதவி இருக்கலாமே?,அந்த பிஞ்சு உள்ளங்கள் உங்களை வாழ்த்தும் போது வேல்ஸ் முருகன் தராதது கூட கிடைத்து இருக்கும்.

2)வெள்ளைக்காரன் பூசை செய்தால் புனித தலமா?, அப்போ ஒரு பேச்சுக்கு பிரிக்ஸ்டனின் காப்பிலியள் கோயில் கட்டினல் அதை புனித தலமாக்கி யாத்திரை போவீர்களா?

3)போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்வதற்க்கு கூட வேலைக்கு விடுப்பு போட்டு ஒன்று சேராத நீங்கள் இந்த புனித யாத்திரைக்காக மட்டும் ஒன்று கூடியதன் காரணம் என்ன?

மேற்சொன்ன வினாக்கள் மூலம் என்னை பகுத்தறிவுவாதியாகவும் வித்தியாசமானவனாகவும் காட்டிக்கொள்ளும் எண்ணம் கிஞ்சித்துமில்லை.இதே கேள்விகளை என்னிடமும் கேட்கப்போகிறேன்.என்கவலை எல்லாம் படித்தவர்கள் விளக்கமானவர்கள் என்று சமூகத்தில் சிறுபகுதியேனும் வைத்திருக்கிற நம்பிக்கைகளை இவ்வாறான புனித தல (?) யாத்திரைகள் சிதைத்துவிடக்கூடாது என்பதுதான்.சிதைந்து போன ஓரினத்தின் தூண்களான நம்போண்ற இளைஞர்கள் மத ஊண்றுகோல் பிடித்து தள்ளாடினால் ஆயிரம் ஆண்டுக்கும் எழுந்திருக்க முடியாது.

இறுதியாக பஞ்சு டயலாக்....

தன்னம்பிக்கை உள்ள சுயநலமில்லா மனிதனுக்கு மதங்கள் தேவையில்லை.
ஆதி திராவிடன் எந்த மதத்தையும் பின்பற்றவுமில்லை..

{இந்த கட்டுரை ஆரோக்கியமான அலசலை நோக்கமாக கொண்டதாகும்.மஞ்சள்,நீல பார்வையோட்டம் கொண்ட, மட்டம் 2003 போலிப்பேர்வழிகள் இதை தவிப்பது நலம்}

பெரிய பிரித்தானியாவுக்கு வந்த புதிதில் அடிக்க கலைக்கும் காப்பிலியையும்,உள்ளுக்குள் கடுப்பை வைத்துக்கொண்டு உதட்டில் புன்னகை அவிழ்க்கும் ஐரோப்பியனையும் விட புலம்பெயர்ந்த ஈழதமிழரின் வாரிசுகளை காணும் போதே எனக்குள் அதிக வெறுப்பு மேலிடும்.போசணையற்ற உணவூட்டலான் உருவாகும் பலவீனமான உடலோடும் கோமாளித்தனமான தலை முடியலங்காரத்தோடு,அருவருக்கத்தக்க ஆடைகளோடும் வலம் வரும் இவர்களை கண்டாலே கடும் கடுப்பு ஆகி அடுப்பில் வைத்த உணர்வே மிஞ்சும்.கால ஓட்டத்தில் சந்தித்த சில தமிழ் நண்பர்களால் "எல்லோரும் அப்படி அல்ல,குறிப்பிடத்தக்க அளவு இளைய சமுதாயம் மண்மணம் மாறாமல் இருக்கிறது" என என் கருத்தை மாற்றும் படியாயிற்று.அப்படி எனக்கு வாய்த்த அருமையான ஒரு நண்பனோடு பேரூந்தில் செல்லும் போது ஒரு விடயத்தை அவதானித்தேன்.அதாவது போதுமான இருக்கைகள் இருக்கும் பட்சத்தில் அவன் ஒருபோதும் அருகருகாக இருப்பதில்லை.முன் பின்னாக,அல்லது பக்கவாட்டாக பெரிய இடைவெளிகளில் இருந்தபடியே உரையாடியபடி வருவான்.முதலில் விடயம் பிடிபடாமல் இருந்தாலும் சில நாட்களுள்ளேயே என் நுண்ணறிவை உபயோகித்து உய்த்தறிந்துவிட்டேன்.(கடைசி வரை பிடிபடாமல் இருக்க நான் என்ன அலிபாயா? இல்லை பென்ரியம் 1 ஒபியா?)




நடுவீதியில் ஆணும் பெண்ணும் கூடினாலும் கணக்கெடுக்காம போகிற பெரிய பிரித்தானிய சனம் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் அந்நியோன்னியாம பழகினா கண்ணையும் காதயும் கூர்மையாக்கிடும்.நண்பேன்டா நீ எண்டு கடுமையா பீல பண்ணி பகிரங்க இடத்தில நண்பன கட்டிப்பிடிச்சாலோ இல்லை தோள் மீது கை போட்டபட்டி நின்றாலோ பலரது கேவலப்பார்வைகள் அடுத்த நொடியே உங்கள் மீது விழுந்துவிடும்.இந்த நிலவரத்தால் அதிகமா பாதிக்கப்படுறது எங்கள போண்ற சேவல் கூட்டங்கள் தான்.கட்டுப்பெத்தையில் மப்ப போட்டிட்டு ஒரே பெட் சீட்டுக்குள்ள நண்பனோட படுத்து,தோள் மீது கை போட்டு ஊர் சுற்றி வளர்ந்த எமக்கு இது அந்நியமாக ஆரம்பத்தில் இருந்தது.கால ஓட்டத்தில் நாமும் எம்மை பிரித்தானிய சிந்தனைக்கேற்ப மாற்றிக்கொண்டு விட்டோம்.ஒன்றாக சுற்றினாலும் போதிய இடைவெளியை பேணுவது,பயணிக்கும் போது அருகே அமராமல் இருப்பது,கடும் மப்பு ஏறினாலும் நண்பன் துணையில்லாம நடப்பது,கூர்மையான காலணிகள்,உடலோடு ஒட்டிய கால்ச்சட்டைகளை தவிப்பது,பின்னழகை(???) மறைப்பது என நிறையவே எங்களை இந்த விடயத்தால் மாற்றிக்கொண்டு விட்டோம்.





"Gay" என அழைப்பதை விட மிகக்கேவலமான பழிப்பு ஒன்றை ஒரு ஆணுக்கு தரமுடியாது.அதையே தமிழில் "கல்லு" என்கிறோம்.கல்லு வெட்டல்,கல்லுக்காரன்,கல்லு மன்னன்,கல்லன் போண்ற வார்த்தைகள் அடிக்கடி விடுதி வாழ்க்கையில் மற்றவனை கேவலப்படுத்தும் போது பாவிப்பவை.தன்னை பலதரப்பட்ட விடயங்களில் முந்தி பெயரையும் புகழையும் சுருட்டிச்சென்றுவிடும் ஆண் மீது இன்னொரு ஆண் கடுப்பாகும் போது இந்த வார்த்தைகளில் ஒன்றேனும் பாவிப்பார்கள்.சற்றே மென்மையான இயல்புகளுடைய பேர்வழியின் அறை நண்பனை கல்லென அழைத்து கோபமூட்டி ரண்களப்படுதுவது கட்டுப்பெத்தை விடுதிகளில் அடிக்கடி நடக்கும்.சாப்பிடுறது,படிக்கிறது,குப்பி எடுக்கிறது,பயணம் போறது எண்டு அடிக்கடி இரண்டு பேர் ஒண்டாக வெளிக்கிட்டா சங்கு ஊதி பட்டம் குடுக்க பெடியள் காத்துக்கொண்டு இருப்பாங்கள்.மொத்தத்தில் ஓரின ஈர்ப்பு என்ற விடயம் பெடியள போட்டுத்தாக்க கட்டுப்பெத்தையில் பயன்பட்டதே தவிர அது தொடர்பான போதிய விளக்கம் அநேகர்க்கு பெரிய பிரித்தானியா வரும் வரை இருக்கவில்லை.

