தற்போதைய நிலவரம் - 02
இன்று காலை கனாக்காலம் கலையகத்துக்கு கிடைத்த ஒரு மின் அஞ்சலில் பிரபல "சிப்ட்" அடிகாரனாகிய ஜெயசுதன் லண்டனில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் அழகிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் கிடைத்தன.பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்த அந்தப்புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த கானாககாலம் பொறுப்பாசிரியர்கள் அவை "ஜெயசுதானந்தா" வினுடையவை தான் என்பதை உறுதிப்படுத்தினர்.இவர் கூறும் வாழ்க்கையின் முன்னேற்றம் தொடர்பான அறிவுரைகளுக்கு உலகலாவிய ரீதியில் பக்தர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.அத்தோடு ஸ்கைப் மூலமாக இன்றளவும் நண்பர்களோடு அனைத்துலக நட்புபேணுவதுமிவரின் சிறப்பு அம்சமாகும்.சீதனம் வாங்கியே கலியாணம் செய்ய வேண்டும் என்ற கொள்கை உடைய ஜெயசுதானந்தா சுவாமிகள் அருளிய
"மொறட்டுவை இஞ்சினியர் எண்டாலே நல்ல சீதனம் வாங்கலாம்,லண்டனுக்கு வந்தா இன்னும் வாங்கலாம்,Msc செய்தா அதை இரட்டிப்பாக்கலாம்"
என்ற அருள் வாக்கு மொறா மாணவர்கள் மத்தியில் மிகப்பிரபலமானதாகும்.இவ்வாறு வெளியே சொன்ன போதிலும்...
"என்னதான் உள்ள படிச்சு இருந்தாலும் வெற்றுக்கண் பார்வைக்கு அது தெரியாது,ஊனக்கண்ணுக்கு தெரிவது உடம்பு தான்,எனவே உடம்பை வளர்த்து சீதனம் வளருங்கள்"
என நெருங்கிய வட்டாரங்களில் சமீப நாட்களாக அருளுரைத்ததாக தகவல்கள் கனாக்காலம் நிருபருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன."ஜெயசுதானந்தாவின் இவ் உள்ளக்கிடக்கையே உடற்பயிற்சி நிலையத்துக்கு அவரை செல்ல தூண்டி இருக்கலாம்"என அவரது பரம சீடனாகிய கொழும்பு பல்கலை மாணவன் சிவதீபன் நிருபருக்கு தெரிவித்தார்.இது ஒரு புறமிருக்க ஜெயசுதானந்தாவின் பேச்சாளராகிய சேகரனை தொடர்பு கொண்டு இந்த புகைப்படங்கள் தொடர்பில் கேட்டபோது "இதற்க்கும் சுவாமிக்கும் எத்தொடர்பும் இல்லை,அவை கணணி வரைகலை மூலம் செய்யப்பட்டவை" என மறுதலித்தார்.இதை தொடர்ந்து அவசரமாக படங்களை தணிக்கை செய்த ஆசிரியர் பீடம் அழகிகளோடு இருக்கும் புகைப்படங்களை நீக்கி விட்டு ஏனையவற்றை வாச்கர்களுக்கு வெளியிடும் முடிவை எடுத்தது.
புகைப்படங்களை கீழே பாருங்கள்....
வெறித்தனமான உடற்ப்பயிற்சி
ஜெயசுதானந்தா சீடன் சிந்தானந்தா
ஜெய,சிந் ஆனந்தர்கள் பயிற்றுனருடன்..
பயிற்றுனரிடம் திட்டு வாங்கும் ஜெயசுதானந்தா
பயிற்றுனர் "8 பேக்" சுகா
