வேலியால போன அரசியல் ஓணான மடிக்க பிடிச்சு விட்டாபிறகு வடிவேல் காமெடியள் வாறதும் ஓய்ஞ்சிட்டுது.தன்ர பாட்டில சிரிச்சு மகிழ உறுதுணையா இருந்தவனும் இப்படி ஆயிட்டானே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தான் மகிந்த மாமா வந்தது "அபி ஆட்சி இருக்கும் வரைக்கும் எவர் கிறீன் காமெடிதாங் மல்லி" என்று சொல்லி முடிச்சு எருமையில ஏறிப்போறமாதிரி கனவு வந்தது.திடுக்கிட்டு எழும்பி நித்திரை வராம இணையத்த தட்டேக்க "கிறிஸ் பூதம் தாக்கி பெண் படுகாயம்" எண்டு செய்தி கண்ணில பட பகிடி விடப்போறன் எண்டு சொல்லிப்போட்டு வதை பண்ணுறாரே எண்டு மனதில் விழுந்த எண்ணம் சில நாளின் பின் மாறிப்போனது.காடு அமைதியா இருந்தா சிங்கத்துக்கு பிடிக்காது.நாலைஞ்சு மிருகத்த போட்டுத்தள்ளி ரணகளத்த கிளப்பிட்டு படுத்தாத்தான் அதுக்கு தூக்கம் வரும்.சண்டைபிடிக்கவும் ஆள் இல்லை,பூச்சியள பிடிச்சு போடுவமெண்டா அதுக்கும் வெளிநாட்டுக்காரன் விடுறாங்கள் இல்லை.அண்ணனும் தம்பியுமா கித்துள் கள்ல பருகிட்டு மல்லாக்க இருந்து யோசிக்கேக்க இந்த பக்கா ஐடியா மனதில் பட்டிருகுமோ?.





ஆனா என்னைப்பொறுத்த வரை "ஆட்களுக்கு கிறிஸ் பூசி கருப்பாக்கி மிரட்டுவது" என்ற ஐடியா செம மொக்கையாகவே ஆரம்பத்தில் பட்டது.ஆனால் கிரிஸ் பூத வில்லன்கள் பெண்களை சீண்ட ஆண்கள் ஹீரோவாகி விரட்ட,பொலீஸ் புலனாய,இராணுவம் தேடுதல் வேட்டை நடத்த, பாராளுமன்றத்தில் பரபரப்பு விவாதம் போக......... சூடு கிளம்பி எல்லாமாக சேர்ந்து ஒரு ஹாலிவூட் சினிமா ரேஞ்சுக்கு தூள் கிளப்புகிறது.மூலக்கதை மொக்கையா இருந்தாலும் திரைக்கதை,காட்சியமைப்பு பக்காவாக இருந்தா படம் பிய்த்துக்கொண்டு போகும் என்பதற்க்கு நல்ல ஒரு உதாரணமும் ஆகிவிட்டது.அத்தோடு கிரிஸ் பூதங்கள் விவகாரத்தில் பலர் கோபப்பட்டு இருந்தாலும் அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருப்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.பூத வேசம் போட்டவர்கள்,அவர்களை விரட்ட காவல் இருக்கும் விடலைப்பெடியள் என ஒரு சுறுசுறுப்பான சமுதாயம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.இது நிச்சயமாக என்றோ ஒரு நாள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி சமைக்கும்.