இந்த இடத்தில் விளக்கம் கெட்ட பென்ரியம் 1 Processorகாரர்களுக்கு நான் எதைப்பற்றி எழுதிக்கொண்டு போகிறேன் என்ற சந்தேகம் வரக்கூடும்.அப்படியானவர்கள் கீழே இருக்கும் பத்தியை படித்து தெளிவுபெறவும்.

//ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.{Difntn 4m Wikipedia}//

//ஓ.சே (Homosexuality & lesbian) என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி மா.சேகளுக்கு இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் ஓ.சேக்களுக்கு இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற (முட்டாள்தனமான) வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.எந்த மிருக,பறவை இனங்களிலும் 2 அல்லது 3% தொகை ஓரின சேர்க்கையாளர்தான்.மனித இனத்திலும் அதுபோலவே 2 அல்லது 3% பேர் எந்த காலத்திலும், எந்த சமூகத்திலும் ஓரினசேர்க்கையாளராகவே இருந்து வந்துள்ளனர்.//




குறித்த ஓர் மக்கட்தொகையில் ஓரின ஈர்ப்பு ஆண்களை விட லெஸ்பியன்களான பெண்களின் தொகை அதிகம் என ஆய்வுகள் சொல்லுகின்றன.செர்வே களின் போது பெண்கள் லெஸ்பியன்களாக இருந்தாலும் உண்மையை மறைப்பதால் உண்மையான வீதம் தெரிய வருவதில்லை எனச்செல்கிறார்கள்.ஆனால் தற்போதைய நிலவரப்படி உதட்டு முத்தங்களை பரிமாறியபடி செல்லும் பெண்-பெண் ஜோடிகளை ரயில்களில் காண்பது சாதாரணமாகிவிட்டது.

டும்..டும்..டும்…



சில தினங்களுக்கு முன் chat ல் ஈடுபட்டிருந்தபோது ஓர் இன்ப

அதிர்ச்சி.நண்பன் கோகிலனிடம் இருந்தது கோல்மச்சான் எனக்கு கல்யாணம்fixedஎன்று. எங்கள் அறிவக நண்பர் குழாமில் தீபரூபனைத் தொடர்ந்து கோகிலனும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.(ஒருவேளை ரூம் ராசியோ!) கோகிலனைப் பற்றி ஏற்கனவே கனாக்காலத்தில் பதிவு உள்ளமையால் நான் அதிகம் கூற வேண்டியதில்லை.
(மனதில் நின்றவர்கள்-03-கோகிலன)

வாடல் தேகத்துடன் முகத்தில் உணர்ச்சிகள் அதிகமின்றி கம்பஸை வலம் வந்த இவரைப் பற்றிக் கூற வேண்டுமானால் சுத்த சோம்பேறி.(பவானின் தயாரிப்பில் கம்பசில் வெளியானகபோதிதிரைப்படத்தில் கோகிலனுக்கு கிடைத்த வேடம் தான் கதையின் ஆணிவேர். என்ன பாத்திரம் தெரியுமா !கம்பஸ் சூழலில் கொலையுண்ட ஒரு சடலம்.(எப்படித்தான் பொருத்தமாய் கண்டுபிடிக்கிறாங்களோ…. J ) கோகிலன் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?. இவருக்கு பிடித்த இடம் ரூம் கட்டில் தான். லெக்சர் முடிந்தவுடன் ஒடோடி வந்து கட்டிலில் சரிந்தால் சரியான கும்பகர்ணன் தான். ஆனால் எக்சாம் எல்லாம் A தான். (எப்ப தான் படித்தானோ…)சிவில் பாடங்களைப் பொறுத்தவரை structural, design என்றால் இவரிடம் குப்பிக்கு நம்பிப் போகலாம்.கம்பசில் படிக்கும் போது இவரது வாடல் தேகத்தை ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகர் மாதிரி மாற்ற விரும்பி இவர் பாவித்தது body mass.. ஆனால் இதைப் பாவித்து சில காலத்தில் இவருக்கு திடீர் என்று உடல் நலம் குன்றி ஊருக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. என்னடாப்பா இன்னும் காணவில்லையே என sms பண்ணிய செல்வரஞ்சனுக்கு வந்தது reply. தனக்கு தெரிந்த நோய்களெல்லாம் பட்டியலிட்டிருந்தான் கோகிலன். இப்பொழுதும் Body mass பாவிக்கிறானோ தெரியவில்லை.

கம்பசை விட்டு வெளியேறிய பின் எனக்கும் கோகிலனுக்கும் ஒரே இட்த்தில் ( புத்தளம் பாலாவி தான்) வேலை கிடைத்தபோதும் கோகிலனுக்கு கொழும்பில் இன்னொரு design வேலை கிடைத்ததும் நான் மாத்திரம் Maga pvt ltd ல் இணைந்து கடும் வெயிலில் கருவாடாக வேண்டி இருந்தது. ஆயினும் கோகிலன் பின்னர் புத்தளத்தை விட வெயில் கடுமையான வசதிகளற்ற மன்னாரில் வேலைக்குப் போனது எனக்கு ஆச்சரியம் தான். பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது கோகிலனும் கொழும்புக்கு மாற்றலாகி விட்டான்.

கம்பஸ் நண்பர்கள் பலரும் வெளியேறிய பின் எங்கள் பலரை மறந்து விடுவது வ்ழக்கம். அண்மையிலும் கூட ஒருவரது திருமணப் போட்டோக்களை facebook ல் பார்த்துத் தான் அறிந்து கொள்ளவேண்டி இருந்தது. ஆனால் கோகிலன் முன்பே அறிவித்தது என்னைப் பொறுத்த வரை பெரிய விடயம். முன்கூட்டிய திருமண வாழ்த்துக்கள் நண்பா………!

தொ(ல்)லை பேசி

கம்பஸில் முதலாம் வருடம் நானும் ஒருவாறு பெற்றோரிடம் கெஞ்சிக் கூத்தாடி அப்போதைய 3315 மொடல் போன் ஒன்று வாங்கினேன். போன் வாங்கி நண்பர் சிலருக்கு நம்பர் கொடுத்த பின்னர் நான் பட்ட பாடு இருக்கிறதே. சொல்லி மாளாது. தெரியாத நம்பர்களில் இருந்து மிஸ்கோல்கள் வரும். அப்போது hatch sim ல் இருந்து நம்பர் வராமல் கோல் எடுக்க முடியும். புது போன் வங்கின எனக்கு இது பெரும் தலையிடியாக இருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மிஸ்கோல் அடித்த நண்பனே சிறிது நேரத்தில் வந்து எனது response பார்த்து ரசித்து விட்டுப் போய் மீண்டும் தொடருவது தான். பின்னர் இவைகள் எல்லாம் பழகிப் போக அந்தத்தொல்லையும் விட்டது. இவ்வாறான தொல்லைகளை சமாளிக்க ஒரு வழி தெரியாத நம்பிரில இருந்து வரும் கோல்களை கணக்கெடுக்காம விடலாம். இலகு வ்ழி போனில் உள்ள SWITCH OFF எனும் option தான்.

