நீண்ட இடைவெளிக்கு பின்னர் வழக்கிட்ட காரிகை பாகம்-02 மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.இயந்திரகதியில் ஓடும் வாழ்நாட்பொழுதுகளில் உட்கார்ந்து 3 வருடங்கள் முன்பாக நடைபெற்று முடிந்த அருவருப்பான ஒரு நிகழ்வை மீட்டி எழுத்துக்களாக்குவது கடினமானது.இருந்த போதிலும் இச்சம்பவத்தை பதிவிடுவதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு மாணவனாவது இவ்வாறான அசாதரண மனநிலை கொண்ட பெண் மூலமாக பாதிக்கப்படும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படுமென்ற இழையோடும் நம்பிக்கை தொடர்ந்து எழுத உத்வேகம் தருகிறது.பாகம்-01 பரபரப்பை கிளறிய அதே நேரம் சில சுவாரசியமான எதிர்வினைகளுக்கும் வழிவகுத்து இருக்கிறது.அவெதிர்வினை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்த சிங்கபுரி வாழ்க்கையை சில நாட்களாய் பரபரப்பாக்கி விட்டிருந்தது.




07/05/2011 அன்று சிங்கப்புரி வாழ் மொறட்டுவை தமிழ் மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சி பலூன் உடைப்பு,பேப்பர் பாலம் கட்டுதல்,இனிய பாடல்கள் போண்ற சிறப்பு நிகழ்சிகள் புடைசூழ நடைபெற்று கடந்து போனது.நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்த மூத்த அண்ணாமாருக்கு நன்றிகள்.நிகழ்சிக்கான தயாரிப்பு வேலைகள் பலவற்றையும் 2003 மட்டத்தில் எவ்விடயத்தையும் எதிர்த்து கதைப்பவர் பொறுப்பேற்றிருந்தார்.நிகழ்சிக்கு 2003 மட்டத்தை சேர்ந்தவர்களை அழைக்கும் பொறுப்பு மட்ட கைப்பொம்மை தலைவர் மங்கோலியனுக்கு தரப்பட்டிருந்தது.கைக்கு வந்த பொறுப்பை மூலமாக வைத்து "வழக்கிட்ட காரிகை-பாகம்-01" பதிவுக்கான எதிர்வினை ஒன்றுக்கு மங்கோலியன் திட்டமிட்டார்.அதன்படி 7ஜி குழுவினருக்கான நிகழ்ச்சி அழைப்பு தவிர்க்கப்பட்டது."பெரிய இடத்து ஆசீர்வாதத்துடன் தான் நடக்கிறது போல" என்றெண்ணி ஒதுங்கிப்போக முடிவெடுத்தவர்கள் "மங்கோலியனின் தன்னிச்சையான் நடவடிக்கையே இது" என்ற தகவல் கிடைத்ததும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் குறும்படம் ஒன்றை திரையிட்டு பங்களிப்பை செலுத்தவும் திட்டமிட்டார்கள்.மிகுந்த சிரமத்தோடு சிலநாட்களுள் உருவாக்கிய அக்குறும்படம் இறுதி நாளன்று திரையிட உகந்தது அல்லாததாக நிராகரிக்கப்பட்டு அருவருப்பான அரசியல் ஒன்று அரங்கேற்றப்பட்டது.இத்தோடு இவ்விடயம் நிற்க இனி பிரதான கதைக்கு நான் வருகிறேன்.




