
மூன்றாண்டுகள் தாண்டி விட்டிருந்த போதிலும் அச்சம்பவம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை.அச்சம்பவத்தைவிட பாரதூரமான சம்பவங்கள் பல எனது வாழ்க்கையில் நடைபெற்றிருந்த போதிலும் அவை ஒவ்வொன்றிற்க்குப்பின்னாலும் ஏதாவது காரணம் இருந்தது.அநேககாரணங்கள் அடித்தது,அடிவாங்கியது,அடிவாங்கினவன் ஆள் வைச்சு திருப்பியடிச்சது,மிரட்டியது,மிரட்டலுக்கு உள்ளானவன் போட்டுக்கொடுத்து உள்ள போனது என்ற வகைக்குள் உள்ளடங்கிவிட்டக்கூடியவை.ஆனால் "அந்த" சம்பவத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பிலான என தேடலுக்கான பதில்கள் பல தளங்களில் கிடக்கின்றன.நீங்கள் வீதியால் போகிறீர்கள் திடீரென்று ஐஞ்சாறு அன்பர்கள் குறுக்கா வந்து தட்டிப்பிழிந்துவிட்டு செல்கிறார்கள்.போகும் போது "மவனே கிக்சாவ இனிமே பார்த்தியெண்டா பின்னிடுவம்" என்று சொல்லிவிட்டும் செல்கிறார்கள்.அடிவிழுந்த வலி ஒருபக்கம் இருந்தாலும் மனக்குழப்பம் பெரிதாக இருக்காது.KICKஷா என்ற மட்ட பிகருக்கு முந்தநாள் போட்ட கடலை பயிராகி இன்று விளைந்திருக்கிறது என்று மனதுக்கு தெரிந்துவிடும்.சேதவிபர அடைப்படையில் அடுத்த முறை கிக்சாவை கண்டால் காததூரம் ஓடுவதா? அல்லது கடலையை இன்னும் ஆழமா போடுவதா? என்று சிந்தித்து முடிவென்றை எடுப்போம்.
ஆனால் முன்னப்பின்ன தெரியாத டம்மி பிகர் ஒன்று திடீரென காவல்த்துறை வாகனத்தில் வந்து "இதோ! இவன் தான் என்னை ரேப் பண்ணினது" என்று போட்டுக்கொடுத்து உங்களை அண்டவெயாரோடு முட்டிக்கு முட்டி தட்ட வைத்தால் எப்படி இருக்கும்?...இதே போலத்தான் அச்சம்பவமும் நிகழ்ந்தது.
அந்த வழக்கை முதலில் அறிக்கையாக சுருக்கித் தருவது இவ்விடத்தில் உசிதமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
குற்றச்சாட்டு-2007 இல் மொறட்டுவைக்கு கல்வி பயில வந்த தமிழ் மாணவி ஒருவரை மிகக்கொடூரமாக உடல் உள நெருக்குதலுக்கு உள்ளாக்கியமை,பின் தொடர்ந்து வந்தமை,தொலைபேசியில் மிரட்டியமை
குற்றவாளிகள்- முதலாம் இலக்க குற்றவாளி,இரண்டாமிலக்க குற்றவாளி
விளைவுகள்- பாதிக்கபட்ட மாணவி ஒருவருடத்தை தவற விட்டு அடுத்த வருடத்தினரோடு சேர்ந்து படிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் மிகக்கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.பல்கலைக்கழகம் வரவே அஞ்சுமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டபட்டவர் வாதம்-குறிப்பிட்ட பெண்மேல் மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த பன்னாடை மையலுற்றது மட்டுமே எமக்கு தெரியும்.வேறு எதுவும் இது தொடர்பில் தெரியாது.
மட்ட சகமாணவர் கருத்து-குறிப்பிட்ட பெண்ணுக்கு இவ்வாறான பிரச்ச்சினைகள் ஏற்படுத்தப்பட்டதாக நமக்கு தெரியாது.குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அப்பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் கொடுத்ததாக அறியவில்லை.ஆனால் ஒரு தமிழ்ப்பெண் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதால் அவர் தரப்பில் உண்மை இருக்கலாம்.