வதந்தியும் நிஜமும்

சுனாமி முடிந்த நேரம் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்ட்த்தைப் பெரிதும் பாதித்திருந்த நேரம். சுனாமியின் பாதிப்பின் எதிரொலி பல்கலைக்கழகத்திலும் இருந்த நேரம். எங்கள் மட்டக்களப்பு மாணவன் அச்சுதனும் அப்போது தான் பல்கலை திரும்பியிருந்தான். Package களுக்குப் பெயர் போன சிலரால்அச்சுதனும் சுனாமியில போயிட்டானாம்என்று பொழுதுபொக்கிற்காக வதந்தி ஒன்று பரப்பி விடப்பட்டது. அப்போது தான் புதிதாக phone வாங்கியிருந்த என்க்கும் ஒரு sms வந்திருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன் தான் கம்பசில் அச்சுதனைப் பார்த்திருந்த படியால் நானுமொரு sms அனுப்பினேன்அச்சு சாகவில்லை.கம்பசில் கண்டேன். தூங்கும்போது கூட காலாட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும்,இல்லாவிட்டால் செத்தாச்சு எண்டு புதைத்து விடுவீர்கள்என்று கேள்விப்பட்ட வாசகம் ஒன்றையும் அனுப்பினேன்.அது தான் நான் செய்த தவறு.பொழுது போக்க நான் தான் சிக்கினேன்.”ஏண்டா செத்தவீட்டுக்கு போகவில்லைஎன்று வந்தது அடுத்த sms. sms மோதல் தொடர்ந்தது.உயிரோடு இருக்கிற ஒருவனை செத்ததாக சாதிப்பது எனக்கு வேப்பங்காயாக கசந்தது.அதுவும் சுனாமி நேரத்தில்: எனது கோபத்தைத் தூண்டி வேடிக்கை பார்க்க தீபரூபன், சவுந்தர்,ரிஸ்மி உட்பட்ட ஒரு கூட்டமே கிளம்ப நானும் கடுப்பாகி எக்சாமிற்கு படிக்க முடியாதளவு அலுப்பு வாங்கி சுகந்தமாறனின் தலையீட்டுடன் எல்லாம் முடிவுக்கு வந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அச்சுதனும் ஒத்துழைத்ததாக அறிந்த போது எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.


இப்போது
ஒன்றரை மாதங்களுக்கு முன் facebook ல் பல்கலைப்பட்டமளிப்பு போட்டோவில் பிரகலாதனின் குடும்ப போட்டோவை tag பண்ணி விட்டு வீடு வந்த போது 2 sms.ஒன்று செல்வா இடமிருந்துis it prahalathan’s broஅடுத்தது எங்கள் package க்குப் பேர் போன தீபரூபனிடமிருந்துour friend prahalathan’s brother passed away in Jaffna.please convey this to all friends.” இது தான் செய்தி. நான் இவற்றைக் கணக்கெடுக்கவில்லை. இவங்கள் என்னோடு விளையாடுறாங்கள் போல என்று விட்டு விட்டேன். மறு நாள் தீபருபன் கோல் எடுத்த்தும் கடுப்பாகி கதையை மாற்றிக் கட் பண்ணி விட்டேன். இதை மறந்து பல நாட்கள். தற்போது இரு நாட்களுக்கு முன் தற்செயலாக பிரகலாதனின் facebook பார்த்தபோது எனக்கு உண்மையில் பலத்த அதிர்ச்சி.பிரகலாதனின் அண்ணா சாரங்கன் உண்மையிலேயே காலமாகி விட்டிருந்தார். கம்பசில் படிக்கும் போது பிரகலாதனின் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவரைக் கண்டுள்ளேன். அப்போது மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் மல்லன் போன்ற உடல் வாகு கொண்டவர். அவர் எப்படி இந்த வயதிலே என்று என்னாலும் நம்ப முடியவில்லை. காலனுக்குத் தெரியுமா மருத்துவனா, மல்லனா என்று. பக்கத்தில் இருந்தும்(சுன்னாகம் எனது ஊரிற்கு அருகாமையில் தான்) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத கவலை ஒருபுறம் இருக்க நண்பனுக்கு தேறுதல் கூடக் கூறாத குற்ற உணர்வு மறுபுறம். அதனை ஓரளவாவது இந்தப் பதிவின் மூலம் நீக்கிக் கொள்கிறேன்.

விடயம் தெரிந்தபோது நண்பனோ தேறுதல் கேட்கும் நிலையைத்தாண்டியிருந்த்தான். அவனது facebook ல் அவனால் எழுதப்பட்ட இரங்கல் கவிதையின் சில வரிகள்.

"இரவின் பனியை உண்டு

இன்புற்றிருந்தது

இறுதி நாளின்பயணத்தை எண்ணி;

உதிரப்போகும் சருகொன்று…

இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்உதிரும்

நாள் வரை உழைத்தாகிவிட்டது…

உயிர்கள் சுவாசிக்க

ஆக்சிஸனைகொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…

இல்லையில்லை…

இலையின் வாழ்க்கை

சுழற்சியின்இன்னொரு பக்கம்…"

மொறட்டுவை கம்பசில மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் கெமிக்கல் சசி வீட்டுக்கு சாப்பாட்டுக்கென பெரிய குழுவாக புறப்பட்டுப்போனோம்.வழிகேட்பதற்காக சசிக்கு கோல் எடுத்த போது சசி சொன்னது..

"வரேக்க றிவர் ஒண்டு ரன் பண்ணிக்கொண்டு இருக்கும்,அத தாண்டி வரேக்க ரூ ஸ்ரோறி பில்டிங் ஒண்டு இருக்கும்,அதில அப் ஸ்ரோறி தான் எங்கட கவுஸ்"

05/10/2010 அன்று பிரித்தானியா மிட்சம் பிரதேசத்தில் உள்ள ஜிம்மில்...
எவ்வளவு பயிற்சி செய்தாலும் காப்பிலியள் போல பாடி வராம டெட் பாடி கணக்காவே இருக்க காரணம் கேவலமான எங்கள் சாப்பாட்டு முறைதான் என பேசியபடி இருந்த போது சசி சொன்னது.

"நான் டெயிலி 3 டைம் மீல் எடுப்பன்.மில்க்,யூஸ் நைட்ல ரிங் பண்ணுவன்,சொ சாப்பாடு பிராப்ளம் இல்லை"

இவன் ஏழு ஜென்மத்துக்கும் திருந்த மாட்டான்.


கம்பசில முதலாம் வருசம் படிச்சுக்கொண்டிருந்த காலம்....
ஜெயசுதன் தன்னை ஒரு காதல் இளவரசனாக மனதில் வரித்து வைத்திருந்த நேரம்.ஒரு நாள் பட்டப் பகல்ல ஒரு மட்ட பிகரிடம் வழிந்து படுகேவலமாய் திட்டு வாங்கியதை பலர் கண்ணாரக்கண்டார்கள்.அவள் ஒரு நல்ல பிள்ளை என பல பெடியளோடு வாய்ச்சண்டை போட்டு கேவலப்பட்டதும் பின்னர் நடந்தது.

28/09/2010 லண்டன் மாநகரில் ரவுடி ஜெயசுதனோடு பேரூந்தில் பயணிக்கும் போது......
வண்டி நிறைய பெண்கள் கூட்டம்.ரீன் தொடக்கம் 40+ வரை பரவலான வீச்சில் நின்றிருந்தார்கள்.ஒருத்தியையும் விடாமல் சைட் அடித்து அறை வந்த பின் நடந்த நண்பர்கள் ஒன்று கூடலில் ரவுடி சொன்னது
"இவ்வளவு கேவலமா பெட்டைக்காக அலையுறவன பார்க்கேல.எல்லாரும் பெட்டய பார்ப்பாங்கள்.ஆனா நீ.... உன்னை எந்த பெட்டை பார்க்குது எண்டு பார்க்கிறாய்,கேடுகெட்ட மெண்டாலிட்டி,நான் ஒரு காலமும் பெட்டைக்காக அலைஞ்சதில்லை"

குடுக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு.கணக்கெடுக்கப்படாது.