L-புளொக் கன்ரீன் களைகட்டிப்போய் இருந்தது.புதிதாக மாணவர்கள் வந்த நாள் அது.பெடியள வெருட்டுவதும் பெட்டையள வெருட்டுவது போல வழிவதுமாய் போய் கொண்டிருந்த இடத்துக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் கமல்சும் காலடி எடுத்து வைத்தோம் சனியன் எமக்காக காத்திருப்பதை அறியாமல்.மங்கோலியன் முகமெல்லாம் பல்பு எரிய விட்ட படி ஒரு பெண்ணோடு பேசியபடியிருந்தார்.மங்கோலியன் வேண்டுகோளின் படி எங்கட மட்ட பெடியள் "அவரை உனக்கு பிடிச்சிருக்கா?" என்று அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நாமும் எங்களின் பங்குக்கு மங்கோலியன் பெருமைகளை சொல்லி சிறுவிரிவிரை ஒன்றை நிகழ்த்தி விட்டு விரிவுரைக்கு ஓடிவிட்டோம்.கடந்து வந்த நாட்களில் போவோர் வருவோரெல்லாம் "அவனை உனக்கு பிடிச்சிருக்கா" என்று கேட்பதுவும் அப்பெண் மௌனமாக இருப்பதுவும் சகஜமாகி விட்டது.எதையும் பிளான் பண்ணி செய்யும் கமல்ஸ் இரகசியமாக ஒரு நாள் மங்கோலியன் அவளை காதலிப்பதாக காதில் போட்ட தகவல் குபீர் சிரிப்பை வரவைத்தது.அப்பெண் கடந்து போகையில் "மங்கோ" மங்கோ" என்று மங்கோலியன் பெயர் சொல்லி ஸ்டோன் பெஞ்சில் இருந்து கத்துவதும் சில நாட்களில் அலுத்து போனது.ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த வேளையில் யாரோ காமெடிக்கு ஒட்டிய போஸ்டரில் இக் காதலையும் பிட் ஆக இழுத்துப்போட்டு விட என்னோடு வந்து மங்கோலியன் வாய்த்தர்க்கம் செய்தது பசுமையாக இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.3ம்வருட ஆரம்பத்தில் நடந்த இந்நிகழ்வு தொடர்ந்து வந்த தொழில்ப்பயிற்சி காலமான 6 மாதங்கள் முடிவில் ஏறக்குறைய மறந்து போயிருந்தது.




அது எமது ரெயினிங் பீரியட் இறுதிப்பகுதி நாட்களில் ஒன்று,வெள்ளிக்கிழமை."மங்கோக்கு பம்பலப்பிட்டியில் வைச்சு அடிச்சிட்டாங்களாம்" என்று அழைப்பு வர வேகமாக விரைந்தேன்.நூலகத்துக்கு சமீபமாக மட்டத்து பெடியள் எல்லாரும் ஆக்ரோசமாக விவாதித்தபடி இருந்தார்கள்.கோயிலுக்கு போய் வரேக்க அடிச்தையும் கூடப்போன எல்லோரும் தப்பி ஓடி விட சசிவர்ணன் அவங்களோடு அடிபட்டு ஊமைக்காயங்களோடு தப்பியது பற்றியும் கமல்ஸ் விபரித்தான்.அந்நாளில் பாமன்கடை தாதாவாகிய எம்மட்ட பேர்வழி எங்களோடு பிரச்சினைப்பட்டுக்கொண்டு இருந்தார்.கொழும்பில் உள்ள குழுப்பெடியளிடம் "அவங்களுக்கு அடிச்சு விடு,அடிச்சு விடு" என்று கேட்டபடி திரிந்தது எமது செவிகளையும் எட்டியிருந்தது.ஆனாலும் அவரை வெறும் அட்டைக்கத்தி என கருதியதால் கணக்கெடாது விட்டிருந்தோம்.இச்சம்பவத்துக்கு காரணங்கள் தேடிய போது விடையாக பாமன் கடை ரவுடி பிரமாண்டமாக் தெரிந்தார்.எதிர்வினைக்கு திட்டமிட்டோம்.தாக்குதல் குழு அடித்து நெறுக்க துடித்தது.வழமை போல் அரசியல்க்குழு தடுத்தபடியிருந்தது.பத்துவிதான விடுதியில் அடிவாங்கி உடைந்து போன மூக்கோடு இருந்த மங்கோலியன் தன்னை அடிச்சவங்கள் "சுகந்தமாற எங்க?" எங்க?" என்று கேட்டதாக சொன்னதும் "அவனே தான் ஆள் வச்சு அடிச்சிருப்பான்" என்று உறுதி செய்யப்பட்டது.அறிவக குழுமம் "நீ வாய குடுக்கிறது,அவன் பாவம் அடிவாங்கிட்டான்" என்று என்னோடு கோபப்பட்டது.நீண்ட விவாதத்துக்கு பின்னர் மிகுந்த ஆத்திரத்தோடு கட்டிலில் விழுந்த பொழுதுகளில் அந்த சந்தேகம் முளைவிட்டது.அவசரமாய் அழைப்பெடுத்து 7ஜி குழுமத்துக்கு விபரம் சொல்ல காதல்கிறுக்கனும்,நாயகனும் மங்கோலியன் அறை யன்னலருகே இருந்து வேவு பார்க்க,செவியில் விழுந்த வசனங்கள் வேறு கதையை சொல்லின.

காரிகை வருவாள்...........

8 comments:

Anonymous said...

ஏன்டா கதைய பாதில நிப்பாட்டிட்டா...அந்த ரகசியம் தான் என்ன???

Anonymous said...

நான் இங்கே அனோன்னியாக கருத்திடுகிறேன் மன்னிக்கவும்..

