{இந்த கட்டுரை ஆரோக்கியமான அலசலை நோக்கமாக கொண்டதாகும்.மஞ்சள்,நீல பார்வையோட்டம் கொண்ட, மட்டம் 2003 போலிப்பேர்வழிகள் இதை தவிப்பது நலம்}

பெரிய பிரித்தானியாவுக்கு வந்த புதிதில் அடிக்க கலைக்கும் காப்பிலியையும்,உள்ளுக்குள் கடுப்பை வைத்துக்கொண்டு உதட்டில் புன்னகை அவிழ்க்கும் ஐரோப்பியனையும் விட புலம்பெயர்ந்த ஈழதமிழரின் வாரிசுகளை காணும் போதே எனக்குள் அதிக வெறுப்பு மேலிடும்.போசணையற்ற உணவூட்டலான் உருவாகும் பலவீனமான உடலோடும் கோமாளித்தனமான தலை முடியலங்காரத்தோடு,அருவருக்கத்தக்க ஆடைகளோடும் வலம் வரும் இவர்களை கண்டாலே கடும் கடுப்பு ஆகி அடுப்பில் வைத்த உணர்வே மிஞ்சும்.கால ஓட்டத்தில் சந்தித்த சில தமிழ் நண்பர்களால் "எல்லோரும் அப்படி அல்ல,குறிப்பிடத்தக்க அளவு இளைய சமுதாயம் மண்மணம் மாறாமல் இருக்கிறது" என என் கருத்தை மாற்றும் படியாயிற்று.அப்படி எனக்கு வாய்த்த அருமையான ஒரு நண்பனோடு பேரூந்தில் செல்லும் போது ஒரு விடயத்தை அவதானித்தேன்.அதாவது போதுமான இருக்கைகள் இருக்கும் பட்சத்தில் அவன் ஒருபோதும் அருகருகாக இருப்பதில்லை.முன் பின்னாக,அல்லது பக்கவாட்டாக பெரிய இடைவெளிகளில் இருந்தபடியே உரையாடியபடி வருவான்.முதலில் விடயம் பிடிபடாமல் இருந்தாலும் சில நாட்களுள்ளேயே என் நுண்ணறிவை உபயோகித்து உய்த்தறிந்துவிட்டேன்.(கடைசி வரை பிடிபடாமல் இருக்க நான் என்ன அலிபாயா? இல்லை பென்ரியம் 1 ஒபியா?)




நடுவீதியில் ஆணும் பெண்ணும் கூடினாலும் கணக்கெடுக்காம போகிற பெரிய பிரித்தானிய சனம் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் அந்நியோன்னியாம பழகினா கண்ணையும் காதயும் கூர்மையாக்கிடும்.நண்பேன்டா நீ எண்டு கடுமையா பீல பண்ணி பகிரங்க இடத்தில நண்பன கட்டிப்பிடிச்சாலோ இல்லை தோள் மீது கை போட்டபட்டி நின்றாலோ பலரது கேவலப்பார்வைகள் அடுத்த நொடியே உங்கள் மீது விழுந்துவிடும்.இந்த நிலவரத்தால் அதிகமா பாதிக்கப்படுறது எங்கள போண்ற சேவல் கூட்டங்கள் தான்.கட்டுப்பெத்தையில் மப்ப போட்டிட்டு ஒரே பெட் சீட்டுக்குள்ள நண்பனோட படுத்து,தோள் மீது கை போட்டு ஊர் சுற்றி வளர்ந்த எமக்கு இது அந்நியமாக ஆரம்பத்தில் இருந்தது.கால ஓட்டத்தில் நாமும் எம்மை பிரித்தானிய சிந்தனைக்கேற்ப மாற்றிக்கொண்டு விட்டோம்.ஒன்றாக சுற்றினாலும் போதிய இடைவெளியை பேணுவது,பயணிக்கும் போது அருகே அமராமல் இருப்பது,கடும் மப்பு ஏறினாலும் நண்பன் துணையில்லாம நடப்பது,கூர்மையான காலணிகள்,உடலோடு ஒட்டிய கால்ச்சட்டைகளை தவிப்பது,பின்னழகை(???) மறைப்பது என நிறையவே எங்களை இந்த விடயத்தால் மாற்றிக்கொண்டு விட்டோம்.