பல்கலை வழக்கை விசாரித்த "வணிகதுங்க" தலைமையிலான அரைலூசுக்கும்பலின் கருத்து-பெண் பாதிக்கப்பட்டது உண்மை.இம்மாணவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.இவ்வாறான சம்பவத்தில் எதிர்காலத்திலீடுபடுபவர்கள் பயம்கொள்ளும்படி தண்டனை இருக்க வேண்டும்.
காவல்துறை நிலையத்திலும் தாக்கல் செய்யப்பட்ட அதே வழக்கை விசாரித்த தலைமைக்காவல் நிலைய அதிகாரி கருத்து-
"மல்லி! பெம்பிளை வழக்குப்போட்டா முடிவு உங்களுக்கு சாதகமா ஒருகாலமும் வராது.அந்த விசரி இருக்கிற பக்கமே போகாதையுங்கோ!.இனிமேல் கவனமா இருங்கோ!"
தற்போதைய நிலவரம்- பிரச்சினையை தொடங்கி வைத்த மட்டத்தின் பிரதிநிதியானவரும் அப்பெண்ணும் ஜோடியாகி விட்டார்கள்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தால் தண்டிக்கபட்டு,சிங்கள காவல்துறை நிலையங்களாக அலைந்து நொந்து நூடில்ஸ் போல ஆகிப்போனார்கள்.
முழு சம்பவத்தையும் அலசிய உளவியலாளர் கருத்து-
குறிப்பிட்ட பெண்ணுக்கு மாணவர் தலைவரான மங்கோலியன் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது.அதன் காரணமாக கல்வியை தவற விட்டிருக்கிறார்.அல்லது கண்டிப்பான வீட்டுக்காரருக்கு அஞ்சி மனதில் உண்டான ஈர்ப்பை மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.அதன் காரணமாகவும் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல்ப்போயிருக்கலாம்.பெறுபேறுகள் குறையுமிடத்து முதல்தெரிவுகளான பொறியியல் பீடங்களுக்கு போகமுடியாமல் போனால் வீட்டார் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை இல்லாமல் போக வாய்ப்புண்டு என அஞ்சி பரீட்சையை அடுத்த வருடம் எதிர்கொள்வதற்காக காரணங்கள் தேடியிருக்கிறார்.அத்தருணத்தில் மங்கோலியனோடு கூடவே சத்தமாக சிரித்தபடி திரிந்த குற்றம்சாட்டப்பட்டவர்களான இருவரும் மனதில் வர காரணங்களாக்கியிருக்கிறார்.அக்காரணக்களுக்கு கொழும்பு மாணவிகளான வீணை வாசிப்பவரும் இன்னும் சிலரும் உரமேற்ற இறுதியாக அதை வழக்காக்கி இருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர் வாதம்-
பொய்வழக்கு போட்டதைக்கூட மன்னித்து விடலாம் ஆனால் "பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மாணவர்கள்" என போட்டுக்கொடுத்து மிகச்சிக்கலான காலகட்டத்தில் உயிராபத்தை ஏற்படுத்த முயன்றதை மட்டும் மன்னிக்கவே முடியாது.தமிழனான அக்குறிப்பிட்ட பெண்ணின் தந்தை இப்படி காவல்துறைநிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டை சிங்களவரான நிலையபொறுப்பதிகாரி கோடிட்டுக்காட்டி "நான் என்றபடியால் தப்பித்தீர்கள்,வேறு எவராவது என்றால் அவ்வளவுதான்" என்று சொன்னதையும் மறக்க முடியாது.சரிபிழைகளுக்கு அப்பால்ப்பட்டு இவ்வகையான அசிங்கமனோபாவத்தின் மூலப்புள்ளி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு போகும் போது தெரியும் முடிவிடம் எப்பவும் போல அருவருப்பாகவே காட்சியளிக்கிறது.
{வழக்கு வளரும்}