2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம்.இலங்கை பதிவுலகில் எமது மட்டட்தை சேர்ந்த மூன்று பதிவர்கள் கலக்கிக்கொண்டிருந்தார்கள்."புளொக்" எழுவதற்கு மிகப்பெரிய திறமை வேண்டும் என்ற எண்ணவோட்டத்தோடு இருந்த நான் அவர்களின் பதிவுகளை இங்கிலாந்தில் இருந்து ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.எமது மட்டத்துக்கு "புளொக்" தொடங்க வேண்டும் என்ற சலசலப்பு அந்நேரம் தான் கிளர்ந்தது."மச்சான் தயவு செய்து தொடங்குங்கடா" என்று ஆளாளுக்கு மாறி மாறி மூன்று பேரையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருத்தனும் ஒழுங்கான பதிலை சொல்லுறான்கள் இல்லை. காத்திருந்து ஒருநாள் முகநூல் சட்டில் சிக்கனை தின்று வளர்ந்த பதிவரை பிடித்து "மச்சான் நீயாவது கெதியா தொடங்கடா" என்று கேட்டு வைத்தேன்.நெல்சன் மண்டேலா,காந்தி பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருந்த அந்த பெரும் பதிவர் "தனிமனித தாக்குதலை நான் விரும்புவதில்லையாதலால் தொடங்க முடியாது" என்று பதில் போட்டு என் கடுப்பை கிளறி கனாக்காலத்தை தொடங்க வழிசமைத்தார்.

கடந்து போன நினைவுகளை மீட்ட தொடங்கப்படும் தளத்தில் காந்தீயமும்,சிவப்பு சித்தாந்தமும் பேச முடியுமா?.ஜூன் மாதன் 2009 ஆண்டு கனாக்காலம் தொடங்கியது.அன்று தொடங்க மறுத்த பதிவர்கள் எவரும் பதிவுலகில் உயிர்ப்புடன் இல்லை.தனிமனித பிரபலத்தை நோக்கமாக கொண்ட எந்த பதிவரும் நீடிக்க முடியாது.சுய திருப்திக்காகவும்,உள வெளிப்பாடாகவும் எழுதுபவர்களே பதிவுலகில் நிலைக்கிறார்கள்."மச்சான்! அடிக்கடி எழுதாட்டியும் மாதமொண்டு எண்டாலும் விடாமல் எழுதுறாய். அப்படியே தொடர்ந்து எழுது! நண்பனொருவன் சொன்ன வார்த்தைகள் இவை.தொடர்ந்து பத்து வருடம் எழுதுவதற்கு நண்பன் சொன்ன வார்த்தைகளே போதும்.

எச்சரிக்கை கடிதம்,மிரட்டல் கடிதம்,அனானி கடிதம் என்று பலதை கனாக்காலம் கண்டிருக்கிறது.விருப்பத்தோடு வாசிப்பவர்கள் அளவுக்கு கடுப்போடு வாசிப்பவர்களையும் கொண்ட தளம் இது.தளத்தில் பதிவுகளை இட்டு பங்களிப்பு நல்கிய பவானந்,இளம்செழியன்,சசிக்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.இத்தளம் தொடர்ந்து காத்திரமான படைப்புக்களை வழங்கி நீடிக்க உதவுமாறு "மட்டம் 2003" மாணவர்களிடம் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.




டொக்டர் பான் கீமூன் தனது முப்பது வருட சேர்விசில் இப்படி ஒரு மோசமான கேசை கண்டதேயில்லை.பழுதடைந்த தவளை சூப்பை வாயில் வைக்கும் போது வரும் அருவருப்பு உணர்வு "அதை" பார்க்கும் போதெல்லாம் வந்தது."கிழடு தட்டினவங்களுக்கு இப்படி இளம் பெண்களை இஞ்சினியர் என்ற காரணத்துக்காக மட்டும் கட்டிக்கொடுப்பதை தமிழ் சமுதாயம் நிறுத்தாதவரை இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்க இயலாது" என்று சொல்லியபடி பான்கிமூன் ஸ்ரெச்சரை தள்ளிக்கொண்டு வந்த பிலிப்பைன்காறனை பார்க்க அவன் "சேர்! அலமா! திஸ் வண் ஆ மெனி மெனி புறப்லம்" என்றபடி தலையை சொறிய ஆரம்பித்தான்.பான்கிமூன் ஒன்றும் ஏட்டை சப்பிதுப்பி உருவான சராசரி வைத்தியன் அல்லர்.தவழ்ந்து திரிந்த நாட்களிலேயே ஆறுமாதமும் நிரம்பியிராத அயல் வீட்டு பெண் மிங்காவின் மூக்கை கடித்து இழை போடவைத்தவர்.பத்தாவது வயதில் முத்தம் கொடுக்கும் போது மூக்கும் மூக்கும் இடித்துக்கொண்டால் என்னாவது என்ற ஐயம் எழுந்த போது மீளவும் மிங்காவின் உதட்டை கடித்து மாட்டுப்பட்டவர்.பிறகு 18வது வயதில் இனப்பெருக்கதொகுதி பற்றி படித்த போது கிளர்ந்தெழுந்த சந்தேகங்களை தீர்க்க மிங்காவை இழுத்துக்கொண்டு போய் 20 மாதங்களுக்குள், ஜெட்லீ புரூஸ்லீ எனும் இரண்டு ஆண் ட்ராகன்களுக்கு அப்பா ஆகிய மின்னல் வேகக்காரர்.