"Gay" என அழைப்பதை விட மிகக்கேவலமான பழிப்பு ஒன்றை ஒரு ஆணுக்கு தரமுடியாது.அதையே தமிழில் "கல்லு" என்கிறோம்.கல்லு வெட்டல்,கல்லுக்காரன்,கல்லு மன்னன்,கல்லன் போண்ற வார்த்தைகள் அடிக்கடி விடுதி வாழ்க்கையில் மற்றவனை கேவலப்படுத்தும் போது பாவிப்பவை.தன்னை பலதரப்பட்ட விடயங்களில் முந்தி பெயரையும் புகழையும் சுருட்டிச்சென்றுவிடும் ஆண் மீது இன்னொரு ஆண் கடுப்பாகும் போது இந்த வார்த்தைகளில் ஒன்றேனும் பாவிப்பார்கள்.சற்றே மென்மையான இயல்புகளுடைய பேர்வழியின் அறை நண்பனை கல்லென அழைத்து கோபமூட்டி ரண்களப்படுதுவது கட்டுப்பெத்தை விடுதிகளில் அடிக்கடி நடக்கும்.சாப்பிடுறது,படிக்கிறது,குப்பி எடுக்கிறது,பயணம் போறது எண்டு அடிக்கடி இரண்டு பேர் ஒண்டாக வெளிக்கிட்டா சங்கு ஊதி பட்டம் குடுக்க பெடியள் காத்துக்கொண்டு இருப்பாங்கள்.மொத்தத்தில் ஓரின ஈர்ப்பு என்ற விடயம் பெடியள போட்டுத்தாக்க கட்டுப்பெத்தையில் பயன்பட்டதே தவிர அது தொடர்பான போதிய விளக்கம் அநேகர்க்கு பெரிய பிரித்தானியா வரும் வரை இருக்கவில்லை.

இந்த இடத்தில் விளக்கம் கெட்ட பென்ரியம் 1 Processorகாரர்களுக்கு நான் எதைப்பற்றி எழுதிக்கொண்டு போகிறேன் என்ற சந்தேகம் வரக்கூடும்.அப்படியானவர்கள் கீழே இருக்கும் பத்தியை படித்து தெளிவுபெறவும்.

//ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.{Difntn 4m Wikipedia}//

//ஓ.சே (Homosexuality & lesbian) என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி மா.சேகளுக்கு இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் ஓ.சேக்களுக்கு இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற (முட்டாள்தனமான) வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.எந்த மிருக,பறவை இனங்களிலும் 2 அல்லது 3% தொகை ஓரின சேர்க்கையாளர்தான்.மனித இனத்திலும் அதுபோலவே 2 அல்லது 3% பேர் எந்த காலத்திலும், எந்த சமூகத்திலும் ஓரினசேர்க்கையாளராகவே இருந்து வந்துள்ளனர்.//




குறித்த ஓர் மக்கட்தொகையில் ஓரின ஈர்ப்பு ஆண்களை விட லெஸ்பியன்களான பெண்களின் தொகை அதிகம் என ஆய்வுகள் சொல்லுகின்றன.செர்வே களின் போது பெண்கள் லெஸ்பியன்களாக இருந்தாலும் உண்மையை மறைப்பதால் உண்மையான வீதம் தெரிய வருவதில்லை எனச்செல்கிறார்கள்.ஆனால் தற்போதைய நிலவரப்படி உதட்டு முத்தங்களை பரிமாறியபடி செல்லும் பெண்-பெண் ஜோடிகளை ரயில்களில் காண்பது சாதாரணமாகிவிட்டது.