இந்த பூத விவகாரம் நாட்டுசனத்துக்கு வேணுமெண்டா புதுசா இருக்கலாம்.ஆனா கட்டுப்பெத்தை பெடியளுக்கு இது ரொம்ப பழசு.ரஜீந்திர தாசுக்கு ரொம்ப ரொம்ப பழசு.அத்துக்கொறளை கிழவன் வீட்டில படுத்திருக்கேக்க சுவரால குதிச்சு ரஜீந்திரதாசின்ர வண்டிய பிறாண்டிப்போட்டு ஓடின பூதம் பற்றி அவனட்ட கேட்டா கதை கதையா சொல்லுவான்.அச்சு சுனாமியில அள்ளுபட்டுப்போனான் எண்டு யாரோவிட்ட கதைய நம்பின செழியன் மறுநாள் அச்சு நேரில் வர ஓடின ஓட்டம் போல ஒருத்தரும் கிறிஸ் பூததை கண்டு ஓடியிருக்க மாட்டார்கள்.கள்ள இளனி பறிக்க உயரமான தென்னையில் ஏறி சறுக்கி மூஞ்சி தவிர முன்பக்கமெல்லாம் தோல் உரிபட்ட அலியப்பா கத்தரி கலரில மருந்து பூசிக்கொண்டு கொஸ்டல்ல திரிஞ்சத பார்த்திருந்தா கிறிஸ் பூதங்களுக்கே அடிவயிற்றைக்கலக்கும்.இதைவிட டேஞ்சர் பூதம்,நூலக பூதம்,குத்துப்பூதம்,கதிரைப்பூதம்,கெமிக்கல் பூதம் என பல வகைகள் பார்த்தவர் நாங்கள்.




பூதம் எண்டா இப்பிடி இருக்கோணும்.......



குட்டிக்கதை

2007 ஆமாண்டின் இறுதிப்பகுதி அது.எமது விடுதியின் அறைக்கதவு சௌந்தரின் தாக்குதலுக்கு இலக்காகி நெறுங்கி விட்டிருந்தது.ரஜித் இனது அறைக்கதவில் உதைந்து அது கடுமையாக ஆடிக்கொண்டிருந்தது.மர்ம மனிதன் நெறுக்கி விட்டதாக விடுதி பொறுப்பாளரிடம் முறைப்பாடு கொடுத்து மீள திருத்தி தரும்படி கேட்டிருந்தோம்.எமக்கு கீழ் மாடியில் இருந்த பவான் இவை எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தார்.ஒரு நாள் வெறியில் வந்த சிங்களபெடியன் தனது நண்பனின் அறையென்று பவானின் அறைக்கதவை திறக்க முயல அது திறபடவில்லை.ஆனால் கதவு தாளிடப்படாமலே இருந்தது.கடும் வெறியிலும் தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்டாக எண்ணிக்கொண்டானோ தெரியவில்லை....வெறும் கையாலேயே அடித்து கதவில் ஒரு ஓட்டையை போட்டு அதனூடு கையை விட்டு உள்பக்கமாக திறந்து உள்ளே பாய்ந்து விட்டான்.இத்துணைக்கும் அறையுள் இருந்த பவான் கலககாரங்கள் வாறாங்கள் என்று எண்ணி பல்கனிக்கு ஓடிவிட்டான்.கோகுலனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.பவானிடம் இருக்கும் நெறுக்கு தீனிகளை சாப்பிட வந்த அப்பாஸ் கதிகலங்கி போய் நின்றான்.சத்தம் கேட்டு ஓடி வந்த எமக்கு அந்த வாரம் முழுக்க சிரிப்பு சிரிப்பா வந்தது.பிறகு அதுவும் மர்ம மனிதன் தாக்குதலாக விடுதி பொறுப்பாளரிடம் பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து நடக்கும் மர்ம மனிதன் ஊடுருவலை தடுக்க எண்ணிய வேர்டன் மாத்தயா பிரதான கதவை கடின பலகையில் போட்டது தான் செம காமெடி.இத்தனைக்கும் அந்த பிரதான மர்மமனிதன் எமது அறைக்குள் பெக்கை போட்டுவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தார்.


மர்ம மனிதன் தாக்குதலுக்குள்ளான கிண்ணியா இளைஞர் பேட்டி - காணொளி






பிற் குறிப்பு- இந்த பதிவை போட்டதன் நோக்கம் இதுதான்-


பெண் கிறிஸ் பூதபிகருகள் உங்கள் ஏரியாவில் நடமாடினால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.ஏனென்றால் தற்போதைய நிலவரப்படி ....... ஐ விட பூதங்களே மேல்.

