
ஆனா என்னைப்பொறுத்த வரை "ஆட்களுக்கு கிறிஸ் பூசி கருப்பாக்கி மிரட்டுவது" என்ற ஐடியா செம மொக்கையாகவே ஆரம்பத்தில் பட்டது.ஆனால் கிரிஸ் பூத வில்லன்கள் பெண்களை சீண்ட ஆண்கள் ஹீரோவாகி விரட்ட,பொலீஸ் புலனாய,இராணுவம் தேடுதல் வேட்டை நடத்த, பாராளுமன்றத்தில் பரபரப்பு விவாதம் போக......... சூடு கிளம்பி எல்லாமாக சேர்ந்து ஒரு ஹாலிவூட் சினிமா ரேஞ்சுக்கு தூள் கிளப்புகிறது.மூலக்கதை மொக்கையா இருந்தாலும் திரைக்கதை,காட்சியமைப்பு பக்காவாக இருந்தா படம் பிய்த்துக்கொண்டு போகும் என்பதற்க்கு நல்ல ஒரு உதாரணமும் ஆகிவிட்டது.அத்தோடு கிரிஸ் பூதங்கள் விவகாரத்தில் பலர் கோபப்பட்டு இருந்தாலும் அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருப்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.பூத வேசம் போட்டவர்கள்,அவர்களை விரட்ட காவல் இருக்கும் விடலைப்பெடியள் என ஒரு சுறுசுறுப்பான சமுதாயம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.இது நிச்சயமாக என்றோ ஒரு நாள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி சமைக்கும்.

இந்த பூத விவகாரம் நாட்டுசனத்துக்கு வேணுமெண்டா புதுசா இருக்கலாம்.ஆனா கட்டுப்பெத்தை பெடியளுக்கு இது ரொம்ப பழசு.ரஜீந்திர தாசுக்கு ரொம்ப ரொம்ப பழசு.அத்துக்கொறளை கிழவன் வீட்டில படுத்திருக்கேக்க சுவரால குதிச்சு ரஜீந்திரதாசின்ர வண்டிய பிறாண்டிப்போட்டு ஓடின பூதம் பற்றி அவனட்ட கேட்டா கதை கதையா சொல்லுவான்.அச்சு சுனாமியில அள்ளுபட்டுப்போனான் எண்டு யாரோவிட்ட கதைய நம்பின செழியன் மறுநாள் அச்சு நேரில் வர ஓடின ஓட்டம் போல ஒருத்தரும் கிறிஸ் பூததை கண்டு ஓடியிருக்க மாட்டார்கள்.கள்ள இளனி பறிக்க உயரமான தென்னையில் ஏறி சறுக்கி மூஞ்சி தவிர முன்பக்கமெல்லாம் தோல் உரிபட்ட அலியப்பா கத்தரி கலரில மருந்து பூசிக்கொண்டு கொஸ்டல்ல திரிஞ்சத பார்த்திருந்தா கிறிஸ் பூதங்களுக்கே அடிவயிற்றைக்கலக்கும்.இதைவிட டேஞ்சர் பூதம்,நூலக பூதம்,குத்துப்பூதம்,கதிரைப்பூதம்,கெமிக்கல் பூதம் என பல வகைகள் பார்த்தவர் நாங்கள்.

பூதம் எண்டா இப்பிடி இருக்கோணும்.......
குட்டிக்கதை
2007 ஆமாண்டின் இறுதிப்பகுதி அது.எமது விடுதியின் அறைக்கதவு சௌந்தரின் தாக்குதலுக்கு இலக்காகி நெறுங்கி விட்டிருந்தது.ரஜித் இனது அறைக்கதவில் உதைந்து அது கடுமையாக ஆடிக்கொண்டிருந்தது.மர்ம மனிதன் நெறுக்கி விட்டதாக விடுதி பொறுப்பாளரிடம் முறைப்பாடு கொடுத்து மீள திருத்தி தரும்படி கேட்டிருந்தோம்.எமக்கு கீழ் மாடியில் இருந்த பவான் இவை எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தார்.ஒரு நாள் வெறியில் வந்த சிங்களபெடியன் தனது நண்பனின் அறையென்று பவானின் அறைக்கதவை திறக்க முயல அது திறபடவில்லை.ஆனால் கதவு தாளிடப்படாமலே இருந்தது.கடும் வெறியிலும் தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்டாக எண்ணிக்கொண்டானோ தெரியவில்லை....வெறும் கையாலேயே அடித்து கதவில் ஒரு ஓட்டையை போட்டு அதனூடு கையை விட்டு உள்பக்கமாக திறந்து உள்ளே பாய்ந்து விட்டான்.இத்துணைக்கும் அறையுள் இருந்த பவான் கலககாரங்கள் வாறாங்கள் என்று எண்ணி பல்கனிக்கு ஓடிவிட்டான்.கோகுலனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.பவானிடம் இருக்கும் நெறுக்கு தீனிகளை சாப்பிட வந்த அப்பாஸ் கதிகலங்கி போய் நின்றான்.சத்தம் கேட்டு ஓடி வந்த எமக்கு அந்த வாரம் முழுக்க சிரிப்பு சிரிப்பா வந்தது.பிறகு அதுவும் மர்ம மனிதன் தாக்குதலாக விடுதி பொறுப்பாளரிடம் பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து நடக்கும் மர்ம மனிதன் ஊடுருவலை தடுக்க எண்ணிய வேர்டன் மாத்தயா பிரதான கதவை கடின பலகையில் போட்டது தான் செம காமெடி.இத்தனைக்கும் அந்த பிரதான மர்மமனிதன் எமது அறைக்குள் பெக்கை போட்டுவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தார்.
மர்ம மனிதன் தாக்குதலுக்குள்ளான கிண்ணியா இளைஞர் பேட்டி - காணொளி
பிற் குறிப்பு- இந்த பதிவை போட்டதன் நோக்கம் இதுதான்-
பெண் கிறிஸ் பூதபிகருகள் உங்கள் ஏரியாவில் நடமாடினால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.ஏனென்றால் தற்போதைய நிலவரப்படி ....... ஐ விட பூதங்களே மேல்.
"எனக்கொரு பூதம் வேணும்மடா!"
"செம கிறிஸ் பூதமா வேணும்மடா!"