டும்..டும்..டும்…



சில தினங்களுக்கு முன் chat ல் ஈடுபட்டிருந்தபோது ஓர் இன்ப

அதிர்ச்சி.நண்பன் கோகிலனிடம் இருந்தது கோல்மச்சான் எனக்கு கல்யாணம்fixedஎன்று. எங்கள் அறிவக நண்பர் குழாமில் தீபரூபனைத் தொடர்ந்து கோகிலனும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.(ஒருவேளை ரூம் ராசியோ!) கோகிலனைப் பற்றி ஏற்கனவே கனாக்காலத்தில் பதிவு உள்ளமையால் நான் அதிகம் கூற வேண்டியதில்லை.
(மனதில் நின்றவர்கள்-03-கோகிலன)

வாடல் தேகத்துடன் முகத்தில் உணர்ச்சிகள் அதிகமின்றி கம்பஸை வலம் வந்த இவரைப் பற்றிக் கூற வேண்டுமானால் சுத்த சோம்பேறி.(பவானின் தயாரிப்பில் கம்பசில் வெளியானகபோதிதிரைப்படத்தில் கோகிலனுக்கு கிடைத்த வேடம் தான் கதையின் ஆணிவேர். என்ன பாத்திரம் தெரியுமா !கம்பஸ் சூழலில் கொலையுண்ட ஒரு சடலம்.(எப்படித்தான் பொருத்தமாய் கண்டுபிடிக்கிறாங்களோ…. J ) கோகிலன் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?. இவருக்கு பிடித்த இடம் ரூம் கட்டில் தான். லெக்சர் முடிந்தவுடன் ஒடோடி வந்து கட்டிலில் சரிந்தால் சரியான கும்பகர்ணன் தான். ஆனால் எக்சாம் எல்லாம் A தான். (எப்ப தான் படித்தானோ…)சிவில் பாடங்களைப் பொறுத்தவரை structural, design என்றால் இவரிடம் குப்பிக்கு நம்பிப் போகலாம்.கம்பசில் படிக்கும் போது இவரது வாடல் தேகத்தை ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகர் மாதிரி மாற்ற விரும்பி இவர் பாவித்தது body mass.. ஆனால் இதைப் பாவித்து சில காலத்தில் இவருக்கு திடீர் என்று உடல் நலம் குன்றி ஊருக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. என்னடாப்பா இன்னும் காணவில்லையே என sms பண்ணிய செல்வரஞ்சனுக்கு வந்தது reply. தனக்கு தெரிந்த நோய்களெல்லாம் பட்டியலிட்டிருந்தான் கோகிலன். இப்பொழுதும் Body mass பாவிக்கிறானோ தெரியவில்லை.

கம்பசை விட்டு வெளியேறிய பின் எனக்கும் கோகிலனுக்கும் ஒரே இட்த்தில் ( புத்தளம் பாலாவி தான்) வேலை கிடைத்தபோதும் கோகிலனுக்கு கொழும்பில் இன்னொரு design வேலை கிடைத்ததும் நான் மாத்திரம் Maga pvt ltd ல் இணைந்து கடும் வெயிலில் கருவாடாக வேண்டி இருந்தது. ஆயினும் கோகிலன் பின்னர் புத்தளத்தை விட வெயில் கடுமையான வசதிகளற்ற மன்னாரில் வேலைக்குப் போனது எனக்கு ஆச்சரியம் தான். பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது கோகிலனும் கொழும்புக்கு மாற்றலாகி விட்டான்.

கம்பஸ் நண்பர்கள் பலரும் வெளியேறிய பின் எங்கள் பலரை மறந்து விடுவது வ்ழக்கம். அண்மையிலும் கூட ஒருவரது திருமணப் போட்டோக்களை facebook ல் பார்த்துத் தான் அறிந்து கொள்ளவேண்டி இருந்தது. ஆனால் கோகிலன் முன்பே அறிவித்தது என்னைப் பொறுத்த வரை பெரிய விடயம். முன்கூட்டிய திருமண வாழ்த்துக்கள் நண்பா………!

தொ(ல்)லை பேசி

கம்பஸில் முதலாம் வருடம் நானும் ஒருவாறு பெற்றோரிடம் கெஞ்சிக் கூத்தாடி அப்போதைய 3315 மொடல் போன் ஒன்று வாங்கினேன். போன் வாங்கி நண்பர் சிலருக்கு நம்பர் கொடுத்த பின்னர் நான் பட்ட பாடு இருக்கிறதே. சொல்லி மாளாது. தெரியாத நம்பர்களில் இருந்து மிஸ்கோல்கள் வரும். அப்போது hatch sim ல் இருந்து நம்பர் வராமல் கோல் எடுக்க முடியும். புது போன் வங்கின எனக்கு இது பெரும் தலையிடியாக இருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மிஸ்கோல் அடித்த நண்பனே சிறிது நேரத்தில் வந்து எனது response பார்த்து ரசித்து விட்டுப் போய் மீண்டும் தொடருவது தான். பின்னர் இவைகள் எல்லாம் பழகிப் போக அந்தத்தொல்லையும் விட்டது. இவ்வாறான தொல்லைகளை சமாளிக்க ஒரு வழி தெரியாத நம்பிரில இருந்து வரும் கோல்களை கணக்கெடுக்காம விடலாம். இலகு வ்ழி போனில் உள்ள SWITCH OFF எனும் option தான்.

வதந்தியும் நிஜமும்

சுனாமி முடிந்த நேரம் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்ட்த்தைப் பெரிதும் பாதித்திருந்த நேரம். சுனாமியின் பாதிப்பின் எதிரொலி பல்கலைக்கழகத்திலும் இருந்த நேரம். எங்கள் மட்டக்களப்பு மாணவன் அச்சுதனும் அப்போது தான் பல்கலை திரும்பியிருந்தான். Package களுக்குப் பெயர் போன சிலரால்அச்சுதனும் சுனாமியில போயிட்டானாம்என்று பொழுதுபொக்கிற்காக வதந்தி ஒன்று பரப்பி விடப்பட்டது. அப்போது தான் புதிதாக phone வாங்கியிருந்த என்க்கும் ஒரு sms வந்திருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன் தான் கம்பசில் அச்சுதனைப் பார்த்திருந்த படியால் நானுமொரு sms அனுப்பினேன்அச்சு சாகவில்லை.கம்பசில் கண்டேன். தூங்கும்போது கூட காலாட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும்,இல்லாவிட்டால் செத்தாச்சு எண்டு புதைத்து விடுவீர்கள்என்று கேள்விப்பட்ட வாசகம் ஒன்றையும் அனுப்பினேன்.அது தான் நான் செய்த தவறு.பொழுது போக்க நான் தான் சிக்கினேன்.”ஏண்டா செத்தவீட்டுக்கு போகவில்லைஎன்று வந்தது அடுத்த sms. sms மோதல் தொடர்ந்தது.உயிரோடு இருக்கிற ஒருவனை செத்ததாக சாதிப்பது எனக்கு வேப்பங்காயாக கசந்தது.அதுவும் சுனாமி நேரத்தில்: எனது கோபத்தைத் தூண்டி வேடிக்கை பார்க்க தீபரூபன், சவுந்தர்,ரிஸ்மி உட்பட்ட ஒரு கூட்டமே கிளம்ப நானும் கடுப்பாகி எக்சாமிற்கு படிக்க முடியாதளவு அலுப்பு வாங்கி சுகந்தமாறனின் தலையீட்டுடன் எல்லாம் முடிவுக்கு வந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அச்சுதனும் ஒத்துழைத்ததாக அறிந்த போது எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.