"எனக்கொரு பூதம் வேணும்மடா!"

"செம கிறிஸ் பூதமா வேணும்மடா!"






காதல்க்கிறுக்கன் நுண்ணிய புலன்களைக்கொண்டவன்.வெளுத்தெல்லாம் பாலென்று நம்பும் சாதாரண தமிழன் போலவில்லாது "மச்சான் இவன் ஒரு மார்க்கமனான ஆள், கவனமா இருக்கோணும்" என்று அடிக்கடி மங்கோ தொடர்பாக கருத்து தெரிவிப்பவன்.நாயகன் முரட்டு துணிச்சல்காரன்.இரண்டுபேருள்ளும் எனது மனதில் உருவான சந்தேகம் ஏற்கனவே முளைவிட்டிருந்ததால் கணநேரத்தில் நடுஇரவை அண்மித்த பொழுதுகளின் காரிருளை போர்வையாக்கி மங்கோ அறையுள் நடப்பவற்றை அவதானிக்கக்கூடிய சமீபத்தில் நிலையெடுத்துவிட்டிருந்தார்கள்.உள்ளே போன உரையாடல்களை செவிமடுத்த இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.

பின்னிரவில் அறைக்கு திரும்பிய மங்கோவின் அறையில் வதியும் சீனியர் ஒருவருக்கு நடந்த சம்பவம்,அதற்கான காரணம் என்பன திரிபில்லாமல் மெலிந்த குரலில் சொல்லப்பட்டாலும் இரவின் நிசப்தம் சுவர்களை தாண்டி வெளியே இருந்த காதல்கிறுக்கன் பாம்பு காது வரையும் அவற்றி எடுத்து வந்துவிட்டிருந்தது.அடித்தவர்கள் சும்மா அடிக்கவில்லை "எங்களோட தங்கச்சியோட சொறிவியா?, சொறிவியா?" என்று கேட்டு கேட்டுத்தான் மொங்கி இருக்கிறார்கள்.அதை வெளியில் சொன்னால் கேவலமாகிவிடும் என்று நினைத்த மங்கோ பாமன் கடைப்பன்னியின் ஆட்கள் சுகந்தமாறனை தேடிவந்த இடத்தில் தனக்கு அடித்து விட்டதாக கதை ஒன்றை வெகுநேர்த்தியாக பின்னியிருக்கிறார் என்பதை ஊகித்துக்கொள்ள புலனாய்வு அறிவொன்றும் தேவையில்லைதானே?.அது இளம்செழியனாலேயே முடியக்கூடியது.


நமது உள்வீட்டு விவகாரம் கொழும்பு அரைடமில்சுக்கு தெரிந்தால் கேவலமாகிவிடும் என முடிவெடுத்த நாம் சாத்வீக வழியில் மங்கோவிடம் விளக்கம் கேட்க முடிவெடுத்தோம்.காதல்கிறுக்கனும், குடிகாரனும் மறுநாள் விரிவுரை முடிந்து வந்த பொழுதுகளில் விடயத்தை மெதுவாக போட மங்கோ முதலில் தடுமாறி பின்னர் வன்சொற்களால் தாக்கத்தொடங்கிவிட்டார்.சிலநாட்களின் பின்னர் மங்கோவிடம் நேரடியாகவே பேசிவிடுவது என்று முடிவெடுத்தேன்.எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக கருதிக்கொண்டிருந்தவனிடம் எப்படி இதைக்கேட்பது என்பது தொடர்பில் எனக்குள் மிகுந்த தயக்கம் இருந்ததால் சில நாள் தாமதமாயிற்று.