மூன்றாம் வருடம் படிக்கேக்க புதுசா வந்திருந்த யூனியர் பிள்ளையட்ட உங்களுக்கு வரப்போறவர் எப்படி இருக்கோணும் எண்டு கேட்க சொன்னது....
"நல்லவரா இருக்கோணும்"

பெரிய பிரித்தானியாவில் வெள்ளைக்கார பிள்ளைகளோடு கடலை போட கிடைக்கிற பொன்னான தருணங்களில் அதே கேள்வியை எடுத்து விட்ட போது ஒரு பிள்ளை சொன்னது.....
"என்னோட கனவுப்பையனுக்கு அழகான உடம்பு இருக்கோணும்.முக அழகு முக்கியமில்லை.ரிம் பண்ணின அப்ஸ் இருக்கோணும்.தசைப்பிடிப்பான தோள்கள்,உயிரோட்டமான கண்கள் அவசியம்.பணம்,அந்தஸ்து முக்கியமில்லை.என்னை புரிஞ்சு கொண்டா சரி."


பொத்திப்பொத்தி வச்சு பழுக்கவும் இல்லை பழக்கவும் இல்லை.


மொறட்டுவை,பதுவிதான விடுதி 2007 ம் ஆண்டு......
அலியப்பா சௌமியா என்று ஒரு கற்பனைப்பிகர உருவாக்கி அவளுக்கு ஓவரா பில்டப் குடுத்து தனக்கு குறும் தகவல்,தொலை பேசி அழைப்புக்களை நண்பர்கள் முன்னிலையில் சௌமியாவாக எடுக்க இன்னொருத்தியை செட் அப் பண்ணி......... சௌமியாவ சந்திக்க போவம் வா எண்டு ஒரு பிள்ள பூச்சிய கூட்டிக்கொண்டு போய் 3 மணித்தியாலம் காக்க வச்சு...... சாட்டு சொல்லி திருப்பி கூட்டி வந்து.......2 வருடங்களாக போட்ட நாடகத்தை ஒரு பார்ட்டியில் ஒப்புக்கொள்ள 7ஜி ஒரு கிழமை கதைக்காமல் ஒதுக்கி வைத்தது.

10/09/2010 கஸ்டப்பட்ட பிள்ளையள கஸ்டப்படுத்தாம படிக்க வைக்கப்போறன்.இஸ்டப்பட்டு எல்லாரும் ஒரு ஸ்கொலர்சிப் குடுப்பம்.....எண்டு சொல்லி நிறுவனத்துக்கான இலச்சினை,விண்ணப்ப படிவம் எண்டு சீரியசா சொல்ல எல்லாரும் அலேட் ஆகிட்டாங்கள்.நிச்சயமா யாரோ ஒரு பிகரோட மனதை வருடும் முயற்சி எண்டு விளங்கினது தான் காரணம்.


சிட்டி version 2.0 போல இது லந்து version 2.0 வோ?


மொறட்டுவை கம்பசில சிவில் டிப்பார்ட்மெண்டில தன்யா எண்டு ஒரு தமிழ்ப் பிள்ளை இருந்தது.சக மாணவிகள் எல்லாம் எங்களை பொறுக்கி என்று தடை செய்த போதும் எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் தன்ரபாட்டில அமைதியா இருந்ததால தண்ணி பார்ட்டியள்ள எல்லாம் அந்த பிள்ளய மனமார புகழ்ந்து தள்ளுவோம்.அவவும் பெயருக்கேற்றபடி 4வருசமும் தன்ர பாட்டில தனியா இருந்துட்டு அவுஸ்திரேலியா போயிட்டா.

இப்ப அதே முகத்தோற்றத்தோட ஒரு பிள்ளை முக நூல்ல இருக்கு.பெயரும் அதே தான்.ஆனா தனியவா இல்லை.நூறில்லை,இருநூறில்லை எண்ணூறுக்கு மேல நண்பர்கள் வச்சிருக்கிறா.அவுஸ்திரேலியாவில பறக்கிறதில பருந்து தொடக்கம் ஊருறதில ஓணான் வரைக்கும் அழகா படம் பிடிச்சு போடுவா.மிருகங்களும் தன்யாவ தங்கள்ல ஒண்டா நினைக்கிறதாலயோ என்னவோ..... பயந்து ஓடாம விறைப்பா போஸ் குடுக்குதுகள்.எல்லாத்தையும் போட்ட தன்யா இப்ப தன்னையே படம் பிடிச்சு போடுற அளவுக்கு வளர்ந்துட்டா. முதலைக்குளத்துக்க அரையளவு தண்ணியில நிண்டு போட்ட போட்டோ தான் இப்ப முக நூல்ல ஹாட் டாபிக் ஆகி இருக்கு.


அரை வளர்ச்சி நாடு அவுஸியிலேயே இவ்வளவு மாற்றம் எண்டா முழுசா வளர்ந்த அமெரிக்கா போன என்ன ஆகும்?

மொறட்டுவை கம்பசில டப்பா பிகர கூட உருகி உருகி பார்த்து, வாளி,குப்பி எல்லாம் வச்சு கேவலப்பட்ட பெடியள் பலர்.அது மட்டுமில்லாம ஆயா ரேஞ்சில இருந்த பிகருகள எல்லாம் மீரா ஜாஸ்மினுக்கும்,நயன் தாராவுக்கும்,பானுவுக்கு(தாமிரபரணி நாயகி) ஒப்பிட்ட கொடூர ரசனைக்காரர்கள் கூட இருந்திருக்கிறார்கள்.

உலகத்தின் சகல இனப்பெண்களையும் லண்டனில் பார்த்தாகி விட்டது.பெண் அழகு என்பதன் வரைவிலக்கணக்களை எல்லாம் பார்த்துவிட்டாங்கள் எங்கட பெடியள்.ஊருக்கு போகும் போது தமிழ் பெண்களை,சிங்கள பெண்களை சைட் அடிக்க கூட தோண்றாத அளவுக்கு இங்கே பார்த்தாகிவிட்டது.இருந்தும் தமிழ்ப்பெண்கள் மீதான ஈர்ப்பு மிச்சம் இருக்கிறது என்றால் கலாச்சாரம் ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும்.ஆனால் அதையும் ஆமிக்காரனோடு சேர்ந்து மரத்தமிழிச்சிகள் பறக்கவிடுவதால் விரைவில் இச்சிந்தனையிலும் முற்றுப்புள்ளி விரைவில் விழும் என எதிர்பார்க்கலாம்.


வாழ்க்கை ஒரு வட்டமோ சதுரமோ சரிவகமோ இல்லை.பல நெளிவு சுழிவுகளை கொண்டதே அது.

சின்ன வயதில நரியும் திராட்சைப்பழமும் கதை கேள்விப்பட்டிருப்பீங்க தானே. அதப் போல தான் இது காதல் முயற்சியில் நொந்து நோலாகிப் போன இளைஞர்களைப் பற்றி.
என்னைப் பற்றி எழுதப் போனா அரிவரியில இருந்து எழுத வேண்டி வரும்.அதோட ஆட்டோகிராப் கதையை சுட்டிட்டன் என்று வீண் கொமன்ஸ் வேற வரும்( பில்டப் கொஞ்சம் அதிகமோ…….! இருந்தாலும் கண்டுக்காதீங்க பிளீஸ் ....). நண்பர்களைப் பற்றி எழுதலாம் எண்டால் “டேய்! இப்ப தாண்டா அம்மா அப்பா கல்யாணப்பேச்சை எடுத்திருக்கினம். நீ என்னடா எல்லாத்திற்கும் ஆப்படிக்கப் பார்க்கிறாய்……...!” என்று சீதனக்கனவுகளோடு காத்திருக்கும் நண்பர்களிடம் டோஸ் வாங்க வேண்டி வரும். எல்லாவற்றையும் யோசித்து பெயர்களைக் குறிப்பிடாமலேயே எழுதுகிறேன்.தொப்பி அளவெண்டால் நான் பொறுப்பில்லை.(அப்பாடா……தப்பித்தேன்)

கல்லூரி வாழ்க்கையைப் பொறுத்த வரை பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் வேறு வேறு பாடசாலை என்ற படியால் நெருங்கிப் பழக வாய்ப்புகள் குறைவு. கலவன் பாடசாலை, தனியார் ரியூட்டரிகளில் வாய்ப்பிருந்தும் எங்களூர் பெருசுகளிடம் மாட்டாமல் கதைக்க கூட வாய்ப்பில்லை.ஏதோ சைட் அடிக்கிறதோட சரி.எங்கையாவது சாதாரணமாய் கதைத்தாலே காதல் என்று கதை கட்டி ஊரையே கூட்டி விடுவர்.(இப்ப போன்,இன்ரனெற் வந்தாப் பிறகு எங்கட ஊர் பெருசுகளுக்கெல்லாம் கிலோ கணக்கில அல்வா தான்..). அதோட ஓ லெவல், ஏ லெவல் எண்டு எங்கட இளசுகளுக்கும் காதலிக்க நேரமில்லை.

