ஜுராசிக் காலத்தின் செழிப்பு மிக்க பொழுதுகள் அவை.அகன்று விரிந்திருந்த கானகங்கள் எங்கும் கனமான உயிரிகள் நடமாடிக்கொண்டிருந்தன.ஒவ்வொரு மூச்சிலும் வளியில் இருந்த 40% ஒக்சிசனை தொன்கணக்கில் உறிஞ்சி உடல்சூட்டில் அனல் காற்றாக மாற்றி வெளியே அனுப்பிக்கொண்டிருந்த "செல்லாத்தா" என்றுமில்லாதவாறு இன்று மெலிதான சுவாசத்தோடு இடிந்து போய் விழுந்து கிடந்தது.அதன் கண்களில் இருந்து ஓடிய நீர்த்தாரைகள் தற்போதைய உலகின் குட்டி அருவி ஒன்றின் பரிமாணத்துக்கு ஒப்பிடக்கூடியதாய் இருந்தது."செல்லாத்தா" டைனோசரில் பச்சைத்தாவரம் மட்டும் உண்டு வாழ்கிற வகை.மிச்ச டைனோசர் சகவாசமே வேண்டாம் என்று தான் குடும்பத்தையும் இழுத்துக்கொண்டு இலங்கைத்தீவின் கட்டுப்பெத்தை கானகப்பக்கமா ஐஞ்சாறு மாசங்களுக்கு முன் குடி பெயர்ந்திருந்தது.செழிப்பான ஆற்றங்கரையெங்கும் பரவியிருந்த ஈரலிப்பான மரங்களும் பிற டைனோசர்களின் தொந்தரவில்லா சூழலும் அதற்கு நன்றாகவே பிடித்துப்போக சாப்பாடும் தூக்கமுமாக நாட்கள் கவிதையாக நகர்ந்து கொண்டிருந்தன.ஆனால் அந்த மகிழ்வுக்கெல்லாம் முடிவு வைப்பது போல நடந்து விட்டிருந்தது நேற்று நடந்த சம்பவம்.

செல்லாத்தாவின் ஒரே மகள் "றைனா".அவளைப்போலவே நீண்ட கழுத்து, மெழுகு பூசினால்ப்போல மென்பச்சை கரட்டீன் சருமம்,மொழு மொழு வயிறு, எடுப்பான பின்புறம்,வளைவுகள் நிறைந்த வால் என்று அம்சமா இருந்தாள். புருசன்காரன் "நல்லாம்பி" செல்லாத்தாவை விட உயரம் குறைவு என்றாலும் நல்ல கம்பீரம்."உங்கட மூஞ்சி அப்படியே இவளுக்கு வந்திருக்கு" எண்டு அடிக்கடி அவரிடம் செல்லாத்தா சொல்லிக்கொள்ளுவாள்."எங்களுக்கு வச்சது போல மொக்கையா பேர வைக்காம நவீனமா வைக்கோணும்" எண்டு நாள்கணக்கில் பிளான் பண்ணி வச்ச பேர் தான் "றைனா".எட்டாவது வயசில் அவள் வயதுக்கு வரும் மட்டும் எல்லாம் நல்லாத்தான் இருந்தது.அதுக்குப்பிறகு இளம்பெடியள் முதல்க்கொண்டு கிழவன்கள் வரை றைனாவ எங்க பார்த்தாலும் கலைக்கத்தொடங்கீட்டாங்கள்.நல்லாம்பி தெம்பா இருக்குமட்டும் வாலால வெளுத்து கழுத்தால அடிச்சு மகள் பின்னால வாறவங்கள கலைச்சுப்போடுவார்.ஆனா போனவருச தொடக்கத்தில் ஒரு வகை மாமிச உண்ணி ரெக்ஸ் டைனோசரோட பொருதேக்க கடி விழுந்து வலக்கால் இயங்காம போய் எல்லாம் சிக்கலாகிப்போட்டுது.அதுக்குப்பிறகு தான் பெருநிலத்துண்டில இருந்து தண்ணி வற்றின நேரமா இந்த தீவுக்கு இடம்பெயருற முடிவை அவசரமா எடுக்கும்படியானது.ஆனா இங்கயும் பிரச்சினை வந்திட்டுது.நேற்று "றைனா" ஆற்றில குளிச்சிட்டு வரேக்க இருட்டான கானக பகுதியில வச்சு ஒரு பெடியன் டைனோசர் வால கவ்விப்பிடிச்சு இழுத்திட்டுது. றைனா முதல்ல திடுக்கிட்டாலும் உதறி எறிஞ்சிட்டு பின்னங்கால் வால்ல பட ஓடி வந்திட்டுது.மகள் ஓடி வந்து மரஒளிவுக்கை போய் நடுங்கிக்கொண்டு இருந்த பார்த்து நல்லதம்பி கடுப்பாகி காடு முழுக்க உறுமிக்கொண்டு திரிஞ்சாலும் ஒருத்தரும் தட்டுப்படேலை.குழப்பத்தின் உச்சத்தில் இனிப்புச்செடியள வயிறு நிறைய திண்டுட்டு "சுகர் ரஸ்" ஆகி மல்லாக்க படுத்திருக்கேக்க மலரவன் நினைவு வந்தது.

காலங்கள் தாண்டி கணநேரத்தினுள் ஓடிய அவ் அப்பழுக்கில்லா உயிரியின் கூரிய எண்ண அலைகள் கட்டுப்பெத்தை கம்பஸ் வளாகத்தில் விரிவுரைக்கு மட்டம் போட்டுவிட்டு கல்மேசையில் குப்புற படுத்திருந்த மலரவனின் தூக்கத்தை குலைத்தன.கணநேரத்துள் உடம்பினுள் உறைந்திருந்த அனைத்து சக்தியையும் புள்ளியாய் குவித்தபோது உருவம் அரூபமாகி இறந்து போன மில்லியன் ஆண்டுகள் வழி பயணம் சென்று நல்லதம்பி காலடியில் நின்று உருவமாகியது.உடம்பில் அனலாய் கொதித்த காய்ச்சலுக்குள்ளும் றைனா கடுமையா வெட்கப்பட்ட தொடங்கியது."உனது உடலில் கடி விழுந்த இடத்தை பார்த்தாக வேண்டும்" என்ற மலரவன் கேட்டது றைனாவின் மென்பச்சை முகத்தில் சென்நிற நிழல்களை உருவாக்கி விட்டிருந்தது."ஒரு டைனோசர் பொண்ணு எத வேணும் எண்டாலும் காட்டுவா....ஆனா வாலை மட்டும் காட்ட மாட்டா,நீங்க ஒரு மனுசப்பொண்ணுட்ட இடுப்பை காட்டு எண்டு கேட்டா அவுத்து காட்டுவாவா?" றைனா கேட்காமல் கேட்பதாய் பட்டது.கமெராவை உருவி வாலை குறிவைத்து மின்னலாய் அழுத்தி உருப்பெருப்பித்த போது கடி காயம் கனதியாய் தெரிந்தது.பற்கள் பொதிந்திருந்த ஆழத்தில் கடித்த உயிரியின் வேட்கை புரிந்தது.


றைனாவின் அழகுக்கு இன்னும் அழகூட்டி இலைகுழைகளால் அலங்கரித்து ஆற்றங்கரையருகே நிறுத்தி விட்டு மறைத்திருந்து அவதானிக்கத்தொடங்கிய மலரவனை செல்லாத்தாவும் நல்லாம்பியும் குழப்பத்தின் ரேகைகள் முகத்தில் பரவ பின்னால் நின்று பார்த்தபடி நின்றன.நேரம் ஓட ஆற்றங்கரையோரம் புதர்கள் முறியும் ஓசை தோண்றி சமீபமாக வர, கட்புலனை கூர்மையாக்க பிரமாண்டமாய் ஒரு உருவம் றைனாவின் வாலை குறிவைத்து நெருங்குவது விளங்கியது.சிலகணங்கள் நிலையெடுத்த அது.......திடீரென்று வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக பாய்ந்து வாலில் பற்களை பதிக்க முன் மலரவன் கையில் இருந்த வலைத்துப்பாக்கி முழங்கி சிறைப்பிடித்தது.


கொழுப்பின் உறைவிடமாக இருந்த அப்பருத்த டைனோசரை ஏறங்க இறங்க பார்த்த எட்டுப்பட்டி டைனோசர்களுக்கும் நாட்டாமையான புறண்டோசரஸ் வழக்கமான கேள்விகளை கேட்டபின் "இவனை யுராசிக் காலத்திலிருந்து கண்காணா காலத்துக்கு நாடு கடத்துங்கள்" என்று மலரவனிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த செம்பில் நீண்டநேரமாக சப்பியபடியிருந்த மரச்சக்கைகளை துப்பியதும் பிறக்கப்போகும் காலங்களூடு பயணம் மீள தொடங்கியது.மலரவன் அருவமாக இழுத்துச்சென்ற உருவமான அந்த வெறி பிடித்த டைனோசர் உருச்சிறுத்து பல்லியாகி மரமேறி குரங்காகி வளர்ந்து நிமிர்ந்து ரோமங்கள் கொட்டுண்டு உருமாறி நிலைமாறி கூடச்சென்றது.சக்தியெல்லாம் திரட்டி காலப்பெருவெளியின் சூட்சும பாதையிலிருந்து 2008 ஆம் ஆண்டுப்புள்ளிக்கு அவ்வுருவை இழுத்து வீசி விட்டு கிட்ட நடந்து சென்று பார்த்த மலரவனுக்கு பல்லாயிரம் வோல்ற் மின்சாரம் மர்ம ஸ்தானத்தில் பாய்ந்த்து போல இருந்தது.அங்கே ரஜீந்திரதாஸ் குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்தான்.