"உனக்கு என்ன விசரா?,உன்னால தான் நான் அடிவாங்கினான்,ஏன் இப்பிடி கதைய மாத்துறாய்?" என்று சொன்னவனிடம் இறுதியாக கேட்டேன்.
"எங்களோட தங்கச்சியோட சேட்டை விடாதே" எண்டு அடிச்சவங்கள் சிங்களத்தில் கேட்டதாக நீ "பிர----" என்கிற சீனியரிடம் செல்லவில்லையா?"

"இல்லை.அப்படி சொல்லேலை" மங்கோ அழுத்தமாக சாதித்தான்.கழுத்தறுப்பு,நம்பிக்கைத்துரோகம்,நயவஞ்சகம்,ஆப்படிப்பு,குழிபறிப்பு எனபனவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக மங்கோ தெரிந்தான்.மங்கோ ஒரு வெள்ளிதவறாமல் கோயிலுக்கு செல்வான்.தினமும் கடவுளை வழிபடுவான்.துளிகூட கடவுள் நம்பிக்கையில்லாத நான் கூட அவனின் நம்பிக்கை தூய்மையானது என மதிப்பளித்திருந்தேன்."ஓவரா சாமி கும்பிட கோயிலுக்கு போறவனை ஒரு காலமும் நம்பக்கூடாது" என அலியப்பா சொன்னது சரியென்று பட்டது.அத்தோடு அவனோடு பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் தொற்றிக்கொண்ட குறும்படங்களை உருவாக்கும் ஆர்வம் காரணமாக கமெராவுடன் 7ஜி குழுமத்தோடு அலைந்ததில் ஏறக்குறைய இந்த விடயம் முற்றாகவே மனதைவிட்டு அகன்று போயிருந்தது.இறுதி வருடம் முதலாவது செமிஸ்டர் லீவுக்கு நுவரெலியாக்காடுகளுக்குள் சூட்டிங் என்று அலைந்துவிட்டு இறுதி செமிஸ்டருக்காக திரும்பிய போது வேலைநிறுத்தம் வந்து பல்கலை மூடப்பட்டது.விடுதிகளை விட்டு வெளியேறுமாறு நோட்டிஸ் ஒட்டிவிட்டார்கள்.எல்லோரும் போய்விட யாழ்மாணவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டோம்.முகமாலையில் தொடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலை அடுத்து பாதை மூடப்பட்டதால் எமக்கு வீடுகளுக்கு செல்ல வழியேதும் இருக்கவில்லை.பல்கலைக்கு வெளியே அறைகளை அவசரமாய் பார்த்து எங்களை திணித்துக்கொண்டேம்.ஏரியாவே வெறிச்சோடிப்போய் இருந்தது.பொழுது போவது மிகக்கடினமாக இருக்கவே வவுனியாவில் இருந்த நாயகனின் சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தோம்.சிரிப்பும் கும்மாளமுமாய் சிலநாட்கள் நகரமுதல் அந்த சம்பவம் நடந்தது.எமக்கு வெறும் ஆறே மீற்றர் தொலைவில் கிளைமோர் வெடித்தது.சிதறிய உருக்கு கோளங்கள் பெரும்பகுதியை அரணாக நின்ற வாகனம் ஒன்று தடுத்துக்கொண்டடலும் அதையும் மீறி இரு கோளங்கள் மங்கோவை தாக்கின.எல்லோரும் துடித்துப்போனோம்.சம்பவ இடத்தில் நின்ற அந்நியர்கள் நாமே என்றதால் பிரச்சினை பேயாய் விரட்டியது.நாயகனின் சகோதரியிடம் அவனை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு கொழும்புக்கு மாறினோம்.மொறட்டுவையில் தங்க இடமில்லாது தனித்து நின்றபோது கண்டுகொள்ளாது வீடுகளுக்கு ஓடிய குறிப்பிட்ட சில வவுனியா சகமட்ட பேர்வழிகள் விடயமறிந்து வைத்தியசாலைக்கு சென்று ஓடியதற்காக எங்களை தூற்றினார்கள்.அங்கே மங்கோவை சொந்த சகோதரனைப்போல கவனித்துக்கொண்டிருந்த நாயகனின் சகோதரியின் மனம் நோகும்படி மங்கோ வார்த்தைகளை வெளிவிடும்படியாக தூண்டிவிட்டார்கள்.மீள கட்டுப்பெத்தைக்கும் வந்து ஊளையிட்டார்கள்.