கம்பஸ் போனாப்பிறகு தான் ஆண்கள், பெண்கள் பழக வாய்ப்பு அதிகம். மனதில் வேறு எண்ணஙகள் இல்லாமல் சக மாணவிகளிடம் நட்பாகப் பழக வாய்ப்புக்கிடைத்த இடமும் இது தான். இருந்தாலும் நல்ல சில காதல்களும் மலர்வதுண்டு.கம்பஸ் வாழ்க்கையைப் பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.எங்கட கம்பஸ் தமிழ்ப்பெடியள் காதலில சிக்காத ஒரு காரணம் தமிழ்ப்பெண்களின் எண்ணிக்கை வலு குறைவு. இருந்தாலும் முக்கிய காரணம் சீதன டிமாண்ட் குறையுமே என்பது தான்

ஜுனியர் பிள்ளைகளின் வருகையுடன் தான் கம்பஸ் களை கட்டும். அது வரை தேமே என்று அழுக்காகத் திரிந்தவர்களெல்லாம் டிப்டொப்பாக ட்ரிம் பண்ணிய மீசையுடன் ஜுனியர் பிள்ளைகளை நோக்கித் தங்கள் காதல் அம்புகளை வீசுவார்கள். லெக்சர் கட் அடித்து விட்டு முழு முயற்சியில் தோல்வி கண்டு தோல்வி நிச்சயம் எனக்கண்ட சிலர் “ஒண்டும் சரியில்லை மச்சான்: என்ர ரேஞ்சுக்கு உதெல்லாம் எந்த மூலைக்கு” என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஒரு சிலர் இந்த மூஞ்சிக்கு இது போதும் என்று முடிவு கட்டி “என்னவளே அடி என்னவளே”என்று பாடாத குறையாய் அவள் பின்னால் அலைவார்கள்.பொதுவாக தமிழ்ப்பெண்களும் யாராவது பின்னால் திரிந்தால் ஓகே சொல்லாமல் டிமாண்ட் பண்ணுவது வழக்கம்.sms,போஸ்டர்கள் என்று full try பண்ணி வெறுத்துப் போன சிலர் தாடி வைத்து அவளை மறக்கக் குடிக்கிறேன் என்று சொல்லி பார்ட்டிகளில் ரணகளப் படுத்துவார்கள்.இதைத் தவிர வேறு சிலர் இது காதல் இல்லை நட்பு எண்டு மற்றவர் காதில பூச்சுற்றுவார்கள்.திருமண அழைப்பிதழ் தந்தாப் பிறகு தான் விடயமே தெரிய வரும். ஒரு சிலர் மாத்திரம் விதிவிலக்கு.

கம்பஸில் பொதுவாக பெண்களுடன் அதிகம் பழகுவோரை அழைக்க “வாளி” எனும் பதத்தைப் பாவிப்பார்கள்.இதன் மூலம் பெண்களுடன் வெளிப்படையாகப்பழகப் பலரும் பின்னடிப்பதுண்டு. இதனால் சில நல்ல நட்புக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உண்மையான காதல்களை இனங்காணக்கூடியதாய் இருந்தது.(எல்லாப்பெண்களுடனும் பழகி வாளி என்ற போர்வைக்குள் காதலைத் தெரியாமல் மறைத்த எமகாதகர்களும் உண்டு.)

இதைத் தவிர இன்னொரு கூட்டம் ”டயலொக் பக்கேஜ்”.முகம் தெரியாத காதல்(இது காதல் தானா என்பது கேள்விக்குரிய விடயம்.) ஒருவரை ஒருவர் தெரியாது.உண்மைப் பெயர்கள் பாவிக்காது 1000 நிமிடம் கதைத்து முடிக்கும் நோக்கத்துடன் உருவாகும் பொழுதுபோக்குக்காதல் இது. (பொதுவாக இது பில்டப்புக்காகவும் காதல் செய்ய துணிச்சல் இல்லாத ஆற்றாமையை வெளிக்காட்டாமலும் இருக்கச் செய்யும் முயற்சி என்பதே எனது கருத்து.)

கம்பஸ் வாழ்க்கையும் முடிந்து எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கம்பஸ் நினைவுகளை மறக்க முடியாது.
காதலில் வெற்றிக்கொடிநாட்டிய நண்பர்களுக்கும் சீதனக்கனவுகளோடு காத்திருக்கும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.!
காதலில் தோல்வி கண்டவர்கள் பொதுவாக மீண்டும் அதில் இறங்குவது குறைவு.(சூடு கண்ட பூனை……!) ‘எங்கிருந்தாலும் வாழ்க” என வாழ்த்துபவர் சிலர். தோற்றுப் போய் விட்டோம் என்ற எண்ணத்துடன் காலத்தைக் கழிப்பவர்கள் பலர். காதலில் தோல்வி கண்டவர்கள் எனது தலைப்பை மீண்டும் ஒருமுறை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்களேன்……………………!

பின் குறிப்பு:இதை வாசிப்பவர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள். எனது அப்பாவிற்கு இதைப்பற்றி எதுவும் சொல்லவேண்டாம்,…பிளீஸ்,,,,,!
(தெரிந்தால் “பெடியனை நம்பிக் கம்பசுக்கு அனுப்பினது பிழை” எண்டு பிரம்போட கலைச்சாலும் கலைப்பார்…)

சாறத்த மடிச்சுக்கட்டிக்கொண்டு பழைய ரலி சைக்கிள்ல கௌபாய் கணக்கா பாஞ்சு ஏறின தம்பையாண்ணை மிதிச்ச மிதியில சொற்ப நேரத்துக்குள்ளாகவே பிரதான வீதி வந்து விட்டிருந்தது.இண்டைக்கு செய்து முடிச்சிட வேணும்.இலவசமா செய்யுறதும் பத்தாம ஒரு தொகை காசும் தாறாங்கள் எண்டு நேற்று வாசகசாலையில அறிஞ்சவுடன கிளம்பின பொறி இண்டைக்கு நெருப்பாக மாறி அவருள்ளே எரிந்து கொண்டிருந்தது.தம்பையருக்கு 20 வயசில கலியாணம் நடந்தது.பிறகு ஓடிப்போன 25 வருசத்திலை எட்டு பிள்ளையளுக்கு அப்பா ஆகி சிங்கம் கணக்கா இருந்தவர போன தை மாசம் மூத்தவன் சௌந்தர் ஒருத்தியோட ஓடிப்போய் தாத்தா ஆக்கி கேவலப்படுத்தினான்.அவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமா மனுசி முத்துலெட்சுமியை 9வது பிள்ளைக்கும் அம்மா ஆக்கி சில நாட்களுக்குள்ளேயே வீட்டில் பூகம்பம் வெடித்து விட்டது.எல்லாத்துக்கு காரணம் பாழாப்போன எரிச்சல் பிடிச்ச பக்கத்துவீட்டுக்காரன் ஜெயசுதன்தான்.பல தசாப்தமா பிள்ளை இல்லாம அம்மா பகவான்,அம்மன் எண்டு நேர்த்தி வச்சுக்கொண்டு திரியுற அவனுக்கு தம்பையர் வரிசை வரிசையா பெத்து தள்ளுறத கண்டு பொறுக்க முடியாம தங்கட வீட்டில டசின் கனக்கா குட்டி போட்டுக்கொண்டிருந்த பெட்டை நாய்க்கு லெட்சுமி எண்டு பெயர வச்சு விட்டான்.ஊரில முத்துலெட்சுமி அந்தக்கால ஐஸ்வரியா ராய்.தம்பையர் பலரோட அடிபட்டு போயிலைத்தோட்ட மறைப்புகளுக்க காதல் வளர்த்து ஓடிப்போய் கரம்பிடித்த பெண்மணி.அதிர்ந்து கூட பேசமாட்டாள்.பிள்ளைகளில அவ்வளவு பாசம்.அவளே "இனியும் கிட்ட வராதையுங்கோ" எண்டு சொல்லி தட்டிப்புழிய தம்பையாண்ணை உடைந்து போய்விட்டார்.தூக்கமில்லாம கடந்த இரவுகளூடு முகட்டை வெறித்தபடி பல நாள் யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருந்தார்.




