தற்போதைய நிலவரம்-09


கட்டுப்பெத்தையில் பெரிய சாமி ஐங்கா நடத்திய ஆசிரமத்தில் 3 சின்னச்சாமியார்கள் இருந்தார்கள்.அறிவகம்,12B போண்ர பேர்வழிகளெல்லாம் கிட்ட நெருங்கவே அஞ்சுமளவுக்கு சக்தி மிக்க சாமியார்களாகவும் அவர்கள் விளங்கினார்கள்.நீலப்படம் பார்க்காமலும் மஞ்சள் புத்தகம் வாசிக்காமலும் படிப்பே கண்ணென பெரிய சாமியாரால் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட அம்மூன்று சாமியார்களில் இளையவரும் சிறியவருமானவரே குட்டிச்சாமியார் என அழைக்கப்படும் பரணி ஆவார்.தவ வலிமையால் கல்வியில் கடும் சித்திகளை பெற்ற குட்டிச்சாமியார் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கென பயணமாகிறார்.இலங்கையில் பெண்களை நேர் நோக்காது,அவர்களை தாயை,சகோதரியைப்போல் பாவித்து வாழ்ந்த சாமியார் பிகினி அழகிகள் பூனை நடைபோடும் நாட்டில் சென்று தடுமாறுவாரா? மாட்டாரா? என்று நண்பர்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.



கௌபாய் திருமணம் முடித்து மிகக்குறுகிய காலத்துள் அப்பா ஆகி சாதனை படைத்தது யாவரும் அறிந்ததே.கௌபாய் தனது திருமணத்தின் முன்பு மட்டத்தை சேர்ந்த அநேகருக்கும் தனித்தனியாக அழைப்பு எடுத்து வரவேற்றிருந்தார்.முகநூலில் அழைப்பிதழை போட்டுவிட்டு பெயரை tag பண்ணும் இந்த உலகத்தில் கௌபாய் போண்றவர்கள் வித்தியாசமானவர்கள் தான் என்று பலரும் அந்நேரம் பேசிக்கொண்டார்கள்.அத்தருணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.கௌபாய் அத்தருணத்தில் இங்கிலாந்திலிருந்த  கனாக்காலம் நிருபருக்கு ஸ்கைப்பில் அழைப்பை எடுத்து திருமண விடயத்தை சொல்லியிருக்கிறார்."கல்யாணத்தின் டென்மார்க்கில் செட்டில் ஆகப்போகிறேன்" என்று கௌபாய் சொல்ல தன்னை எல்லாம் தெரிந்த ஆள் என காட்ட நினைத்த நிருபரும் "டென்மார் கடுமையான நிற வெறி பிடிச்ச நாடு,கவனமா இருங்கோ கௌபாய்" என்று செப்பியிருக்கிறார்.கௌபாய் என்ன லேசுப்பட்ட ஆளா?.ஒரே பதிலில் நிருபரை தூக்கியடித்திருக்கிறார். அவர் சொல்ல பதிலை இன்றுவரை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லித்திரிகிறாராம் நிருபர்.கௌபாய் அப்படி என்னதான் சொல்லியிருப்பார்?

"ஓ அப்படியா? நல்லகாலம்,நான் வெள்ளையெண்டதால தப்பிட்டன்"



சிந்தா இலங்கையில் வகை வகையாக வாகனங்களில் திரிகிறார்.கூட யாராவது ஏறுங்கடா என்று கேட்டால் அக்கம்பக்கத்தில் இருபவர்கள் எல்லாம் பாய்ந்து ஓடுகிறார்கள்.அவர்களில் பயத்திலும் நியாயம் இருக்கிறது.ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு நாய்களையும் ஒரு வயோதிகரையும் இடித்துத்தள்ளியிருக்கிறார்.இவ்வளவு நடந்த பின்னரும் விடயம் தெரியாத ஒரு பூச்சி புதுசா வந்து சிக்க சிந்தா சில நாட்களுக்கு முன்னர் வானில் கிளம்பியிருக்கிறார்.அன்று சிக்கியது பருத்த வீதியோர பாலை மரம் ஒன்று.வழமை போல  சிந்தா தப்பித்து விட கூட வந்தவன் கட்டுகளுடன் உலாவுகின்றானாம்."இப்போதெல்லாம் கனவில் எமன் வராமல் சிந்தா வாகனத்துடன் வந்து ஏறச்சொல்லிக்கேட்பது போல வருகிறது" ஒரு அன்பர் பார்ட்டியில் சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு உதிர்த்தாராம்.அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை வலிகள் மறைந்திருக்கின்றனவோ?