17/05/2029 11 PM டாக்டர் பான்கிமூன் மட்டுமல்ல சிங்கபுரியிலேயே மிகப்பிரபலமான மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையும் தனது ஐம்பது வருடகால வரலாற்றில் இவ்விதமான பிரச்சினையை கண்டதில்லை.பிணைந்திருந்த அந்த உடலங்கள் உள்ளாடைகளோடு இருந்தன.பெண் மயக்க நிலையில் இருந்தாள்.ஆண் கடுமையான வேதனையில் முனகிக்கொண்டிருந்தான்.முத்தமிட்டு கொண்டிருக்கும் போது பெண் நினைவிழந்துவிட  இருவரது வாய்களும் அப்படியே சிக்குண்டிருக்க வேண்டும்.கடவாய்த்தோலை இழுத்துப்பார்க்க அவள் பற்களிடையே ஆணின் கீழுதடு பொறியில் சிக்கிய எலி போல நசிந்து கிடந்தது.




"இது எப்படி நடந்தது என அறிய விரும்புகிறேன்.உன்னால் பேச முடியாதிருப்பதால் எழுத்து மூலமாய் தொடர்பாடலாம் சரிதானே?"

காகிதமும் பேனாவும் உதடுகள் பிணைந்திருந்தவன் எழுதுவதற்கு வாகாய் வைக்கப்பட்டன.

"எனது பெயர் சுதன்.நான் ஒரு புறஜெக்ட் மனேச்சர் வயது 45"

பான்கிமூன் காகிதத்தில் எழுதியிருந்தை பார்த்தவுடனேயே தன்னிலை மறந்து "சிறிலங்கன் தமிழன்" என்று உரக்க கத்திவிட்டார்.

"ஊர்முழுக்க மெனி மெனி சிரிலங்கன் தமிழ் Project Manager தான் .மேலே சொல்லவும்"

"இவ பேர் மாலினி.வயது 20.போன கிழமை ஊரிலை வச்சு கலியாணம் கட்டி கூட்டிக்கொண்டு வந்தனான்"

"அப்ப சிரிலங்காவில முத்தம் கொடுக்கேக்க இப்படி பிரச்சினை ஒண்டும் வரேலைதானே.சிங்கப்பூர் வெக்கை மாலினிக்கு ஒத்துக்கொள்ளாம "Heat Stroke" வந்திருக்கலாம்.இப்ப சரியாக்கிடுவன் கவலைப்படாதையும்"

பரபரத்தபடி ஏதோ ஒரு மருந்தை எடுக்கப்போன டொக்டரை கையை காட்டி தடுத்த P.M சுதன் மீள எழுதத்தொடங்கினான்.

"ஊரில ஒன்றும் முயற்சி செய்யேலை.வீடு முழுக்க ஒரே சனம்.அசௌகரியமா இருந்ததால பேசாம இருந்திட்டன்.இண்டைக்குத்தான் "Day off" போட்டிட்டு வந்து அலுவலை தொடங்கினனான்.என்னுடைய வீட்டுக்காறர் 45 வயசில கலியாணம் கட்டி வச்சதே பெரியவிசயம் டொக்டர்.அதுவும் இப்பிடி ஆகிட்டுது.நீங்கள் தான் என்னை வாழ வைக்கோணும்"

பதினெட்டு வயதில் குடும்பம் நடத்திய பான்கிமூனுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.இலங்கைதமிழனாய் பிறக்கவைத்து சிவில் இஞ்சினியரிங் படிக்க வைத்து ,சிங்கப்பூரில் புறஜெக்ட் மனேச்சர் ஆக்காததற்காக எல்லாம் வல்ல குங்பூ புத்தருக்கு மனதுள்ளே நன்றி சொல்லிக்கொண்டார்.

