.


சங்கமம் புத்தகத்தை உருவாக்குவதற்க்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது.எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக கட்டுக்கட்டாக அச்சிடப்பட்ட புத்தகங்களை அலியப்பா கொண்டு வந்து ஹொஸ்டலில் போட்டதும் ஒரு பிரச்சினை முளைவிட்டது.அதில் இருந்த ஒரு கதையை சிலர் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லாததால் பிரச்சினை பூதாகரமானது.ஹொஸ்டல் வாழ்க்கையில் போட்டுத்தாக்கல்கள் சகஜம்.ஆனால் சிலர் எவ்வளவு தாக்கியும் பக்குவப்படாத கொழும்பர்களாகவே இருந்தார்கள்.நேர்த்தியான திட்டமிடலோடு அந்தப்பக்கம் "2003 மட்டத்துக்கு" பொறுப்பாக நம்மால் அமர்த்தப்பட்டவரின் கட்டளைக்கமைய கிழிக்கப்பட்டு பத்துவதுவிதான ஹொஸ்டலின் பின்பகுதியில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டது.இந்தச்செயல் அந்த இடத்தில் நின்ற 7ஜி குழு பேர்வழிகளாலும் ஒரு வகையான குறுகிய நோக்கத்துக்காக இறுதியில் ஆதரிக்கப்பட்டது.
அச்சமயத்தில் ஒரு பிரதி மட்டும் கிழிபடாமல் தப்ப வைக்கப்பட்டது.அப்பிரதியை புகைப்பட பிரதியாக்கி பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகளாக ஒட்டும் சிலரின் முயற்சியும் சிலரால் தடுக்கப்பட்டது.2.5 வருட இடைவெளிகளுக்கு பின்னர் அந்த பிரதியை இங்கே இணைக்க உதவிகள் புரிந்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
(CLICK TO ENLARGE)




.
ஐட்டப்பட கலெக்சனும் குறுக்கால் வந்தசனியனும்..

குளிர்மையான கந்தப்பளை நகரம்.ஊரெல்லாம் பச்சை போர்த்தியது போல தேயிலைச்செடிகள் பரந்திருந்தன.வீதிகள் எல்லாம் மப்பு போட்டுவிட்டு வம்பளக்கும் கிழடுகளும்,பிகர் பார்க்க அலையும் இளசுகளுமாக கலகலப்பாக இருந்தன.எந்தக்குளிரிலும் முழுநேரமும் திறந்திருக்கும் தண்ணி விற்பனை நிலையம் தான் கந்தப்பளையின் ஹைலைட்.மெல்ல கந்தப்பளையின் அழகை காட்சிப்படுத்திய கமெரா மெதுவாக ஒரு வீட்டை நோக்கி அசைகிறது.வெகு கவனமாக அறையின் காற்றோட்ட வழி வரை வந்து ஓய்வாகிறது.