இப்போது
ஒன்றரை மாதங்களுக்கு முன் facebook ல் பல்கலைப்பட்டமளிப்பு போட்டோவில் பிரகலாதனின் குடும்ப போட்டோவை tag பண்ணி விட்டு வீடு வந்த போது 2 sms.ஒன்று செல்வா இடமிருந்துis it prahalathan’s broஅடுத்தது எங்கள் package க்குப் பேர் போன தீபரூபனிடமிருந்துour friend prahalathan’s brother passed away in Jaffna.please convey this to all friends.” இது தான் செய்தி. நான் இவற்றைக் கணக்கெடுக்கவில்லை. இவங்கள் என்னோடு விளையாடுறாங்கள் போல என்று விட்டு விட்டேன். மறு நாள் தீபருபன் கோல் எடுத்த்தும் கடுப்பாகி கதையை மாற்றிக் கட் பண்ணி விட்டேன். இதை மறந்து பல நாட்கள். தற்போது இரு நாட்களுக்கு முன் தற்செயலாக பிரகலாதனின் facebook பார்த்தபோது எனக்கு உண்மையில் பலத்த அதிர்ச்சி.பிரகலாதனின் அண்ணா சாரங்கன் உண்மையிலேயே காலமாகி விட்டிருந்தார். கம்பசில் படிக்கும் போது பிரகலாதனின் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவரைக் கண்டுள்ளேன். அப்போது மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் மல்லன் போன்ற உடல் வாகு கொண்டவர். அவர் எப்படி இந்த வயதிலே என்று என்னாலும் நம்ப முடியவில்லை. காலனுக்குத் தெரியுமா மருத்துவனா, மல்லனா என்று. பக்கத்தில் இருந்தும்(சுன்னாகம் எனது ஊரிற்கு அருகாமையில் தான்) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத கவலை ஒருபுறம் இருக்க நண்பனுக்கு தேறுதல் கூடக் கூறாத குற்ற உணர்வு மறுபுறம். அதனை ஓரளவாவது இந்தப் பதிவின் மூலம் நீக்கிக் கொள்கிறேன்.

விடயம் தெரிந்தபோது நண்பனோ தேறுதல் கேட்கும் நிலையைத்தாண்டியிருந்த்தான். அவனது facebook ல் அவனால் எழுதப்பட்ட இரங்கல் கவிதையின் சில வரிகள்.

"இரவின் பனியை உண்டு

இன்புற்றிருந்தது

இறுதி நாளின்பயணத்தை எண்ணி;

உதிரப்போகும் சருகொன்று…

இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்உதிரும்

நாள் வரை உழைத்தாகிவிட்டது…

உயிர்கள் சுவாசிக்க

ஆக்சிஸனைகொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…

இல்லையில்லை…

இலையின் வாழ்க்கை

சுழற்சியின்இன்னொரு பக்கம்…"

மொறட்டுவை கம்பசில மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் கெமிக்கல் சசி வீட்டுக்கு சாப்பாட்டுக்கென பெரிய குழுவாக புறப்பட்டுப்போனோம்.வழிகேட்பதற்காக சசிக்கு கோல் எடுத்த போது சசி சொன்னது..

"வரேக்க றிவர் ஒண்டு ரன் பண்ணிக்கொண்டு இருக்கும்,அத தாண்டி வரேக்க ரூ ஸ்ரோறி பில்டிங் ஒண்டு இருக்கும்,அதில அப் ஸ்ரோறி தான் எங்கட கவுஸ்"

05/10/2010 அன்று பிரித்தானியா மிட்சம் பிரதேசத்தில் உள்ள ஜிம்மில்...
எவ்வளவு பயிற்சி செய்தாலும் காப்பிலியள் போல பாடி வராம டெட் பாடி கணக்காவே இருக்க காரணம் கேவலமான எங்கள் சாப்பாட்டு முறைதான் என பேசியபடி இருந்த போது சசி சொன்னது.

"நான் டெயிலி 3 டைம் மீல் எடுப்பன்.மில்க்,யூஸ் நைட்ல ரிங் பண்ணுவன்,சொ சாப்பாடு பிராப்ளம் இல்லை"

இவன் ஏழு ஜென்மத்துக்கும் திருந்த மாட்டான்.


கம்பசில முதலாம் வருசம் படிச்சுக்கொண்டிருந்த காலம்....
ஜெயசுதன் தன்னை ஒரு காதல் இளவரசனாக மனதில் வரித்து வைத்திருந்த நேரம்.ஒரு நாள் பட்டப் பகல்ல ஒரு மட்ட பிகரிடம் வழிந்து படுகேவலமாய் திட்டு வாங்கியதை பலர் கண்ணாரக்கண்டார்கள்.அவள் ஒரு நல்ல பிள்ளை என பல பெடியளோடு வாய்ச்சண்டை போட்டு கேவலப்பட்டதும் பின்னர் நடந்தது.