நடந்த சம்பவம் வழக்கிட்ட காரிகையின் தந்தைக்கு மட்டத்தின் வீணை மூலமாக போனது.அதே நேரம் வ.இ.காரிகையும் மீள பல்க்லையில் இணைந்து கொள்வதற்கான காலமும் நெருங்கிக்கொண்டிருந்தது.வவுனியாவில் நாங்கள் சிக்கிக்கொண்ட விடயம் கனதியானது என்பதை ஊகித்த அவன் ஆழமாக வலைபின்ன தொடங்கினான்.மகளின் மனவியாதியை உண்மை என நம்பி அதற்காக அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கையோடு விளையாடப்போகிறோம் என்பது அவனுக்கு தெரிந்திருகவில்லை.

பல்கலைகழக தலைமை கவுன்சிலரான வணிகதுங்க என்ற அரைலூசன் முன்பு வழக்கிட்ட காரிகையோடு வந்தமர்ந்த தகப்பன்காரன் "எனது மகளுக்கு மீளவும் பிரச்சினை வரக்கூடாது" என்று கேட்டுக்கொள்ள வணிகதுங்கவின் கரங்கள் மேசையில் இருந்த சங்கம புத்தகத்தை நோக்கி நீண்டன.

......................................................(வருவாள் வ.இ.கா)


************************************

புலனாய்வுக்குறிப்புக்கள்-

மங்கோவுக்கு அடிவிழுந்ததன் உண்மையான காரணத்தை நீண்டகாலமாக தேடிக்கொண்டிருதேன்.பல்கலை இறுதி நாட்களில் அதற்கான விடை சிக்கியது.வழக்கிட்ட காரிகைக்கு ஒரு சகோதரன் இருந்தான்.குரே பார்க்கில் இருக்கும் சிங்கள பெடியளோடு பழகும் வாய்ப்பை பெற்ற அவன் தமக்கையின் கல்வியை சிலர் குழப்பிவிட்டதாக கதையோடு கதையாக செண்டெமெண்ட் ரசம் கலந்து போட்டிருக்கிறான்.ஆத்திரப்பட்ட சிங்கள பெடியளிடம் மங்கோ ஒவ்வொரு வெள்ளியும் கோவிலுக்கு வருவான் என்ற விடயத்தை சொல்லி அழைத்துப்போய் எட்டநின்று ஆளைக்காட்டிவிட்டு நழுவியிருக்கிறான்.அடிக்க வந்தவர்கள் மீது கெமிக்கல் சசி தாக்குதலை நடத்த ஓரிரு அடிகளோடு மங்கோ தப்பிவிட்டான்.அடித்தவர்களின் முதலாவது இலக்கு மங்கோ தான்.இரண்டாவதாக நான் இருந்திருக்கலாம்(வழக்கிட்ட காரிகை தனது படிப்பை குழப்பியவனாக என்னையும் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில்).அப்படியெனில் "சுகந்தமாற எங்கே" என்று கேட்டது உண்மையாக இருந்திருக்கலாம்.ஆனால் என்னை அடிக்கவந்தவர்கள் தன்னை அடித்துவிட்டதாக மங்கோ குறிப்பிட்டதுதான் தவறாகிவிட்டது.பின்னாளில் வழக்கிட்டகாரிகையின் சகோதரன் செய்ததும் நியாயமாகவே பட்டது.எனக்கு ஒரு அக்கா இருந்து இவ்வாறான குற்றச்சாட்டை ஒருவன் மீது தெரிவிக்கும்பட்சத்தில் நானும் அவன் செய்ததைத்தான் செய்திருப்பேன்.