பின்னணியில் "அட்றா அட்றா நாக்கமுக்க" பாடல் ஒலித்துக்கொண்டிருக்க சௌந்தர் ஒரேஞ்கலர் ஜம்பரும் மஞ்சள்க்கலர் ரி சேட்டும் பச்சைக்கலர் சப்பாத்து போட்டபடி கட்டிலில் முகட்டைப்பார்த்தபடி படுத்திருப்பது தெரிகிறது.இரண்டு நிமிடங்களின் பின் கதவு மெல்லத்திறக்க மணப்பெண் கையில் பால்,பழங்களோடு வருகிறா....அப்படியே வந்து "ஏங்க,எழுந்திருச்சி இந்த பால குடியுங்க" என்க சௌந்தர் ஜோன்கொன்சால் தூக்கத்தால் எழுவது போல செங்குத்தாக எழுகிறான்.மணப்பெண் பால் குவளையை நீட்ட சௌந்தர் வாங்குகிறான்."ராவா அடிச்சா அத்தான்ர வயிறு புண்ணாயிடும் எண்டு பால் மிக்ஸிங் கொண்டாந்திருக்கிறீயா செல்லம்" என்ற படி பெண்ணின் கன்னத்தை கிள்ள அவ வலிதாங்க முடியாமல் கிறீச்சிட்டு கத்துகிறா..அறைக்கு வெளியே இருந்த பழசுகள் ஆளையாள் பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள்.திடீரெண்டு சௌந்தர் ஜம்பரை அவிழ்க்க மணப்பெண் வெட்கத்தில் முகத்தைப்பொத்திக்கொள்கிறா.சௌந்தரோ ஜம்பரை தளர்த்தி மறைத்து வைத்திருந்த "வைட் டயமண்ட்" குவாட்டர் போத்திலை எடுத்து பாலோடு வீதப்படி கலக்கிறான்."ஏலேய் பைட்ஸ் ஒண்டும் கொண்டராலயா" என்று மனுசியை உலுக்க அவவோ சௌந்தர் கைப்பட்ட கூச்சத்தில இன்னும் இறுக்கமா முகத்தை கைகளால் மூடிக்கொள்கிறா.சுற்றிப்பார்த்த சௌந்தரின் கண்களில் தட்டில் இருந்த ஆப்பிள் பழம் தட்டுப்பட சவுண்டோடு கடிபட நல்ல ஒரு பைட்ஸும் கிடைத்து விட்டது.நேரம் ஆக சௌந்தர் கண்களில் போதை மின்னுகிறது.இனி ஒரே ஜில் ஜில் தான் போங்கள் என தூபரூபன் சொல்ல எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.மொழ மொழன்னு யம்மா யம்மா பாட்டைப் போட்டுவிட்டு சௌந்தர் ஆட மணப்பெண் மூலையில் மிரட்சியோடு ஒளிந்து கொள்கிறா.இதற்க்கெ மேலும் இந்தக்கேடு கெட்ட பயலின் பெஸ்ட் நைட் வீடியோவை பார்க்க நாம் ஒருவரும் விரும்பவில்லை.



தூபரூபனை பணிக்க அவன் சௌந்தருடையதை நிறுத்தி விட்டு சிறீஸ்காந்தினுடையதை ஓட்டுகிறான்.சிறிஸ் புது மாப்பிள்ளைக்குரிய ஆர்ப்பாட்டங்களோ அட்டகாசங்களோ எதுவும் இன்றி வழமைபோல அமைதியாக காலை நீர் நிரப்பப்பட்ட வாளி ஒன்றுள் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.தொடர்ந்து நீண்ட நேரம் இருந்து படித்ததால் கதிரை சூடாகி ஆங்காங்கே புகை கிளம்பியபடி இருந்தது."கிறீச்" என்ற ஓசையோடு கதவு திறந்து கொள்ள மணப்பெண் பாலோடு உள்வருகிறாள்.முதல் பார்வையிலேயே பக்கா கிராமத்து பிகர் எண்டது தெட்டென தெரிந்தது.பட்டுப்புடவை சரசரக்க அவள் சிறிஸ் அருகே வந்து லேசாக செருமுகிறாள்.கதவு திறந்த சத்தத்தையே பொருட்படுத்தாமல் காட்டுக்குத்து குத்திக்கொண்டிருந்த சிறிஸ் காந்துக்கு செருமல் ஓசை என்ன பெரிதாகவா பட்டிருக்கும்???.......சிறிஸ் சட்டை செய்யாமல் தொடர்ந்து நோட்சுகளை குத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் அந்தப்பெண் கடுப்பாகி பால்ச்செம்பை சிறிஸ்ஸின் தலையில் கவிழ்க்கப்போக அலறியடித்துக்கொண்டு சிறிஸ்காந் எழுகிறான்.(அறைக்கு வெளியே இருந்த கிழவிகள் "பொண்ணு பையனை நல்லாத்தான் படுத்துறா" என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.)எழுந்த சிறிஸ்காந்த் "இப்பவே வந்தனீர்,தண்ணி வத்திப்போச்சு, உந்த செம்பை ஒருக்கா தாரும்" என்ற படி பாலை கையில் வாங்கி கால் வைத்திருந்த வாளிக்குள் ஊற்றி விட்டு மறுபடி இருந்து படிக்கத்தொடங்குகிறான்.அந்தப்பெண்ணின் முகத்தைப்பார்க்க பரிதாபமாய் இருந்தது.சிறிது நேரம் நின்றவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாக கட்டி இருந்த சேலையை உருவி மின்விசிறியில் கொழுவி விட்டு மறுமுனையை சுருக்காக்கி கழுத்தில் போட்டு கட்டிலில் இருந்து கீழே பாய்ந்து தொங்குகிறாள்.ஐட்டம் பார்ப்பம் எண்டு கிளுகிளுப்பாக உட்கார்ந்திருந்த எமக்கு எல்லாம் இறங்கிப் போய்விட்டிருந்தது.