28/09/2010 லண்டன் மாநகரில் ரவுடி ஜெயசுதனோடு பேரூந்தில் பயணிக்கும் போது......
வண்டி நிறைய பெண்கள் கூட்டம்.ரீன் தொடக்கம் 40+ வரை பரவலான வீச்சில் நின்றிருந்தார்கள்.ஒருத்தியையும் விடாமல் சைட் அடித்து அறை வந்த பின் நடந்த நண்பர்கள் ஒன்று கூடலில் ரவுடி சொன்னது
"இவ்வளவு கேவலமா பெட்டைக்காக அலையுறவன பார்க்கேல.எல்லாரும் பெட்டய பார்ப்பாங்கள்.ஆனா நீ.... உன்னை எந்த பெட்டை பார்க்குது எண்டு பார்க்கிறாய்,கேடுகெட்ட மெண்டாலிட்டி,நான் ஒரு காலமும் பெட்டைக்காக அலைஞ்சதில்லை"

குடுக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு.கணக்கெடுக்கப்படாது.


மூன்றாம் வருடம் படிக்கேக்க புதுசா வந்திருந்த யூனியர் பிள்ளையட்ட உங்களுக்கு வரப்போறவர் எப்படி இருக்கோணும் எண்டு கேட்க சொன்னது....
"நல்லவரா இருக்கோணும்"

பெரிய பிரித்தானியாவில் வெள்ளைக்கார பிள்ளைகளோடு கடலை போட கிடைக்கிற பொன்னான தருணங்களில் அதே கேள்வியை எடுத்து விட்ட போது ஒரு பிள்ளை சொன்னது.....
"என்னோட கனவுப்பையனுக்கு அழகான உடம்பு இருக்கோணும்.முக அழகு முக்கியமில்லை.ரிம் பண்ணின அப்ஸ் இருக்கோணும்.தசைப்பிடிப்பான தோள்கள்,உயிரோட்டமான கண்கள் அவசியம்.பணம்,அந்தஸ்து முக்கியமில்லை.என்னை புரிஞ்சு கொண்டா சரி."


பொத்திப்பொத்தி வச்சு பழுக்கவும் இல்லை பழக்கவும் இல்லை.


மொறட்டுவை,பதுவிதான விடுதி 2007 ம் ஆண்டு......
அலியப்பா சௌமியா என்று ஒரு கற்பனைப்பிகர உருவாக்கி அவளுக்கு ஓவரா பில்டப் குடுத்து தனக்கு குறும் தகவல்,தொலை பேசி அழைப்புக்களை நண்பர்கள் முன்னிலையில் சௌமியாவாக எடுக்க இன்னொருத்தியை செட் அப் பண்ணி......... சௌமியாவ சந்திக்க போவம் வா எண்டு ஒரு பிள்ள பூச்சிய கூட்டிக்கொண்டு போய் 3 மணித்தியாலம் காக்க வச்சு...... சாட்டு சொல்லி திருப்பி கூட்டி வந்து.......2 வருடங்களாக போட்ட நாடகத்தை ஒரு பார்ட்டியில் ஒப்புக்கொள்ள 7ஜி ஒரு கிழமை கதைக்காமல் ஒதுக்கி வைத்தது.

10/09/2010 கஸ்டப்பட்ட பிள்ளையள கஸ்டப்படுத்தாம படிக்க வைக்கப்போறன்.இஸ்டப்பட்டு எல்லாரும் ஒரு ஸ்கொலர்சிப் குடுப்பம்.....எண்டு சொல்லி நிறுவனத்துக்கான இலச்சினை,விண்ணப்ப படிவம் எண்டு சீரியசா சொல்ல எல்லாரும் அலேட் ஆகிட்டாங்கள்.நிச்சயமா யாரோ ஒரு பிகரோட மனதை வருடும் முயற்சி எண்டு விளங்கினது தான் காரணம்.