இராச வீதியில் சைக்கிள் வேகமெடுக்க தம்பையாண்ணைக்கு உள்ளே படபடப்பு கூட தொடங்கியது.கொஞ்சக்காலத்துக்கு முதல் வீட்டு கடுவன் நாய் ஜிம்மிக்கு கதறக்கதற அறுவைச்சிகிச்சை செய்த காட்சி வேறு குறுக்கால் ஓடியது.வீட்டுக்கு திரும்பி போகேக்க ஜிம்மி வாலை ஆட்டிக்கொண்டு வந்து "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனச்சொல்வது போல ஏளனப்பார்ப்வை பார்க்குமோ? என்று வேறு சிந்தனை வந்தது.குழம்பமான எண்ண ஓட்டங்களால் சைக்கிளை வீதிவளைவில் திருப்பிய போது மணியை இயக்க மறந்து போக குறுக்கால காட்டுப்பண்டி கணக்கா வந்தவனில மோதும் தருணம் தம்பையர் சடுதியா ஹாண்டிலை திருப்பி வேலி பொட்டுக்க விட்டதும் தவறியது.

"சொறி சொறி ஐ ஆம் மிகவும் சொறி,இஸ்ஸரா யூ வந்தத ஐ ஆம் கவனிக்கலை" எண்டு சொல்லுக்கொண்டு போனவனை போனவனின் முகத்தை கவனித்ததும் தம்பருக்கு பொறி தட்டியது.

"தம்பி நீர் சிங்கத்தின்ர பெடியன் கமலரூபன் தானே?,இங்க என்ன செய்யுறீர்?".

"நான் லண்டன்ல MSc படிச்சிட்டு யாழ்ப்பாணமும் பெண்களும் என்ற தலைப்பில ஒரு கட்டுரை எழுதுவம் எண்டு வந்தனான்,அது தான் றோட்டுக்கரையா நின்று பெண்களை அவதானிக்கிறன்"
என்றபடி சடுதியாக நீளமான அளவு கோல் ஒன்றை எடுத்த அவன் சைக்கிள் போய் நின்ற வேலிப்பொட்டினை அளந்து குறித்துக்கொண்டான்.

"யாழ்ப்பாணப்பெண்களுக்கும் வேலிப்பொட்டுக்கும் என்ன சம்பந்தம்?" எண்டு வாயில வந்த கேள்வியை அடக்க தம்பையாண்ணை நிறையவே கஸ்டப்பட வேண்டி இருந்தது.

சிங்கம் தம்பரின்ர பழைய கூட்டாளி.சிங்கத்தின்ர அதே முகவெட்டு அப்படியே பெடியனுக்கு இருக்கிற படியா இலகுவா பிடிச்சிட்டார்.சுக துக்க விசாரணைகளில் தொடங்கிய விவாதம் வளர்ந்து தன்னையறியாமல் ஆஸ்பத்திரிக்கு ஒப்பிரேசன் செய்ய போற விசயத்தை சொல்வதில் நின்றது.

"சிங்கத்தார விட பெடியன் வலு கெட்டிக்காரனப்பா,நாக்கில கொழுக்கி போட்டு இழுக்கா குறையா கதை உருவிட்டான் பார்ரா" என எண்ணியபடி தம்பர் விறைச்சு போய் நிக்க கமலரூபன் தொண்டய செருமிய படி தொடங்கினான்.



"நீங்கள் இப்படி செய்யுறது ஆயிரம் வருசத்துக்கு பிறகு பலகோடி தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும்.இதால பத்தாவதா பிறக்கப்போற பிள்ளை இல்லாம போகும்,அந்த பிள்ளை 30 வருசத்திலை 3 பிள்ளைக்கு அப்பா ஆகுது எண்டு ஒரு பேச்சுக்கு வச்சுக்கொண்டா,அந்த மூண்டு பிள்ளையும் 60 வருசத்தில 9 பேருக்கு அப்பாக்கள் ஆகிடும் அப்ப 1000 வருச முடிவில இருக்க வேண்டிய 1x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3= 205891132100000
க்கு மேற்ப்பட்ட தமிழாட்கள் சந்ததி இல்லாம போக போகுது,சொந்த இனத்தை காட்டிக்கொடுக்கிறது எவ்வளவு கேவலமோ,அதை போலத்தான் இதுவும்,இது ஒரு தன்னினக்கொலை,அக்காட்ட விசயத்தை விளங்கப்படுத்தி, எவ்வளவு முடியுமோ அவ்வளவை பெறுங்கோ" எண்டு கமலரூபன் சொல்லி நிறுத்த முதல் தம்பையாண்ணை சைக்கிள் வீட்டை நோக்கி றெக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டது.

{வளரும்}

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


தலைப்பைப் பார்த்த்தும் ஏதோ ஆட்டோகிராப் மாதிரி ஏதோ காதல் கதை எண்டு நினைச்சா தப்பு.(சீச்சீ......இந்தப் பழம் புளிக்கும்.)இது கட்டுப்பெத்தைக்கம்பஸ் பற்றி

எல்லோரும் போல் பல கனவுகளோடு வந்த எனக்கும் பிறகு தான் தெரிஞ்சது கம்பஸ் வாழ்க்கை எப்படி எண்டு.படிப்புப்பளு மட்டுமின்றி தங்குமிடம்,சாப்பாடு,மொழிப்பிரச்சனை என வெறுத்துப்போனவர்களுக்கு ஒரே ஆறுதல் நண்பர்களும் அவர்களின் பகிடிகளும் தான்.வேறு ஆறுதல் தேட முயன்றவர்களும் உண்டு.