உங்களுடைய இந்த கதை ஒரு பெண் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.. நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் உங்களிடத்திலும் நிறையவே பிழைகள் இருக்கின்றன..

ஒரு சில நடந்த சம்பவங்களுடன் கோர்த்து இவ்வாறு பொய்களை எழுதுவது வருந்தத்தக்கது.. உங்களுக்கும் அக்கா தங்கச்சிகள் உள்ளனர் அல்லவா?? தயவுசெய்து சிந்தியுங்கள்..

சற்றே மனிதாபிமானத்துடன் இருங்கள்..

Anonymous said...

Story super a pokuthu?
Yar antha mango?

Kaipillai said...

அனானி 1- பாதியில நிப்பாட்டாம முழுசா எழுத நேரம் கிடைக்குதில்லை.அவசரம் வேண்டாம்.படிப்படியா எழுதுகிறேன்.

Kaipillai said...

அனானி 2-
///நான் இங்கே அனோன்னியாக கருத்திடுகிறேன் மன்னிக்கவும்..///
மன்னிப்பு தமிழ்ல எனக்கு ரொம்ப பிடித்த வார்த்தை.

//
உங்களுடைய இந்த கதை ஒரு பெண் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.. நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் உங்களிடத்திலும் நிறையவே பிழைகள் இருக்கின்றன..///

எனது தரப்பில் பிழை இருந்திருந்தால் இக்கதையை மறைக்கவே முயன்றிருப்பேன்.தொடராக எழுத முயன்றிருக்க மாட்டேன்.

//ஒரு சில நடந்த சம்பவங்களுடன் கோர்த்து இவ்வாறு பொய்களை எழுதுவது வருந்தத்தக்கது.. //
சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்மை,பொய் தெரியும்.நீங்கள் பொய்யை எழுதுகிறேன் என வருந்தினால் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

// உங்களுக்கும் அக்கா தங்கச்சிகள் உள்ளனர் அல்லவா?? தயவுசெய்து சிந்தியுங்கள்..//
ஆம் உள்ளனர்.பெண்ணும் ஆணும் சரிசமமானவர்கள்.பெண் என்பதால் பிரத்தியோக கரிசனை காட்டுவது தேவையற்றது.தவறு செய்தவர்கள் எவராயினும் அதன் விளைவின் ஒரு பகுதியை என்றாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.பெண் என்று பார்த்து சோனியா,சந்திரிக்கா போண்றவர்கள் நமக்கு இழைத்த அநீதிகளை மன்னித்துவிட முடியுமா?.

///சற்றே மனிதாபிமானத்துடன் இருங்கள்..////
ayyoo ayyoooo...

Kaipillai said...

அனானி 3! விடிய விடிய மங்கோலியன் கதைய கேட்டிட்டு......விடிஞ்சாப்பிறகு மங்கோ யார்? எண்டா என்ன அர்த்தம்?

Anonymous said...

என்னது அருவருப்பான அரசியல் நிறைவேறினதா???உங்கட கும்பல் 4வருஷம் கம்பசில காட்டின அரசியல விட ஒண்டும் பெருசா அங்க நடக்க இல்ல...உங்கள முதல்ல நிகழ்ச்சிக்கே கூப்பிடவே இல்ல..கைய நனைக்கிறதுக்கு டைம்க்கு திறந்த வீட்டுக்க நாய் நுழையிறமாதிரி வந்து விழுங்கிப்போட்டு ( காசும் குடுத்திருக்கமாட்டியல் ) பல்ல இளிச்சி போட்டோக்கு போஸ் குடுத்திட்டு கதைக்கிற கதைய பார். உங்கள உசுப்பேத்துரதுக்கு ஒரு கூட்டமும் நீ எடுக்கிற , எழுதுற கன்றாவிகளுக்கு கை தட்டுறதுக்கு ஒரு கூட்டமும் இருக்குமே..அவங்களிட்ட போட்டு காட்டு உண்ட வீடியோவ...ஏற்க்கனவே உன்னால அறிமுகமே இல்லாத சீனியார்சிட்ட எங்கட பட்ச் கேட்ட பெயர் வாங்கினது பத்தாதெண்டு உன்ன மாதிரி தருதளைகளிண்ட வீடியோக்கல இந்த சபையில போட்டா விளன்கீடும்....

மன்மோகன் சிங்கம் said...

நண்பி! ஒரு பெண்ணை கேவலப்படுத்தக்கூடாது என்று நீங்கள் எழுதிய கடிதத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறோம்.உங்கள் தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் அது பகிரங்கப்படுத்தப்படும்.இது எச்சரிக்கை இல்லை.....கட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டளை.