சிட்டி version 2.0 போல இது லந்து version 2.0 வோ?


மொறட்டுவை கம்பசில சிவில் டிப்பார்ட்மெண்டில தன்யா எண்டு ஒரு தமிழ்ப் பிள்ளை இருந்தது.சக மாணவிகள் எல்லாம் எங்களை பொறுக்கி என்று தடை செய்த போதும் எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் தன்ரபாட்டில அமைதியா இருந்ததால தண்ணி பார்ட்டியள்ள எல்லாம் அந்த பிள்ளய மனமார புகழ்ந்து தள்ளுவோம்.அவவும் பெயருக்கேற்றபடி 4வருசமும் தன்ர பாட்டில தனியா இருந்துட்டு அவுஸ்திரேலியா போயிட்டா.

இப்ப அதே முகத்தோற்றத்தோட ஒரு பிள்ளை முக நூல்ல இருக்கு.பெயரும் அதே தான்.ஆனா தனியவா இல்லை.நூறில்லை,இருநூறில்லை எண்ணூறுக்கு மேல நண்பர்கள் வச்சிருக்கிறா.அவுஸ்திரேலியாவில பறக்கிறதில பருந்து தொடக்கம் ஊருறதில ஓணான் வரைக்கும் அழகா படம் பிடிச்சு போடுவா.மிருகங்களும் தன்யாவ தங்கள்ல ஒண்டா நினைக்கிறதாலயோ என்னவோ..... பயந்து ஓடாம விறைப்பா போஸ் குடுக்குதுகள்.எல்லாத்தையும் போட்ட தன்யா இப்ப தன்னையே படம் பிடிச்சு போடுற அளவுக்கு வளர்ந்துட்டா. முதலைக்குளத்துக்க அரையளவு தண்ணியில நிண்டு போட்ட போட்டோ தான் இப்ப முக நூல்ல ஹாட் டாபிக் ஆகி இருக்கு.


அரை வளர்ச்சி நாடு அவுஸியிலேயே இவ்வளவு மாற்றம் எண்டா முழுசா வளர்ந்த அமெரிக்கா போன என்ன ஆகும்?

மொறட்டுவை கம்பசில டப்பா பிகர கூட உருகி உருகி பார்த்து, வாளி,குப்பி எல்லாம் வச்சு கேவலப்பட்ட பெடியள் பலர்.அது மட்டுமில்லாம ஆயா ரேஞ்சில இருந்த பிகருகள எல்லாம் மீரா ஜாஸ்மினுக்கும்,நயன் தாராவுக்கும்,பானுவுக்கு(தாமிரபரணி நாயகி) ஒப்பிட்ட கொடூர ரசனைக்காரர்கள் கூட இருந்திருக்கிறார்கள்.

உலகத்தின் சகல இனப்பெண்களையும் லண்டனில் பார்த்தாகி விட்டது.பெண் அழகு என்பதன் வரைவிலக்கணக்களை எல்லாம் பார்த்துவிட்டாங்கள் எங்கட பெடியள்.ஊருக்கு போகும் போது தமிழ் பெண்களை,சிங்கள பெண்களை சைட் அடிக்க கூட தோண்றாத அளவுக்கு இங்கே பார்த்தாகிவிட்டது.இருந்தும் தமிழ்ப்பெண்கள் மீதான ஈர்ப்பு மிச்சம் இருக்கிறது என்றால் கலாச்சாரம் ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும்.ஆனால் அதையும் ஆமிக்காரனோடு சேர்ந்து மரத்தமிழிச்சிகள் பறக்கவிடுவதால் விரைவில் இச்சிந்தனையிலும் முற்றுப்புள்ளி விரைவில் விழும் என எதிர்பார்க்கலாம்.


வாழ்க்கை ஒரு வட்டமோ சதுரமோ சரிவகமோ இல்லை.பல நெளிவு சுழிவுகளை கொண்டதே அது.