தூபரூபன் எம்மனநினையை விளங்கிக்கொண்டு "அண்ணைமார் கவலைப்படாதீங்கோ உங்கட மட்டத்தில பிரபலமான மிக நல்ல அண்ணை ஒருத்தர்ட பெஸ்ட் நைட் வீடியோவ போடுறன்,பாருங்கோ,அது ஒரு வேளை நல்ல இருக்கும்" என்ற படி மெனுவினூடு தேடத்தொடங்குகிறான்."யார்டா அந்த பிரபலமானவன்" என்றபடி பலத்த யோசனையில் நானிருக்க அப்பாஸ் காதருகே வந்து "கட்டாயம் சசின்ரயாத்தானிருக்க வேண்டும்" என்று கிசுகிசுத்தான்.7ஜி உறுப்பினர்ல யாரோ ஒருத்தன் தான் என்று எதிர்பார்த்திருக்க பலத்த அதிர்ச்சியை தந்தது திரையில் வந்த உருவம்."இவன் பிரபலமா?" என்று சேகர் கத்தியே விட்டான்.திருநீற்று பட்டை அணிந்து கையில் சிறிய ரக குடை ஒன்றுடன் இருந்த அந்தப்பேர்வழி பிரபலமாகிவிட்டான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.தூபரூபனை சசி முறைக்க "அண்ணா இவர் கரையேறி எண்ட பெயரில புளொக் எழுதுறவர்,நாங்கள் நாலு நல்ல கருத்து கேட்கோணும் எண்டு நினைச்சா இவரத்தான் கூப்பிடுவம்,வாயில இருந்து வாற வார்த்தை அவ்வளவும் முத்து,எழுத்துக்களில் செந்தமிழ்க்கப்பு,பெண்களை ஏறெடுத்தும் பாரா,கம்பசை கலக்கிய சித்து...."என்று கரையேறி புகழ் பாடிக்கொண்டே போனான்.
பிரச்சாரம் எவ்வளவு வலிய ஆயுதம் என்று புரிந்தது."சிங்கத்தோடு படுத்து விளைஞ்சவை தான் சிங்களவர்" எண்ட மட்ட மொக்கையை அவங்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன்னே எழுதி வைத்து விட்டதால் இன்று அவங்கள் ஹீரோ,ஒண்டையும் பதியாததால் நாம் இன்று சீரோ....என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
"சரியடா தம்பி ஓட்டு" என கொஞ்சம் கடினமா சொல்லி விட்டேன்.
"ராக்கிங் ஒழிஞ்சு பல வரிசமாச்சு,சும்மா கம்முன்னு இருங்கண்ணா" என்று உறுக்கியபடி ஓட்டுகிறான் சலனத்தை.

கரையேறி நெற்றியெல்லாம் திருநீறு பூசியபடி "கந்தஜட்டிகவசம்" படித்த படி கட்டிலில் வேட்டி சால்வையோடு உட்கார்ந்து இருக்கிறார்.மணப்பெண் கதவை திறக்க கரையேறி கவசத்தை கவசமாக்கி முகத்தை மூடிக்கொள்கிறார்.