ஒவ்வொரு தங்குமிட நண்பர் கூட்டத்திற்கும் ஒவ்வோர் புனை பெயர். பேய்வீடு,அறிவகம்,ஆச்சிரமம்,7ஜி எனப்பல பெயர்கள்.முதல் வருடம் தனித்துப்போன நான் அடிக்கடி அறிவகத்திற்கு விசிட் செய்வதுண்டு. இதற்கு அறிவக நண்பர்களின் பகிடிகளால் கவரப்பட்டது மட்டுமல்ல நோட்ஸ்,கோர்ஸ்வேக் எடுக்கலாம் என்ற சுயநலமான காரணமும் இருந்தது.இரண்டாம் வருடம் தான் அறிவகத்தில் இணைந்தேன்.அறிவகநண்பர்கள்செல்வரஞ்சன்,பிரகலாதன்,
சசிவர்ணன்,தீபரூபன்,ரஜித்,சிறீஸ்காந்,ஜெசி,கோகிலன்,ஜனா,குலோத்துங்கசாகரன் ஆகியோர். இதில் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே எழுதலாம்.இதில் மெயின் முத்தையன்கட்டுக்கு கரண்ட் கொடுத்த,சுனாமி நேரம் மீன்ரின் தொழிற்சாலை போட்ட சசிவர்ணன்.என்ன தான் நக்கலடித்தாலும் சசிக்கு கோபமே வராது.(ரொம்ப நல்லவன்). சிரித்து சிரித்து சமாளிக்கும் சசியை நாங்களும் விடுவதில்லை.(சசிக்கும் தன்னைப்பற்றி மற்றவர்கள் கதைப்பதில் பெருமை).அந்த நேரம் அறிவகத்திற்கு முதல் கணனி கப்பலில்கொண்டுவந்து சேர்த்த பெருமை சசியையே சேரும்.ஆனால் அதில்எக்ஸாம் நேரம் படித்து முடித்த பிரகலாதனும் சசியும் படம் போட்டுப்பார்ப்பதும் செல்வரஞ்சன் திட்டித் திட்டி நோட்சுடன் கொட கன்ரீனுக்குப் போறதும் வேற கதை.ஆனால் செல்வரஞ்சன் நூலகத்திற்கு மட்டும் போறதில்லை,பிளாஸ்பேக்..............

ஒருநாள் நூலகத்தில் படித்துமுடிந்து கொட கன்ரீனில் இருக்கும்பொழுது பூட்டிய நூலகத்திற்கு முன்னால் ஒரே சத்தம். நூலகத்தில் கள்ளன் என்று.போய் பார்த்தால் எங்கட செல்வா தான்.கொஞ்சம் அயர்ந்து நித்திரை கொண்ட செல்வா எழும்பியபோது நூலகம் பூட்டு. லைட்டைப்போட்டு விடிய விடிய படிக்க யோசித்திருப்பான். அதற்குப்பிறகு கன்ரீன் தான். நண்பர்கள்செற்றாக சேர்ந்து கன்ரீன் மேசையில் கால் போட்டுப் படிக்கின்ற சுகமே தனி.இரவு ரவிகடை பிளேன்ரீ குடிச்சிட்டு கொயின்ஸ்பூத்தில ரண்டு பேரைக் கோல் பண்ணிக்குழப்பியிட்டு திரும்ப படிக்கிறதும் ஊருறங்கும்போது கையில் கல்லுடன் (நாய்ப்பயம்) இரவை ரசித்தவாறு ரூமுக்கு திரும்புவதையும் மறக்க முடியுமா.
இதற்குள் தோளில் பெரிய பையுடன் வரும் சுமைதாங்கி ஒருவரையும் இங்கு குறிப்பிட வேண்டும்,பின்னர் சொய்சாபுரவில் என் ரூம்மேட்டான மதுவதனன் தான் அது.அந்தப்பையில் சோப்பிலிருந்து துவாய் வரை எல்லாம் இருக்கும்.கன்ரீன் மேசையிலேயே நித்திரையும் கொள்வான்.ஒருவேளை ரூம் வாடகையை மிச்சப்படுத்துகிறானோ என்று யோசித்தேன்.பின்னர் ரூம்மேட்டான பிறகு தான் தெரிந்தது மது எவ்வளவு செலவாளி என்று.

பரீட்சைக்காலங்களிலும் கூட வெள்ளிதோறும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோயிலுக்குப் போகத்தவறுவதில்லை.பலர் போவது பக்தியால்மட்டுமில்லை கலர் பார்க்கவும் பக்கத்திலிருக்கும் அமிர்தாவில் சில்லிப்பரோட்டா சாப்பிடவும் தான். நண்பர்கள் எல்லாரும் அங்கே ஒன்றுகூடுவது தனி அழகு.
3ம் வருடம் எனக்கு ஏழரைச்சனி போல.எனக்கு ஏழரைச்சனி வந்தது சொய்சாபுர வீட்டு ஓணர்க்கிழவி வடிவில.அதோட முடிவெடுத்தது தான் ஓணரோட இல்லாத வீடு பார்க்க எண்டு.அங்கையிருந்து மீட்டெடுத்தது மதுவும் ராபியும் தான். பிறகு ஒருமாதிரி செமிசைவக்கடைச்சாப்பாடும் 255 பஸ்ஸுமாய் போனது.செமிசைவக்கடைக்கு பவான் வைத்த பெயர் புட்டுக்கடை.ஆனால் அங்க புட்டைத்தவிர மற்றவை தான் பரவாயில்லை.அந்தக்கல்லு மாதிரியான புட்டை பவான் விரும்பிச்சாப்பிட்டது உடம்பு மெலிய.இது தெரியாமல் மருத்துவப்பயிற்சிக்காக வந்திருந்த ராபியின் அண்ணா பவானின் சிபார்சால் கவரப்பட்டு 2 புட்டு மேலதிகமாய் எடுத்து சாப்பிட முடியாமல் எறிந்தது சோகக்கதை.புதுவருடத்தன்று 12 மணியளவில் சொய்சாபுரவில் மைதானத்தில் ஒன்றுகூடி வெடி கொளுத்தியதும் மறக்க முடியாது.

உண்மையில் பிரிந்துபசார விழாவின் போது தான் நண்பர்களின் பிரிவின் வேதனையை உணர்ந்தேன்.காதலில் மட்டுமல்ல நட்பின் பிரிவிலும் கூட ஒரு வித வலி உண்டு. இருந்தும் அந்த நினைவுகளை மீட்பதில் ஒரு சுகமும் இருக்கிறது.

7 ஜி பிளஸ்,அறிவகம் ஆகியன குழுமங்களால் அடித்தளமிடப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட மொறட்டுவை படவுலகம் 2 வருடத்தின் பின் தனது மௌனத்தைக்கலைத்து இருக்கிறது.தமிழ் மாணவர்கள் வைத்திருந்த கமெராக்களை பறித்தும், கலைஞர்களை மிரட்டியும் கொடுமைப்படுத்திய இனவாதம் வெற்றிப்பெருமிததோடு உறங்கு நிலைக்கு சென்றதைத்தொடர்ந்து குறும்பட தயாரிப்பு முயற்சிகள் சூடு பிடித்துள்ளன.

2004/2005 மட்டத்தை சேர்ந்த மணிவண்ணன்,சயந்தன் ஆகியோர் கட்டுப்பெத்தையில் இருந்து அறிவழகன் என்ற குறும்படத்தை 2007 தொடக்கத்தில் இளையோர்க்கான வரவேற்பு விழாவில் வெளியிட்டு புது அத்தியாயம் ஒன்றைதொடக்கி வைத்தனர்.காலம் காலமாக இவ்வாறான நிகழ்வுகளில் நாடகம், வில்லிசை என அரங்கேற்றி வந்த சூழலில் இது வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக காணப்ப்பட்டது.சில மாதங்களின் பின்னர் 2007 ஜுன் இல் இடம்பெற்ற சங்கமம் விழாவில் அறிவகம்,7ஜி பிளஸ் என இரு குழுமங்கள் திரைப்படங்களால் மோதல் நடத்தியதும் அதைத்தொடர்ந்து நடந்த ரசிகர் மன்ற மோதலும் "கம்பசில படம் எடுத்தா ஒரு பந்தாவ மெயின்டெயின் பண்ணலாம்" என்ற கருவை உண்டாக்கி விட்டிருந்தது.அறிவக தயாரிப்பில் இயக்குனர் பவான் எடுத்த கபோதி திரைப்படம் மொறட்டுவை பெடியளில் அத்தியாவசிய பிரச்சினைகளான காதல்,வாளி,ஏமாற்றம்,ஐட்ட படம் போண்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்டு பலத்த வரவேற்ப்பை பெற்றது.நீண்டகாலமாக காதல் தோல்வியில் துவண்டு போய் இருந்த விஞ்ஞானி அலிபாய் "அவளுக்கு நான் யார் எண்டத காட்டுறன்" எண்டு போட்ட பெண்வேடம் பலராலும் பாராட்டப்பட்டதுடன் "அவள விட வடிவான பெட்டையா இருக்கிறானே" என அலசலுக்கும் உட்பட்டது.

