தற்போதைய நிலவரம்-04

.

எமது மட்டத்தின் விஞ்ஞானியான கெமிக்கல் அலிபாய் மிட்சம் நகரில் உள்ள மணல் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் கனாக்காலம் நிருபருக்கு தூக்கிவாரி போட்டது.ஏனென்றால் அந்த வீடு அவரின் தற்போதைய இருப்பிடத்துக்கு 50 மீற்றர் தொலைவிலேயே இருந்தும் கடந்த 2 மாதங்களாக அலிபாய் கண்ணில் தட்டுப்படவில்லை.தீவிர புலனாய்வு முடுக்கி விடப்பட்டு பெறப்பட்ட தகவல்கள் அதவிட மிக அதிர்ச்சியை தருபவையாக இருந்தன.அதாவது அலிபாய் வீட்டுக்குள் ஜம்போ சைஸ் டெடி பியர்,குரங்கு பொம்மைகளோடு குலாவி மகிழ்வதோடு அவற்றோடு உறங்குவும் செய்கிறார்.அதைவிட உள்வீட்டு ஜிம் ஒன்றை பெரும் செலவில் தருவித்து உடம்பை இரும்பாக்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு தொடரும் பட்சத்தில் விரைவில் ஒரு குழந்தை மனதுள்ள முரட்டு ஹீரோ ஒருவர் தமிழ் திரையுலகத்துக்கு கிடைப்பது உறுதி.





முகுந்தராசன் சில நாட்களாக முக நூலில் அடிக்கடி தட்டுப்பட்டு வருகிறாராம்.தலை வளர்த்து டெரரா போஸ் குடுத்த சில நாட்களிலேயே அதை நேராக்கி இன்னொரு போட்டோ போட்டார்.அடிக்கடி இயற்கை அழகை காட்டும் படங்களை முகநூலில் போட்டு வருவதுவும்,கருத்துக்கள் வெளியிடுவதும் குறித்து அவதானிகள் பலத்த சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.தனிமையை போக்க முகநூலை நாடும் பொதுவான காரணியோ பெண்கள் சம்பந்தப்பட்ட விசேட காரணியோ இதன் பின்னால் இருக்கலாமென்பது அவர்கள் கருத்தாகும்.எது எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் சரிதான்.





சிங்கபுரியில் இருந்த 7ஜி கும்பல் பெரிய பிரித்தானியாவுக்கு தளத்தை நகர்த்த முடிவெடுத்துள்ளதையடுத்து டகோட்டாவிலிருந்த தலைமைச்செயலகம் காலி செய்யப்பட்டுள்ளது.சுகா ஆவணிமாதமே பிரித்தானியாவுக்கு பின்வாங்கி ஓடியதையடுத்து ஜோன் கொன்சாலும் குடிகாரன் சௌந்தரும் பிரித்தானியா பயண ஏற்பாடுகளை கவனிக்க இலங்கைக்கு பயணமானார்கள்.மிஞ்சியிருந்த அலியப்பாவும் சிரிப்பு ரவுடியும் சென்ற கிழமை வீட்டை காலி செய்து கொண்டு அறை ஒன்றுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.மாசி மாச போனஸ் கிடைத்ததும் பிரித்தானியாவில் சிரிப்பு ரவுடி தரையிறங்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.அலியப்பா புரூணை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்னதான் இருந்தாலும் ஆற்றங்கரையில் இருந்த அந்த அழகிய இல்லத்தில் இருந்த மகிழ்வை ஆயுளுக்கும் மறக்க முடியாது.





பிரித்தானியவில் இருந்து கனடா பக்கமாக இடம்பெயர்ந்த சசிக்குமார் பற்றி தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக கனாக்காலம் செய்திப்பிரிவுக்கு அறிவிக்கவும்.பலகாலம் தொடர்பில் இல்லாத இவர் கனடாவில் கொட்டும் இரண்டடி உயர பனிக்குள் புதைந்து போயிருக்கலாம்,அல்லது சூறைக்காற்றில் பறந்து உயரமான யூக்கலிப்ப்டஸ் மர வட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.உறுதியான எலும்பும் டெரரான பாடியும் கொண்ட இவர் இறுதியாக பிரித்தானியாவில் பிரெஞ்சு தாடியுடன் சுற்றி திரிந்த போது எடுக்கப்பட்ட படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.





நிகழ்கால நாட்களில் மட்டத்து நண்பர்,நண்பிகள் பலருக்கு கலியாணம் நடந்து வருவது மிக்க மகிழ்சியை அளிக்கிறது.ஆனாலும் பலரும் பெண்நண்பிகள் கிடைத்தவுடன் நண்பர்களுடனான தொடர்புகளை குறைத்துக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.கங்காரு நாட்டில் வதியும் குமாரனும் நார்வே நாட்டு சிறுத்தையும் இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்து கொண்ட ஆட்கள்.இது குறித்து தண்ணிய போட்டுவிட்டு சிலாகித்த பெரிய பிரித்தானிய வாழ் மட்டத்து நண்பர்கள் "நமக்கும் கலியாணம் ஆகும் தானே? அப்ப நாமளும் பெடியள் கழட்டி விடுவம்" என முடிவெடுத்து கடுப்பில் திரிவதாக கேள்வி.


பிற் குறிப்பு-
தற்போதைய நிலவரம் பகுதி தனிப்பட்ட எவரையும் தாக்குவதை நோக்கமாக் கொண்டதல்ல.இதை புரிந்து கொள்ளும் மனமுதிர்சியில்லாத் சிக்கன்களும்,மங்கோகளும் இங்கே வருவதை நிறுத்தவும்.

0 comments: