தற்போதைய நிலவரம் (3)




கட்டுப்பெத்தை மட்டம் 2003 கட்டழகர்களுக்கு இது கலியாணக்காலம்.காதல் தோல்வி,ஒரு தலைக்காதல் வலிகள் எல்லாம் மறந்து கடுகதி வேகத்தில் கால்கட்டுகள் கால்களில் விழும் காலம்.காலம் காலமா நீடித்திருந்த கலியாணக்கனவுகள் நனவாகும் காலம்.தானாக காலில் கட்டை போட்டவர்கள்,பெற்றோரால் வலிந்து போடப்பெற்றவர்கள் என வரிசை நீள்கிறது.கடுகளவும் வெளியே கசியாம கவனமா அவனவன் கலியாண அழைப்பு அடிக்கும் வரை காப்பாற்ற நினைத்திருந்ததை கனாக்காலம் வெளியக புலனாய்வுப்பிரிவு அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சுவிட்டது.தகவல்களை நேரடியாக தராமல் கிசுகிசு பாணியில் தந்தால் பலரின் கடுப்பை கிளப்பாம இருக்கலாம் என்பதால் மறைஞ்சும் மறையாமலும் போல நாசூக்கா தர முடிவெடுத்துள்ளது ஆசிரியர் பீடம்.

நார்வே நாட்டில் எரிக்சொல்கெயிம் கண்ணில் விரல விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் கருப்பழகன் வலையில் கட்டழகி ஒருத்தி வசமா சிக்கி விட்டாராம்.சாதகம் பார்த்து வீட்டுக்காரர் இழுத்தடிச்சு காலவிரயம் செய்ததால் பொறுமையின் எல்லைக்கோட்டை கடந்த இவர் கட்டையா சிக்கினா காணும் என்று வெறித்தனமா தேடி வந்தாராம்.கட்டையே காணும் எண்டு இருந்தவருக்கு நாட்டுக்கட்டையா செமையா ஒண்டு சிக்கவே சிறுத்தை இப்போ சில்வண்டாகி ஸ்கைப்பும் ஐபோட்டும் மா வாழ்கைய ஓட்டுதாம்.படிப்பு முடிய ஏழாலையில ஏரியாவே கிழிஞ்சு தொங்கிற மாதிரி தடல்புடலா 3 முடிச்ச போடப்போகிறாராம்.

அவுஸ்திரேலியா டாக்டர் படிப்புத்தம்பிக்கு கனடா நாட்டில் கன்னி சிக்கிவிட்டதாம்.காலகாலமா ஸ்கைப் பக்கமே வராத அவர் அவாவோட அழைப்புக்காக எப்போதும் ஆன்லைனில் வாடியிருக்கிறாராம்.ஒருதலையாக நடிகை தமனாவை காதலித்த அவர்....தமனா வேறுயாரோடோ போய்வந்ததாக அறிந்ததில் இருந்து நடைபிணமாக நடமாடி வந்தாராம்.தற்போது பள்ளிக்கால நண்பியே வாழ்க்கைத்துணையாக வரப்போவதையிட்டு புளகாங்கிதமுற்று சிரிச்ச முகத்துடன் அவுஸ்திரேலியா எங்கும் சுற்றி திரிவதாயும் கேள்வி.

மட்டத்தில் பல ஆண்களின் தூக்கத்தைக்கெடுத்த தொப்புள் அழகனின் தங்கைக்கு கலியாணம் முடிந்ததையடுத்து வீட்டார் இவ்வருட இறுதிக்குள் அழகனையும் குடும்பஸ்தன் ஆக்க முடிவெடுத்து விட்டதாக தாயக நிருபர் தெரிவித்தார்.இது நடைபெறும் பட்சத்தில் அவரை ஒருதலையாக காதலித்து வந்த பலர் தாடியும் தண்ணியுமாக வாழு அவல நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக உளவியலாளர் கௌபாய் மது எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.அதே நேரம் பிள்ளை எவ்வழியால் பூமிக்கு வரும் என்பதிலேயே கடும் குழப்பமான கருத்தைக்கொண்டுள்ள இவர் கட்டி பிள்ளை பெத்து அப்பா ஆகிறது எல்லாம் நடக்கிற காரியமா என்று குசும்பர்கள் தண்ணிப்பார்ட்டிகளில் சிலாகிப்பதையும் குறிப்பிட்டுத்தானக் வேண்டும்.

மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த மங்கோலியநாட்டு சாயல்காரருக்கு வழக்கிட்ட காரிகை சிக்கிவிட்டாராம்.அப்போ காதல்(ம) கடுப்பில் சம்பந்தமேயில்லாதவை எல்லாம் வழக்கில் சிக்க வைத்து காவல்துறை நிலையங்களுக்கு அலையவிட்டது எவ்வகையில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புவதை தம்பதி கணக்கேயெடுக்கவில்லையாம்.ஊடல்ல இதெல்லாம் சகஜமப்பா எண்டு மங்கோலியன் சொல்லிக்கொண்டாலும் பாதிக்கப்பட்டவங்கள் அடுப்பில வச்சமாதிரித்தான் இப்பவும் திரியுறாங்களாம்.என்ன இழவோ செய்திட்டு போகட்டும்,ஆனா பின்னாளில தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல்,உரசல் வரும்போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் தான் காரணம் எண்டு வழக்குப்போடாட்டி சரிதான்.

சிக்கனை பிரதான உணவாக திண்டு வாழும் பேர்வழிக்கு பதிவுத்திருமணம் முடிந்து விட்டதாம்.இரு வீட்டார் அனுபதிப்பத்திரத்தோடு காதலியோடு கடை கடையா ஏறி வகை வகையா சிக்கன் தின்று வருகிறாராம்.சமீபத்தில் பெரிய பிரித்தானியாவில் இருந்து சிங்கைக்கு புலம்பெயர்ந்த டைரக்டர் மட்டு அச்சுவுடன் கொழும்பில் உள்ள பிரபல வறுகோழி கடையில் இருந்த போது அங்கே தம்பதியாக வந்த சிக்கன் வசமாக சிக்கிவே கமெராவை எடுத்து பிளாஸ் அடித்து விட்டாராம்.ஆனால் கடலேறியாக ஊருக்கு நல்லது சொல்லும் அவர் 4 வருடமா கூடப்படித்தவர்கள் எண்டு கொஞ்சம் கூட கணக்கெடுக்காமல் தனர பாட்டில காதலியோடு சிக்கனை வாங்கிக்கொண்டு போய் விட்டாராம்.

தொடர்ந்து பெடியள பற்றி கிசுகிசு எழுதினா கிளுகிளுப்பிருக்காது எண்டதால் சில மட்டத்து அம்மணிக்கள் பற்றியும் கசிய விடுகிறோம்.

கங்காரு நாட்டு புகைப்படம் பிடிக்கும் அழகி பெரிய பிரித்தானிய சீனியர் அண்ணன் ஒருத்தருக்கு பச்சை சமிக்கைய காட்டிவிட்டாராம்.முகநூலில் அம்மணி போடும் புகைப்படங்களில் ஒரு வகையான குதூகலம் ஒட்டிக்கொண்டிருப்பதை குசும்பர்கள் கண்டு கொண்டாலும் வழமை போல போட்டுத்தாக்காமல் தண்ணிய போட்டுவிட்டு வாயார வாழ்த்துகிறார்களாம்.அம்மணியிடம் அனைவரும் கொண்டுள்ள நன்பதிப்புத்தான் அதற்குக்காரணம் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!



கடைசியா கிசு கிசு Of the வருடம்.

வாத்து அழகி முட்டையிடப்போகிறாராம்.முகநூலில் வாத்துவை ஒரு மொடலா நினைச்ச்சு போடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நண்பர்கள் வேலைப்பழு மறந்து சிரிக்க பார்க்கும் காமெடி பீசுகளாகி இருக்கின்றன.வின்னர் வடிவேலு காமெடி,வண்டு முருகன் காமெடி இதுகள பார்க்கேக்க கூட இந்தளவுக்கு சிரிப்பு வரேல எண்ட பேச்சு பெரிய பிரித்தானியா,சிங்கை வாழ் சேவல்கூட்டங்களிடம் பரவலா அடிபடுகுதாம்.

பிகு : மனதில் நின்றவர்கள் என்ற பகுதி நீண்டகாலமாக பதிவிடப்படாமல் விடுபட்டுள்ளது.உங்கள் மனதில் நின்ற அல்லது நிற்கக்கூடாத அந்தப்பேர்வழியைப்பற்றி இங்கே பதிப்பித்து உங்கள் நினைவுகளை பகிர்துகொள்ளுங்கள்.

3 comments:

கதிரவன் said...

Super daa

கதிரவன் said...

Super daa

Unknown said...

machi kallakkura.... ennatta eathum puthu thakaval vantha unnakku udane annuppuranda... superb da...