வேலை முடிந்து வீடு செல்லும் சனக்கூட்டத்தை சுமக்க முடியாமல் திணறியபடி வந்த டொக்லாண்ட் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள் நேராக நடந்து வந்து கைகளை நீட்டிய போது கண்களையே நம்ப முடியாமல் இருந்தது.வழமையான வடக்கு இந்திய சாயலில் இருந்த பவல்நாத்துக்கு பக்கத்தில் பிரகாசமான ஆலிவ் நிற சருமம் போர்த்தி மென்பச்சைக்கண்களோடு நின்ற பெண் பாலிவூட் நடிகைகளை ஒத்தவளாய் இருந்தாள். அங்கே நிலவிய சில நொடி மௌனத்தை அவள்தான் முதலில் கலைத்தாள்.

"ஹாய்! மலரவன்,ஐ ஆம் சஞ்சானா!,நீங்க போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் ஸ்மார்ட்டா இருக்கிறீங்க"

"சஞ்சானா! பெயர் கூட அழகாய் இருக்கிறது உங்களைப்போலவே.நீங்க மட்டும் அந்த விளம்பரத்தில போட்டோவ போட்டிருந்தா டேவிட் கமரூனே விண்ணப்பம் போட்டிருப்பார் "

பெரிய ஜோக் கேட்டவன் போல பவல்நாத் தனது  சிரிப்பை இங்கேயும் அவிழ்த்துவிட்டான்.சஞ்சானா மெலிதாக புன்னகைக்கையில் கன்னத்தில் வலதுபக்கமாக வந்து ஓடிய குழி அவளுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாய்ப்பட்டது.

"96 விண்ணப்பம் கிடைச்சது.நிறைய வெள்ளை,கருப்பு இன ஆட்கள்,வந்த தென்னாசியர்களில் இளமையா,ஆரோக்கியமா தெரிஞ்சது நீங்க மட்டும் தான்.நீங்க படித்தவராயும் இருக்கிறீர்கள்.எங்களுக்கு ஒரு புத்திசாலி குழந்தையை தர உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்".சஞ்சானா தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக்கொண்டு போனாள்.அதில் பொய்மை கலந்திருப்பதாக அறிவுக்கு தென்படாததற்கு அவளது ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் காரணமாய்  இருக்கலாம் என மலரவன் எண்ணிக்கொண்டான்.அறிமுக உரையாடலை முடித்துக்கொண்டு வீடு நோக்கி பயணிக்கும் வழியில் பவல் நாத் எதோவெல்லாம் சொல்லிக்கொண்டுவந்தான்.டொக்லாண்டை வடிவமைத்த விதம் தொடர்பில் பிரித்தானிய அரசை வேறு கடிந்து கொண்டான்.பிடிக்காது விட்டால் நாற்றமடிக்கும் இந்தியாவுக்கு போக வேண்டியது தானே? என்று மலரவன் கேட்க நினைத்தாலும் சஞ்சானாவுக்காக அடக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒரு மாடி வீடுகள் நிரம்பிய லண்டனில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் நிரம்பிய ஒரே இடம் டொக் லாண்ட் எனப்படும் படகுத்துறைத்தேசம் தான்.வளைத்து வளைத்து வெட்டப்பட்ட கால்வாய்களும் தரித்து நிற்கும் படகுகளுமாய் எழில் கோலம் பூண்ட இடமொண்றில் அவர்களது குடியிருப்பு இருந்தது.மார்கழியின் குளிரை விரட்ட வெப்பமாக்கிகளை உச்சத்தில் இயக்கி விட்டு இருவரும் உள்ளே போனார்கள்.வரவேற்பறை அலங்கார பொருட்களின் பெறுமதி இருவரும் சேர்ந்து ஐந்து இலக்க சம்பளம் வாங்குபவர்களோ என எண்ண வைத்தது.சுவரில் இறுக்கமான ஆடைகள் அணிந்த சஞ்சானாவை பின்புறமாக இருந்து கட்டியணைத்தபடி பவல்நாத் சிரித்துக்கொண்டிருந்தான்.அணைப்பில் பிதுங்கிய பாகங்களில் கண்கள் மொய்த்தன."அது,கலியாணம் ஆன புதிதில் எடுத்தது,அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன்" மெல்லிய நைட்டிக்கு மாறிவிட்டிருந்த சஞ்சானா குறுக்கிட்டாள்.குளிர்ந்து போயிருந்த வீடு மிதமான சூட்டுக்கு மாறியிருந்த போது வொட்காவில் அரைப்பகுதி காலியாகிவிட்டிருந்தது.சஞ்சானா சுயநினைவுக்கும் போதைக்கும் இடையில் ஊசலாடியபடி இருந்தாள்.மோகனமாய் வேறு அடிக்கடி புன்னகைத்தாள்.பவல் மெடாக்குடிகாரனாக இருக்க வேண்டும்.பச்சை வொட்காவை எதுவும் கலக்காமல் வார்த்து வார்த்து முகச்சுழிப்பு இல்லாமல் பருகும் விதத்திலேயே தெரிந்தது."நேரம் ஆகிறது சஞ்சானா நீ இவரை அழைத்துச்செல்,நான் இங்கேயே தொந்தரவு படுத்தாமல் இருந்துவிடுகிறேன்" என்றபடி இயர் போனை செருகிய பவல் நாத் மேலுமொரு குவளையை வார்த்துக்கொண்டான்.