தற்போதைய நிலவரம் (3)




கட்டுப்பெத்தை மட்டம் 2003 கட்டழகர்களுக்கு இது கலியாணக்காலம்.காதல் தோல்வி,ஒரு தலைக்காதல் வலிகள் எல்லாம் மறந்து கடுகதி வேகத்தில் கால்கட்டுகள் கால்களில் விழும் காலம்.காலம் காலமா நீடித்திருந்த கலியாணக்கனவுகள் நனவாகும் காலம்.தானாக காலில் கட்டை போட்டவர்கள்,பெற்றோரால் வலிந்து போடப்பெற்றவர்கள் என வரிசை நீள்கிறது.கடுகளவும் வெளியே கசியாம கவனமா அவனவன் கலியாண அழைப்பு அடிக்கும் வரை காப்பாற்ற நினைத்திருந்ததை கனாக்காலம் வெளியக புலனாய்வுப்பிரிவு அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சுவிட்டது.தகவல்களை நேரடியாக தராமல் கிசுகிசு பாணியில் தந்தால் பலரின் கடுப்பை கிளப்பாம இருக்கலாம் என்பதால் மறைஞ்சும் மறையாமலும் போல நாசூக்கா தர முடிவெடுத்துள்ளது ஆசிரியர் பீடம்.

நார்வே நாட்டில் எரிக்சொல்கெயிம் கண்ணில் விரல விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் கருப்பழகன் வலையில் கட்டழகி ஒருத்தி வசமா சிக்கி விட்டாராம்.சாதகம் பார்த்து வீட்டுக்காரர் இழுத்தடிச்சு காலவிரயம் செய்ததால் பொறுமையின் எல்லைக்கோட்டை கடந்த இவர் கட்டையா சிக்கினா காணும் என்று வெறித்தனமா தேடி வந்தாராம்.கட்டையே காணும் எண்டு இருந்தவருக்கு நாட்டுக்கட்டையா செமையா ஒண்டு சிக்கவே சிறுத்தை இப்போ சில்வண்டாகி ஸ்கைப்பும் ஐபோட்டும் மா வாழ்கைய ஓட்டுதாம்.படிப்பு முடிய ஏழாலையில ஏரியாவே கிழிஞ்சு தொங்கிற மாதிரி தடல்புடலா 3 முடிச்ச போடப்போகிறாராம்.

அவுஸ்திரேலியா டாக்டர் படிப்புத்தம்பிக்கு கனடா நாட்டில் கன்னி சிக்கிவிட்டதாம்.காலகாலமா ஸ்கைப் பக்கமே வராத அவர் அவாவோட அழைப்புக்காக எப்போதும் ஆன்லைனில் வாடியிருக்கிறாராம்.ஒருதலையாக நடிகை தமனாவை காதலித்த அவர்....தமனா வேறுயாரோடோ போய்வந்ததாக அறிந்ததில் இருந்து நடைபிணமாக நடமாடி வந்தாராம்.தற்போது பள்ளிக்கால நண்பியே வாழ்க்கைத்துணையாக வரப்போவதையிட்டு புளகாங்கிதமுற்று சிரிச்ச முகத்துடன் அவுஸ்திரேலியா எங்கும் சுற்றி திரிவதாயும் கேள்வி.

மட்டத்தில் பல ஆண்களின் தூக்கத்தைக்கெடுத்த தொப்புள் அழகனின் தங்கைக்கு கலியாணம் முடிந்ததையடுத்து வீட்டார் இவ்வருட இறுதிக்குள் அழகனையும் குடும்பஸ்தன் ஆக்க முடிவெடுத்து விட்டதாக தாயக நிருபர் தெரிவித்தார்.இது நடைபெறும் பட்சத்தில் அவரை ஒருதலையாக காதலித்து வந்த பலர் தாடியும் தண்ணியுமாக வாழு அவல நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக உளவியலாளர் கௌபாய் மது எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.அதே நேரம் பிள்ளை எவ்வழியால் பூமிக்கு வரும் என்பதிலேயே கடும் குழப்பமான கருத்தைக்கொண்டுள்ள இவர் கட்டி பிள்ளை பெத்து அப்பா ஆகிறது எல்லாம் நடக்கிற காரியமா என்று குசும்பர்கள் தண்ணிப்பார்ட்டிகளில் சிலாகிப்பதையும் குறிப்பிட்டுத்தானக் வேண்டும்.

மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த மங்கோலியநாட்டு சாயல்காரருக்கு வழக்கிட்ட காரிகை சிக்கிவிட்டாராம்.அப்போ காதல்(ம) கடுப்பில் சம்பந்தமேயில்லாதவை எல்லாம் வழக்கில் சிக்க வைத்து காவல்துறை நிலையங்களுக்கு அலையவிட்டது எவ்வகையில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புவதை தம்பதி கணக்கேயெடுக்கவில்லையாம்.ஊடல்ல இதெல்லாம் சகஜமப்பா எண்டு மங்கோலியன் சொல்லிக்கொண்டாலும் பாதிக்கப்பட்டவங்கள் அடுப்பில வச்சமாதிரித்தான் இப்பவும் திரியுறாங்களாம்.என்ன இழவோ செய்திட்டு போகட்டும்,ஆனா பின்னாளில தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல்,உரசல் வரும்போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் தான் காரணம் எண்டு வழக்குப்போடாட்டி சரிதான்.

சிக்கனை பிரதான உணவாக திண்டு வாழும் பேர்வழிக்கு பதிவுத்திருமணம் முடிந்து விட்டதாம்.இரு வீட்டார் அனுபதிப்பத்திரத்தோடு காதலியோடு கடை கடையா ஏறி வகை வகையா சிக்கன் தின்று வருகிறாராம்.சமீபத்தில் பெரிய பிரித்தானியாவில் இருந்து சிங்கைக்கு புலம்பெயர்ந்த டைரக்டர் மட்டு அச்சுவுடன் கொழும்பில் உள்ள பிரபல வறுகோழி கடையில் இருந்த போது அங்கே தம்பதியாக வந்த சிக்கன் வசமாக சிக்கிவே கமெராவை எடுத்து பிளாஸ் அடித்து விட்டாராம்.ஆனால் கடலேறியாக ஊருக்கு நல்லது சொல்லும் அவர் 4 வருடமா கூடப்படித்தவர்கள் எண்டு கொஞ்சம் கூட கணக்கெடுக்காமல் தனர பாட்டில காதலியோடு சிக்கனை வாங்கிக்கொண்டு போய் விட்டாராம்.

தொடர்ந்து பெடியள பற்றி கிசுகிசு எழுதினா கிளுகிளுப்பிருக்காது எண்டதால் சில மட்டத்து அம்மணிக்கள் பற்றியும் கசிய விடுகிறோம்.

கங்காரு நாட்டு புகைப்படம் பிடிக்கும் அழகி பெரிய பிரித்தானிய சீனியர் அண்ணன் ஒருத்தருக்கு பச்சை சமிக்கைய காட்டிவிட்டாராம்.முகநூலில் அம்மணி போடும் புகைப்படங்களில் ஒரு வகையான குதூகலம் ஒட்டிக்கொண்டிருப்பதை குசும்பர்கள் கண்டு கொண்டாலும் வழமை போல போட்டுத்தாக்காமல் தண்ணிய போட்டுவிட்டு வாயார வாழ்த்துகிறார்களாம்.அம்மணியிடம் அனைவரும் கொண்டுள்ள நன்பதிப்புத்தான் அதற்குக்காரணம் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!



கடைசியா கிசு கிசு Of the வருடம்.

வாத்து அழகி முட்டையிடப்போகிறாராம்.முகநூலில் வாத்துவை ஒரு மொடலா நினைச்ச்சு போடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நண்பர்கள் வேலைப்பழு மறந்து சிரிக்க பார்க்கும் காமெடி பீசுகளாகி இருக்கின்றன.வின்னர் வடிவேலு காமெடி,வண்டு முருகன் காமெடி இதுகள பார்க்கேக்க கூட இந்தளவுக்கு சிரிப்பு வரேல எண்ட பேச்சு பெரிய பிரித்தானியா,சிங்கை வாழ் சேவல்கூட்டங்களிடம் பரவலா அடிபடுகுதாம்.

பிகு : மனதில் நின்றவர்கள் என்ற பகுதி நீண்டகாலமாக பதிவிடப்படாமல் விடுபட்டுள்ளது.உங்கள் மனதில் நின்ற அல்லது நிற்கக்கூடாத அந்தப்பேர்வழியைப்பற்றி இங்கே பதிப்பித்து உங்கள் நினைவுகளை பகிர்துகொள்ளுங்கள்.