"ஒழுங்கா நீங்கள் பல்லு மினுக்காட்டியும் வாய் நாற்றம் தாங்க முடியாமல் மயங்கியிருக்க வாய்ப்பு உண்டு மிஸ்ரர் சுதன்.ஆனா இவளைப்பார்த்தால் "கோமா" நிலைக்கு போன ஆள் மாதிரியல்லவா இருக்கு"

"சுதன்! உங்களது மனைவி தமிழ் தானா?"

"யூ திங் ஐ ஆம் ஸ்ருபிட் ஆ?,அவள பார்த்தால் சைனாக்காரி போலவா இருக்கு?"

கடுப்பாகி சுதன் எழுதியதை பார்த்ததும் பான்கிமூன் "க்ளுக்" என்று சிரிப்பு வந்தது."முகம் ஓகே.உடம்பு அப்படி இல்லையே" என வாய் வரை வந்த வார்த்தைகளை எச்சிலோடு சேர்த்து விழுங்கிக்கொண்டார்.

பான்கிமூன் இப்போது மாலினியை நெருக்கமாக ஆராய ஆரம்பித்தார்.சருமம் அத்துணை திருத்தமாய் இருந்தது.நாசிகள்,விழிகள்,புருவங்கள் எல்லாம் அளவு தப்பாமல் செதுக்கியது போலிருந்தன."36- 28 - 34 வருமோ? இந்த இனத்தில் இப்படி ஒரு வளைவு நெளிவுகள் இருக்க வாய்ப்பேயில்லையே?".கண்களாலேயே அளவெடுத்து பார்க்க பொறிதட்டியது.


அவசரமாய் x கதிர் உபகரண கூடத்திலிருந்து உருவிக்கொண்டு வந்த ASM -990 (Advance survey meter) கருவித்தலைப்பை வைத்து மாலினியை புரட்டிப்புரட்டி பான்கிமூன் பத்து நிமிடங்களாக தடவிக்கொண்டிருந்தார்.கச்சைக்குள் கருவியை விட்ட போது சுதன் "சீபாய்" என்று தொடங்கி கெட்ட வார்த்தைகளை எழுதி திட்டியதை கண்டும் காணாததுபோல் கருமமே கண்ணாக இருந்தார்.எல்லாம் இடமும் பார்த்தாகிவிட்டது.அந்த ஒரு இடத்தை தவிர.யோசித்துக்கொண்டிருக்க நேரமில்லை.கண நேரம் தான்.பான்கிமூன் உள்ளாடையை விலக்கிவிட்டு கருவியை விட்டார்.

"கீக் கீக் கீக் கீஈஈஈஈஈஈஈஈ"

கருவியின் அலாரம் அலற சுதன் பந்தி பந்தியாக எழுதி திட்டிக்கொண்டிருந்தான்.மீற்றரில் "பீற்றா" கதிர்கள் சிக்கியிருந்தன.



23/05/2029 அன்று சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு பத்திரிகை செய்தி:

இயந்திர பெண் விவகாரத்தில் சிங்கப்பூர் சிறப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூரில் வதியும் பொறியியலாளருக்கு பாதுகாப்பற்ற இலங்கை தயாரிப்பான இயந்திர பெண்ணை ஏமாற்றி திருமணம் முடித்து வைத்த தரகர் இலங்கை போலீசாரின் உதவியோடு கைது செய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய எந்தவொரு தமிழ் பெண்ணும் மறுக்கும் நிலை இலங்கையில் காணப்பட்ட போதும் சுதன் வீட்டார் பெருமளவிலான பணத்தை தரகு கூலியாக தருகிறோம் என ஆசை காட்டியதால் இந்த இயந்திர பெண்ணை வடிவமைத்து கட்டி வைத்ததாக தரகர் தெரிவித்தார்.30 ஆண்டுகால ஆயுட்காலமுள்ள அணு மின்கலம் இணைக்கப்பட்டிருந்த போதிலும் குளிரூட்டும் அமைப்பு வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெண்ணின் இயக்கம் சடுதியாக நின்றதே இந்த "குட்டு" அம்பலத்துக்கு வர காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது."மாலினியை" வடிவமைத்த மொறட்டுவை "மெக்கானிக்கல்" பீட மாணவர்களான "அலிபாய்" "கெமிக்கல் அலி" ஆகியோரையும் இலங்கை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதே நேரம் இயந்திரமாலினியை இயக்க உபயோகிக்கப்பட்ட Tritium பற்றரி முறையாக கவசமிடப்படாமையால் கதிரியக்க தாக்கத்தால் சுதனின் ஆண்மைக்கு பங்கம் உண்டாகியிருக்கலாம் என்றும்அஞ்சப்படுகிறது.