பெண்-"ஏங்க உங்களுக்கு வேர்த்து கொட்டுறது"
கரையேறி-"எனக்கு தெரியலை"
பெண்-"ஏங்க கையெல்லாம் படபடன்னு நடுங்கிறது?"
கரையேறி-"எனக்கு தெரியலை"
பெண்-"என் மேல் உங்களுக்கு அன்பு இல்லையா?"
கரையேறி-"அன்பே சிவம்,சிவமே இந்தக் கரையேறி"
பெண்-"ஏங்க அநியாயத்துக்கு நல்லவரா நடிக்கிறீங்க"
கரையேறி-"அது பிறப்பில வந்தது"
பெண்- (கடுப்பாகி FBஐ திறந்து சில பெண்களின் FACE BOOK PROFILE போட்டோக்களைக்காட்டுகிறாள்) "இவங்கள் எல்லாம் என்னோட நெருங்கிய நண்பிகள்,உங்கள பற்றி விலாவாரியா சொல்லி இருக்கிறார்கள்.வழமையான சத்தியவான் வேடம் என்னிடம் பலிக்காது"
கரையேறி-"தென்னாடுடைய சிவனே போற்றி,சத்தியமெவ ஜெய,நெல்சன் மண்டேலாக்கா பச்சா"

என பலவாறு சொல்லியபடி வெறித்தனமாக பெண் மீது பாய்கிறார். 30 நிமிடங்கள் நடந்த அந்த வன்முறையை பார்த்து விறைத்துப்போய் உட்கார்திருந்தோம்.தூபரூபன் சிறிதளவு நீரை முகத்தில்தெளித்து நிஜ உலகுக்கு கொண்டு வருகிறான். ஆசுவாசப்படுத்த எல்லோரும் பல்கனிக்கு ஓடி வந்து பொல்கொடைக்காற்றை நாசிகளுள் ஆழமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.கீழே யாரோ விநோதமான ஒலியில் கத்துவது கேட்கவே திருபினோம்.ஒரு பருத்த கிழவன்,அருகே அவனை விட பருத்த பன்னியொப்ப தோற்றமுடைய பெண்.தூபரூபன் "அண்ணா ஒருக்கா என்ணெண்டு பார்த்துட்டு வாறன்" என கீழே ஓடி அரை நிமிடத்தில் மீள மூச்சிரைக்க ஓடி வந்தான்.

"அண்ணாமார் எல்லாரும் ஓடித்தப்புங்கோ,உவள் ஒரு விசரி,தனக்கு பின்னால வந்தவை,கையை பிடிச்சவை,கால தொட்டவை எண்டு கம்பசில இருக்கிற எல்லா பெடியள் மேலயும் கேஸ் போட்டவள்,இப்ப புதுசா நீங்கள் வந்ததை கண்டுட்டு தகப்பனோட கேஸ் போட வந்திருக்கிறாள்.ஓடுங்கோ,ஓடித்தப்புங்கோ"

"தம்பி பொறு விசரி எண்டால் அப்பன்காரனோட சமாதானமா
பேசிப்பார்க்க ஏலாதோ?"
நான் வினவ தூபரூபன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.

"அண்ணா அவன் அவளை விட நூறு மடங்கு விசரன்,அவனுக்கு கிட்ட போனாலே கொலைக்கேஸ் எண்டு போட்டுடுவான்.அவள் வேற உங்கட பேரத்தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு நிற்கிறாள்"

என தூபரூபன் சொல்லி முடிக்க முன் ஹொஸ்டலில் இருந்து ஸ்டோன் பென்ஞ் வரை ஓடி வந்துவிட்டோம். "அடோ,பறதெமிழ,கொகேத யன்னே" என ஒரு குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்க நிலாந்தி றிப்பீட் எக்சாம் கேள்விப்பேப்பரோடு தலைவிரி கோலமாக ஓடி வருவது தெரிந்தது.வேகமெடுத்து ஓடி வாசலுக்கு கிட்ட வர டயந்தன் வருகிறான்.நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் எம் காதுகளில் வெடிக்கிறான்.என் காதில் வெடிக்க தாங்க முடியா வேதனை.அலறிக்கொண்டு எழுகிறேன்.வெளியே பனி கொட்டிக்கொண்டிருந்தது.