சஞ்சானா கையை பிடித்துக்கொண்டு முன்னே செல்ல மலரவன் பின் தொடர்ந்தான்.அறைக்கு நுழைந்ததுமே மேலாடைகளுக்கு விடுதலை கொடுத்தாவளின் பாகங்கள் மிகைப்பெருத்து இருந்தன.

"சிலிக்கன் இம்பிளான்ற் இல்லைத்தானே சஞ்சானா?"

ஏதாவது பேச வேண்டும்,அத்தோடு பதற்றத்தையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மலரவன் கேட்டான்.

"சந்தேகம் என்றால் ஆராய்ந்து பார்க்கலாமே?"

 கலகலவென சிரித்தபடி நெருங்கியவளை நடுங்கும் விரல்களால் மெதுவாக அழுத்த கச்சை கழன்று வீழ்ந்தது."கழற்றியது நானில்லை ஆதலால் அவளாகத்தான் கழற்றியிருக்க வேண்டும்" என சூழ்நிலைக்கு தகாமல் மலரவன் புலனாய்ந்து முடிக்க முதல் அரை நிர்வாணம் ஆகியிருந்தான்.

"ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுவீர்களா?"

 விரல்களால் மார்பில் கோடு வரைந்தபடி கேட்டாள்.

"ம்"

"கீழேயும் நானே அவிழ்ப்பது ஆண்பிள்ளைக்கு அழகல்ல"

குரலில் ஏளனம் தொனித்தது.

"நானே செய்கிறேன்"

லேசாக சதை போட்ட அவளது இடையில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் பெல்லி பட்டன் குனிந்து ஆடைகளையும் போது கண்ணில் தட்டுப்பட கண நேரம் தரித்தான்.ரோம நிர்வாணம் செய்த சருமம் அத்துணை திருத்தமாக பிரகாசமாய் ஒளிர்ந்து மஞ்சள் அறை வெளிச்சத்தில் கிளர்ச்சியூட்டியது.

இப்போது மலரவன் நிமிர்ந்து நிற்க மார்போடு வழுக்கியபடி கீழே இறங்கிய சஞ்சானா மெதுவாக இயங்கத்தொடங்கினாள்.

                             **************************************************

ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீட்டுக்கு சற்றுத்தொலைவாக காரை தரித்துவிட்டு பலவிதமான எண்ணவோட்டங்களோடு உட்கார்ந்திருந்த மாறனும் கமல்சும் உள்ளேயிருந்து வீதிக்கு வாய்நிறைய புன்னகையோடு வந்தவனைக்கண்டு ஆசுவாசப்பட்டார்கள்.

" என்ன மச்சான் வெட்டிட்டு விட்டுட்டாங்களோ?"

 கமல்ஸ் முதலாவது கேள்வியை கொளுத்திப்போட்டான்.

"வீடியோ போட்டோ ஒண்டிலயும் சிக்கேலை தானே?" மாறன் தொடர்ந்தான்.

"நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்கேலை,செம பிகர் மச்சான்.நல்லா கொம்பனி தந்தாள்.இன்னும் ஒரு வருசத்துக்கு தாங்கும்"

அடுத்ததாக கடந்து போன இரண்டு மணித்தியாலங்களுக்கும் அங்கே நடந்தது பற்றி இருவரும் மாற்றி மாற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே மலரவனுக்கு கடந்து போயிற்று.


இருவரிடமும் விடை பெற்று அறைக்கு வந்து நீண்ட வெந்நீர் குளியல் போட்டு உட்கார்ந்த மலரவன் முகநூலை தட்ட தொடங்கினான்."பவல் நாத்" என்று தேட ஆயிரக்கணக்கில் வந்தார்கள்."சஞ்சானா பவல்நாத்" என்று பார்க்க அழகாய் வந்து நின்றாள்.முகப்பு பக்க "Married to" தொடுப்பில் பவல் சிக்கினான்.அவனது திறந்த மனது போலவே சுவரும் திறந்து கிடந்தது.இருபது நிமிடங்களுக்கு முன் போடப்பட்டிருந்த நிலைக்குறிப்பு "பரவசத்தின் உச்சியிலிருந்து இபோது தான் இறங்கிவந்தேன்.மனைவிக்கு நன்றி :) என்றிருக்க சஞ்சானா "லைக்" போட்டிருந்தாள்.