கட்டுப்பெத்தையில் இருந்து அறிவழகன்



கபோதி-The Real Undergraduate




வழமையான பல்கலை குறும்படங்கள் ராக்கிங்,காதல்,வாளி போண்ற விடயங்களுக்குள்ளேயே முடங்கிப்போயிருந்தன.அடிதடி,பந்தா,பஞ்சு டயலாக்கு போண்ற மசாலா விடயங்கள் உள்ளடக்க கடினமானவையாக கருதப்பட்டன.இக்கருத்தை உடைத்தெறிவது போல 7ஜி பிளஸ் குழுமத்தால் வெளியிடப்பட்ட படம் தான் "பில்லா 2007". "கதையே இல்லாம படம் எடுத்திருக்குதுகள் பொறுக்கியள்" என கட்டுப்பெத்தை கன்னிகளிடம் சான்றிதழ் வாங்கியபடம்."துலைந்து போன நோட்சை ஒருத்தன் தேடி கண்டு பிடிக்கிறான்".இந்த ஒரு வரிக்குள் அடங்குகிற கதையெல்லாம் ஒரு கதையா என்று பலரின் கடுப்பை கிளறிய படம். வரும் கால கட்டுப்பெத்தை மசாலா பாணி திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழும் என பாராட்டப்பெற்ற இப்படம் சுகாவின் சிந்தனையில் கருக்கொண்டு சேகரன் எனும் பிறவிக்கலைஞனால் உருக்கொள்ள வைக்கப்பட்டது.


பில்லா 2007- The Track Of Dog



இத்திரைப்படத்தின் வீச்சம் எத்தகையது என்பதற்க்கு ஒரு சின்ன உதாரணம்




அறிவக குழுமம் சிதறிய பின்னர் 7ஜி பிளஸ் தன் வல்லமைய நிலைநாட்டவும் பல்கலை வாழ்வில் பிறரால் மறக்கப்பட முடியாத அடைவு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் பிரமாண்டமாக அவதாரம் என்ற படத்தை தயாரிக்கத்தொடங்கியது.இரட்டை வேட சண்டைக்காட்சிகள், Time Slicing கமெராக்கள் என மாதக்கணக்கில் நீண்ட படப்பிடிப்பு சிங்களவர்க்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி கமெராக்களை பறித்து சிலரை சிறையில் அடைத்து வதைத்ததோடு நின்று போயிற்று.தொடர்ந்து வந்த மட்ட மாணவர்கள் குறும்படங்களை தயாரிக்க விரும்பினாலும் சுய பாதுகாப்பு குறித்த அச்சம் அதற்க்கு முயல்வதை தடுத்து வந்தது.2 வருடங்கள் பின்னர் அசிங்களம் தன் கோரப்பசியடங்கி அமைதியானதைத்தொடர்ந்து தமிழ் மாணவர்களின் திரைப்பட ஆக்கங்கள் சார் முயற்சிகள் மீள கிளர்ந்துள்ளன.

அவதாரம்



இந்திலையில் சில வாரங்களுக்கு முன் வெளியான சரவெடி என்ற குறும்படம் புதிய நம்பிக்கையை தருவதாக உள்ளது.அநேக தமிழ் மாணவர்கள் படைப்புக்களை உருவாக்கும் பொழுது பார்வையாராக வரக்கூடிய தமிழ் பெண்களின் முகம் கோணக்கூடாது என்பது குறித்து அதீத அக்கறை செலுத்துவதுண்டு.ஏனெனில் ஏ தர நகைச்சுவைகள், பாலுணர்வை வெளிப்படுத்தும் காட்சிகள் தங்களுக்கு பிடிபதில்லை என காட்டும் முகமாக அருவருப்பான புறக்கணிப்பை தமிழ்ப்பெண்கள் செய்வது வழமை.(இச்செய்கை போலியானது,பிடிக்கிறது எனக்காட்டினால் தன் மீதான பிறர் பார்வை மாறும் என்ற அச்சத்தினால் ஆவது.) பெண்களின் போலி விமர்சனங்களை புறம்தள்ளி படைப்புக்களை உருவாக்குபவர்கள் மீது படுமோசமான அவப்பெயர்களை பரப்புவது கட்டுப்பெத்தைப்பெண்களின் வழமை.விபரீதமான, எதிர்கால கலியாண பேச்சுக்களை குழப்பக்கூடிய ஒரு விடயத்தை பொருட்டாகவே எடுக்காமல் வார்த்தைகளுக்கு தணிக்கை தராமல் துணிவாக சொல்ல வந்ததை காணொளியில் கொண்டு வந்தமைக்காக "சரவெடி" படக்குழுவிற்க்கு ஒரு பெரிய "சல்யூட்".





வெளியே பசு வேடம் போட்டு உள்ளே பாஞ்சாலியாக வாழும் மரதமிழ்ப்பெண்களைப்பற்றி சுவாரசியமாக அடிதடி,நகைச்சுவை,மொக்கை என கலந்து தந்திருக்கிறார்கள்.வசனங்கள் பல தெளிவற்று இருப்பதுவும்,சில அநாவசியமான நீள் காட்சிகள் தவிர ஒரு தரமான கட்டுபெத்தை மசாலாப்படம்.அந்த பர பர எடிடிங் படத்தை எங்கும் தொய்ய விடவில்லை.வெளிப்பாடுகளை வைத்துப்பார்க்கும் போது "சரவெடி" படக்குழுவுக்கு அகச்சக்தி அதிகம்.எனவே பல படப்புக்களை அவர்களிடம் இருந்து இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

SARAVEDI - சரவெடி - Trailer



இப்படம் வெளியாகி சில நாட்களுக்குள்ளாகவே முகநூலில் "DUMMY" என்ற குறும்படத்துக்கான முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தார்கள்.மட்டம் 2006 மாணவர்களில் வேகமும் விவேகமும் கொண்ட திலீபன்.சிறியெயந்தன்,நந்தரூபன் போண்ற தம்பிகள் இப்படைப்போடு சம்பந்தப்பட்டிருப்பதால் தரமான ஒரு வெளியீடாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

குறூம்படங்கள் ஏறத்தாள 20 தொடக்கம் 30 நிமிடங்கள் நீளமானவையாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது மாற்றப்பட்டு வருகின்றது.5 நிமிட கால எல்லைக்குள் ஆழமான விடயம் ஒன்றை தொட்டுச்செல்வதே இன்றைய பாணி.பொறியியல் துறை சார் மாணவர்களின் படைப்புக்களில் எப்போதும் தனித்தன்மை ஒன்று காணப்படுவது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.இன்றளவும் இலங்கையில் நடக்கிற குறும்பட விழாக்களில் வெற்றியீட்டுபவை நத்தை வேகத்தில் நகர்கிற அசிங்களவரின் மொக்கைப்படங்கள் தான். கெட்டிக்காரர்களான மொறட்டுவை கம்பஸ் தம்பிகளால் இத்திரை நாடகங்களை புறம் தள்ளும் அளவுக்கு சிறப்பான படைப்புக்களை உருவாக்கிடுவது ஒன்றும் அத்துணை கடினமான விடயங்கள் அல்ல.கொஞ்சம் சிந்தனையும் கொஞ்சம் முயற்சியும் இருந்தால் மிஞ்சிடலாம்.