தற்போதைய நிலவரம்-07




சிங்கபுரி நண்பர்கள் பலரும் தற்போது வளர்ச்சியடைந்து உறுதியான நிலைக்கு வந்துள்ளார்கள்.ஆரம்ப காலத்த்தில் இருந்ததைப்போலல்லாது நிறைவான சம்பளம்,வேலையிடத்தில் உயர்வான பதவி என வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.பதவி உயர்வுகள் தந்த ஊக்கம் பலரையும் பப்பாவில் ஏற்றி விட்டுள்ளதையும் காணமுடிகிறது.அதில் ஒரு விளைவுதான் ஒரு கேள்வியை கேட்டால் உடனேயே பதில் சொல்லாமல் சிறிது நேரம் எடுத்து பதில் சொல்வது.உயர்முகாமைத்துவ உத்திகளில் மிகப்பழமையான கடந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த முறையை சீனத்து முதலாளிமாரிடமிருந்து சிலர் கற்றுக்கொண்டு நண்பர்களிடையே நடைமுறைப்படுத்த முயல்வதை காணும் போது சிரிப்பு மேலிடுகிறது.அடிப்படையில் ஒருவர் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்வது கேட்பவர் பதவி நிலையில் தாழ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவருள் ஒரு விதமான பதற்றத்தையும்,பலவிதமான எதிர்மறை சிந்தனைகளையும் உருவாக்கும்.இந்நேரம் "கேள்வி ஏன் கேட்கப்படுகிறது?,இதற்கு பதில் சொல்வதான் என்ன இலாபம்? எப்படியான பதிலை சொல்லவேண்டும்?" போண்ற உப கேள்விகளை விடையளிக்க வேண்டியவர் உள்ளே உருவாக்கி தீர்த்துக்கொள்கிறார்.வேகமான முடிவுகளை வழங்கவல்ல முகாமைத்துவமே இந்நாளில் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வகையான செயல்பாடுகளை நண்பர்கள் மத்தியிலும் மேற்கொள்வது "அரைக்கிறுக்கன்,மந்த புத்தி,பென்ரியம் -01 " போண்ற பட்டப்பெயர்களை பெற உதவுமே ஒழிய அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ள எந்த வகையிலும் உதவாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

திருமணம் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட குயுக்தியான நடைமுறை.பிடித்த பெண்ணோடு சேரவும் அவளை கூடவே வைத்திருக்கவும் நிறைய நேரத்தை செலவிட்டு போராட்டத்தை சந்தித்த ஆதி மனிதன் திருமணம் என்ற நடைமுறையை உருவாக்கினான்.ஆற்றல் மிக்க,பலமான மனிதர்கள் மட்டுமே செழிப்பான பெண்களை அடைய முடியும் என்ற இயற்கைநியதி மறைந்து "எல்லா ஆண்களுக்கும் பெண்" என்ற கோட்டா முறை திருமணம் மூலம் உருவானது.ஆனால் சில பேர்வழிகள் திருமணம் முடித்து விட்டு "அதை ஒரு வாழ்நாள் சாதனையாக" பீற்றிக்கொண்டு திரிவதை காணும் போது மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருக்கலாம் என தோண்றுகின்றது.இது நிற்க தற்போதைய நிலவரத்துக்கு வருகிறேன்.நண்பர்கள் பலரும் திருமணம் தொடர்பில் தீவிரமாக சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.வீட்டுபொறுப்பை முடித்த பின் திருமணம்,பணம் சேர்த்த பின் திருமணம் என பல "பக்கா பிளானுகளை" போட்டு வைத்துள்ளனர்.பதினைஞ்சு பவுணிலை தாலி கட்டி,இருபது லட்சம் செலவழித்து கலியாணம் செய்தால் தான் கழுத்தை நீட்டுவோம் எனச்சொல்லும் பெண்களை அடித்து விரட்டிவிட்டு "மஞ்சள் கயிறே போதும் கண்ணாளா நீ வந்தால் காணும்" எனச்செப்பும் பெண்களை பிடியுங்கள்.கடின உழைப்பில் திரட்டிய பணத்தை ஆரோக்கியமான விதத்தில் முதலிடுங்கள்.

குடும்பமாகிவிட்ட விஞ்ஞானி மகிழுந்தில் இலண்டன் மாநகரை சுற்றி வரும் வேளை நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சடுதியாக புகுந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்."என்ன மச்சான் காரிலையோ வந்தனி?" என்று நண்பர் கேட்க "நாங்கள் ஓடாத வாகனமோ?,மனுவல் வாகனத்தையே மல்லாக்க வச்சு ஓட்டுற ஆட்கள்.மனுசிட ஓட்டோ கியர் வாகனத்தை ஓடுறது பெரிய வேலையோ?" என்று பதில் சொல்லியிருக்கிறார்.அருகே இருந்த துணைவியார் சிரித்து விட்டு " பார்க் பண்ணேக்க முன்னுக்கு நிண்ட காரை இடிக்க போயிட்டார்.நான் கை பிரேக் அடிச்சிருக்காட்டி அவ்வளவு தான்" எண்டாவாம்.இந்த சம்பவம் லண்டன் தண்ணி பார்ட்டிகளில் "பைற்ஸ்" ஆக அடிக்கடி இழுபடுவதை காணமுடிகிறது.


மலர்ந்த இந்த புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசத்தையும் தரும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப்பாதையில் தொடர்ந்து நடை போடுவோம் எனக்கூறி அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.